ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:01

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:20

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:12

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:12

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 11:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:02

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:44

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:42

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 0:28

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 0:26

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:18

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 11 Jul 2024 - 21:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 11 Jul 2024 - 20:20

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 17:30

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu 11 Jul 2024 - 16:52

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu 11 Jul 2024 - 12:39

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:15

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:09

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:07

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:06

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Thu 11 Jul 2024 - 0:51

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:24

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:21

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:10

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:48

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:47

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:44

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:42

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:41

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:40

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி

+2
Thanjaavooraan
கோவை ராம்
6 posters

Go down

தீபாவளி Empty தீபாவளி

Post by கோவை ராம் Wed 3 Nov 2010 - 13:55

தீபாவளி, ஐப்பசிஅமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
* புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
* கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
* இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும்அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
* ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீமாவளி

மகாவீரா நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும்சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில்ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர்.
பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

இலங்கைத் தீபாவளி

இலங்கையில்இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது

ராம்


Last edited by rarara on Wed 3 Nov 2010 - 13:57; edited 1 time in total (Reason for editing : spelling mistake)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by Thanjaavooraan Wed 3 Nov 2010 - 14:35

அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்பு மலர்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by ராஜா Wed 3 Nov 2010 - 15:30

நல்ல விளக்கதுடன் கூடிய கட்டுரை , பகிர்வுக்கு நன்றி ராம் தீபாவளி 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by ரிபாஸ் Wed 3 Nov 2010 - 15:32

அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🐰 🐰


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தீபாவளி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by உதயசுதா Wed 3 Nov 2010 - 15:35

நல்ல விளக்கத்துடன் கூடிய கட்டுரை ராம்.
பதிந்ததுக்கு நன்றி


தீபாவளி Uதீபாவளி Dதீபாவளி Aதீபாவளி Yதீபாவளி Aதீபாவளி Sதீபாவளி Uதீபாவளி Dதீபாவளி Hதீபாவளி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by மோகன் Wed 3 Nov 2010 - 15:37

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தீபாவளி Mதீபாவளி Oதீபாவளி Hதீபாவளி Aதீபாவளி N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

தீபாவளி Empty Re: தீபாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum