ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:18

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

+7
அன்பு தளபதி
ராஜா
Thanjaavooraan
ayyaasamy
சாந்தன்
swamy
நிசாந்தன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by நிசாந்தன் Wed 3 Nov 2010 - 3:39

First topic message reminder :

திங்கள் இரவு (31.10.2010) ரோபோதாக்கி பெண் ஒருவர் பலி என்னும் செய்திகள் பரவலாக எல்லா இணையங்களிலும் உலாவந்தது. இந்தியாவில் இருந்து வெளியான இச்செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மை தெரியாது. ஏதோ எந்திரன் ரோபோ தாக்கியது போல வெளியான இச்செய்திக்குப் பின்னால் பல உண்மைகள் மறைந்து கிடக்கிறது. ஒரு இளம்பெண் துடிதுடித்து இறந்துபோனதைன் இந்திய ஊடகங்கள் வேடிக்கையாக காட்ட முற்பட்டுள்ளது. கலைஞர் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் பொய்யுரைத்தன. ஆனால் உண்மை மறையுமா? இந்தியா மற்றும் சீனாவின் வல்லாதிக்க போட்டியின் உச்சகட்டம் இது. உலகின் முதன்மைக் கைப்பேசியான நோக்கியா இந்தியாவில் வருடத்திற்கு 100 மில்லியன் கைப்பேசிகளை உற்பத்தி செய்யவேண்டும் என ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனை அடைய இரவுபகலாக பல ஷ்ஃப்டுகளை போட்டு தொழிலாளர்களை வாட்டி வதைக்கிறது நோக்கியா. சிறிபெரம்புதூரில் உள்ள இந்த ஆலையில் பரிதாபமாக உயிரிழந்த அம்பிகாவுக்கு வயது 23. பெற்றோருக்கு மூத்த பிள்ளை.

நொக்கியா செல்பேசிகளின் மதர் போடுகள் நீளமாக வருவதால் அதை ஒரு இயந்திரம் கொண்டு துண்டுகளாக வெட்டுவார்கள். இங்கு இருக்கும் “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். அவ்வாறு அது துண்டுகளாக மதர் போர்டை அறுக்கும்போது சில துண்டுகள் மிஷினில் விழுந்துவிடுவது உண்டு, அதனை கைகளால் எடுக்கும்போது, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சென்சர் அதனை உணர்ந்து மெஷினை நிறுத்திவிடும். அவ்வாறு நிறுத்தப்பட்ட மெஷின் திரும்பவும் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் வரை ஆகும்.

சம்பவ தினத்தன்று அவ்வாறு விழுந்த மதர் போர்டு துண்டு ஒன்றை எடுக்க அம்பிகா முயற்சித்துள்ளார். ஆனால் அங்கே இருந்த சென்சர் வேலைசெய்யவில்லை. உண்மையிலேயே அது வேலைசெய்யவில்லை என்று சொல்வதை விட அதை நிறுத்திவைத்திருந்தார்கள் என்பதே உண்மையாகும். காரணம் அவ்வாறு மெஷின் நின்றால் திரும்பவும் இயங்க 10 நிமிடங்கள் ஆகுமே, அந்த 10 நிமிடத்தில் உற்பத்தி பாதித்துவிடுமே என்ற ஒரு அற்ப காரணம் தான் இந்த நரபலிக்கு முக்கிய காரணம். அன்றைய தினம் அம்பிகா மதர்போட் துண்டை எடுக்க முனைந்தவேளை அவர் களுத்துக்கு பின்பக்கமாக அந்த அறுக்கும் இயந்திரத்தின் பிளேடுகள் அவரைத் தாக்கியுள்ளது.

பலத்த ரத்தக் கசிவுக்கு மத்தியில் அவர் பின்புறத்தில் பிளேடு ஏறிய நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்தினர். அம்பிகாவின் தலைக்கும் தோழுக்கும் இடையே ஆழமாக அந்த பிளேட் சென்றிருந்ததால் பிளேடை உடைத்து அம்பிகாவை மீட்க தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த சூப்பர்வைசர் அது 2 கோடி ரூபா இயந்திரம் எனக் கூறித் தொழிலாளர்களைத் தடுத்துள்ளார். இந்த புண்ணியவான் பெயர் வெற்றி தேவராஜ். இவர் மேலிடத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இயந்திரத்தை உடைக்காது அதனை கவனமாக களற்றி அம்ம்பிகாவை வெளியே எடுக்கலாம் என புண்ணாக்கு ஜடியா கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த இயந்திரத்தை களற்றுவதற்கான எந்த ரூல் பாக்ஸ்ஸும் அங்கு இல்லை எனத் தெரியவரும்போது, அம்பிகா வலிதாங்காமல் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார், ரத்தம் ஆறாகப் பாய்கிறது. இதைஎல்லாம் சற்றும் அசட்டைசெய்யாது, எவ்வாறு இயந்திரத்தைப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கிறார் வெற்றி தேவராஜ். இவரை எந்த உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை ஒருவாறு அங்கு நின்ற ஆண் தொழிலாளர்கள் கோபமடைய, நிலை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த கம்பிகளை உடைத்து அம்பிகாவை வெளியே எடுத்தனர் சக தொழிலாளர்கள்.

இதனிடையே சுமார் 20 தொடக்கம் 25 நிமிடங்களுக்குப் பின்னரே அம்பிகா மீட்டெடுக்கப்பட்டுள்ளார். ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார், அங்கிருந்து பின்னர் அபோலோ மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்படுகிறார். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக உள்ளது. ஆலையில் இருந்து அம்பிகாவை முதல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கண் துடைப்புக்காக ஜெயா மருத்துவமனை பின்னர் அப்பலோ என 2 வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாம் ஏதோ மருத்துவம் பார்த்தாக பிலிம் காட்டியுள்ளனர், நொக்கியா நிர்வாகத்தினர்.

இது இவ்வாறிருக்க சம்பவதை நேரில் பார்த்த சக தொழிலாளர்களுக்கு, அம்பிகாவுக்கு ரத்தம் ஏற்றப்படுவதாகவும் விரைவில் அவர் உடல்நலம் தேறிவருவார் என்றும் பொய்கூறி வேலையைச் செய்யும் படி கூறியிருக்கிறார் மற்றுமொரு சூப்பர்வைசர் ஜே.புருஷோத்தமன். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் கைத்தொலைபேசிகளை ஆலைக்குள் கொண்டுசெல்லக் கூடாது என்ற காரணத்தால், அம்பிகாவின் மரணம் பலருக்குத் தெரியது. அத்தோடு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜே.புருஷோத்தமன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதேயாகும்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை உங்களுக்கு தந்துவிட்டால் தங்களது மகளின் உயிரை திருப்பித்தர முடியுமா என ஆவேசப்படுகிறார்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால், சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6ஸ்) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், ஏதும் அறியாத அம்பிகாவின் உயிரைக் குடித்துள்ளது இந்த நொக்கியா நிறுவனம்.

போதாக்குறைக்கு சாக்கடை அரசியல்வேறு இங்கு விளையாடுகிறது. அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் ஒருபக்கம் முயல்கிறார்கள்.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச் சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சல்லாபிப்பார்கள். அவர்கள் அங்கு பருகப்போவது சாராயம் அல்ல ! அம்பிகா போன்ற ஏழைகளின் இரத்தமே !

இப் படுகொலையை தமிழகத் தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் ? தமிழர்கள் இந்த செல்பேசியை புறக்கணிப்பார்களா ?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by ayyaasamy Wed 3 Nov 2010 - 15:32

உண்மை தான். தொடர்ந்து விழா எடுத்துக்கொண்டும், விழாவுக்கு விளம்பரத்தட்டிகள் வைத்தும் தான் தமிழன் அழியபோகிறான்.
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by உதயசுதா Wed 3 Nov 2010 - 15:33

அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடையட்டும் என்று வேண்டி கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்.


நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Uநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Dநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Aநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Yநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Aநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Sநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Uநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Dநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Hநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by ayyaasamy Wed 3 Nov 2010 - 15:39

ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும். இந்த மாதிரி கல்பனா சாவ்லா உயிர் மட்டுமே பெரிய உயிர் என்று பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by உதயசுதா Wed 3 Nov 2010 - 15:43

உயிரில் உயர்ந்தது தாழ்ந்தது எதுவும் இல்லை.எல்லாமே உயிர்தான். அவரவருக்கு அவர் உயிர் முக்கியம்.
சுவாமிஜியின் கூற்றை நானும் கண்டிக்கிறேன்


நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Uநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Dநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Aநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Yநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Aநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Sநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Uநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Dநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Hநோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by ராஜா Wed 3 Nov 2010 - 15:44

ஆமாம் , நானும் அய்யாசாமி & சுதாவின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by அன்பு தளபதி Wed 3 Nov 2010 - 15:47

ராஜா wrote:ஆமாம் , நானும் அய்யாசாமி & சுதாவின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்

நான் வழி மொழிகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by sabarishkumar Wed 3 Nov 2010 - 23:59

நோக்கியா நிறுவனத்தில் நிகழ்ந்த விபத்தை ஊடகங்கள் வழியாக படிக்கும் போது விபத்து சதா ரணமாக இருந்தது ஆனால் உண்மை நிகழ் வுகளை படிக்கும் போது மனம் வருந்துகிறது உண்மைகளை எடுத்து கூறிய நிசாந்தன் வருத்தத்தில் நானும் பங்கு பெறுகிறேன் ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனி மேல் நடை பெறாதிருக்க தொழிலாளர் பாதுக்காப்பு திட்டங்கள் கடுமையாக்க படவேண்டும் . உலக அரங்கில் இந்தியா தனிறைவு பெற்ற நாடாக திகழ்ந்தால் போதாது வாழும் மக்களின் மனதில் தனிறைவு பெற வேண்டும். இது நிகழுமா ?
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 12/12/2009

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by சிவா Thu 4 Nov 2010 - 0:08

sabarishkumar wrote:நோக்கியா நிறுவனத்தில் நிகழ்ந்த விபத்தை ஊடகங்கள் வழியாக படிக்கும் போது விபத்து சதா ரணமாக இருந்தது ஆனால் உண்மை நிகழ் வுகளை படிக்கும் போது மனம் வருந்துகிறது உண்மைகளை எடுத்து கூறிய நிசாந்தன் வருத்தத்தில் நானும் பங்கு பெறுகிறேன் ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனி மேல் நடை பெறாதிருக்க தொழிலாளர் பாதுக்காப்பு திட்டங்கள் கடுமையாக்க படவேண்டும் . உலக அரங்கில் இந்தியா தனிறைவு பெற்ற நாடாக திகழ்ந்தால் போதாது வாழும் மக்களின் மனதில் தனிறைவு பெற வேண்டும். இது நிகழுமா ?

வரவேற்கத்தக்க பின்னூட்டம்! வாழ்த்துகள்...! தொடருங்கள் sabarishkumar!


நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by T.N.Balasubramanian Thu 4 Nov 2010 - 9:29

swamy wrote:நிசாந்தன்.கொஞ்சம் நி..சாந்தமா இரு.கல்பனாசாவ்லா இறந்தபோது கூடதான் மனம் பதறியது .அது வானில்.இது பூமியில்.ஒரு நிமிடம் அஞ்சலி CHELUTHTHUOM ஐ லவ் யூ

சுவாமி,
ஒவ்வொருவரும் வருந்தவேண்டிய விஷயம். சிலேடை மொழிவதற்கு ஏற்ற தருணமில்லை.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !  - Page 2 Empty Re: நோக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum