ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
heezulia
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
mohamed nizamudeen
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி

Go down

தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Empty தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி

Post by சிவா Tue Nov 02, 2010 8:34 pm

வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

இல்லை. உலகில் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. 3 வயதில் தொடங்கி மரணம் வரை எப்போதாவது ஒருமுறையேனும் இது மனிதர்களை தாக்கிவிடுகிறது.

தலை, முகம், நெற்றி என்று தலையைச் சுற்றி எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அது தலைவலிதான். பெரும்பாலானவர்கள் தலைவலி வந்ததும் என்ன செய்கிறார்கள்?

- `கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுக்கிறேன்..' என்று உடலையும், மனதையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

- `சூடாக ஒரு கப் காபி பருகினால் சரியாகிவிடும்..' என்று கருதுகிறார்கள்.

- `தலைவலியை நீக்கும் பாம்..' எனப்படும் ஏதாவது ஒரு களிம்பை எடுத்து பூசிக்கொள்கிறார்கள்.

- பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய், `தலைவலி மாத்திரை கொடுங்க..' என்று கேட்டு வாங்கிப் போட்டுக்கொள்கிறார்கள்.

- சிலரோ தனக்கு தலைவலி வந்ததும் வீட்டிலோ, அலுவலகத்திலோ அருகில் இருக்கும் அனைவர் மீதும் எரிந்து விழுந்து, கத்தி அவர்கள் அனைவருக்கும் தலைவலி வர வைத்துவிடுவார்கள்.

இந்த அணுகுமுறைகளில் பெரும்பாலானவை தவறு. களிம்புகளை இஷ்டத்திற்கும் தடவுதல், சுயமருத்துவமாக கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுதல், மெல்லிய நரம்புகள் பொருந்திய தலையில் அழுத்தம் கொடுத்து நீவுதல், சலூன்களில் போய் மசாஜ் செய்தல், புகைப்பிடித்தல்... இவை எல்லாம் தலைவலியை போக்குவதில்லை. காபி பருகும்போது தலைவலி லேசாக குறையும். அப்படியே பழகிவிட்டால் காபி குடிக்காமல் இருந்தாலே வலி வரத் தொடங்கிவிடும். ஓய்வெடுப்பது, காலாற நடப்பது, மன அழுத்தத்தைப் போக்குவது, முறையான சிகிச்சை எடுப்பது போன்றவை தலைவலியை போக்கும் சரியான அணுகுமுறைகள்.

பொதுவாக தலைவலி வந்தால் பார்வை குறைபாடு அல்லது சைனஸ் பிரச்சினை என்று கருதிக்கொண்டு, முதலில் கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவார்கள். அங்கு தீர்வு கிடைக்காதபோது பல் டாக்டரிடம் செல்வார்கள். அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் பயம் வந்துவிடும். பின்பு மன நல ஆலோசகரிடம் செல்வார்கள். அங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதிக பட்ச கவலைக்கு உள்ளாகிவிடுகிறார்கள். நிஜத்தில் தலைவலி பயப்படுவதற்குரியதல்ல. பல நேரங்களில் அது எளிதான சிகிச்சையிலே குணமாகிவிடும்.

தலைவலியை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை: ஒற்றைத் தலைவலி, மனஅழுத்த தலைவலி, சரியாக சாப்பிடாவிட்டால் ஏற்படும் `பசித் தலைவலி'. பள்ளிக் குழந்தைகள் பசி தலைவலியால் அதிகம் அவதிப்படுவார்கள். வேனைப் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடமாட்டார்கள். தலைசுற்றுவது போல் இருக்கிறது என்று கூறிக்கொண்டு மதிய உணவையும் ஆர்வமின்றி அரைகுறையாக சாப்பிடுவார்கள். மாலையில் வீடு திரும்பியதும் பசி மயக்கத்தால் தலைவலி உருவாகி படுத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் பசிக்கும் நேரத்தில் உணவு சாப்பிடாமல் தலைவலியை உருவாக்கிவிட்டு, அதைப்போக்க மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

தலைவலியை ஆபத்துக்குரியவை, ஆபத்தற்றவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆபத்திற்குரியவை என்றால்...

* முதல் தடவையே தாங்க முடியாத வலியை தருவது.

* கண் பார்வை மங்கலுடன், வலிப்பது.

* வாந்தி, வலிப்பு நோயுடன் தலைவலிப்பது.

* கை, கால்களை செயல்படவிடாமல் முடக்கிப்போடுவது.

* ஒரு நாள் 12 முதல் 16 மணிநேரம் தொடர்ந்து வலிப்பது.

இப்படிப்பட்ட ஆபத்தான தலைவலிகளை உடனே கவனிக்காவிட்டால் அதன் விளைவுகள் மோசமாகிவிடும். கை, கால்களை செயலிழக்கவைத்து ஆளையே வீழ்த்திவிடும். மூளையில் ரத்தக் கசிவு, புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் ஆபத்தான தலைவலி தோன்றும்.

`பாஸ்ட் புட்' உணவு சாப்பிடுவதாலும் தலைவலி வரும். அவைகளில் பாலாடைக்கட்டி மற்றும் சுவைïட்டி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகள் உணவில் கலந்து `டைரமின்' என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது. சாக்லேட் கலந்த எல்லா உணவுகளிலும் டைரமின் உருவாகிறது. இது உடலுக்குள் சென்று தலைவலியை உருவாக்கும். சிலர் `பாஸ்ட் புட்' உணவோடு மது அருந்தவும் செய்கிறார்கள். டைரமின்னும், ஆல்கஹாலும் சேர்ந்து அவர்களுக்கு அதிகபட்ச தலைவலியை கொடுக்கும்.

இந்தியாவில் நடுத்தரவயது பெண்களை `பைப்ரோ மையால்ஜியா' என்னும் வலி நோய் அதிகம் தாக்குகிறது. இந்த நோயின் அறிகுறியாக உடல் முழுவதும் வலிக்கும். மூட்டு வலியும், தூக்கமின்மையும் இருக்கும். இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் உடலில் உள்ள மற்ற வலிகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தலைவலிக்கு மட்டும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்காது. பைப்ரோ மையால்ஜியாவுக்குரிய சிகிச்சை மூலமே அவர்களுக்கு முழு நிவாரணம் அளிக்க முடியும். இந்தியாவில் ஒன்றரை கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து டி.வி. பார்க்கும் பெண்களுக்கு, அந்த டி.வி.யில் ஏற்படும் வெளிச்சத்தால் தலைவலி ஏற்படும். காதல் தோல்வி அடைந்தவர்கள், பெரிய அளவில் இழப்புகளை சந்திப்பவர்களும் தலைவலியால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு மருந்துகளோடு, `ரெலாக்சேஷன் தெரபி' எனப்படும் மன அமைதிக்கான பயிற்சியும் கொடுக்க வேண்டியதிருக்கும்.

கணவன்- மனைவி இடையேயான உடலுறவு பிரச்சினைகளாலும் தலைவலி தோன்றும். கணவர் விரைவாக உச்சகட்டத்தை அடைந்து சோர்ந்து தூங்கிவிடும்போது, மனைவிக்கு திருப்தியில்லாத நிலை தோன்றும். அப்போது அவளுக்கு தூக்கம் வராது. ஏமாற்றமும், கோபமும் சேர்ந்து மன அழுத்தத்தை தோற்றுவிக்கும். அதனால் அவள் தலைவலியை அனுபவிப்பாள். தம்பதியினர் உடலுறவில் ஈடுபடும்போது அதிக அளவிலான ரத்தம் இடுப்பு பகுதிக்கு பாயும். அவர்கள் இருவருமே உச்சகட்டத்தை அடைந்து அந்த செயல் நிலையை முழுமைப்படுத்தாமல் தூங்கினால் இடுப்பு வலி, கை-கால் குடைச்சல் போன்றவை தோன்றும். செக்ஸ் தொடர்பு திருப்தியாக முடிந்ததற்கு அடையாளமாக சிலருக்கு `காய்ட்டல் ஹெட்ஏக்' என்னும் தலைவலி தோன்றுவதும் உண்டு. இப்படி தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்களை அடுக்கலாம்.

பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு சிக்கல், நட்பு சிக்கல், படிப்பு ஆர்வமின்மை, ஆசிரியர்கள் கொடுக்கும் நெருக்கடி போன்றவைகளால் தலைவலி அதிகரிக்கிறது. 15-20 வயதினருக்கு அதிக மன அழுத்தத்தால் தலைவலி ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு வயதே வலிக்கு காரணமாகிறது. 35-50 வயதான பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளும் தலைவலியை தோற்றுவிக்கும். மாதவிலக்கு நிலைக்கப்போகும் மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்கூட தலைவலிக்கு காரணமாகிறது.

இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவருகிறது. ஒவ்வொருவரும் அதற்கு தக்கபடி தங்கள் வருமானத்திலும், வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கிறார்கள். ஓயாத உழைப்பும், போட்டி மனப்பான்மையும், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களும் தலைவலியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் நவீன சிகிச்சை முறைகளும் புதிது புதிதாக உருவாகியுள்ளன. தலைவலிக்கான காரணங்களை கண்டறிவதில் இருந்து சிகிச்சை அளிப்பது வரை நவீன உபகரணங்கள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தலைவலியை நினைத்து பயப்பட வேண்டியதில்லை.

மனதை அமைதியாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை பெருக்குதல்- உடலை பயிற்சியோடு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல்- சமச் சீரான உணவு உண்ணுதல்- அளவோடு ஆசைப்பட்டு உடலையும், மனதையும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பாதுகாத்தல் ஆகியவைகளை பின்பற்றினால் தலைவலியின்றி, மனம் தளராமல் வாழலாம்.

விளக்கம்: டாக்டர் ஜி.கே.குமார் எம்.டி., டி.ஏ.
(வலி நீக்கியல் நிபுணர்) சென்னை-26.


தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க
» சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி
» வலையமைப்பு இல்லாமல் செயல்படும் புதிய அப்ளிகேஷன் - எஸ்.ஓ.எஸ் வசதியைப் போன்றது!
» இனி முதுநிலை பட்டம் இல்லாமல் பி.எச்டி படிக்கலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு
» எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum