புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
46 Posts - 64%
heezulia
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
41 Posts - 64%
heezulia
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10ஆன்மீகத் தகவல்கள்! Poll_m10ஆன்மீகத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகத் தகவல்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:10 am

சொல் கேட்கும் பிள்ளையார்




ஆன்மீகத் தகவல்கள்! Anme0510



ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் உள்ள விநாயகரை வித்தியாசமாக ``சொல் கேட்கும் பிள்ளையார்'' அல்லது `சொல் கேட்டான் பிள்ளையார்' என்று அழைக்கிறார்கள். பேச்சு வழக்கில் சொக்கட்டான் பிள்ளையார் என்கிறார்கள்.

பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அருள்புரிகிறார் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

காலப்போக்கில் இந்தப் பெயர் மாறி `சொக்கட்டான் பிள்ளையார்' என்றாகிவிட்டது.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:11 am

ஒரு தலை பிரம்மன்




பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு. ஆனால் ஒரு தலையுடன் கூடிய பிரம்மன் கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோவிலில் காணப்படுகிறார்.

இங்கு பிரம்மனுக்கு ஒரு தலையும், நான்கு கைகளும் உள்ளன. வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் கமண்டலமும், பின் வலது கையில் தர்ப்பைப் புல்கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் கொண்டு அருள்பாலிக்கிறார், இந்த ஒரு தலை பிரம்மன்.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:13 am

கைக்குத்தல் அரிசி காணிக்கை



ஆன்மீகத் தகவல்கள்! Anme0410

எல்லாக் கோவில்களிலும் இறைவனுக்கு சாதமே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அரிசியையே நைவேத்தியமாகப் படைக்கிறார்கள்.

இதற்காகப் பெண்கள் கைக்குத்தல் அரிசியைக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

இந்த அரிசியை பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே மிகச் சுத்தமான முறையில் தயார் செய்கிறார்கள்.

இவ்வாறு கைக்குத்தல் அரிசியை நைவேத்தியமாக கொடுத்தால், நினைத்த வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்கிறார்கள்.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:14 am

சூரியன், சனி தோஷம் நீக்கும் கோவில்




சூரியனும், சனிக் கிரகமும் பகைக் கிரகங்கள் ஆகும். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சூரியன் ஓரிடத்திலும், சனி மற்றொரு இடத்திலும் இருப்பதைத்தான் காண முடியும்.

ஆனால் தஞ்சாவூர் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் இந்த இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன.

இங்கு இவர்கள் இருவரும் நட்பு நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம்.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:15 am

ஆயிரம் காளியம்மன்



ஆன்மீகத் தகவல்கள்! Anme0310

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளது திருமலைராயன்பட்டிணம் என்ற ஊர். இங்கு ஆயிரம் காளியம்மன் கோவில் இருக்கிறது.

இந்த அம்மனை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு பெட்டியில் இருந்து எடுத்து வழிபாடு நடத்துகிறார்கள். மற்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று பெட்டியை மட்டுமே வணங்கலாம்.

வைகாசி மாதம் வளர்பிறை திங்கட்கிழமை அன்று மட்டும் தான் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அம்மனை வெளியே எடுத்துப் பூஜை செய்வார்கள். இந்த அம்மனுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் - என்ற எண்ணிக்கையின் அடிப்படையில்தான் படைக்க வேண்டும்.

அதனால் இந்த அம்மன் `ஆயிரம் காளியம்மன்' என்று அழைக்கப்படுகிறார்.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:16 am

பணப் பிரச்சினை போக்கும் பைரவர்




சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான்.

ஒருவரால் ஏமாற்றப்படுவது அல்லது அவர்கள் நியாயமற்ற வகையில் நமது சொத்துக்களை அபகரிப்பது, திரும்பி வராத நீண்ட நாள் கடன்கள் உள்ளிட்ட நிறைவேறாத நியாயமான பொருளாதார பிரச்சினைகள் தீரவும், சனி தோஷத்தால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விடுபடவும், அதன் தாக்கம் குறையவும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் வழிபடுவது சிறப்பு.

மேலும், தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையில் சனி ஓரையில் உள்ள ராகு காலத்திலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவது சிறப்புக்குரியது.

அப்போது நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், பால், தேன், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் பொடி, மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூவையும் பூஜைக்காக அளிப்பது நற்பலன்கள் பல தரும்.

இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளிப் பூக்களை கொண்டு பூஜை நடத்தப்படும்போதும் பைரவர் மூலமந்திரத்தை மன முருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்யும் பிரார்த்தனை நம் துன்பங்களைப் போக்கி வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம்.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:22 am

ஒரு மண்டல விரதம் ஏன்?




எந்த தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும் என்பார்கள். இதற்கான காரணம் தெரியுமா?

சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48-ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும், நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்த நாட்களில், எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோவிலுக்குச் செல்லுதல், அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை ஜெபித்தல், மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை ஜெபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபம் ஏற்றுதல்... போன்ற எளிய விதங்களில் வழிபட வேண்டும்.

ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு மண்டலம் செய்து வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில் உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.

ஆனால், மண்டல வழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு விருப்பமான இஷ்ட தேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள் பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.



ஆன்மீகத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 02, 2010 11:15 am

அரிய தகவல்கள் நன்றி சிவா நன்றி அன்பு மலர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Nov 02, 2010 11:22 am

பக்தி மயமான தகவல்களுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 02, 2010 2:19 pm

அறிய தகவல்கள்..ஸ்தல பெயர்காரணியும் கேட்டிராதது. தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக