புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
58 Posts - 64%
heezulia
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
53 Posts - 65%
heezulia
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_m10தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:34 pm

வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

இல்லை. உலகில் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. 3 வயதில் தொடங்கி மரணம் வரை எப்போதாவது ஒருமுறையேனும் இது மனிதர்களை தாக்கிவிடுகிறது.

தலை, முகம், நெற்றி என்று தலையைச் சுற்றி எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அது தலைவலிதான். பெரும்பாலானவர்கள் தலைவலி வந்ததும் என்ன செய்கிறார்கள்?

- `கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுக்கிறேன்..' என்று உடலையும், மனதையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

- `சூடாக ஒரு கப் காபி பருகினால் சரியாகிவிடும்..' என்று கருதுகிறார்கள்.

- `தலைவலியை நீக்கும் பாம்..' எனப்படும் ஏதாவது ஒரு களிம்பை எடுத்து பூசிக்கொள்கிறார்கள்.

- பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய், `தலைவலி மாத்திரை கொடுங்க..' என்று கேட்டு வாங்கிப் போட்டுக்கொள்கிறார்கள்.

- சிலரோ தனக்கு தலைவலி வந்ததும் வீட்டிலோ, அலுவலகத்திலோ அருகில் இருக்கும் அனைவர் மீதும் எரிந்து விழுந்து, கத்தி அவர்கள் அனைவருக்கும் தலைவலி வர வைத்துவிடுவார்கள்.

இந்த அணுகுமுறைகளில் பெரும்பாலானவை தவறு. களிம்புகளை இஷ்டத்திற்கும் தடவுதல், சுயமருத்துவமாக கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுதல், மெல்லிய நரம்புகள் பொருந்திய தலையில் அழுத்தம் கொடுத்து நீவுதல், சலூன்களில் போய் மசாஜ் செய்தல், புகைப்பிடித்தல்... இவை எல்லாம் தலைவலியை போக்குவதில்லை. காபி பருகும்போது தலைவலி லேசாக குறையும். அப்படியே பழகிவிட்டால் காபி குடிக்காமல் இருந்தாலே வலி வரத் தொடங்கிவிடும். ஓய்வெடுப்பது, காலாற நடப்பது, மன அழுத்தத்தைப் போக்குவது, முறையான சிகிச்சை எடுப்பது போன்றவை தலைவலியை போக்கும் சரியான அணுகுமுறைகள்.

பொதுவாக தலைவலி வந்தால் பார்வை குறைபாடு அல்லது சைனஸ் பிரச்சினை என்று கருதிக்கொண்டு, முதலில் கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவார்கள். அங்கு தீர்வு கிடைக்காதபோது பல் டாக்டரிடம் செல்வார்கள். அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் பயம் வந்துவிடும். பின்பு மன நல ஆலோசகரிடம் செல்வார்கள். அங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதிக பட்ச கவலைக்கு உள்ளாகிவிடுகிறார்கள். நிஜத்தில் தலைவலி பயப்படுவதற்குரியதல்ல. பல நேரங்களில் அது எளிதான சிகிச்சையிலே குணமாகிவிடும்.

தலைவலியை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை: ஒற்றைத் தலைவலி, மனஅழுத்த தலைவலி, சரியாக சாப்பிடாவிட்டால் ஏற்படும் `பசித் தலைவலி'. பள்ளிக் குழந்தைகள் பசி தலைவலியால் அதிகம் அவதிப்படுவார்கள். வேனைப் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடமாட்டார்கள். தலைசுற்றுவது போல் இருக்கிறது என்று கூறிக்கொண்டு மதிய உணவையும் ஆர்வமின்றி அரைகுறையாக சாப்பிடுவார்கள். மாலையில் வீடு திரும்பியதும் பசி மயக்கத்தால் தலைவலி உருவாகி படுத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் பசிக்கும் நேரத்தில் உணவு சாப்பிடாமல் தலைவலியை உருவாக்கிவிட்டு, அதைப்போக்க மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

தலைவலியை ஆபத்துக்குரியவை, ஆபத்தற்றவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆபத்திற்குரியவை என்றால்...

* முதல் தடவையே தாங்க முடியாத வலியை தருவது.

* கண் பார்வை மங்கலுடன், வலிப்பது.

* வாந்தி, வலிப்பு நோயுடன் தலைவலிப்பது.

* கை, கால்களை செயல்படவிடாமல் முடக்கிப்போடுவது.

* ஒரு நாள் 12 முதல் 16 மணிநேரம் தொடர்ந்து வலிப்பது.

இப்படிப்பட்ட ஆபத்தான தலைவலிகளை உடனே கவனிக்காவிட்டால் அதன் விளைவுகள் மோசமாகிவிடும். கை, கால்களை செயலிழக்கவைத்து ஆளையே வீழ்த்திவிடும். மூளையில் ரத்தக் கசிவு, புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் ஆபத்தான தலைவலி தோன்றும்.

`பாஸ்ட் புட்' உணவு சாப்பிடுவதாலும் தலைவலி வரும். அவைகளில் பாலாடைக்கட்டி மற்றும் சுவைïட்டி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகள் உணவில் கலந்து `டைரமின்' என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது. சாக்லேட் கலந்த எல்லா உணவுகளிலும் டைரமின் உருவாகிறது. இது உடலுக்குள் சென்று தலைவலியை உருவாக்கும். சிலர் `பாஸ்ட் புட்' உணவோடு மது அருந்தவும் செய்கிறார்கள். டைரமின்னும், ஆல்கஹாலும் சேர்ந்து அவர்களுக்கு அதிகபட்ச தலைவலியை கொடுக்கும்.

இந்தியாவில் நடுத்தரவயது பெண்களை `பைப்ரோ மையால்ஜியா' என்னும் வலி நோய் அதிகம் தாக்குகிறது. இந்த நோயின் அறிகுறியாக உடல் முழுவதும் வலிக்கும். மூட்டு வலியும், தூக்கமின்மையும் இருக்கும். இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் உடலில் உள்ள மற்ற வலிகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தலைவலிக்கு மட்டும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்காது. பைப்ரோ மையால்ஜியாவுக்குரிய சிகிச்சை மூலமே அவர்களுக்கு முழு நிவாரணம் அளிக்க முடியும். இந்தியாவில் ஒன்றரை கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து டி.வி. பார்க்கும் பெண்களுக்கு, அந்த டி.வி.யில் ஏற்படும் வெளிச்சத்தால் தலைவலி ஏற்படும். காதல் தோல்வி அடைந்தவர்கள், பெரிய அளவில் இழப்புகளை சந்திப்பவர்களும் தலைவலியால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு மருந்துகளோடு, `ரெலாக்சேஷன் தெரபி' எனப்படும் மன அமைதிக்கான பயிற்சியும் கொடுக்க வேண்டியதிருக்கும்.

கணவன்- மனைவி இடையேயான உடலுறவு பிரச்சினைகளாலும் தலைவலி தோன்றும். கணவர் விரைவாக உச்சகட்டத்தை அடைந்து சோர்ந்து தூங்கிவிடும்போது, மனைவிக்கு திருப்தியில்லாத நிலை தோன்றும். அப்போது அவளுக்கு தூக்கம் வராது. ஏமாற்றமும், கோபமும் சேர்ந்து மன அழுத்தத்தை தோற்றுவிக்கும். அதனால் அவள் தலைவலியை அனுபவிப்பாள். தம்பதியினர் உடலுறவில் ஈடுபடும்போது அதிக அளவிலான ரத்தம் இடுப்பு பகுதிக்கு பாயும். அவர்கள் இருவருமே உச்சகட்டத்தை அடைந்து அந்த செயல் நிலையை முழுமைப்படுத்தாமல் தூங்கினால் இடுப்பு வலி, கை-கால் குடைச்சல் போன்றவை தோன்றும். செக்ஸ் தொடர்பு திருப்தியாக முடிந்ததற்கு அடையாளமாக சிலருக்கு `காய்ட்டல் ஹெட்ஏக்' என்னும் தலைவலி தோன்றுவதும் உண்டு. இப்படி தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்களை அடுக்கலாம்.

பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு சிக்கல், நட்பு சிக்கல், படிப்பு ஆர்வமின்மை, ஆசிரியர்கள் கொடுக்கும் நெருக்கடி போன்றவைகளால் தலைவலி அதிகரிக்கிறது. 15-20 வயதினருக்கு அதிக மன அழுத்தத்தால் தலைவலி ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு வயதே வலிக்கு காரணமாகிறது. 35-50 வயதான பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளும் தலைவலியை தோற்றுவிக்கும். மாதவிலக்கு நிலைக்கப்போகும் மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்கூட தலைவலிக்கு காரணமாகிறது.

இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவருகிறது. ஒவ்வொருவரும் அதற்கு தக்கபடி தங்கள் வருமானத்திலும், வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கிறார்கள். ஓயாத உழைப்பும், போட்டி மனப்பான்மையும், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களும் தலைவலியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் நவீன சிகிச்சை முறைகளும் புதிது புதிதாக உருவாகியுள்ளன. தலைவலிக்கான காரணங்களை கண்டறிவதில் இருந்து சிகிச்சை அளிப்பது வரை நவீன உபகரணங்கள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தலைவலியை நினைத்து பயப்பட வேண்டியதில்லை.

மனதை அமைதியாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை பெருக்குதல்- உடலை பயிற்சியோடு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல்- சமச் சீரான உணவு உண்ணுதல்- அளவோடு ஆசைப்பட்டு உடலையும், மனதையும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பாதுகாத்தல் ஆகியவைகளை பின்பற்றினால் தலைவலியின்றி, மனம் தளராமல் வாழலாம்.

விளக்கம்: டாக்டர் ஜி.கே.குமார் எம்.டி., டி.ஏ.
(வலி நீக்கியல் நிபுணர்) சென்னை-26.




தலைவலியா... தளர வேண்டாம் - வலி இல்லாமல் வாழ புதிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக