ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பல நகரங்களில் லேசான நிலநடுக்கம்

Go down

தமிழகத்தில் பல நகரங்களில் லேசான நிலநடுக்கம் Empty தமிழகத்தில் பல நகரங்களில் லேசான நிலநடுக்கம்

Post by சிவா Wed Aug 12, 2009 4:12 am


தமிழகத்தில் பல நகரங்களில் லேசான நிலநடுக்கம்: நள்ளிரவில் சுனாமி பீதியால் விடிய விடிய பதட்டம்




சென்னை: அந்தமானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கமாக, சென்னையிலும் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த பொதுமக்கள், அலறியடித்து வீதிகளுக்கு ஓடிவந்தனர்.


சுனாமி பீதி ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரமான நிலையில், சுனாமி பீதி ஓய்ந்தது. அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேருக்கு வடக்கே, நேற்று அதிகாலை 1:26 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சென்னையில் தி.நகர், சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம், காசிமேடு, திருவான்மியூர், முகப்பேர், மயிலாப்பூர், பெரம்பூர், குளத்தூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.


தமிழகம் முழுவதும் பல நகரங்களில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. உயரமான கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த பொதுமக்கள், அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்து வீதிகளில் குவிந்தனர். பல இடங்களில் கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம், போலீஸ் கட்டுப்பாட்டு மையம், தீயணைப்பு தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பலர் விசாரித்தனர். அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலுக்குள் ஏற்பட்டது. இதனால், சுனாமி ஏற்படலாம் என அச்சம் நிலவியது.


இரவோடு இரவாக அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டன. சென்னை கடலோரப் பகுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சுனாமி எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டி கடலோர பகுதியில் இருந்தோரை பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லுமாறு எச்சரித்தனர். மீனவர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். அதிகாலை 4 மணி வரை விசைப் படகுகள் ஏதும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. "சுனாமி வர வாய்ப்பில்லை' என அதிகாரிகள் உறுதியளித்தப் பின், மீனவர்கள் விசைப்படகுகளை இயக்கினர்.


அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் அம்பத்தூர் நகராட்சி வளாகத்தை அடுத்துள்ள தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனை (இ.எஸ்.ஐ.,)யை அடுத்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் முன் புற, "சன் ஷேடு' இடிந்து விழுந்தது. புதுச்சேரி கடலோர கிராமங்களில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த முறை சுனாமி தாக்கியபோது அதிக பாதிப்புக்குள்ளான பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிக்குளம் மீனவர்கள் நகை, பணம் உள்ளிட்ட முக்கியப் பொருட்களுடன் மேடான பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு சென்றாலும், தொடர்ந்து பீதி நிலவியதால் கடலோர மீனவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு விடிய விடிய விழித்திருந்தனர். பதட்டமடைந்த கிராம மக்கள் கையில் கிடைத்த முக்கியப் பொருட்களுடன் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். அதிகாலை 5 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டும் கடலோர கிராமங்களில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது. கடலில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை குறித்து அந்தந்த பகுதி மக்கள் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.


மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பாதியிலேயே, பரங்கிப்பேட்டை அன்னன்கோவில் பகுதிக்கு படகுகளில் திரும்பி வந்தனர். பக்தர்கள் குளிக்க தடை: "சுனாமி' எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர் கோவில் கடலில் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 6.30 மணி வரை பக்தர்கள் குளிக்க போலீசார் தடைவிதித்தனர். "சுனாமி' எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட பின், காலை 6.30 மணிக்குப்பின் பக்தர்கள் கடலில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி:


கன்னியாகுமரியில் மீனவர்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி மணல் பரப்புகளில் தங்கியிருந்தனர். சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு வர தயங்கினர். இதனால் கடற்கரை வெறிச்சோடியது. விடுமுறை: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த கோடியக்கரை, கோடியக்காடு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


பெற்றோர் வேண்டுகோளை அடுத்து, நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒரு நாள் விடுமுறை விடும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு விடுப்பு விடுக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டாலும், மீனவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சுனாமி பயம் நீங்கவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum