புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
44 Posts - 59%
heezulia
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூதுரை  - Page 3 Poll_c10மூதுரை  - Page 3 Poll_m10மூதுரை  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூதுரை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 1:26 pm

First topic message reminder :

மூதுரை

[You must be registered and logged in to see this image.]

கடவுள் வாழ்த்து

1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.



[You must be registered and logged in to see this link.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 10:50 am

நன்றி ஐயா விளக்கத்திர்க்கு [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 16, 2011 11:02 am

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

பொருள் விளக்கம்:

பெரும் பாரத்தை தாங்கும் போது கல்லால் செய்யப்பட்ட தூண் உடைந்து போகுமே தவிர, வளைந்து கொடுக்காது, அது போல் பிறருக்கு உதவும் குணம் உள்ள, நல்ல பல குணங்களை உடைய சான்றோர் தீய செயல்கள் செய்வோரிடம் செயல்களை எதிர்த்து உயிர் துறப்பார்கள் ஆனால் பணிந்து போக மாட்டார்கள்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

பொருள் விளக்கம்:

குளத்தில் உள்ள நீரின் அளவைப் பொறுத்துத்தான் அதில் வளரும் தாமரை, ஆம்பல் தண்டின் உயரம் அமையும், அது போல் ஒரு மனிதனின் அறிவு அவன் கற்கும் நூல்களின் அளவைப் பொறுத்து அமையும், ஒருவனுக்கு வரும் செல்வமானது அவன் முன் பிறவியில் செய்த நல்ல செயல் களின் மூலமே அமையும், ஒருவனின் குணம் அவன் பிறந்த குலத்தைப் பொறுத்து அமையும்.


9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

பொருள் விளக்கம்:

நல்ல செயல்கள் செய்யும் நல்லவர்களை காண்பது நன்று, அவர்களுடைய நல்ல சொல் கேட்பது நன்று, அவர்களுடைய குணங்களை பற்றி பேசுவதும் நன்று, அவரோடு இணைந்து இருப்பதுவும் நன்று.

தொடரும் ....




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 11:42 am

பொருள் விளக்கம்:

பெரும் பாரத்தை தாங்கும் போது கல்லால் செய்யப்பட்ட தூண் உடைந்து போகுமே தவிர, வளைந்து கொடுக்காது, அது போல் பிறருக்கு உதவும் குணம் உள்ள, நல்ல பல குணங்களை உடைய சான்றோர் தீய செயல்கள் செய்வோரிடம் செயல்களை எதிர்த்து உயிர் துறப்பார்கள் ஆனால் பணிந்து போக மாட்டார்கள்.

சூப்பர். நல்ல அருமையான விளக்கம் [You must be registered and logged in to see this image.]

பாடல்களுக்கு அருமையாக விளக்கம் கொடுத்து பதியும் உங்கள் இந்த முயற்சி மென்மேலும் தொடரட்டும்.[You must be registered and logged in to see this image.]



என்னை மாதிரி ஆள்களுக்கு தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 16, 2011 2:11 pm

kitcha wrote:
பொருள் விளக்கம்:

பெரும் பாரத்தை தாங்கும் போது கல்லால் செய்யப்பட்ட தூண் உடைந்து போகுமே தவிர, வளைந்து கொடுக்காது, அது போல் பிறருக்கு உதவும் குணம் உள்ள, நல்ல பல குணங்களை உடைய சான்றோர் தீய செயல்கள் செய்வோரிடம் செயல்களை எதிர்த்து உயிர் துறப்பார்கள் ஆனால் பணிந்து போக மாட்டார்கள்.

சூப்பர். நல்ல அருமையான விளக்கம் [You must be registered and logged in to see this image.]

பாடல்களுக்கு அருமையாக விளக்கம் கொடுத்து பதியும் உங்கள் இந்த முயற்சி மென்மேலும் தொடரட்டும்.[You must be registered and logged in to see this image.]



என்னை மாதிரி ஆள்களுக்கு தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு [You must be registered and logged in to see this image.]


நன்றி தோழரே,

ஔவையின் பாடல்கள் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடியவை. மூதுரையை தொடர்ந்து நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களில் உள்ள அனைத்து பாடல்களையும் பொருளுடன் பதிப்பிக்க விரும்புகிறேன். இறைவனின் திருவருளாலும், நண்பர்களின் ஊக்கத்திலும் இந்த பதிவுகள் இனிதாக நடைபெற இறைவனை பிராதிக்கிறேன்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 2:23 pm

சதாசிவம் wrote:நன்றி தோழரே,

ஔவையின் பாடல்கள் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடியவை. மூதுரையை தொடர்ந்து நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களில் உள்ள அனைத்து பாடல்களையும் பொருளுடன் பதிப்பிக்க விரும்புகிறேன். இறைவனின் திருவருளாலும், நண்பர்களின் ஊக்கத்திலும் இந்த பதிவுகள் இனிதாக நடைபெற இறைவனை பிராதிக்கிறேன்.



பதியுங்கள், படிக்க சுவைக்க ஆர்வமாக உள்ளோம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 17, 2011 10:15 am

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள் விளக்கம்

தீயச் செயல்களைச் செய்பவர்களை காண்பது தீமையை தரும். இனிய சொல் இல்லாத கடுமையான சொற்களை கூறும் தீயோர் சொல் கேட்பதும் தீமையை தரும். தீயாரைப் பற்றி பேசுவதும், அவரோடு இணைந்து இருப்பதும் தீமையை தரும்.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

பொருள் விளக்கம்

உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

பொருள் விளக்கம்

உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி, உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல் எத்தனை ஆற்றல் உடையவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

பொருள் விளக்கம்

கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்புவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்று நீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.


14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

பொருள் விளக்கம்
இலை கிளைகளுடன் நீண்டு உயர்ந்து காட்டில் வளர்ந்த மரங்கள், மரங்கள் ஆகாது. தேவையான நூல்களை கற்காமல் படித்தவர்கள் சபையில் அவர்கள் பேசும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மரம் போல் நிற்கும் மனிதன் தான் சிறந்த மரம்.

தொடரும்......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 7:26 pm

ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக . :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 19, 2011 1:45 pm

Sundararaj Thayalan wrote:ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக . :வணக்கம்:

நன்றி ஐயா
நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 19, 2011 2:15 pm

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.


பொருள் விளக்கம்


அழகான மயில் ஆடுவதை பார்த்து, வான்கோழியும் தன்னை மயில் போல் பாவித்து தன் சிறிய சிறகுகளை விரித்து ஆடும். அது போல் தான் திறமை இல்லாதவன் திறமை இருப்பது போல் நடிப்பது, கல்வி கற்காதவன் சொல்லும் கவி எப்படி இருக்குமே அது போல் இருக்கும்.

16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.


பொருள் விளக்கம்


புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்து போட்டால், அது குணம் ஆன உடன் மருந்து போட்ட மருத்துவனை தின்னப் போகும், அது போல் தான், முட்டாளுக்கு நாம் செய்யும் உபகாரம், அவர்கள் நம்மிடமே கற்று நன்றி இல்லாமல் நமக்கு பகை ஆவார்கள். அவர்களுக்கு செய்யும் உதவி கல்லின் மேல் வேகமாக பானை வைத்தால், பானை உடைந்து விடுவதைப் போல் வீணாக போகும்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.


பொருள் விளக்கம்


ஒருவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் முட்டாள் என்று எண்ணக் கூடாது. குளத்தில் சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல் அவர்கள் வேண்டிய நேரத்தில் அவர்களின் திறமையை நிரூபிப்பார்.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.


பொருள் விளக்கம்


குளத்தில் நீர் இருக்கும் போது தான் அதில் பலன் பெரும் கொக்கு, நாரை அதன் அருகில் இருக்கும். அந்த குளத்தில் நீர் வற்றி விட்டால் அது நீர் உள்ள குளத்தை நோக்கி பறந்து சென்று விடும். ஆனால் அந்த குளம் வற்றி போனாலும் அங்கு இருந்த ஆம்பல், தாமரை போன்ற செடிகள் அங்கு இருந்து, மழை பெய்த பின்பு குளத்துடன் தழைத்து வளரும். அது போல் நமக்கு வறுமை, பிரச்சனை வந்தவுடன் நம்மை விட்டு விலகி விடுபவர்கள் நமக்கு உறவினர், நண்பர்கள் இல்லை. கஷ்டம் வந்த காலத்தில் நம்முடன் இருப்பவரே சிறந்த உறவினர் /நண்பர்.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.


பொருள் விளக்கம்


தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது திரும்ப குடமாக செய்து விடலாம், அதன் மதிப்பு மாறாது, அது போல் நல்ல குணம் உடையவர்கள் வறுமை வந்தாலும், தங்களுக்கு கஷ்டம் வந்தாலும், தங்களின் குணம் இழக்க மாட்டார்கள், அவர்களின் மதிப்பு மாறாது. ஆனால் தீய குணம் உடைய சிறியவர்கள், மண்ணால் செய்யப்பட்ட குடத்தை போன்றவர்கள், ஒரு முறை உடைந்தால் ஒட்ட முடியாது. அவர்களின் குணம் காலத்திற்கு தகுந்தது போல் மாறும்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.


பொருள் விளக்கம்


நடுக்கடலில் ஆழமான பகுதில் சென்று ஒரு பாத்திரத்தை நன்றாக மூழ்கி நீரை எடுத்தாலும், பாத்திரத்தின் அளவே தான் நீரை அள்ள முடியும், மிகப் பெரிய அளவில் நீர் இருந்தாலும் நாம் விரும்பும் அளவு நீரை அள்ள முடியாது. அது போல் தான் ஒரு பெண்ணுக்கு பணம், கணவன் நல்லபடியாக அமைந்தாலும் என்ன அனுபவிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் அனுபவிக்க முடியும்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.


பொருள் விளக்கம்


நம்முடன் பிறந்தோர் மட்டுமே உதவி செய்வார் என்று எண்ணக்கூடாது. நம்மை துன்புறுத்தும் வியாதி நாம் பிறக்கும் போது நம் கூடத் தான் பிறக்கிறது. ஆனால் அதைக் குணமாக்கும் மருந்து எங்கோ ஒரு மலையில் இருந்து கிடைக்கிறது. அது போல் எங்கோ இருந்து வரும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.[b]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 19, 2011 3:34 pm

அனைத்துமே அருமையான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக