புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
68 Posts - 59%
heezulia
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
110 Posts - 60%
heezulia
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 30, 2010 1:59 am

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற இனப் படுகொலை சம்பவங்களுக்கு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்தி இப்பரப்புரைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திருமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும் புனித சூசையப்பர் கல்லூரியைச் சேர்ந்த மனோகரன் இரஜிகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகான், தங்கத்துரை சிவானந்தா, சண்கராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சில் கொல்லப்பட்டனரென்று கூறப்பட்டது.
பின்னர் மூவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை வெளிப்படுத்தியது.

ஆகவே உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுக்கள், சரியான தீர்வினை வழங்குவதில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்தச் சர்வதேச மன்னிப்புச் சபையின் புதுவிதமான போராட்டம் உணர்த்துவதைப் புரிந்து கொள்ளலாம்.
மாயமான் வேட்டையில் இறங்கியுள்ள அரசின் கற்றறியும் ஆணைக்குழு, ஒடுக்கு முறைக்குள்ளான தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியைப் பெற்றுத் தரப் போவதில்லை.

சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழுவினரோ (International Crisis Group) சர்வதேச மன்னிப்புச் சபையோ அல்லது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமோ அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.
இந்தியா சீனாவின் உதவியின்றிப் போரை வென்றெடுக்க முடியாதென்று பகிரங்கமாக அறிவிக்கும் இலங்கை அரசு, அவர்களைத் தம்வசம் ஈர்த்தது போன்று இந்த மனித உரிமைச் சபைகளை வளைத்துப் போட முடியாமல் தடுமாறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இவை தவிர, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியளவில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக் கெதிரான அமைப்பின் (Action Contre La Faim) 17 தொண்டர்கள் குறித்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பதனையும் இந்த அனைத்துலக அமைப்புக்கள் கேட்க வேண்டும்.
மேல் விசாரணை என்கிற போர்வையில், படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டர்களின் சடலங்கள், பல தடவைகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரின் நெஞ்சங்களில் ஆறாத ரணங்களை உருவாக்கியிருந்தன.
எத்தனை தடவைகள் தோண்டியும், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு இன்னம் நீதி கிடைக்கவில்லை.

சுவீடனைச் சார்ந்த உல்வ் ஹென்றிக்சனை (ULF Nenricssion) தலைவராகக் கொண்டு செயற்பட்ட ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழு (SLMM) பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 உள்ளூர் தொண்டர்களின் படுகொலைக்கு, பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டுமென அன்று அறிவித்திருந்தது.
அதேவேளை இன்று, அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள மங்கள சமரவீர, அன்றைய அரசின் வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தவர்.
கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சனின் கூற்று, பொறுப்பற்ற வகையில் அமைந்திருப்பதாக பி. பி. ஸி. செய்திச் சேவைக்கு மங்கள சமரவீர அளித்த காட்டமான பதிலை இன்று நினைவு கூர வேண்டும்.
பதவியில் இருக்கும் போது செய்த நியாயப்படுத்தல்கள், தற்போது அவர்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் சுற்றி வருவதை காலம் கடந்தாவது புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.

இவ் வினப்படுகொலை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்திய பட்டினிக்கெதிரான அமைப்பின் தலைவர் டெனிஸ் மெட்ஸ்ஜர் (Dennis Metzger) தமது அமைப்பின் 27 வருட காலப் பணியில் இத்தகைய தொண்டர் மீதான படுகொலை, இதுவே முதன் முறையாக நிகழ்த்தப்பட்டதெனக் கூறியிருந்தார். இதுபோன்ற எத்தனையோ கூட்டு இனப் படுகொலைகள், தமிழர் தாயகமெங்கும் கடந்த 60 வருட காலமாக நடைபெற்று வருவதனை மனிதாபிமானம் பேசும் உலகம் உணர்ந்து கொள்ளவில்லை.
ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை உடைந்து போகக் கூடாதென்பதற்காக இக்கோரச் சம்பவங்களை, இவர்கள் மௌனமாக விழுங்கிக் கொண்டார்களோவென்று எண்ணத் தோன்றுகின்றது.
இருப்பினும் டப்ளினில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (PPT), இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதையிட்டு சற்று ஆறுதலடையலாம்.
ஆனாலும் பூனைக்கு மணி கட்டி நீதியை நிலைநாட்டுவது யார் என்பதில் தான் சிக்கல்.

ஏட்டுச் சுரக்காய் போலாகும் சர்வதேசச் சட்ட நியமங்கள், டாபூரில் இனப்படுகொலை புந்த சூடான் அதிபர் பசீரை இனப் படுகொலையாளன் என்று விளிப்பதற்கு பின்னடித்தது, போர்க் குற்றவாளி என்று சமாளிக்க முற்படுகின்றது.
தாயகக் கோட்பாட்டை முன் வைக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் திட்டமிட்ட, அரச சார்பு பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றும் முன்னெடுப்புக்களை இறைமை கொண்ட அரசின் உரிமையாகவும் கொள்ளும் சர்வதேச ஜனநாயகவாதிகள், தமது பிராந்திய நலன் என்பதற்கு அப்பால் எதனையும் பார்ப்பதில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
அரச அதிகாரக் கட்டமைப்பில், 18 ஆவது திருத்தச் சட்டம் போன்று ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வந்தால் இந்த ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் துள்ளிக் குதிக்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்கும், பொருத்தமான பொங்கு சனிக் காலமிதுவென அறிவுரைப் பின்னிணைப்பொன்றையும் சேர்த்து விடுவார்கள்.
இவை தவிர சர்வ அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு, மக்களின் தினசரி வாழ்வோடு நேரடியான இணைப்பைக் கொண்ட, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விதிமுறைகளில் மாற்றமேற்படுத்த புதிய சட்ட மூலமொன்று வரப் போகின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்ட மூலமொன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க, அரசு முற்படுகிறது.
ஜேர்மன் நாட்டில் அமுலிலுள்ள ஒரு கலப்பு முறைமையை இச்சட்டத் திருத்தம் கொண்டிருக்கும்.

மின்சாரத்திலும், பெற்றோலிலும் இயங்கும் ஹைபிட் (Hybrid) வாகனங்கள் போன்று, விருப்புத் தேர்வும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் இப்புதிய சட்டத்தில் கலந்திருக்கும்.
வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படவுள்ள இச்சட்டத் திருத்தம், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பெரும் மாறுதல்களை கொண்டு வருமென எதிர்பார்க்கலாம்.
இதில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையூடாக, எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை விருப்புத் தெரிவு ஊடாக வரும் உறுப்பினர்களில் 30 சதவீதமானோர், விகிதார பிரதிநிதித்துவ பட்டியலில் இணைத்து நியமிக்கப்படுவார்களென்று கூறப்படுகின்றது.
இதில் மக்கள் ஜனநாயகத்தை மறுதலிக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சபையில் உறுப்பினர் ஒருவருக்கு வெற்றிடம் ஏற்படும் போது அந்த நாற்காலியில் எவரை அமர்த்துவது என்கிற அதிகாரத்தை அவர் சார்ந்த அரசியல் கட்சியின் செயலாளர் நாயகமோ அல்லது சுயேச்சைக் குழுவாயின் அதன் தலைவரோ கொண்டிருப்பார்கள்.
அங்கு தமது வட்டாரத்திற்கு பொருத்தமானவரைத் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை இழக்கும் நிலை அம்மக்களுக்கு ஏற்படும். மறுதேர்தல் என்கிற பேச்சிற்கும் இடமிருக்காது.
இவற்றிற்கு அப்பால் உள்ளூராட்சி சபைகளில் இரு கட்சி ஆட்சிமுறை வலுவாகும் சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
ஆனாலும் இத்திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்த தரவுகளோடு விரிவாக உரையாடலாம்.

தற்போது இயங்கும் சபைகள், மக்களின் அங்கீகாரம் இல்லாமல், எவ்வாறு திருத்தச் சட்ட மூலத்திற்கு தமது ஆதரவினையோ அல்லது எதிர்ப்பையோ முன்வைக்க முடியுமென்கிற அடிப்படைக் கேள்வி எழுவது நியாயமே. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றில் இருப்பதால் எத்தகைய சட்ட மூலங்களையும் நிறைவேற்றக் கூடிய வல்லமை அரசிற்கு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
முன்பு பரவலாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மறுபடியும் மத்திய ஆட்சி மையத்தை நோக்கி திருப்புவது தான் இந்த திருத்தச் சட்ட மூலத்தின் சூத்திரம் போல் தெரிகிறது.

வெளிப்படையில் பல கட்சிகள் சுயாதீனமாக இயங்கும் ஜனநாயக இலங்கை போல் இந்நாடு காட்சியளித்தாலும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கியே சகல சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்படுகின்றன என்ற பேருண்மையை உலகம் எப்போது புரிந்து கொள்ளும்.
"நிதியால் வசமாகா நாடு எது'' என்று பாடியவாறு அடுத்த மாதம் வருகை தரும் இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஷ்ணாவிற்கு 18, 13 என்பதெல்லாம் சிறிய கோடுகளே


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக