புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
62 Posts - 42%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
6 Posts - 4%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mruthun
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
21 Posts - 5%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
7 Posts - 2%
mruthun
மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:55 am

இருபதாம் அத்தியாயம் - கல் விழுந்தது!

இத்தனை காலமும் நமது கதாநாயகி செந்திருவை அந்தரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன். அவளைப் பற்றி ஒன்றும் சொல்லாததனால் வாசகர்கள் பலர் பெரிதும் கவலை யடைந்திருப்பார்கள். என்மேல் கூட கோபங்கூட அவர்களுக்கு வந்திருக்கும். செந்திரு மகுடபதியின் உள்ளத்தை மட்டுந்தானா கவர்ந்தாள்? ஆயிரக்கணக்கான நேயர்களின் அன்பையும் அனுதாபத்தையும் அல்லவா, கவர்ந்திருக்கிறாள்?

ஆனாலும் இந்தக் கதையில் தயவு செய்து இது கதை தான் என்பதை மறந்துவிட வேண்டாம் - பல சம்பவங்கள் ஏக காலத்தில் வெவ்வேறு இடங்களில் நடப்பதால், ஒவ்வொன்றாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் சொல்லும்போது, பாவம், அந்த அனாதைப் பெண்ணின் துயரத்தைக் கடைசியில் வைத்துக் கொள்ளலாமே என்று தள்ளிப் போடத் தோன்றுகிறது.

கவுண்டர்கள் இருவரும் செந்திருவைத் தேவகிரி எஸ்டேட் பங்களாவில் கொண்டு வந்து விட்டுப் போனதையும், செந்திரு தன்னை அடைந்திருந்த அறையின் கதவைப் படீர் படீர் என்று அடித்ததையும் பதினோராம் அத்தியாயத்தில் பார்த்தோம். கதவை அடிப்பதனால் கை நோவதைத் தவிர வேறு பயனில்லையென்று அவள் கண்ட போது, திரும்பிச் சென்று அந்த அறையில் கிடந்த கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி அழுதாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக்கி வெகுநேரம் அழுது கொண்டே யிருந்தாள். அழுகையின் போது எப்படியோ வெறி சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டு வந்தது. மனதில் ஒருவித அமைதி உண்டாயிற்று. அப்படியே நித்திரையில் ஆழ்ந்தாள்.

"அம்மா! அம்மா!" என்ற மிருதுவான குரலைக் கேட்டுச் செந்திரு கண் விழித்தபோது பத்து மணிக்கு மேலிருக்கும். அவளை எழுப்பியவள் பங்களாவின் வேலைக்காரி பவளாயி. அறிவு தெளிந்தபோது, செந்திரு தான் ரொம்பவும் பலவீனமாயிருப்பதை உணர்ந்தாள். முதல் நாள் இரவு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பயங்கரச் சம்பவங்களினாலும், அவற்றினால் உள்ளத்தில் ஏற்பட்ட பீதி, கோபம், துன்பம் முதலிய கிளர்ச்சிகளினாலும், போதிய உணவும் உறக்கமும் இல்லாதபடியாலும், அவள் தேகம் மிகவும் சோர்வு அடைந்திருந்தது; உள்ளமும் களைபடைந்திருந்தது. அவளுடைய திக்கற்ற நிலைமையை உள்ளபடி உணர்ந்து துக்கப்படுவதற்கு வேண்டிய சக்திகூட அவளுக்கு அச்சமயம் இல்லாமலிருந்தது. அவளுடைய தேகமும் மனமும் அவ்வளவு பலவீனப்பட்டிருததன் காரணமாக, அச்சமயம் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடிய நிலைமையில் அவள் இருந்தாள். வேலைக்காரி சொன்னபடி எழுந்திருந்து பல் துலக்கி முகம் கழுவினாள். அவள் கொண்டு வந்திருந்த ஆப்பத்தையும் காப்பியையும் சாப்பிட்டாள்.

பவளாயி பாத்திரங்களை எடுத்துப் போன பிறகு அறையின் கதவு திறந்திருப்பதைச் செந்திரு கவனித்தாள். மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். ஒருவரும் அவளைத் தடை செய்யவில்லை. ஹாலைக் கடந்து பங்களாவின் வாசற்புறம் வந்து பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள். சிறிது சிறிதாக அவளுடைய உடம்பில் ஜீவசக்தி உண்டாகி வந்தது. உள்ளமும் வேலை செய்ய ஆரம்பித்தது. ஒரு புறத்தில் அவள் கண்முன் தோன்றிய அழகிய அற்புதமான இயற்கைக் காட்சி அவளை வசீகரித்தது. "ஆகா! என்ன அழகான இடம்!" என்று மனம் வியந்தது. மற்றொரு புறத்தில், அந்த அழகான இடத்தில் தான் சிறைப்பட்டிருப்பதும் அங்கிருந்து ஒரு வேளை கார்க்கோடக் கவுண்டரின் மனைவியாகத்தான் வெளியே போகக் கூடுமென்பதும் நினைவு வந்தன. அப்போது அவளுடைய நெஞ்சை யாரோ முறித்துப் பிழிவது போல் இருந்தது.

பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் வந்து அங்கு மிங்கும் உலாவினாள். அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஒரு வழியுண்டா என்னும் எண்ணம் அவள் மனதில் அடிக்கடி உதயமாயிற்று. சுற்றுமுற்றும் பார்க்கப் பார்க்க, அது எவ்வளவு அசாத்தியமான காரியம் என்பதுதான் நிச்சயமாய்த் தெரிந்தது.

பங்களாவுக்கும் தோட்டத்துக்கும் இடது புறத்தில் சரிவாக மலை உயர்ந்திருந்தது. அந்தச் சரிவில் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யுகலிப்டஸ் மரங்கள் வானளாவி உயர்ந்திருந்தன. பங்களாவுக்குப் பின் பக்கத்தில் மலை, சுவரைப் போல் உயர்ந்திருந்தது. வலது புறத்தில் திடீரென்று செங்குத்தான பள்ளமாயிருந்தது. அதன் ஓரத்தில் இரும்பு வேலை எடுத்திருந்தது. வேலி வழியாக எட்டிப் பார்த்தால் சுமார் நாலு ஆள் உயரத்துக்குக் கீழே ஒரு பாதை போவது தெரிந்தது. அப்பாதை வளைந்து வளைந்து குறுக்கும் நெடுக்குமாய்ச் சென்று, வெகு தூரத்துக்கப்பால் தெரிந்த பெரிய மலைச் சாலையை அடைந்தது.

பங்களாவுக்கு எதிரே பலமான இரும்புக் கேட் போட்டிருந்தது. அதன் வழியாகத்தான் அந்தப் பங்களாவிலிருந்து வெளியே போகலாம். அப்படிப் போகும் பாதைதான் சிறிது தூரத்தில் மடங்கி, பங்களாவின் வலது புறமாகக் கீழே இறங்கிப் போயிற்று.

செந்திருவுக்கு நீலகிரி புதியதில்லை. ஏற்கெனவே அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் கூனூரில் அவள் கோடை வாசம் செய்ததுண்டு. ஆகவே சுற்று முற்றும் பார்த்த பின்னர், இந்தப் பங்களாச் சிறையிலிருந்து பிறருடைய ஒத்தாசையில்லாமல் தப்பிச் செல்வது இயலாத காரியம் என்பதைத் தெரிந்து கொண்டாள். ஆனால் அத்தகைய ஒத்தாசை தனக்கு எப்படிக் கிடைக்கும்? இந்தத் தனிமையான மலை உச்சிக்குத் தன்னைத் தேடிக் கொண்டு யார் வரப்போகிறார்கள்? தன் பேரில் உண்மையாகப் பிரியம் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கார்க்கோடக் கவுண்டரின் கத்திக்கு இரையானார். இன்னொருவர் மேல் பாவிகள் கொலைக் குற்றம் சுமத்தப் போகிறார்கள்! ஆகவே தான் விடுதலையாகிச் சென்று அவரைக் காப்பாற்றினால் தான் உண்டு. அவர் வந்து தன்னைக் காப்பாற்றப் போவதில்லை. பின் யார் தனக்கு ஒத்தாசை செய்யப் போகிறார்கள்? ஐயோ! மூன்று வருஷம் சித்தப்பாவின் வீட்டில் சிறை இருந்த பிறகு தப்பித்துச் செல்ல முயன்றதன் பலன் இதுதானா? அதைவிடக் கடுமையான மலைச் சிறைக்கு அல்லவா வந்து சேர்ந்து விட்டோ ம்? - என்று எண்ணிச் செந்திரு விம்மினாள். இதிலிருந்து தப்புவதற்கு வழியே கிடையாதா? தன்னிடம் அன்புடன் பேசிய வேலைக்காரி பவளாயியின் ஞாபகம் வந்ததும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்று பழமொழி ஆயிற்றே? ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் இரங்கமாட்டாளா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:55 am

இந்த எண்ணத்துடன் செந்திரு வேலைக்காரியுடன் சிநேகம் செய்து கொள்ளத் தொடங்கினாள். பவளாயியும் செந்திருவிடம் அன்பும், அனுதாபமுமாய்ப் பேசினாள். செந்திரு தன்னுடைய மனத்தைத் திறந்த போது, பவளாயி அவளுக்காகக் கசிந்துருகுவதாய்க் காட்டிக் கொண்டாள். "ஆனால், நான் என்ன செய்வேன், தாயே! இந்தப் பங்களாவை விட்டு அந்தண்டை இந்தண்டை நான் போகக்கூடாது. உனக்கு மட்டுமா, எனக்குங்கூட இது ஜெயில் தான். என் புருஷனோ ரொம்ப முரடு, ஏதாவது சந்தேகம் தட்டினால் என்னைக் கத்தியால் குத்தி விடுவான்!" என்றாள்.

பவளாயி தன் புருஷனைப் பற்றிச் சொன்னது என்னமோ ரொம்ப சரிதான். இவனுடைய முகத்தைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. செந்திருவிடம் அவன் ஒரு வார்த்தை பேசவுமில்லை; செந்திரு பேசினால் அவன் காது கொடுத்துக் கேட்பானென்றும் தோன்றவில்லை. அவன் பாட்டுக்கு அவன் காரியத்தைச் செய்து கொண்டிருந்தான். பங்களாவுக்கு உள்ளே இருக்கும்போது அவன் தோட்டத்தின் இரும்பு கேட்டைப் பூட்டிச் சாவியைப் பத்திரமாய் மடியில் வைத்திருந்தான். வெளியே போகும்போதும் கேட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போனான்.

மூன்று தினங்கள் கழித்து ஒருநாள் இரண்டு கவுண்டர்களும் வந்தார்கள். செந்திரு அவர்களுடைய காலில் விழுந்து தன்னுடைய சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு, தன்னை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். இதனால் அவர்களுடைய கோபந்தான் அதிகமாயிற்று. கல்யாணத் தேதி குறிப்பிட்டாகி விட்டதென்றும், அவள் நல்லபடியாய்ச் சம்மதிக்காவிட்டால் பலவந்தமாகக் கல்யாணம் நடத்தப்படுமென்றும் தெரியப்படுத்தினார்கள். அதோடு, அடுத்த தடவை தாங்கள் வரும்போது அவளே இஷ்டப்பட்டுக் கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டுமென்றும் கூறிவிட்டுப் போனார்கள்.

செந்திருவுக்குப் பிராணனை விட்டு விடலாமா என்ற எண்ணம் அடிக்கடி உதித்தது. ஆனால் மகுடபதியின் மீது கொலைக் குற்றம் சாத்தியிருக்கிறார்கள் என்பது நினைவு வந்த போது, அவள் சாக விரும்பவில்லை. தனக்காக இந்தப் பெரிய கஷ்டத்துக்குள்ளானவரை, எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; அதற்காக தான் உயிரோடிருக்க வேண்டியது அவசியம். ஆனால், கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வது கனவிலும் நினைக்க முடியாத காரியம். கல்யாணத்தை எப்படித் தடை செய்வது? இம்மாதிரி யோசித்து யோசித்துக் கடைசியில் பங்கஜம் ஊகித்த வண்ணமே தனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்தாள். வேலைக்காரப் பவளாயியிடம் இதைச் சொல்லி, தனக்கு உண்மையில் பைத்தியந்தான் என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்வதற்கு உதவி புரிய வேண்டுமென்றும், அவளுடைய புருஷன் குப்பண்ணக் கவுண்டனிடம் கூட இரகசியத்தைச் சொல்லக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டாள். பவளாயியும் இதற்குச் சம்மதித்தாள். ஆனால், இவர்களுடைய பேச்சைக் குப்பண்ணக் கவுண்டன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த விவரம் செந்திருவுக்காவது பவளாயிக்காவது தெரியாது.

கார்க்கோடக் கவுண்டரிடம் மேற்படி சூழ்ச்சியைக் குப்பண்ணக் கவுண்டன் தெரியப்படுத்திய போது, அவருடைய முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.

மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரும், டிபுடி ஸுபரிண்டெண்ட் சங்கநாதம் பிள்ளையும் செந்திரு விஷயமாகப் புலன் விசாரிக்கிறார்களென்று கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர்களைச் சரிப்படுத்துவதற்குச் செந்திருவின் நடிப்புத் பைத்தியம் உபயோகமாக யிருக்குமென்று அவர் கருதினார். அவ்விதமே அவர் உபயோகித்து வெற்றியடைந்தார் என்பதை முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம்.

மேற்படி பிரமுகர்கள் தேவகிரிக்கு வந்த அன்று காலையில் வேலைக்காரி பவளாயி செந்திருவிடம் வந்து, "அம்மா! என்னத்தைச் சொல்ல? இன்றைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்வதற்காக யாரோ வரப் போகிறார்களாம்" என்று தெரிவித்தாள். செந்திருவுக்குப் பகீர் என்றது. வழக்கத்தைவிட அதிகமாகப் பைத்திய நடிப்பு நடிப்பதென்று அவள் தீர்மானித்தாள். மத்தியானம் அவள் அறைக்குள் போன சமயம் பார்த்துக் குப்பண்ணக் கவுண்டன் அறைக் கதவைச் சாத்தி வெளிப்புறம் தாளிட்டதுடன், பவளாயிக்குக் "கதவைத் திறக்காதே!" என்றும் உத்தரவு போட்டு விட்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:55 am

அந்தச் சமயத்திலேதான் அய்யாசாமி முதலியாரும் சங்கநாதம் பிள்ளையும் கவுண்டர்களுடன் வந்தார்கள். வந்து பார்த்து - இல்லை, பார்க்காமலே பரிதாபப்பட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் திரும்பிப் போக, மோட்டார் ஏறும் சமயத்தில் பேசிக் கொண்டிருந்ததைப் பவளாயி வந்து தெரிவித்தபோது, செந்திரு, "ஐயையோ! இது என்ன விபரீதம்?" என்று அரண்டு போனாள். வந்திருந்தவர்களில் ஒருவர் "இந்தப் பெண்ணை குற்றாலத்துக்கு அழைத்துப் போங்கள்" என்றாராம். இன்னொருவர், "சென்னைப் பட்டணத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேயே கொண்டு விட்டு விடுவதுதான் நல்லது" என்றாராம். "ஆமாம்; சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பலாம் என்றுதான் உத்தேசம்" என்று கார்க்கோடக் கவுண்டர் பதில் சொன்னாராம்.

"கடவுளே! பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே!" என்று செந்திரு கதிகலங்கினாள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போனால் நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிடும் என்பார்களே? தனக்கு அந்தக் கதிதான் நேருமோ?

வந்திருந்த பெரிய மனுஷர்கள் யார் என்று ஏதாவது தெரியுமா எனச் செந்திரு பவளாயியைக் கேட்டாள். "எனக்குத் தெரியாதம்மா! ஒருத்தர் முதலியார் போலிருக்கு. 'முதலியார்' 'முதலியார்' என்று கூப்பிட்டுக் கொண்டாங்க" என்று பவளாயி சொன்னதும், செந்திருவுக்கு மறுபடியும் கல்லைத் தூக்கித் தலையில் போட்டது போலிருந்தது. ஏனென்றால், வந்திருந்தவர்கள் போகும்போது பேசிய இரண்டொரு வார்த்தைகள் அவள் காதில் விழுந்தபோது, "ஏதோ தெரிந்த குரல் போலிருக்கிறதே!" என்ற சந்தேகம் ஒரு வினாடி அவளுக்கு உண்டாயிற்று. எனவே, இப்போது, "ஐயோ! ஒரு வேளை அவர் பங்கஜத்தின் தந்தை அய்யாசாமி முதலியார்தானோ? அப்படியிருந்தால், என்னுடைய பைத்திய நடிப்பு உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாக அல்லவா ஏற்பட்டுவிட்டது! சுவாமி! பழனி ஆண்டவனே! இப்படியா என்னைச் சோதிக்க வேண்டும்?" என்று செந்திரு கதறினாள்.

இப்படி வெகு நேரம் கவலைப்பட்ட பிறகு, பழனியாண்டவனே வழிகாட்டினார் என்று சொல்லும்படியாக, ஒருவழி தென்பட்டது. செந்திரு அங்கே வந்தது முதல் தினம் சாயங்காலத்தில் ஒரு காட்சியைக் கண்டு வந்தாள். அந்த பங்களாவுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் தோன்றிய ஒரு மலை மேலிருந்து ஒரு சுவாமியாரும் அவருடன் ஒரு பையனும் இறங்கி வருவார்கள். சாமியார் காவி உடை தரித்தவர்; இளம் வயதினர்; கையில் ஒரு தடி வைத்திருந்தார். பின்னோடு வந்த பையனுடைய கையில் ஒரு பெட்ரோமக்ஸ் விளக்கும், சில புத்தகங்களும் இருந்தன. இரண்டு பேரும் மலை உச்சியிலிருந்து இறங்கி, அந்தப் பங்களா வாசலில் இரும்புக் கேட்டுக்கு அப்பால் கொஞ்ச தூரம் வரையில் வந்து, அங்கிருந்து கீழே இறங்கிச் சென்ற பாதை வழியாகப் போனார்கள். தினம் மாலை ஐந்து மணிக்கு இது நடந்தது. "அவர்கள் யார்?" என்று செந்திரு கேட்டதற்கு, கூனூரிலிருக்கும் சச்சிதானந்த மடத்துச் சுவாமியாரென்றும், ரொம்பப் படித்தவரென்றும், அங்கிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள மலைக் கிராமத்தில் இராப் பள்ளிக்கூடம் நடத்துகிறாரென்றும், அதற்காக இப்படிக் குறுக்கு வழியாய்த் தினம் போகிறார் என்றும் பவளாயி தெரிவித்தாள். தன்னுடைய விடுதலைக்கு அந்தச் சுவாமியாருடைய ஒத்தாசையைக் கோருவதென்று செந்திரு இப்போது தீர்மானித்தாள்.

பவளாயியின் உதவியைக் கொண்டு ஒரு துண்டுக் காகிதமும் பென்சிலும் சம்பாதித்தாள். தன்னுடைய நிலைமையைச் சுருக்கமாக எழுதி, எப்படியாவது தன்னை விடுதலை செய்து காப்பாற்ற வேண்டுமென்று வேண்டினாள். அந்தக் காகிதத்தை ஒரு கல்லில் நாரினால் சேர்த்துக் கட்டி எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் இரும்பு வேலி ஓரமாகப் போய் நின்று கொண்டிருந்தாள். வழக்கம்போல சுவாமியாரும் பையனும் எதிர்புறத்து மலையிலிருந்து இறங்கி வந்து பங்களாப் பாதையை அடைந்து அதன் வழியே கீழே சென்றார்கள். செந்திரு பங்களா வாசல் தோட்டத்தில் வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தான் நின்ற இடத்துக்குக் கிட்டத்தட்ட நேர் கீழே அவர்கள் வந்ததும், காகிதம் கட்டிய கல்லைக் கீழே போட்டாள். என்ன துரதிர்ஷ்டம்! காகிதம் கட்டிலிருந்து நழுவி எங்கேயோ பறந்து சென்றது. கல் மட்டும் நேரே கீழ் நோக்கிப் போயிற்று. க்ஷவரம் செய்யப்பட்டு பளபளவென்று கண்ணாடிபோல் விளங்கிய சுவாமியாரின் மொட்டைத் தலையில் குறிபார்த்து விழுந்தது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:57 am

இருபத்தோராம் அத்தியாயம் - "தம்பி! நீதானா?"

அய்யாசாமி முதலியார் பங்களா வாசலில், நள்ளிரவில் மகுடபதியின் முன் தோன்றிய உருவம் உண்மையில் பெரியண்ணனுடைய ஆவி உருவம் அல்லவென்றும் பெரியண்ணனேதான் என்றும் வாசகர்கள் ஊகித்திருப்பார்கள்.

பெரியண்ணன் கத்திக் குத்துக்கு ஆளாகிக் கீழே விழுந்த போதுதான் கடைசியாக மகுடபதி அவனைப் பார்த்தவனாதலாலும், நள்ளிரவில் எதிர்பாராதபடி திடீரென்று அவன் உருவம் தோன்றியபடியாலும், மகுடபதி அவ்விதம் வெடவெடத்து நிற்கும்படியாயிற்று. ஆனால் அறிவாளியாதலால், விரைவிலேயே அவனுடைய பயம் நீங்கி, மனம் தெளிந்தது.

"தம்பி! நீதானா?" என்று பெரியண்ணனுடைய குரல் கூறியதும், மகுடபதியின் ஐயம் அறவே நீங்கியது.

"ஆமாம், பாட்டா! நான் தான், பிழைத்திருக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே பெரியண்ணனை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டான் மகுடபதி.

"பிழைத்திருக்கிறேன், தம்பி! இந்தக் கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி" என்றான் பெரியண்ணன்.

பெரியண்ணனுக்கு உயிர் உண்மையாகவே ரொம்பக் கெட்டி என்பதில் சந்தேகமில்லை. அவனால் சில முக்கியமான காரியங்கள் ஆகவேண்டியிருந்ததை முன்னிட்டே கடவுள் அவனுடைய உயிருக்கு அவ்வளவு வலுவைக் கொடுத்திருந்தார் போலும். அதோடு பற்பல அபாயங்களிலிருந்தும் அவனைக் கடவுள் தப்புவித்தார்.

கார்க்கோடக் கவுண்டார் மகுடபதியின் மேல் ஓங்கிய கத்திக்கு குறுக்கே பெரியண்ணன் விழுந்த போது கவுண்டரின் கை கொஞ்சம் தடுமாறிவிட்டது. அதனால் கத்தி ஆழமாகப் பதியவில்லை.

பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறது என்பதைக் கார்க்கோடக் கவுண்டர் கண்டு, சங்கடஹரிராவ் யோசனையின் பேரில் அவனை அப்புறப்படுத்தத் தீர்மானித்தபோது, 'இரகசியம் இரகசியம்' என்று அவன் மார்பைத் தொட்டுக் காண்பித்தது அவருடைய ஞாபகத்திலிருந்து அகலவில்லை. முடியுமானால் அவனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்து இரகசியத்தை அறிய வேண்டுமென்று விரும்பினார். அவன் சொல்ல விரும்பிய இரகசியம், தன்னை முக்கியமாய்ப் பாதிப்பது என்று அவருடைய உள்ளத்திற்குள் ஏதோ ஒன்று சொல்லிற்று. ஆகையால்தான், கிழவனைக் கள்ளிப்பட்டிக்கு ஜாக்கிரதையாகக் கொண்டு சேர்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்ததுடன், அவர் மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்த பஞ்சாலை டாக்டரைக் கொண்டு அவனுக்குச் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

பெரியண்ணனுக்குச் சுயப் பிரக்ஞை வந்தவுடன் சுற்று முற்றும் பார்த்தான். தான் இருப்பது பழகிய இடம் என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கும் சக்தி அவனுக்கு வந்தபோது, தான் இருப்பது கள்ளிப்பட்டியில் கவுண்டரின் பருத்தி மில் பங்களா என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பங்களாவில் பின்புறத்து அறையில் அவன் கிடந்தான்.

அவனுடைய மார்பிலே இலேசாக வலி இருந்தது. அவன் பக்கத்தில் கோயமுத்தூர் அனுமந்தராயன் தெருவில் பார்த்த இரண்டு தடியர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது சிறிதாக, அன்றிரவு அந்த வீட்டில் நடந்த பயங்கரச் சம்பவங்கள் எல்லாம் நினைவு வந்தன.

செந்திருவும், மகுடபதியும் என்ன ஆனார்களோ என்ற திகில் அவன் மனதில் தோன்றியது. அந்தத் தடியர்களைக் கேட்பதற்காகப் பேச முயன்றான்; பேச முடியவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம் டாக்டர் ஒருவர் வந்தார். பெரியண்ணன் கண் விழித்திருப்பதைப் பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றவர்களை நோக்கி, "கத்திக் குத்து அதிக ஆழமாய்ப் பதியவில்லை. சீக்கிரத்தில் குணமாகிவிடும். இரண்டு மூன்று நாளைக்கு இவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லிப் போய்விட்டார்.

பெரியண்ணனுக்குச் சிறிது சிறிதாக அறிவு நன்றாய்த் தெளிந்து வந்தது. யோசிக்கும் சக்தியும் அதிகமாயிற்று. தன்னுடையை தேக நிலைமை, தான் இருக்குமிடம் இவைகளைப் பற்றியும், செந்திரு மகுடபதியைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் வழியைப் பற்றியும் யோசனை செய்தான்.

அங்கிருந்து தான் தப்பிச் செல்வது எளிதான காரியமல்ல; அதற்கு வேண்டிய சக்தியும் உடம்பில் இல்லை. கொஞ்ச நாள் எப்படியும் அங்கே இருக்கத்தான் வேண்டும். ஆனால், தன்னைக் கொன்று போடாமல் கார்க்கோடக் கவுண்டர் இந்த மட்டும் தன்னை இங்கே கொண்டு வந்து வைத்து, டாக்டரைப் பார்க்கச் சொல்லியிருப்பது அதிசயமான காரியந்தான். இதற்கு ஏதோ அந்தரங்கமான காரணம் இருக்க வேண்டும். ஆம், இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. தனக்குப் பிரக்ஞை போகும் தறுவாயில் கவுண்டரைப் பார்த்து, 'இரகசியம்' 'இரகசியம்' என்று சொன்னது. அதை அறிவதற்காகத்தான் தனக்கு இவ்வளவு பராமரிப்பு நடக்கிறதோ, என்னமோ? ஆனால் அதைச் சொல்லலாமா? இப்போது சொல்லக்கூடாது. அதற்கு முன்னால் செந்திருவும் மகுடபதியும் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் நேர்ந்தால் பிற்பாடு சொல்ல வேண்டும். இப்போது சொன்னால் நம்புவது கடினம் என்பதோடு ஏதாவது விபரீதத்திலும் முடியலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:57 am

எல்லாவற்றுக்கும் தனக்கு உடம்பு முதலில் சரியாகக் குணமாக வேண்டும். அதுவரையில் தான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அறிவு தெளிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குள் மகுடபதியையும் செந்திருவையும் பற்றித் தெரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். ஐயோ! அவர்களுடைய கதி என்னவாயிற்றோ? - சுவாமி! பழனி ஆண்டவனே! அந்தக் குழந்தைகளை நீதான் ஓர் அபாயமும் நேராமல் காப்பாற்ற வேண்டும். நான் தான் இப்படிக் கையாலாகாமல் கிடக்கிறேனே!

விழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் பெரியண்ணனுடைய உள்ளம் இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது.

சில சமயம் பக்கத்து ஆபீஸ் அறையில் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பேசும் குரல் கேட்டது. அப்போதெல்லாம் பெரியண்ணன் ஆவலுடன் காது கொடுத்துக் கேட்பான். மகுடபதி செந்திரு என்ற பெயர்கள் அடிக்கடி அவன் காதில் விழும். அவர்கள் இருவரும் உயிரோடிருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டான். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் முதலிய பூரா விவரங்களையும் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான். ஆகவே, ஒவ்வொரு சமயம் கார்க்கோடக் கவுண்டர் அவனுடைய அறைக்கு வந்து அவனைப் பார்த்த போது, உடம்பு தனக்குக் குணமாகிவிட்டதாகவோ, அறிவு தெளிந்து விட்டதாகவோ காட்டிக் கொள்ளவில்லை. கார்க்கோடக் கவுண்டரையே பார்த்தறியாதவனைப் போல பேந்தப் பேந்த விழித்தான்.

"பெரியண்ணா! இதோ பார்! நான் யார் தெரிகிறதா?" என்று கவுண்டர் கேட்டபோது, "யாரு? ஓகோ? நஞ்சைப்பட்டிச் சிங்கமா?" என்று இப்படி ஏதோ வேண்டுமென்றே உளறினான். கவுண்டரும், "மூளை அடியோடு குழம்பிப் போயிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம்" என்று முணு முணுத்துக் கொண்டே போய்விட்டார்.

நாலாம் நாள் பெரியண்ணனுக்குப் போட்டிருந்த காவலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. முதல் மூன்று நாளும் கோயமுத்தூரில் அவன் பார்த்த தடியர்கள் மாறி மாறிக் காவல் புரிந்தார்கள். பிறகு அவர்கள் போய்ப் பதிலுக்கு மருதக் கவுண்டன் வந்து சேர்ந்தான். "இவனை எங்கே பார்த்தோம்?" என்று பெரியண்ணன் யோசனை செய்து, கடைசியில் அடையாளம் கண்டுபிடித்தான். "அய்யாசாமி முதலியார் பங்களாவில் காவல்காரன் அல்லவா? இவனிடந்தானே செந்திருவின் கடிதத்தைக் கொடுத்தோம்?" என்பது நினைவு வந்தது. "இவன் எப்படி இங்கே காவலுக்கு வந்து சேர்ந்தான்?" என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், அவனைத் தனக்குத் தெரிந்ததாகப் பெரியண்ணன் காட்டிக் கொள்ளவில்லை. "என்ன, பாட்டா! என்னைத் தெரியவில்லையா? உன்னாலேதானே எனக்குப் பங்களா வேலை போச்சு? நீ ஒரு பீத்தல் கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தே; எனக்குச் சனியன் பிடிச்சுது!" என்று மருதக் கவுண்டன் சொன்னபோது கூடப் பெரியண்ணன் சும்மா திரு திருவென்று விழித்தானே தவிர வேறு வார்த்தை பேசவில்லை

இப்படியெல்லாம் பாசாங்கு செய்துகொண்டு அவன் எதற்காகக் காத்திருந்தானோ, அந்த நோக்கம் கடைசியாக நேற்று நிறைவேறியது. அடுத்த அறையில் கார்க்கோடக் கவுண்டர் கோடை இடி இடித்தது போல் சிரிப்பதைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். அச்சமயம் மருதக் கவுண்டன் நல்ல வேளையாக அறையில் இல்லை. கதவு ஓரமா நகர்ந்து வந்து ஒட்டுக் கேட்டான். கார்கோடக் கவுண்டர் சிரிப்பை நிறுத்திவிட்டு, "ரொம்பத் தரமாய்ப் போச்சு? பழம் நழுவிப் பாலிலே விழுந்தது! பைத்தியம் பிடித்து விட்டதா, பைத்தியம்? வேஷமா போடுகிறாள்? சபாஷ், அப்பா, சபாஷ்!" என்று கத்தி விட்டு மறுபடியும் சிரித்தார்.

"எதற்காக இப்படிச் சந்தோஷப்படுகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றது தங்கசாமிக் கவுண்டரின் ஈனக்குரல்.

"உனக்கு ஒன்றும் புரியாது. நீ பச்சைக் குழந்தை; வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூடத் தெரியாது."

"என்னதான் விஷயம் சொல்லுங்களேன்!"

"அட பைத்தியமே! - அந்த வேலையற்ற அய்யாசாமி முதலியாரும், சங்கநாதம் பிள்ளையும் நம்ம விஷயத்தில் தலையிடுகிறார்களே. அவர்களை எப்படிச் சரிக்கட்டுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். கடவுளே நம்முடைய கட்சியில் இருந்து இந்தப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட புத்தியை உண்டாக்கினார். அவர்களை நாமே தேவகிரி எஸ்டேட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பொண்ணுக்குச் சித்தப் பிரமை என்று நிரூபித்து விடலாம். அப்புறம் அவர்கள் ஏன் தலையிடப் போகிறார்கள்?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:57 am

இவ்வாறு இரண்டு கவுண்டர்களும் நெடு நேரம் பேசிக் கொண்டதிலிருந்து, பெரியண்ணன் தெரிந்து கொள்ள விரும்பிய முக்கிய விஷயங்கள் அவனுக்குத் தெரியவந்தன.

செந்திருவைக் கூனூருக்குப் பக்கத்தில் தேவகிரியில் வைத்திருக்கிறார்கள். அவள் கவுண்டருடன் கல்யாணத்தைத் தடுப்பதற்காகப் பைத்தியம் கொண்டவள் போல் நடிக்கிறாள். அவள் விஷயத்தில் தான் அன்று கடிதம் கொண்டு போன பெண்ணின் தகப்பனார் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் - மகுடபதி இவர்களுடைய வலையிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் - செந்திருவைச் சீக்கிரத்தில் தேவகிரியிலிருந்து வேறு பந்தோபஸ்தான இடத்தில் கொண்டு போய் வைத்து விடும் உத்தேசம் கவுண்டர்களுக்கு இருக்கிறது - ஆகிய இந்த விவரங்களையெல்லாம் பெரியண்ணன் திரும்பத் திரும்ப ஆயிரம் தரம் சிந்தனை செய்தான். செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால் அவன் இனிமேல் அங்கே படுத்திருக்கக் கூடாது. உடனே தப்பித்து வெளிக் கிளம்ப வேண்டியதுதான். அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான்.

மறுநாள் சாயங்காலம் அந்த வழி அவனுக்குத் தென்பட்டது. அந்த வழியை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது, கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கள்ளுக்கடைதான்! அன்று காலையில் கவுண்டர்கள் காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். மருதக் கவுண்டன் மட்டுந்தான் ஆபீஸ் பங்களாவுக்குக் காவலாயிருந்தான். சாயங்காலம் அவன் கள்ளுக்கடைக்குப் போய் நன்றாய்ப் போட்டுவிட்டுக் கையில் ஒரு புட்டியிலும் கள் வாங்கிக் கொண்டு வந்தான். தள்ளாடிக் கொண்டே பெரியண்ணன் அருகில் நின்று, "ஏன் பாட்டா! நீ கள்ளுக் குடிக்கக் கூடாதென்று ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தாயாமே, அது நெசமா? இந்தா! இதோ உனக்கு ஒரு புட்டி வாங்கியாந்திருக்கிறேன். சாப்பிடாமற் போனாயோ விடமாட்டேன், வாயிலே விட்டு விடுவேன்!" என்றான். பெரியண்ணனுக்கு ரௌத்திரகாரமான கோபம் வந்தது. எழுந்திருந்து அந்தக் கள்ளுப் புட்டியைப் பிடுங்கி மருதக் கவுண்டன் தலையிலேயே போட்டு உடைக்க வேண்டுமென்று தோன்றிற்று. இன்னும் ஒரு தடவை மருதக் கவுண்டன் கள்ளுப் புட்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்திருந்தால் அவ்விதமே செய்திருப்பான். ஆனால், மருதக் கவுண்டன் அவ்வளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை. "வேணுமா, வேண்டாமா, சொல்லிப்பிடு! வேண்டாமே? இவ்வளவு தானே? வேண்டாத போனால் போ! அப்புறம் 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி சொரணைகெட்ட வெள்ளாட்டி' என்னாதே? மாட்டாயே? சரி; ரொம்ப சரி!" என்று சொல்லிக் கொண்டே புட்டியைத் தன் வாயிலேயே கவிழ்த்துக் கொண்டு அவ்வளவையும் குடித்துத் தீர்த்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தலை சுற்றியது. ஏதோ உளறிக் கொண்டே இரண்டு ஆட்டம் ஆடி விட்டுக் கீழே விழுந்து பிணம் போலானான்.

இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதென்று பெரியண்ணன் மெதுவாக அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தான். அவன் அந்தக் கட்டிடத்தில் இருப்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆகையால், அவன் போவதை யாரும் தடை செய்யவில்லை. இராஜாங்கமாகக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கோயமுத்தூர்ச் சாலையை அடைந்து அங்கு ஒரு போக்கு வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டியில் போகும் போதே, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். முதலில், கோயமுத்தூரில் அந்தப் பெண்ணின் தகப்பனார் வீட்டுக்குப் போய் அவரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லவேண்டும். அவருடைய உதவியைக் கொண்டு செந்திருவைக் கவுண்டர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டும். பிறகு, மகுடபதியைத் தேட வேண்டும்.

இவ்விதச் சிந்தனையுடன் பெரியண்ணன், கோயமுத்தூரை அடைந்தபோது இரவு வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இரவுக்கிரவே காரியத்தை முடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் அவன் தட்டுத் தடுமாறி வழி கண்டுபிடித்துக் கொண்டு அய்யாசாமி முதலியாரின் பங்களாவை அடைந்தான். வாசல் கேட்டுத் திறந்திருக்கவே உள்ளேயும் நுழைந்தான். அப்போதுதான் கொடி வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. மகுடபதியின் குரல் மாதிரியும் இருந்தது. மரத்தின் மறைவில் நின்று, சற்று நேரம் கேட்டான். நிலைமை ஒருவாறு புரிந்தது. பங்கஜம் உள்ளே பணம் எடுக்கப் போனபோது சட்டென்று கேட்டுக்கு வெளியே வந்து நின்று, மகுடபதிக்காகக் காத்திருந்தான்.

மேற்கூறிய விவரங்களையெல்லாம் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு மகுடபதி கேட்டான். தன்னுடைய கதையையும் பெரியண்ணனுக்குச் சொன்னான். கோயமுத்தூரில் தங்குவதற்குப் பத்திரமான இடம் ரயில் ஸ்டேஷன் தான் என்று தீர்மானித்து, அவர்கள் நேரே ஒரு வண்டி பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

மறுநாள் காலையில் புறப்படும் ரயிலில் கூனூருக்குப் போய் எப்படியாவது செந்திருவைக் கண்டுபிடித்து விடுதலை செய்வது என்று அவர்கள் பேசி முடிவு செய்தார்கள்.

"தம்பி! கூனூர் நம் இருவருக்கும் புதிதாயிற்றே. அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லையே! எங்கே தங்குவோம்? எப்படிக் கவுண்டர் பங்களாவைக் கண்டுபிடிப்போம்? யார் நமக்கு உதவி செய்வார்கள்?" என்று பெரியண்ணன் விசாரத்துடன் கேட்டான்.

"பாட்டா! நீ கவலைப்படாதே கூனூரில் சுவாமியார் ஒருவர் இருக்கிறார். சச்சிதானந்த மடம் என்று ஒரு மடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை எனக்கு நன்றாய்த் தெரியும். பல தடவை அவரை நான் மத உபந்நியாசத்துக்காக அழைத்து வந்திருக்கிறேன். அவரைப் போய்ப் பிடிப்போம். அநியாயம், அக்கிராமம் என்றால் அவருக்கு ஆகாது. இந்த விஷயத்தில் நமக்குக் கட்டாயம் உதவி செய்வார்" என்றான் மகுடபதி.

அதே சமயத்தில், மேற்படி சுவாமியார் மண்டையில் கல் விழுந்த காயத்துக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு வலியினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:58 am

இருபத்திரண்டாம் அத்தியாயம் - சுவாமி மகானந்தர்

மகுடபதியும் பெரியண்ணனும் மறுநாள் மத்தியானம் கூனூரில் உள்ள சச்சிதானந்த மடத்தை எவ்வித இடையூறுமில்லாமல் போய் அடைந்தார்கள். மடத்தின் தலைவர் சுவாமி மகானந்தர், தலையில் கட்டுடன் படுத்திருப்பதைக் கண்டதும் மகுடபதி திடுக்கிட்டான். அவரிடம் மகுடபதிக்கு விசேஷ பக்தி உண்டு. சுவாமியாருக்கும் மகுடபதியிடம் அதிகப் பிரேமை அவனை அரசியல் தொண்டை விட்டு விட்டுத் தம்முடன் சேர்ந்து பாரமார்த்திகத் தொண்டு செய்ய வரும்படி சுவாமியார் சில சமயம் அழைத்ததுண்டு. மகுடபதி அதற்கு இணங்காமலிருந்ததற்கு முக்கிய காரணம் அவனுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த செந்திருவின் நினைவுதான் என்று சொல்லலாம். அரசியல் கிளர்ச்சியில் அவனுக்கிருந்த ஆர்வமும் ஒரு காரணந்தான். சமீபத்தில் ஒரு வருஷ காலமாக அவன் கூனூர் மடத்துக்கு வரவேயில்லை. தான் அரசியலில் ஈடுபட்டவனாதலால், மடத்துக்குத் தன் மூலமாய்ப் போலீஸ் தொந்தரவு ஏற்படக்கூடாதென்று அவன் கருதியிருந்தான்.

இப்போது மண்டையில் கட்டுடன் சுவாமியாரைப் பார்த்ததும் அவன் பரபரப்புடன், "சுவாமி! தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தங்களிடம் ஒரு உதவி கேட்கலாமென்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான்.

"வீணாக ஒருவர் மேல் சந்தேகப்பட்டதால் வந்த விபத்து இது; ஆண்டவனுடைய தண்டனை!" என்றார் சுவாமியார்.

"தாங்களாவது ஒருவர் மேல் வீணாகச் சந்தேகப்படவாவது? ஆண்டவன் தண்டனையாவது? ஒன்றையும் நம்பமுடியவில்லை!" என்றான் மகுடபதி.

"கார்க்கோடக் கவுண்டரைப் பற்றிக் கேட்டிருக்கிறாயோ, இல்லையோ?" என்று சுவாமியார் சொன்னதும், மகுடபதிக்கு எவ்வளவு வியப்பாயிருந்திருக்குமென்று சொல்லவே வேண்டியதில்லை.

"ஆமாம்; அவருக்கு என்ன? சுவாமி! ஒருவேளை..." என்று மகுடபதி திடுக்கிட்டுக் கேட்டான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் என்னை அடித்துப் போட்டார் என்று பயப்படுகிறாயா? மனுஷன் செய்யக் கூடியவன் தான். ஆனால் அதற்கு முன்னாலேயே சுவாமி என்னைத் தண்டித்துவிட்டார்."

"என்ன சுவாமி! திருப்பித் திருப்பித் தண்டனை என்கிறீர்களே?"

"சொல்கிறேன். இந்த ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் கார்க்கோடக் கவுண்டருக்கு ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேவகிரி என்று பெயர். அங்கே ஒரு பங்களாவும் இருக்கிறது. அந்த பங்களாவைப் பற்றி என்னவெல்லாமோ கெட்ட பெயர் உண்டு. கவுண்டருடைய விரோதிகளை அங்கே கொண்டுவந்து தீர்த்து விடுகிறார் என்று வதந்தி. ஆறு மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு பணக்காரப் பையனை அங்கே கொண்டு வந்து ஜெயிலிலே வைக்கிறாப்போல் வைத்திருந்து பதினாயிரம் ரூபாய்க்கு நோட்டு எழுதி வைத்துக் கொண்டு தான் விட்டாராம். இன்னும் அங்கே அனாதைப் பெண்களைக் கொண்டு வந்து சிறைப்படுத்தி வைத்து அட்டூழியங்கள் செய்வது பற்றியும் கர்ணகடூரமான விவரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்... இருக்கட்டும், தம்பி! உன்னைப் பார்த்தால் ஒரு மாதம் பட்டினி கிடந்தவன் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி? முதலில் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு இளைப்பாருங்கள். அப்புறம்..."

மகுடபதிக்கு உண்மையில் பசியாகத்தானிருந்தது. சச்சிதானந்த மடத்தில் பிரசாதங்கள் பிரம்மானந்தமாயிருக்குமென்றும் அவனுக்குத் தெரியும். ஏனெனில் மகானந்த சுவாமியார் பட்டினி போட்டு உடலை வருத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; நன்றாகச் சாப்பிட்டு, தேகாப்பியாசம் செய்து, திடசரீரம் பெற்றிருந்தால்தான் எந்த விதமான தொண்டும் சரியாகச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர். ஆகவே, சாதாரண நிலைமையில் "ஆமாம், முதலில் பிரசாதத்தைக் கவனிக்கலாம். இன்றைக்கு என்ன பிரசாதம்? சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் ஏதாவது உண்டா?" என்று மகுடபதி கேட்டிருப்பான். ஆனால் இப்போது, சுவாமியார் சொல்ல ஆரம்பித்திருந்த விவரம் அவனுக்கு அசாத்தியமான ஆவலை உண்டாக்கியிருந்தது. அதுவும் பெண்களைப் பற்றிய அட்டூழியங்கள் என்று சுவாமியார் குறிப்பிட்டவுடன், மகுடபதியின் உடம்பில் உள்ள இரத்தம் கொதிக்க ஆரம்பித்துத் தேகமெல்லாம் தகதகவென்று எரிந்தது. இந்த நினைவில் அவனுடைய மனம் பிரசாதத்தில் செல்ல முடியாதல்லவா?

"சுவாமி! பிரசாதமெல்லாம் இருக்கட்டும். எங்களுக்குப் பசியேயில்லை. ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லுங்கள்" என்றான்.

அதன்மேல் சுவாமியார் சொன்னதாவது:



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:59 am

"தேவகிரியை அடுத்துள்ள கிராமத்தில் தினம் சாயங்கால வேளையில் வயதானவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஒரு மாதமாக நடக்கிறது. அந்தக் கிராமத்துக்குக் குறுக்கு வழி, தேவகிரி பங்களாவின் ஓரமாகப் போகிறது. தினமும் அந்த வழியாக ஒரு மாதமாய் நான் போய்க் கொண்டு வருகிறேன். பங்களாவுக்குச் சமீபமாய் நான் போகும் போதெல்லாம் அதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கும் விஷயங்கள் என் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. ஏழெட்டுத் தினங்களுக்கு முன்னால் ஒரு நாள் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். ஆனாலும் நமக்கேன் இந்தத் தொல்லை என்று எண்ணியவனாய் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் அன்று இராத்திரியெல்லாம், அந்தப் பெண்ணின் தீனமான அழுகுரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது; மனதை வேதனை செய்து கொண்டே இருந்தது. இம்மாதிரி விவகாரங்களில் தலையிட்டால் நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் தொண்டுகள் எல்லாம் தடைப்பட்டு விடுமென்பதை நினைத்தும், 'பரதர்மோ பயாநக!' என்ற பகவத்கீதை வாக்கியத்தை நினைத்தும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் வேலைகளில் கவனம் செலுத்தினேன். மறுநாள் அந்தப் பக்கம் போனபோது, என்னையறியாமலே, அழுகுரல் இன்றைக்கும் கேட்கிறதா என்று செவிகள் கூர்மையாகக் கவனித்தன. ஒன்றும் கேட்கவில்லை. மனம் சற்று நிம்மதியடைந்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு, பங்களாவின் முன் தோட்டத்தில் ஒரு பெண் உலாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மறுபடியும் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இவள் இங்கே இஷ்டப்பட்டு வந்திருக்கிறாளா, பலாத்காரமாகக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களோ, என்ன நோக்கத்துடன் சிறைப்படுத்தியிருக்கிறார்கள், முதல் நாள் ஏன் இவள் அழுதாள் என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தான். இதையெல்லாம் யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது? கார்க்கோடக் கவுண்டர் அங்கே இல்லை. இருந்தாலும் அவரை எனக்கு முன்பின் தெரியாது. ரொம்பப் பொல்லாத மனுஷன் அக்கிரமக்காரன் என்று கேள்விப்பட்டிருந்ததுதான்! மற்றபடி, பங்களாத் தோட்டக்காரன் ஒருவன் காணப்பட்டான். அவனைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. யமகிங்கரனைப் போல் இருந்தான். அவனிடம் எப்படி என்ன கேட்பது? கேட்டால், நிச்சயமாக அவன் சண்டைக்கு வருவானே தவிர, சரியான பதில் சொல்லப்போவதில்லை...

இப்படியே இன்னும் இரண்டு நாள் போயிற்று. முந்தாநாள் நான் அந்தப் பக்கமாகப் போன போது பங்களாவுக்குள்ளிருந்து வந்த அலறுங் குரல் மயிர்க்கூச்செறியச் செய்தது. "ஐயோ! பாவி! சண்டாளா! பழிவாங்குகிறேன், பார்!" என்று இப்படியென்னவெல்லாமோ பயங்கரக் கூக்குரல் அழுகையுடன் கலந்து கலந்து வந்தது. இதற்குப் பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பங்களாத் தோட்டத்தின் வாசல் கேட்டுக்கு அருகில் சென்று தோட்டக்காரனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவன் கண்ணில் தீப்பொறி பறக்க வந்தான். 'என்ன?' என்று வள்ளென்று விழுந்தான். 'ஏனப்பா இப்படிக் கோபிக்கறே? யாரோ ஒரு பெண் அலறுதே, என்ன சமாசாரமென்று கேட்கத்தான் வந்தேன். வைத்தியர் கியித்தியர் வேணுமானால் அனுப்புகிறேன்' என்றேன். தோட்டக்காரனும், சற்று சாந்தமடைந்து, 'இதெல்லாம் உங்களுக்கு என்னாத்துக்கு, சாமி! உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க சாமி! அப்படி ஏதாவது கேட்க வேண்டுமானா நாளைக்கிக் கவுண்டர் வராரு. அவரை வந்து கேட்டுக்குங்க!' என்றான். அவனிடம் மேலே பேசுவதில் பயனில்லை என்று என் வழியே போய்விட்டேன். மறுபடியும் அன்றிரவெல்லாம் என் மனம் அமைதி இல்லாமல் தவித்தது.

அடுத்த நாள் பிற்பகலில் நான் மடத்திலிருந்து கிராமத்துக்குக் கிளம்பிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய மோட்டார் எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அதில் நாலைந்து பேர் - பெரிய மனுஷர்கள் - இருப்பது தெரிந்தது. என்னருகில் வந்து மெதுவாக நின்றபோது பெரும் வியப்பு உண்டாயிற்று. வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, 'சுவாமி! சௌக்கியமா?' என்று கேட்டார். அவர்தான் கார்க்கோடக் கவுண்டர் என்று என் மனதுக்குத் தெரிந்துவிட்டது. எந்தவிதமான் கொலை பாதகத்துக்கும் அஞ்சாத மனுஷன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மனதில் தோன்றிய வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் 'சௌக்கியந்தான்' என்றேன். 'பங்களாவில் இருக்கும் குழந்தையைப் பற்றி விசாரித்தீர்களாம்' என்றார் கவுண்டர். அப்போது அவருடைய முகத்தில் விஷம் கக்கிய புன்னகை தாண்டவமாடியது.

ஏதோ சண்டைக்குத்தான் ஆரம்பிக்கிறார் என்ற எண்ணத்துடன், நானும் குரலைக் கடுமைப் படுத்திக் கொண்டு, 'ஆமாம், விசாரித்தேன்' என்றேன். 'ரொம்ப சந்தோஷம், சாமி! தங்களைப் போன்ற பரோபகாரிகள் - மகான்கள் இருப்பதனால்தான் இந்த நீலகிரி மலையிலே மழை பெய்கிறது. இல்லாவிட்டால் பெய்யுமா? பங்களாவிலே இருக்கிற பெண் குழந்தைக்குச் சித்தப் பிரமையாயிருக்கிறது - ஆறு மாதமாய் - இப்போது ரொம்பக் கடுமை. குத்து, வெட்டு என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது. இவர்கள் யார் தெரியுமோ, இல்லையோ? டிபுடி சூபரிண்டெண்டு சங்கநாதம் பிள்ளைவாள்; ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார்வாள்; இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். பட்டணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கோ, இல்லாவிட்டால் குற்றாலத்துக்கு அனுப்புங்கோ என்கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சுவாமி? அல்லது ஏதாவது மந்திரம், தந்திரம் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?' என்று கேட்டார். கடைசியில் கேட்டது கிருதக்காகச் சொன்ன வார்த்தை என்று தெரிந்துவிட்டது. பைத்திய சிகிச்சையில் எனக்கு அவ்வளவாக அனுபோகமில்லை; மன்னிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டு நடந்தேன். மோட்டாரும் கிளம்பிச் சென்றது.

பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது என் மனம் சரியான நிலைமையில் இல்லை. நாலு பேர் முன்னிலையில் அவமானப்பட்டதனால் ஆத்திரமாயிருந்தது. அந்த மனுஷன் சொன்னது முழு நிஜம் இல்லை. ஏதோ பித்தலாட்டம் இருக்கிறது என்று தோன்றியது. அவர் சொன்னதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் என்றும், பாவம் யாரோ ஓர் ஏழைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, பைத்தியம் என்று சொல்லி உலகத்தை ஏமாற்றப் போகிறார் என்றும் நினைத்தேன். இதெல்லாம் எவ்வளவு அநியாயமான எண்ணங்கள் என்பதையும், கார்க்கோடக் கவுண்டருக்கு நான் எவ்வளவு அநீதி செய்து விட்டேனென்பதையும் நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது. அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலொழிய என் மனம் சாந்தி அடையாது..."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:59 am

இதுவரையில் மிக்க ஆவலுடன் மௌனமாய்க் கேட்டு வந்த மகுடபதி இங்கே குறுக்கிட்டு, "ஐயோ! என்ன வார்த்தை சொல்கிறீர்கள்? கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதா? எதற்காக? நீங்கள் நினைத்தது தான், சுவாமி உண்மை! அந்தக் கொலை பாதகக் கள்ளுக்கடைக் கண்டிராக்டர்.." என்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான்

"பொறு, தம்பி! பொறு! பாக்கிக் கதையையும் கேட்டு விட்டல்லவா பேச வேண்டும்? கார்க்கோடக் கவுண்டர் எவ்வளவோ பொல்லாத மனுஷராயிருக்கலாம். எத்தனையோ கொலை பாதகங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இந்த விஷய்த்தில் அவர் கூறியது உண்மை என்று அரைமணி நேரத்துக்குள் தெரிந்து போயிற்று. மேற்படி பங்களாவை நான் நெருங்கிய போது, அந்தப் பெண் தோட்டத்தில் உலாவிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வேலைக்காரனைக் காணவில்லை. கேட்டண்டை போய் அவளைக் கூப்பிட்டுப் பேசி, உண்மையை அறிந்து கொண்டாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. பங்களா தோட்டத்தின் ஓரமாய்க் கீழே போகும் பாதையில் போய்க் கொண்டிருந்த போது, தற்செயலாய் மேலே பார்த்தேன். வேலி ஓரத்தில் சேலைத் தலைப்புத் தெரிந்தது. எதற்காக வேலி ஓரமாய் வந்து நின்றாள் என்று நான் எண்ணி முடிவதற்குள், என் பின்னோடு வந்த பையன் 'சாமி! சாமி!' என்று கத்தினான். அதே சமயத்தில் தலையில் ஒரு கல் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் கண் இருண்டு மயக்கமாய் வந்தது. கீழே உட்கார்ந்து விட்டேன். இரத்தம் பெருகி வழிந்து துணியையெல்லாம் நனைத்தது. அப்போதே கபாலம் திறந்து மோட்சமடையாமல் இன்னும் இந்த உடலில் உயிர் இருப்பது கடவுளுடைய செயல் தான். பாவம் அந்தப் பெண்ணுக்குப் பைத்தியந்தான் என்பது நிச்சயமாயிற்று. கவுண்டரைச் சந்தேகித்ததற்குத் தண்டனை கிடைத்தது!"

மகுடபதியின் ஆகாசக் கோட்டையெல்லாம் இவ்விதம் சிதைந்து போயிற்று. தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, அவன் "சுவாமி! உங்கள் மேல் வேண்டுமென்று அந்தப் பெண் கல்லை எறிந்தாளென்றா சொல்கிறீர்கள்? என்னத்திற்காக?" என்றான்.

"பைத்தியக்காரர்களின் செயலுக்குக் காரணம் இருக்குமோ? என் பின்னோடு 'லைட்' எடுத்துக் கொண்டு வந்த பையன், மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தானாம்! கல்லைக் குறி பார்த்து என் தலைக்கு நேரே எறிவதைக் கண்ணால் கண்டதாகச் சொல்கிறான். அவன் இப்போது கிராமத்துக்குப் போயிருக்கிறான். நேற்றுக் கிராமத்துக்குப் போகாமலே மடத்துக்குத் திரும்பிவிட்டேன். தலைக் காயம் குணமாகும் வரையில் ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடம் கிடையாது என்று சொல்லிவிட்டு வரும்படி அவனை அனுப்பியிருக்கிறேன்... அதோ அவனே வந்து விட்டான் போலிருக்கிறதே?" என்றார். ஒரு சிறு பையன் மடத்து வாசற்படியண்டை வந்து கொண்டிருந்தான்.

"ஏண்டா, கிருஷ்ணா! அதற்குள்ளே எப்படித் திரும்பினாய்?" என்று சுவாமியார் சிறிது வியப்புடனே கேட்டார்.

"நான் கிராமத்துக்குப் போகவில்லை, சாமி! வழியிலேயே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் சாமியார் அருகில் வந்து, சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தான்.

"சாமி! எஸ்டேட் பங்களாவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு செடியில் வெள்ளையாய்த் தெரிந்தது. கிட்டப் போய் பார்த்தேன். இந்தக் கடிதம் கிடந்தது. வாசித்துப் பார்த்ததும் முக்கியமான விஷயம் என்று எண்ணி, கிராமத்துக்குப் போகாமலே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கடிதத்தையும் சுவாமியார் கையில் கொடுத்தான்.

சுவாமியார் கடிதத்தைப் படித்த போது, அளவுகடந்த ஆச்சரியத்தினால் அவருடைய புருவங்கள் நெரிந்து உயர்ந்தன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:00 am

இருபத்துமூன்றாம் அத்தியாயம் - எதிர்பாராத சந்திப்பு

சுவாமியார் கடிதத்தைப் படித்துவிட்டு மகுடபதியிடம் கொடுத்தார். மகுடபதி படித்தான். கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:

நான் ஒரு அனாதைப் பெண். இங்கே என்னைப் பலவந்தமாகக் கொண்டுவந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனக்குப் பைத்தியம் இல்லை. இந்தப் பாதகர்களுடைய கொடுமைக்குப் பயந்து பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு நடிக்கிறேன். என்னை எப்படியாவது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு,
திக்கற்ற
செந்திரு.

இதைப் படித்தடும் மகுடபதியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. பெரியண்ணன் "என்ன? என்ன?" என்று வற்புறுத்திக் கேட்கவே, அவனுக்கும் வாசித்துக் காட்டினான். பெரியண்ணன் 'ஓ'வென்று அழுது விட்டான்.

சுவாமியார் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார். "மகுடபதி! இதென்ன? உங்களுக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா?" என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி! அவளைத் தேடிக்கொண்டு தான் நாங்கள் வந்தோம்!" என்றான் மகுடபதி.

பெரியண்ணன் விம்மிக் கொண்டே, "குழந்தை இந்தக் கடிதத்தைக் கல்லில் கட்டிக்கீழே போட்டிருக்கிறது. கடுதாசி பறந்து போய்விட்டது. கல் மாத்திரம் சுவாமியின் தலையில் விழுந்திருக்கிறது" என்றான்.

"அப்படியானால், கடிதத்தில் கண்ட விஷயம் உண்மையென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று சுவாமியார் இரண்டு பேரையும் பார்த்துக் கேட்டார்.

கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயங்களையும் மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாருக்குச் சொன்னார்கள். சுவாமியார் அளவு கடந்த ஆச்சரியத்துக்கு உள்ளானார் என்று சொல்லவேண்டியதில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் பயமும் உண்டாயிற்று. கார்க்கோடக் கவுண்டரைப் பற்றி அவர் ஏற்கெனவே பராபரியாய்க் கேள்விப்பட்டதுதான். இப்போது அவருடைய கொடுமைகளுக்கு உள்ளானவர்களிடம் நேரிலேயே விஷயங்களைக் கேட்டதும், "அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். அதோடு, காங்கிரஸ் தொண்டனான மகுடபதி இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதனால் அபாயம் அதிகமாயிற்று. சர்க்கார் அதிகாரிகள் கார்க்கோடக் கவுண்டரின் பக்கந்தான் இருப்பார்கள். நம்முடைய பேச்சை நம்பமாட்டார்கள். இவ்வளவுடன் கூட, சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்; நாமோ சந்நியாசி, பழி சுமத்த எங்கே இடுக்குக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் தூர்த்தர்கள் தங்கள் காரியத்தை ஒருவேளை ஆரம்பிக்கலாம்.

இப்படியெல்லாமிருந்த போதிலும், ஒரு அனாதைப் பெண்ணைப் பாவிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியந்தான் என்று சுவாமியார் முடிவு செய்தார். ஆனால் காரியம் கெட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியதும் அவசியம். அவசரப்பட்டு ஒன்று கிடக்க ஒன்றைச் செய்து மோசம் போகக் கூடாது.

வெகு நேரம் மகுடபதியுடனும், பெரியண்ணனுடனும் கலந்து யோசித்த பிறகு, சுவாமியார் சொன்னதாவது:

"இந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றும் பிரவேசிக்க வேண்டாம். நீங்கள் தலையிட்டால் கட்டாயம் காரியம் கெட்டுப் போகும். இன்று ராத்திரி இங்கே தங்கிவிட்டு நாளைக்குக் கோயமுத்தூருக்கோ அல்லது கிராமத்துக்கோ புறப்பட்டுப் போங்கள். உதகமண்டலத்தில் ஒரு பெரிய உத்தியோகஸ்தரை எனக்கு நல்ல பழக்கமுண்டு. நாளையதினம் எனக்கும் கொஞ்சம் உடம்பு சௌகரியமாகிவிடும். நானே நேரில் போய் அவருடன் பேசி எப்படியாவது அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பார்க்கிறேன். அதற்கு இந்தக் கடிதமே எனக்குப் போதும். அவசரப்பட்டு ஏதாவது செய்தோமானால் எல்லாம் குட்டிச்சுவராகிவிடும். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அதன் பொறுப்பு நம்முடைய தலையில் தான் விடியும். கார்க்கோடக் கவுண்டரிடத்திலிருந்து அவளை விடுதலை செய்துவிட்டால், அப்புறம் அவளாச்சு, நீயாச்சு!"

சுவாமியார் கூறியதை மறுத்துக் கூற மகுடபதிக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவர் கூறுவது தான் நியாயம், புத்திசாலித்தனம் என்றும் அவனுக்குப் பட்டது.

"சரி, சுவாமி! அப்படியே ஆகட்டும்" என்றான்.

"இனிமேலாவது நீங்கள் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள். ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்" என்றார் சுவாமியார்.

அவ்விதமே மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாரின் அறையிலிருந்து வெளிவந்து பிரசாதம் சாப்பிட்டார்கள். பிறகு மகுடபதி, கிருஷ்ணன் என்கிற பையனிடம் தேவகிரி எஸ்டேட் பங்களா எங்கே இருக்கிறதென்பதைப் பற்றியும், போகும் வழியைப் பற்றியும் விவரமாக விசாரித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம், பெரியண்ணனைப் பார்த்து, "பாட்டா! என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. நான் போய்க் கொஞ்சம் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன், நீ படுத்துக் கொண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக