புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
62 Posts - 42%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
9 Posts - 6%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mruthun
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
7 Posts - 2%
mruthun
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:48 am

பங்கஜம் சற்று மௌனமாயிருந்தாள்.

"படுத்துக்கொள்ளலாமா, குழந்தை! நான் போகட்டுமா?" என்றார் முதலியார்.

"ஆமாம் அப்பா! அவ்வளவு பைத்தியம் முற்றியிருந்தால், கடுதாசி அவ்வளவு நன்றாக எப்படி எழுதினாள்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நான் தான் சொன்னேனே, அம்மா! கோயமுத்தூருக்கு ஓடி வந்த போது, அவளுக்கு உடம்பு அவ்வளவு மோசமாயில்லை என்று."

"சரிதான்; ஆனால், கடிதம் நம் வீட்டுக்கு எப்படி வந்ததாம்? யாரிடம் அனுப்பினாளாம்?"

"சரியாய்ப் போச்சு! அதை இன்னும் உனக்குச் சொல்லவில்லையா? இந்த ஊரில் அனுமந்தராயன் தெரு வீட்டு மச்சில் செந்திருவும் பெரியண்ணனும் தனியாயிருந்தபோது இவள் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாய்த் தெருவீதியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் தெருவோடு போயிருக்கிறான். செந்திரு கடிதத்தை வீதியில் போட்டிருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் சுத்தக் காலாடியாம். ஏற்கெனவே, சிங்கமேட்டுக் கவுண்டர் மேல் அவனுக்கு விரோதமாம். கடிதத்தை அவன் நம் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கன்னாபின்னாவென்று ஏதோ சொல்லி வைத்தானாம். சிங்கமேட்டுக் கவுண்டர் பெயரைச் சிரிப்பாய் சிரிக்க அடிப்பதற்கு இதுதான் சமயம் என்று நினைத்தான் போல் இருக்கிறது. அவன் மேல் கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு என்ன 'காண்டு' தெரியுமோ? 'அந்தப் பயல் மட்டும் மறுபடி என்கையில் சிக்கட்டும், முதுகுத் தோலை உரித்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்' என்றார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்றால் என்னவென்று நினைத்தாய், குழந்தாய்! இந்த ஜில்லாவிலேயே அவர் வைத்ததுதான் சட்டம். பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாங்கூடப் பயப்படுவார்கள். ஜில்லாபோர்ட் பிரஸிடெண்ட் அன்று பேரூருக்கு வந்த போது தடபுடல் பட்டதே, அந்த பிரஸிடெண்ட்டுக்கு கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டால் தொடை வெடவெட வென்று நடுங்குமாம்! அப்படிப்பட்டவர் கிட்டப்போய் இந்த மகுடபதி என்கிற வெறும் பையன் விரோதித்துக் கொண்டிருக்கிறான். 'காங்கிரஸ் பெயரையும், காந்தி பெயரையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான்' என்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர்."

இவ்விதம் சொல்லிவிட்டு அய்யாசாமி முதலியார் கொட்டாவி விட்டார்.

மகுடபதியைப் பற்றிப் பங்கஜம் கட்டியிருந்த ஆகாசக் கோட்டையெல்லாம் பொலபொலவென்று இடிந்து விழுந்தது.

"என்னமோ கேட்கக் கேட்க விசனமாயிருக்கிறது. அப்பா! ஆனால் இன்னும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிபடவில்லை. எனக்குச் செந்திரு எழுதிய கடிதத்தை மருதக் கவுண்டன் ஏன் திருடினான்? அந்தக் கடிதம் உங்கள் அழகான கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் எப்படிப் போயிற்று?" என்று பங்கஜம் கேட்டாள்.

"அது ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? சரி, கேட்டுக் கொள். செந்திரு உனக்குக் கடிதம் எழுதி வீதியில் போட்டாள் என்று பெரியண்ணன் கவுண்டர்களிடம் ஒளித்திருக்கிறான். சித்த ஸ்வாதீனமில்லாத சமயத்தில் அவள் என்ன எழுதியிருக்கிறாளோ, என்னமோ - இந்த வெட்கக்கேடு வெளியில் நாலு பேருக்குத் தெரிவானேன் என்று அவர்களுக்கு எண்ணம். அதற்காகத்தான் நீயாவது நானாவது கடிதத்தைப் பிரித்துப் படிக்காவிட்டால் எடுத்துக் கொண்டு விடும்படி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த முட்டாள் நமக்கு விஷயம் தெரிந்த பிறகு எடுத்துப் போயிருக்கிறான். அதற்காக அவனுக்கு அங்கே நல்ல பூசை கிடைத்ததாம். கவுண்டர்களே நம்முடைய வீட்டுக்கு வந்து இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்றிருந்தார்களாம். அதற்குள்ளே நாங்கள் போய்..." என்று முதலியார் சொன்னபோது, அவருடைய தலை ஆடிற்று.

"சரி, அப்பா, உங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது. நீங்கள் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நானும் விளக்கை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொள்கிறேன்" என்றாள் பங்கஜம்.

"சரி, அதிக நேரம் கண் விழிக்காதே. நாவல் எழுதினதெல்லாம் போதும். உன் சிநேகிதியின் கதையே தான் பெரிய நாவலாய் இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே அய்யாசாமி முதலியார் எழுந்து போனார்.

பங்கஜமும் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்து விளக்கை அணைப்பதற்காகப் போனாள். அப்போது அவள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. ஒரு நிமிஷம் அவள் மார்பு அடித்துக் கொள்வது நின்றுவிட்டது. ஏனெனில், விளக்கை அணைப்பதற்காக அவள் எழுந்து போனபோது, ஜன்னலுக்கு எதிர்ப் பக்கத்துச் சுவரில் ஒரு மனிதனுடைய நிழலை அவள் பார்த்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:49 am

பதினாறாம் அத்தியாயம் - நள்ளிரவு நாடகம்

பங்கஜம் பளிச்சென்று விளக்கை அணைத்தாள். சத்தமில்லாமல் ஜன்னலண்டை போய் வெளியில் பார்த்தாள்.

ஏறக்குறைய பாதி வட்டமாயிருந்த சந்திரன் மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனுடைய மங்கிய ஒளி அப்போது பெய்து கொண்டிருந்த பனியினால் இன்னும் மங்கலாகக் காட்டிற்று. அந்த மங்கிய நிலவில், ஒரு உருவம் பங்கஜத்தின் அறைப்பக்கத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். பார்த்ததும், பங்கஜம் "யாரடா அது?" என்று கூச்சல் போட எண்ணினாள். ஆனால், அவளுடைய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து சத்தம் கிளம்பவில்லை. அவளுடைய தேகமெல்லாம் அந்த மார்கழி மாதக் கடுங்குளிரில் சொட்ட வியர்த்தது. ஒரு நிமிஷ நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

பங்களாவுக்கெதிரில், கார் வந்து நிற்பதற்கான முன் முகப்பு இருந்தது. அந்த முகப்புக்கு வாசல் காம்பவுண்ட் சுவருக்கு மத்தியில் மரமல்லிகை மரங்களும் குரோட்டன்ஸ் செடிகளும் அடர்த்தியாகப் படர்ந்த ஒரு கொடி வீடும் இருந்தன. அங்கிருந்து மலர்களின் நறுமணம் கம்மென்று வந்து கொண்டிருந்தது.

ஜன்னல் பக்கத்திலிருந்து போன உருவம் அந்தக் கொடி வீட்டுக்கருகில் சென்றது. அங்கே சற்றுத் தயங்கி நின்றது. பிறகு அந்தக் கொடி வீட்டுக்குள் நுழைந்தது.

பங்கஜம் சற்று நேரம் ஜன்னலண்டையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் வெளியே வரவில்லை. இதற்குள் அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அச்சமயம், தான் என்ன செய்யவேண்டுமென்று யோசித்தாள். அப்பாவிடம் போய்ச் சொல்லலாமா? அதுதான் நியாயமாகச் செய்ய வேண்டியது. ஆனால்...? பங்கஜத்தின் மனதிற்குள் ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. அவளுடைய அறையின் ஜன்னலோரத்திலிருந்து கிளம்பிச் சென்று கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் பார்ப்பதற்கு ஒரு இளைஞனுடைய உருவமாயிருந்தது. அது யாராயிருக்கும்? ஒரு வேளை...? என்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு நாளும் இருக்காது!... ஆனால் ஏன் இருக்கக்கூடாது?...இல்லை, இல்லை. கார்க்கோடக் கவுண்டர் தான் அப்பா திரும்பி வந்து என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆளை அனுப்பியிருக்க வேண்டும்... ஒரு வேளை சாதாரணத் திருடனோ, என்னமோ? சே! திருடனாயிருக்க முடியாது. திருடன் அவ்வளவு துணிச்சலாய் வீட்டில் விளக்கு எரியும் போது வந்து ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பானா?

எப்படியிருந்தாலும், தானே அந்த மர்மத்தைக் கண்டு பிடித்து விடுவது என்று பங்கஜம் தீர்மானித்துக் கொண்டாள். அப்பாவைக் கூப்பிட வேண்டியதில்லை. தன்னுடைய சந்தேகம் ஒருவேளை உண்மையாயிருந்தால் அப்பாவைக் கூப்பிட்டால் காரியம் கெட்டுப் போய்விடும். அப்படியென்ன மோசம் வந்துவிடப் போகிறது? திருடனாய்த்தான் இருக்கட்டுமே? ஒருவனால் என்ன செய்யமுடியும்? எல்லாவற்றுக்கும் முன் ஜாக்கிரதையாயிருந்தால் போகிறது. அப்படி மிஞ்சி வந்தால், முன் அறையில் தானே அப்பா படுத்திருகிறார்? கூச்சல் போட்டால் உடனே வந்து விடுகிறார்.

இப்படியெல்லாம் சிந்தித்து, இந்நிலைமையில் சாதாரணப் பெண் எவளும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யத் துணிந்தாள் பங்கஜம். அவள் படித்திருந்த நூற்றுக்கணக்கான நாவல்களில் வரும் கதாநாயகிகளின் தைரியம், துணிச்சல் எல்லாம் அவளிடம் அந்த நிமிஷத்தில் வந்து குடிகொண்டன. ஓசைப்படாமல் நடந்து போய் ஒரு அலமாரியைத் திறந்தாள். அதற்குள்ளிருந்து இரண்டு பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து ஜன்னலண்டை நின்று, நிலவு வெளிச்சத்தில் பார்த்தாள். அவற்றுள் ஒன்று, டார்ச் லைட்; இன்னொன்று, கைத்துப்பாக்கி!

கைத்துப்பாக்கி, அவளுடைய தகப்பனார் கடப்பா ஜில்லாவில் உத்தியோகம் பார்த்த காலத்தில் அபாயத்துக்காக வைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது துருப்பிடித்துக் கிடந்தது. அதில் ரவையும் கிடையாது. ஒரு விளையாட்டுப் பொருளாக அதைப் பங்கஜம் தன் அலமாரியில் எடுத்து வைத்திருந்தாள். சில சமயம் அவளுடைய தோழிகள், தம்பிமார்கள், வேலைக்காரர்கள் முதலியோரை விளையாட்டுக்காகச் "சுட்டு விடுவேன்" என்று அவள் இந்தத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்துவதுண்டு. திருடனை அதனால் ஒன்றும் செய்யமுடியாதென்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவள் இப்போது கொண்டிருந்த நோக்கத்துக்கு அதுவே போதுமாயிருந்தது.

பிறகு பங்கஜம் ஓசைப்படாமல், அந்த அறையிலிருந்து வெளி வராந்தாப் பக்கமுள்ள கதவைத் திறந்தாள். வெளியில் எல்லாம் நிசப்தமாய் இருந்தது. அடிமேல் அடிவைத்து நடந்து தாழ்வாரத்திலிருந்து 'போர்டிகோவில்' இறங்கி, அங்கிருந்து கொடி வீட்டின் அருகில் வந்தாள். அப்போது அக்கொடி வீட்டுக்குள்ளிருந்து மிக மெலிந்த விம்முகிற குரலில் யாரோ பேசும் சத்தம் வந்து கொண்டிருந்தது. பங்கஜம் உற்றுக் கேட்டாள். 'பைத்தியம்' 'பைத்தியம்' 'செந்திருவுக்குச் சித்தப் பிரமை' என்று ஒரு குரல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அந்தக் குரலில் எவ்வளவோ ஏக்கமும், ஏமாற்றமும், வேதனையும் கலந்திருந்தன.

சற்றுத் திகைத்து நின்ற பிறகு, பங்கஜம் கொடி வீட்டின் அருகில் நெருங்கிச் சென்று ஒரு கையில் கைத்துப்பாக்கியை நீட்டியபடி, இன்னொரு கையில் டார்ச் லைட்டை அமுக்கினாள். பளீரென்று வெளிச்சம் அடித்தது. கொடி வீட்டுக்குள்ளே உட்காருவதற்காகப் போட்டிருந்த சிமெண்ட் விசிப்பலகையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். திடீரென்று வெளிச்சம் அடித்ததும் அவன் திடுக்கிட்டுக் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் டார்ச் லைட்டின் ஒளிபட்டு மின்னியது. எதிரே கைத்துப்பாக்கியுடனும் டார்ச் லைட்டுடனும் நின்று கொண்டிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும், அவனுக்கு ஒரே திகைப்பாய்ப் போயிருக்க வேண்டும். ஒரு வினாடியில் அவனுடைய கண்களில் கண்ணீர் வறண்டு விட்டது. பங்கஜத்தை வியப்புடன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிஷம் வரையில் இவ்விதம் இருவரும் ஒருவரையொருவர் மௌனமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். பங்கஜத்துக்கும் பேச நா எழவில்லை. அவளுடைய சந்தேகம் ஒரு விஷயத்தில் உண்மையாயிற்று. இந்த வாலிபன் அன்று அவர்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த தவிசுப் பிள்ளைதான்! அன்று சாயங்காலம் பங்கஜம் தன் அறைக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது, வாசலில் யாரோ வந்து 'ஸார்!' என்று கூப்பிடும் சப்தம் கேட்டது. கதையின் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்திருந்தபடியால் பங்கஜம் போய் யார் என்று கேட்கவில்லை. அவளுடைய தாயார் உள்ளேயிருந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள். அம்மாவுக்கு வந்திருந்தவனுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது பங்கஜத்தின் காதில் விழுந்தது.

"யாரப்பா நீ?"

"ஐயாவை ஒரு காரியமாய்ப் பார்க்க வந்தேன். இருக்கிறார்களா?"

"தவிசுப்பிள்ளையா? இதற்கு முன் யார் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாய்?"

"வந்து நான்..."

"கோடிவீட்டு ஆச்சி அனுப்பினார்களா? அவங்ககிட்டத்தான் நான் தவிசுப்பிள்ளை வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தேன்."

இவ்வளவுதான் பங்கஜத்துக்குக் கேட்டது. அப்போது அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. அவளுடைய தாயாருக்குக் கொஞ்சம் காது மந்தம். "யாரோ ஒருவன் எதற்காகவோ அப்பாவிடம் வந்திருக்கிறான்; அவனைப் பிடித்து அம்மா தவிசுப்பிள்ளையா என்று கேட்டாள்" என்பதாக எண்ணிப் பங்கஜம் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஆனால், சாயங்காலம் பங்கஜம் சமையல் அறைக்குள் போனபோது, ஒரு வாலிபன் நாகரிகமும் அழகும் வாய்ந்த தோற்றம் உள்ளவன் - சமையல் வேலையில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தாள். அம்மாவிடம் ஜாடையினால் "இவன் யார்?" என்று கேட்டாள். "தவிசுப்பிள்ளை வேண்டுமென்று கோடிவீட்டு ஆச்சியிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்" என்று தாயார் சொன்னாள். "சாயங்காலம் வந்தவன் இவந்தானா? அம்மா தப்புச் செய்கிறாள் என்று நாம் நினைத்ததல்லவோ தப்புப் போலிருக்கிறாது?" என்று எண்ணிக் கொண்டாள். பிறகு, சாப்பிடும் சமயத்தில் பங்கஜம் புதிய சமையற்காரனைக் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாள். "இவ்வளவு நாகரிகமான சமையற்காரனும் இருக்கிறானா? முகத்தில் என்ன களை? எவ்வளவு சுத்தமாயிருக்கிறான்?" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், அந்தத் தவிசுப்பிள்ளை தன்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தபோது, பங்கஜத்துக்கு அசாத்தியக் கோபம் வந்தது. "அம்மாவிடம் சொல்லிப் பிரயோசனமில்லை; அப்பா வந்ததும், இந்தத் தவிசுப்பிள்ளை வேண்டாம் என்று போகச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால், அப்பா இராத்திரி பத்து மணிக்கு வந்த பிறகு அவர் கூறிய ஆச்சரியமான விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததில், புதிய தவிசுப் பிள்ளையைப் பற்றி அவள் அடியோடு மறந்துவிட்டாள்.

இப்போது, கொடி வீட்டுக்குள் உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்தவனை டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் பார்த்ததும், புதிய தவிசுப் பிள்ளைதான் என்று உடனே தெரிந்து போய்விட்டது. ஆனால், உண்மையில் இவன் யார்? கார்க்கோடக் கவுண்டரின் ஆளா? உளவு அறிந்து போவதற்காக வந்தவனா? அல்லது... ஒருவேளை... அப்படியும் இருக்க முடியுமா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:49 am

ஐந்து நிமிஷ நேரம் இவ்விதம் சிந்தனையில் ஆழ்ந்து நின்ற பிறகு பங்கஜத்துக்கு ஏதாவது பேசினாலொழிய நெஞ்சு வெடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

"யார் நீ? நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..." என்று பங்கஜம் மேலே சொல்லத் தயங்கித் தொண்டையைக் கனைத்தாள்.

அந்த வாலிபனும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இல்லாவிட்டால்...?" என்றான்.

"இந்தத் துப்பாக்கியின் குண்டுக்கு இந்த நிமிஷமே இரையாவாய்!" என்று பங்கஜம் நாவல் பாஷையில் சொன்னாள்.

அந்த வாலிபன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ சோகமும் வெறுப்பும் கலந்திருந்தன.

"அப்படியே செய்துவிடு அம்மா! எனக்குப் பெரிய உபகாரமாயிருக்கும்" என்றான்.

பங்கஜத்துக்கு என்னமோ செய்தது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, "இந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம் யார் நீ? உன் பெயர் என்ன? நிஜத்தைச் சொல்லிவிடு!" என்றாள்.

"நிஜம் சொல்ல வேண்டுமா? நிஜம்! நிஜம்! இந்த உலகத்தில் நிஜத்துக்கு மதிப்பு இருக்கிறதா? நிஜம் சொன்னால் கேட்கிறவர்களும் உண்டா? அம்மா! நிஜத்தைச் சொல்கிறேன். அதற்குப் பதிலாக எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்று வெறிபிடித்தவன் போல் பேசினான்.

"உபகாரமா? என்ன உபகாரம்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"உன் கையிலிருக்கிற துப்பாக்கியால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடு; இல்லாவிட்டால், அந்தத் துப்பாக்கியை என் கையிலாவது கொடு. நானாவது சுட்டுக் கொண்டு சாகிறேன்" என்றான் வாலிபன்.

"இந்தா!" என்று பங்கஜம் தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொடுத்தாள்.

அதை வாங்கி விசையை இழுத்துப் பார்த்துவிட்டு, வாலிபன் வெறுப்புடன் கீழே போட்டான்.

பங்கஜம் சிரித்தாள்.

வாலிபன் அவளைக் கோபமாய்ப் பார்த்து "உனக்குச் சிரிப்பும் வருகிறதா?" என்று கேட்டான்.

"சிரித்தால் என்ன?"

"உன் சிநேகிதிக்கு இப்படிப்பட்ட விபத்து வந்திருக்கும் போதா சிரிப்பது?... உன் மனது என்ன கல்லா?"

"என் சிநேகிதிக்கு என்ன விபத்து வந்துவிட்டது?"

"வேறென்ன விபத்து வரவேண்டும்? உன் தகப்பனார் தான் சொன்னாரே, பைத்தியம் பிடித்து விட்டதென்று?"

"செந்திருவுக்கா பைத்தியம்? ஒரு நாளுமில்லை. அவளுக்குப் பைத்தியம் என்று சொல்லுகிறவர்களுக்குத் தான் பைத்தியம்!" என்றாள் பங்கஜம்.

"என்ன? என்ன? பைத்தியம் இல்லையா? அதெப்படிச் சொல்கிறாய்? பகவானே! இதுமட்டும் நிஜமாயிருந்தால்?... உனக்கு எப்படி தெரியும்? எதனால் அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?"

"முதலில், நீ யார் என்று சொல்? சொன்னால்..."

"சொன்னால்..."

"செந்திருவுக்குப் பைத்தியம் ஏன் இல்லை என்று நான் தெரிவிக்கிறேன்."

"என் பெயர் மகுடபதி!"

"நினைத்தேன், நினைத்தேன். நீதானா என் சிநேகிதியைப் பைத்தியமாக அடித்த புண்ணியவான்?" என்றாள் பங்கஜம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:50 am

பதினேழாம் அத்தியாயம் - மோட்டார் விபத்து

மகுடபதிக்கும் பங்கஜத்துக்கும் மேலே நடந்த சம்பாஷணையைச் சொல்வதற்கு முன்னால் காலப்போக்கில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று மகுடபதியை லாக்-அப்பில் அடைத்ததிலிருந்து அவனுக்கு நேர்ந்தவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போலீஸ் லாக்-அப்பிலிருந்து மகுடபதியை ஸப்-ஜெயிலுக்குக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் அடைத்தார்கள். ஏற்கெனவே இரண்டு முறை - ஒருவாரமும், பத்து நாளும் - அவன் ஸப்-ஜெயிலில் இருந்திருக்கிறான். ஆனால் இந்தத் தடவை அவன் ஸப்-ஜெயிலிலிருந்த மூன்று நாட்களும் அவனுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றின. அவன் உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிற்று. தேசத்தில் மகத்தான இயக்கம் ஆரம்பாகி நடந்து கொண்டிருந்தது; அந்த ஜில்லாவில் அவனுடைய முக்கியமான காங்கிரஸ் சகாக்களெல்லாம் சிறைக்குப் போய்விட்டனர்; அனேக தொண்டர்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள். இப்படிப்பட்ட இயக்கத்தில், தான் பங்கு எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு பொய்க் கேஸில் அகப்பட்டு ஸப்-ஜெயிலில் கிடக்க வேண்டியதாயிருக்கிறது. தன் மேல் என்ன கேஸ் போடப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அவனுக்குத் தெரிந்தபாடில்லை. போலீஸ் அதிகாரிகள் - முக்கியமாக ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் - என்ன சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறாரோ, தெரியாது. அவர் மட்டுந்தான் சூழ்ச்சி செய்கிறாரோ, அல்லது கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்து இரண்டு பேருமாய்ச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ? ஏதாவது கள்ளுக்கடையைக் கொளுத்தியதாக ஒரு பொய்க் கேஸைத் தன் பேரில் அவர்கள் போட்டு வைத்தால் என்ன செய்வது? அதற்கு வேண்டிய பொய்ச் சாட்சிகளைத் தயாரித்துத் தண்டனையடைந்தால், காங்கிரஸ் இயக்கத்துக்கே அதனால் மாசு ஏற்பட்டுவிடுமல்லவா? அத்தகைய கேஸ் நேர்ந்தால் எதிர் வழக்காடுவதா? அல்லது சும்மா இருந்து விடுவதா? யோசனை கேட்பதற்குக் கூட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை; எல்லாரும் முன்னாலேயே சிறைக்குப் போய்விட்டார்கள்; இன்னும் வெளியில் இருக்கும் இரண்டொருவரைச் சந்தித்துப் பேசுவதற்கும் வசதி கிடையாது.

"ஐயோ! அன்றைக்கு நாம் கோயமுத்தூருக்கு என்னத்திற்காக வந்தோம்? நம்மூரிலேயே ஏதாவது மறியல் நடத்திப் பேசாமல் சிறை புகுந்திருக்கக்கூடாதா?" என்று எண்ணி மகுடபதி பெருமூச்சு விட்டான். அன்று தான் கோயமுத்தூருக்கு வந்ததனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? தனக்கு மட்டுமா கஷ்டம்? செந்திருவுக்கும் பெரியண்ணனுக்கும் அல்லவா தன்னால் பெரும் விபத்துக்கள் நேர்ந்து விட்டன?

செந்திருவைப் பற்றி நினைக்கும் போதே அவனுடைய நெஞ்சு சொல்லமுடியாத வேதனை அடைந்தது. அவளுடைய கதி என்ன ஆயிற்றோ? எங்கே இருக்கிறாளோ? பலவந்தமாய்க் கார்க்கோடக் கவுண்டருக்குக் கல்யானம் செய்து வைத்திருப்பார்களோ? ஒருவேளை, அவள் உயிரை விட்டிருப்பாளோ? பாவிகள் ரொம்பவும் அவளை இம்சை செய்திருப்பார்களோ? "ஐயோ! நம்மை நம்பிய அந்த அபலைப் பெண்ணுக்கு நம்மால் அனுகூலமில்லாவிட்டாலும் ஆபத்தல்லவா அதிகமாகிவிட்டது?" என்று எண்ணிய போது, மகுடபதியின் இருதயம் துடித்தது. ஆம்; அன்றிரவு, தான் அந்த வீட்டில் ஒளிந்திருந்து திடீரென்று வெளியே வந்ததனால், செந்திருவின் மேல் அந்தக் கவுண்டர்களுக்கு இல்லாத பொல்லாத சந்தேகங்கள் உண்டாகியிருக்குமல்லவா?

செந்திருவுக்கு மட்டும் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால், அதற்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் பழிக்குப் பழி வாங்கியே தீருவதென்று மகுடபதி சங்கல்பம் செய்து கொண்டான்.

கார்க்கோடக் கவுண்டர் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும் போதெல்லாம், அவனுடைய இரத்தம் கொதித்தது; நரம்புகள் எல்லாம் புடைத்து எழுந்தன. "அஹிம்சையாவது, ஒன்றாவது? வெறும் பைத்தியக்காரத்தனம்! இப்படிப்பட்ட பாதகர்களை எந்த விதத்திலாவது யமலோகத்துக்கு அனுப்பினால் அதுவே பெரிய புண்ணியச் செயலாகும்" என்று அடிக்கடி எண்ணமிட்டான்.

பெரியண்ணன் மீது கார்க்கோடக் கவுண்டரின் கத்தி பாய்ந்த காட்சி அடிக்கடி அவன் மனக்கண்முன் வந்து கார்க்கோடக் கவுண்டரின் மேல் அவனுக்கிருந்த கோபத்தீயை இன்னும் தூண்டிவிட்டு ஜ்வலிக்கச் செய்தது. பெரியண்ணனுடைய கதி என்னவாயிருக்கும்? தானே எழுந்து போயிருப்பானோ? அல்லது கவுண்டர்கள் வந்து தான் அப்புறப்படுத்தியிருப்பார்களோ? இன்னமும் பிழைத்திருக்கிறானோ? அல்லது இந்தப் பாதக உலகை விட்டுப் போய்விட்டானோ?

மூன்று தினங்கள் வரையில் இவ்விதம் அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில தினங்கள் இப்படியே தன்னைத் தனி அறையில் போட்டிருந்தால் ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் செந்திருவின் கதி என்ன? இந்த வண்ணம் தோன்றும்போது, விரிந்து மலர்ந்த கண்களில் நீர்த்துளிகளுடன் கூடிய செந்திருவின் சோகம் ததும்பும் முகம் அவன் மனக்கண்முன் வரும். அப்போது அவனுடைய நெஞ்சு வெந்து போவது போலிருக்கும். இந்தத் துயர நினைவை மறப்பதற்காக மகுடபதி காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தி மகானையும், தேசியப் போரின் மற்ற அம்சங்களையும் பற்றிச் சிந்திக்க முயன்றான்.

மூன்றாம் நாள் பிற்பகலில் மகுடபதி இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று சில போலீஸ் சேவகர்கள் வந்து அவனை அடைத்திருந்த கொட்டடிக்கு முன்னால் நின்றார்கள். கதவு திறக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவுப்படி மகுடபதி வெளியேறினான். வாசலில் போலீஸ் வண்டி காத்துக் கொண்டிருந்தது. அதற்குள் ஏற்கனவே நாலைந்து தொண்டர்கள் இருந்தார்கள். மகுடபதியும் அதற்குள் ஏற்றப்பட்டான். போலீஸ் சேவகர்களும் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புறப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:51 am

எல்லாரையும், கோர்ட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் என்று மகுடபதி நினைத்தான். வண்டியில் ஏற்கெனவே இருந்த தொண்டர்களில் ஒருவரையும் மகுடபதிக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் "மகாத்மா காந்திக்கு ஜே!" "வந்தே மாதரம்!" என்று உரத்த குரலில் கோஷமிட்டார்கள். மகுடபதிக்கு இந்தக் கோஷத்தில் கலந்து கொள்வதற்கு வேண்டிய உற்சாகம் இல்லை. ஆகையால் மௌனமாயிருந்தான். தொண்டர்களின் கோஷத்தினால் கலவரப்பட்டு வீதியில் போய்க் கொண்டிருந்த ஜனங்கள் போலீஸ் வண்டியை நோக்கினார்கள். அவர்களில் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, இருந்தால் சமிக்ஞையினால் செய்தி தெரிவிக்கலாம் என்று மகுடபதி ஆவலுடன் வண்டிக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டே போனான். ஒருவரும் அவனுக்குத் தெரிந்தவர்களாக எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்டிருந்தாலும், இரும்பு வலைக் கூண்டு போல் அமைந்திருந்த போலீஸ் வண்டிக்குள்ளிருந்து அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது. வண்டி வேறு மிகவும் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.

கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தியதும், தன் பேரில் பொய்க் கேஸ் என்று கூச்சலிட்டு, அன்றிரவு நடந்த சம்பவங்களையும் சொல்லலாமா என்று மகுடபதி யோசித்தான். அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாவிட்டாலும், அதனால் பயன் விளையாது என்று தோன்றியது. முதலில், மற்ற தொண்டர்கள் தன்னை ஜெயிலுக்குப் பயந்தவன் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றபடி, மாஜிஸ்ரேட்டும்தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார். கேஸுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று சொல்லி, தான் பேசுவதற்கே இடங்கொடுக்க மாட்டார். கார்க்கோடக் கவுண்டர் மாஜிஸ்ரேட்டையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டிருக்கக் கூடுமல்லவா? ஏதாவது ஜாமீன் கேஸ் என்று தன்னை ஒரு வருஷம் சிறைக்குள் தள்ளிவிட்டால், செந்திருவின் நிலைமை என்ன? இப்படிக் கோர்ட்டில் என்ன சொல்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் மகுடபதி தவித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் போலீஸ் மோட்டார் கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருப்பதை மகுடபதி கவனித்தான்.

"இதென்ன? நம்மைக் கோர்ட்டுக்குக் கொண்டு போகவில்லையா? எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று மகுடபதி மற்ற தொண்டர்களைப் பார்த்துக் கேட்டான். அவர்களில் ஒருவன், "இது தெரியாதா, உனக்கு? நம் பேரில் கேஸ் நடக்காதாம். இப்போது கோயமுத்தூருக்கு வெளியே எங்கேயாவது தூரத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவாம்."

இந்தச் செய்தியைக் கேட்டதும், மகுடபதிக்குப் புத்துயிர் வந்தது போலிருந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலமே உண்டாக்கிற்று. போலீஸ் வண்டி அதிக வேகமாகச் சென்றதுபோல், அவன் எண்ணங்களும் விரைந்து சென்றன. விடுதலை கிடைத்ததும் செந்திருவைத் தேடும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டும். அதை எப்படி ஆரம்பிப்பது? ஏன்? முதலில் மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குத் தான் போகவேண்டும். முதலியார் எப்படிப்பட்டவராயிருந்த போதிலும், அவருடைய பெண் செந்திருவின் தோழி - தனக்கு ஒத்தாசை செய்யலாமல்லவா?

அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த மோட்டார் வண்டி சட்டென்று சாலையில் நின்றது. மூன்று தொண்டர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். அவர்கள் "வந்தே மாதரம்" என்று கோஷித்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் எதிரொலி செய்தார்கள். மறுபடியும் வண்டி கிளம்பித் துரிதமாய்ச் சென்றது. கால் மணி நேரம் போன பிறகு, மீண்டும் நின்றது. இரண்டு தொண்டர்கள் இறக்கி விடப்பட்டார்கள். பிறகு வண்டியில் மகுடபதி ஒருவன் தான் இருந்தான்.

மகுடபதி பொறுமையிழந்து வண்டியிலிருந்து குதித்து விடலாமா என்ற நிலைமைக்கு வந்தபோது, வண்டியின் வேகம் குறைந்தது. "இறங்கப்பா!" என்றான் ஒரு போலீஸ் சேவகன். வண்டி சரியாக நிற்பதற்குள்ளாகவே மகுடபதி இறங்கினான். இதனால் தள்ளாடிக் கீழே விழப் போனவன் மெதுவாகச் சமாளித்துக் கொண்டான்.

அவன் இறங்கியதும் போலீஸ் வண்டி அந்தச் சாலையை ஒரு பிரதட்சணம் செய்து திரும்பி, வந்த வழியே விர்ரென்று புறப்பட்டு, அடுத்த நிமிஷம் அமோகமாய்க் கிளம்பிய சாலைப் புழுதியில் மறைந்துவிட்டது.

அஸ்தமன சமயம். சூரியன் மேற்குத் திசையில் காணப்பட்ட மலைத் தொடர்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டது. சாலை நிர்மானுஷ்யமாயிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஊரோ, வீடோ காணப்படவில்லை.

அந்த இடம் கோயமுத்தூரிலிருந்து சுமார் முப்பது மைல் இருக்கலாம். அவ்வளவு தூரம் எப்படி நடந்து போய்ச் சேர்வது? சாலையில் ஏதாவது பஸ் வந்தால் ஏறிக் கொள்ளலாம். இத்தனை நேரங் கழித்து பஸ் வருமா?

இம்மாதிரி யோசனை செய்து கொண்டு மகுடபதி சாலையோடு வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் சாலையில் முச்சந்தியும் கைகாட்டி மரமும் காணப்பட்டன. கோயமுத்தூர் சாலையில் அவன் திரும்பியதும், எதிரே ஒரு மோட்டார் வண்டி வருவதைக் கண்டான். "எவ்வளவு வேகமாய் வருகிறது" என்று நினைத்துக் கொண்டே சாலையில் ஒதுக்குப்புறமாக நகர்ந்தான். வண்டி கொஞ்சம் மெதுவாவது போல் தோன்றியது. "இதென்ன? நாம் இவ்வளவு ஒதுங்கியும் வண்டியும் இப்படி விடுகிறானே?" என்று நினைத்துக் கொண்டே இன்னும் ஒதுங்கினான். ஆனால், வண்டியும் ஒதுங்கி அவன் பக்கமே வந்தது. அடுத்த வினாடி வண்டி அவன் மேல் மோதிற்று. மகுடபதி நினைவிழந்து கீழே விழுந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:52 am

பதினெட்டாம் அத்தியாயம் - நடுச்சாலைச் சம்பவம்

மகுடபதிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது, தான் ஒரு மோட்டார் வண்டியின் பின் சீட்டில் படுத்திருப்பதை அறிந்தான். வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அவனுடைய தலையில் ஏதோ ஈயக் குண்டை வைத்தது போல் கனத்தது. வண்டி மோதிக் கீழே தள்ளியது அவனுக்கு நினைவு வந்தது. தலையில் நல்ல அடிபட்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்படிக் கனக்கிறது. இன்னும் முழங்காலிலும், முழங்கையிலும், தோளிலும் காயம் பட்ட வலியின் உணர்ச்சியும் உண்டாயிற்று. மிகவும் பிரயத்தனப்பட்டுச் சிறிது தலையைத் தூக்கி முன் சீட்டைக் கவனித்தான். நன்றாக இருட்டியிருந்ததாயினும் வண்டி ஓட்டியது கார்க்கோடக் கவுண்டர்தான் என்பது தெரிந்தது. இந்த வண்டியேதான் தன்னை மோதிக் கீழே தள்ளியது. தான் கீழே விழப்போகும் தறுவாயில், டிரைவர் சீட்டில் இருப்பது கார்க்கோடக்கவுண்டர் போலிருக்கிறதே என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது.

தன்னைப் போலீஸார் கொண்டுபோய் நடுச்சாலையில் விடப்போவதைத் தெரிந்து கொண்டுதான் கவுண்டர் பின்னால் தொடர்ந்து வந்திருக்கவேண்டும். வேண்டுமென்றுதான் காரைத் தன்மேல் மோதியிருக்க வேண்டும். ஆனால், இப்போது எங்கே தனனைக் கொண்டு போகிறார்? - ஏதோ கொடிய நோக்கத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. தான் பிழைத்திருக்கும் விஷயம் அவருக்குத் தெரியுமா, தெரியாதா? செத்துப் போனதாக நினைத்துக் கொண்டு தன் உடலை எங்கேயாவது யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் கொண்டு போய்ப் போட்டுவிட எடுத்துப் போகிறாரா? அல்லது உயிர் இருக்கிறதென்று தெரிந்துதான் வேறு ஏதாவது தீய நோக்கத்துடன் கொண்டு போகிறாரா? ஒருவேளை அவர் தன்னை உயிரோடேயே புதைத்து விடக்கூடும் என்று எண்ணியபோது, மகுடபதியின் தேகமாத்தியந்தம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த நினைப்பினாலேயே அவனுக்கு மூச்சுத் திணறிற்று.

இந்த ராட்சதனுடைய வசத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும், செந்திருவுக்காகவும் பெரியண்ணனுக்காகவும் தப்பிப் பிழைக்க வேண்டும். ஆனால், எப்படி? அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கும் காரிலிருந்து எப்படி இறங்கித் தப்பிச் செல்வது?

இவ்விதம் மகுடபதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வண்டியின் போக்கு மெதுவாயிற்று. என்ஜினிலிருந்து பட், பட் என்ற சத்தம் கேட்டது. இரண்டு மூன்று தடவை முக்கி முனகிவிட்டு 'கர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றுவிட்டது.

வண்டியை மறுபடி கிளம்புவதற்குக் கவுண்டர் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்காமற் போகவே, வண்டியிலிருந்து கீழே இறங்கி, மகுடபதி படுத்திருந்த பின் சீட்டின் பக்கம் வந்து கதவைத் திறந்தார். மகுடபதி கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சுக் கூட மெதுவாக விட்டான். கவுண்டன் குனிந்து எதையோ எடுத்தார். அவர் எடுத்தது டார்ச் லைட் என்பதாக அடுத்த நிமிஷம் தன் முகத்தின் மேல் வீசிய ஒளியினால் மகுடபதி ஊகித்துக் கொண்டான். அப்போதும் அவன் கண்களைத் திறக்கவில்லை. கவுண்டர் டார்ச் லைட்டுடன் முன் பக்கம் போனார்.

சற்று நேரத்துக்கெல்லாம் மகுடபதி கண்ணை விழித்துப் பார்த்தான். அவன் படுத்திருந்த பின் சீட்டின் கதவு திறந்திருந்தது. பின்னால் என்ஜின் மூடியைத் திறந்து வைத்துக் கொண்டு, கவுண்டர் கையில் டார்ச்சுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, தப்புவதற்கு இதுதான் சமயம் என்று மகுடபதி தீர்மானித்தான். சத்தம் செய்யாமல் கீழே இறங்கினான். சாலைக்குப் பக்கத்தில் மரங்களும் புதர்களும் அடர்ந்த காடு. நல்ல இருட்டு, உடம்பின் வலியையும் தலைக்கனத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் மகுடபதி மெள்ள மெள்ள நடந்து அந்தக் காட்டுக்குள் புகுந்தான். புகுந்த பிறகு திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்க் கொண்டேயிருந்தான். சுமார் அரை பர்லாங்கு தூரம் போன பிறகு நின்றான்.

கவுண்டர் என்ஜினை ரிப்பேர் செய்துவிட்டுத் திரும்பி வந்து பார்க்கும் போது தன்னைக் காணாமல் எவ்வளவு ஏமாற்றமடைவார். எவ்வளவு கோபம் அவருக்கு வரும் என்று எண்ணினான். அப்போது கவுண்டரின் கோபக் குரல் போல், மோட்டார் கார் டர்ர் என்று கர்ஜனையுடன் கிளம்பும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தூரத்தில் மறையும் வரையில் மகுடபதி பேசாமலிருந்தான். பிறகு மெள்ள மெள்ள நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான்.

சாலையில் ஈ காக்காய் கிடையாது. இருட்டோ கேட்க வேண்டியதில்லை. நடுக்காட்டின் தனிமையைக் காட்டிலும் இந்தச் சாலையின் தனிமை அதிக பயங்கரத்தை யளித்தது.

மகுடபதி சற்று நடந்து பார்த்தான். களைப்பினால் நடக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். "கடவுளே! நீயே துணை!" என்று மனதிற்குள் எண்ணினான். இங்கே, இந்த மரத்தடியிலேயே கடவுள் நமக்கு மரணத்தை விதித்திருக்கிறாரா. இராது, ஒரு நாளும் இராது. இவ்விதம் அனாதையாக மரத்தடியில் சாவதற்காகவா பகவான் இத்தனை அபயாங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுவித்தார்? இல்லை, தன் மூலமாகக் கடவுள் நிறைவேற்ற விரும்பும் காரியங்கள் இன்னும் இருக்கின்றன. முக்கியமாக, செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிமிருந்து காப்பாற்றும் வேலையைக் கடவுள் தனக்கு அளித்திருக்கிறார். அந்த வேலை நிறைவேறும் வரையில் தனக்குச் சாவு வராது. சீக்கிரத்தில் கடவுள் ஏதேனும் உதவி அனுப்பத்தான் செய்வார்.

ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக மகுடபதிக்குப் போய்க் கொண்டிருந்தது. இவ்வாறு அரைமணி நேரம் ஆகியிருக்கும். தூரத்தில் மாட்டு வண்டிகள் வரும் சத்தம் கேட்டது. அவற்றில் தொங்கிய விளக்குகள் வரிசையாக ஆடிக்கொண்டு வரும். அலங்காரக் காட்சியும் தென்பட்டது. அவை கோயமுத்தூருக்குச் சாமான் ஓட்டிச் செல்லும் பார வண்டிகளாய்த் தானிருக்க வேண்டும். வண்டிகள் அருகில் வந்தபோது மகுடபதி முன் ஜாக்கிரதையாக ஒரு மரத்தின் பின்னால் தங்கி வருவதைக் கவனித்தான். முன் வண்டிகள் எல்லாம் போன பிறகு, மறைவிலிருந்து வெளிவந்து, கடைசி வண்டியின் அருகில் வந்தான்.

அரைத் தூக்கமாயிருந்த வண்டிக்காரன், திடுக்கிட்டு "யாரப்பா, அது?" என்றான். "நீதானா அண்ணே!" என்றான் மகுடபதி. அவன் வேங்கைப்பட்டிக்குப் பக்கத்து ஊரான காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவன். செங்கோடக் கவுண்டன் என்று பெயர். மகுடபதியை இந்த இடத்தில் இந்தக் கோலத்தில் கண்டு அவன் அதிசயித்து வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னான். வண்டியில் தானிய மூட்டை ஏற்றியிருந்தது. மகுடபதி படுத்துக்கொள்ளச் சௌகரியமாயிருந்தது.

மகுடபதி காங்கிரஸ் தொண்டன் என்பது செங்கோடக் கவுண்டனுக்குத் தெரியும். கோயமுத்தூரில் நடத்த தடியடி கலாட்டாவைப் பற்றியும் அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே மகுடபதி தன்னைப் போலீஸார் இப்படித் தனிக் காட்டில் கொண்டு வந்து அடித்துப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னதை அவன் உடனே நம்பினான். மகுடபதியினிடம் பூரண அனுதாபம் காட்டியதுடன், போலீஸ் இலாகாவைப் பலமாகத் திட்டவும் தொடங்கினான்.

"அண்ணே! சத்தம் போடாதே!" என்றான் மகுடபதி.

"சத்தம் போட்டால் என்ன? எந்தப் பயல் என்னை என்ன செய்து விடுவான்? சிகப்புத் தலைப்பாகையைக் கண்டு, பயப்படுகிறவன் செங்கோடக் கவுண்டன் அல்ல. எந்தப் பயலாவது என்மேல் கையை வைக்க வந்தால் ஒரே குத்தாய்க் குத்திப் போட்டு விடுவேன்" என்று செங்கோடன் மடியிலிருந்து கத்தியை எடுத்தான். மகுடபதி அவனுக்கு மகாத்மாவின் அஹிம்சையைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. கடைசியாக, மகுடபதி, "இன்னொரு காரணம் இருக்கிறது, அண்ணே! இந்தக் கலாட்டாவில் என்னை வேலை தீர்த்து விடுவதென்று கள்ளுக்கடைக் கவுண்டர் கங்கணம் கட்டியிருக்கிறார். என்னைத் தேடிக் கொண்டு ஒருவேளை எதிரே வந்தாலும் வருவார். நான் இந்த வண்டியிலிருக்கிறது தெரிந்தால்..."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:52 am

"யார், கள்ளிப்பட்டிக் கவுண்டரா?" என்று செங்கோடன் கேட்டபோது, அவனுடைய குரலில் கவலை தொனித்தது.

"ஆமாம்" என்றான் மகுடபதி.

"ஐயையோ! அந்த ராட்சதன் கிட்டவா நீ விரோதம் பண்ணிக்கொண்டாய்?" என்றான் செங்கோடக் கவுண்டன்.

போலீஸாரைப் பற்றி அவ்வளவு அலட்சியமாய்ப் பேசிய செங்கோடக் கவுண்டன். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டதுமே நடுங்கியதைப் பார்த்து மகுடபதிக்கு ஆச்சரியமாயிருந்தது.

"கள்ளிப்பட்டிக் கவுண்டரை உனக்குத் தெரியுமா அண்ணே?" என்று கேட்டான்.

"ஏன் தெரியாது? நல்லாத் தெரியும். நானும் அவரும் ஒரே வீட்டிலே தான் பெண் கட்டினோம்..."

"என்ன?"

"ஆமாம்; என் மச்சினியை அவர் இரண்டாந்தாரமாய்க் கட்டியிருந்தார்."

"அப்படியா?"

"ஆனால் எங்களுக்குள்ளே வெகு நாளாய்ப் போக்கு வரவு இல்லை. பாவாயி செத்துப் போன அப்புறம்..."

"யார் பாவாயி?"

"என் மச்சினிதான். அவளுக்கு ஒரு ஆண்பிள்ளைக் குழந்தை பிறந்தது. மூன்று வயதிருக்கும். பாவாயி செத்துப் போன சமயத்தில், அந்தப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது. பிள்ளையை நான் தான் ஏதோ பண்ணிப்பிட்டேன் என்று கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குச் சந்தேகம். ஐயையோ? என்னைப் படாதபாடு படுத்திவிட்டார். கொதிக்கிற எண்ணெயிலே கையை வைத்துச் சத்தியம் செய்த அப்புறந்தான் விட்டார். இதோ பார்!" என்று செங்கோடன் கையைக் காட்டினான். கை வெந்து போய்த் தோலுரித்திருந்தது.

"பதினைந்து வருஷம் ஆச்சு! அப்போதிருந்த ராட்சதத் தனம் அந்த மனுஷனுக்கு இன்னும் போகவில்லை" என்றான் செங்கோடன்.

மகுடபதி இந்த விவரத்தைக் கேட்டு, மிக்க ஆச்சரியமும் அருவருப்பும் அடைந்ததுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் தான் சிக்கிக் கொண்டால் என்ன பாடுபடுத்துவாரோ என்று எண்ணினான். அவன் அடிவயிற்றை என்னமோ செய்தது.

இச்சமயத்தில் தூரத்தில் மோட்டார் வரும் சத்தம் கேட்டது. அதே ஹாரன் தான்!

அந்த ஹாரன் சத்தத்தைக் கேட்டதுமே வண்டிக்காரர்கள் மளமளவென்று வண்டிகளைத் திருப்பிச் சாலையில் ஒரு ஓரமாகக் கொண்டு போகத் தொடங்கினார்கள். வருகிறது யார் மோட்டார் என்று அந்த வண்டிக்காரர்களுக்குத் தெரியும் என்று தோன்றிற்று.

"நீ பயந்தாப் போலேயே ஆச்சு, தம்பி! கப்சிப் பேசாமல் துணியைப் போர்த்துக் கொந்து படுத்துக்கோ!" என்றான் செங்கோடன்.

கட்டை வண்டிகளுக்கு எதிரே கொஞ்ச தூரத்திலேயே மோட்டார் நின்றுவிட்டது. அதில் இப்போது நாலுபேர் இருந்தார்கள். கள்ளிப்பட்டிக் கவுண்டர் கையில் துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கியபோது அவ்வளவு வண்டிக்காரர்களுக்கும் குலைநடுக்கம் எடுத்திருக்க வேண்டும். மகுடபதிக்குக்கூட, "என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ?" என்று தத்தளிப்பாயிருந்தது.

கவுண்டர் துப்பாக்கியைப் பக்கத்திலிருந்த காட்டுப் பக்கமாய்த் திருப்பிச் சுட்டார்.

'டுடும்' 'டுடும்' என்று இரண்டு வேட்டுச் சத்தம் அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:53 am

பத்தொன்பதாம் அத்தியாயம் - பைத்தியம் யாருக்கு?

கவுண்டருடன் வண்டியிலிருந்து இறங்கிய தடியர்கள் இருவரும் துப்பாக்கி வேட்டுத் தீர்த்த திசையை நோக்கி விரைந்து போனார்கள். அவர்கள் கோயமுத்தூரில் அன்று மாலை தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள்தான் என்பதை மகுடபதி கவனித்தான். கட்டைவண்டிகளில் தொங்கிய லாந்தர்களின் வெளிச்சத்தில் இதெல்லாம் ஓர் அதிசயமான சினிமாக் காட்சி போல் தெரிந்தது.

காட்டிற்குள் புகுந்த தடியர்கள் இருவரும் சற்று நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். ஒருவன் கையில் செத்த முயலைத் தூக்கிக் கொண்டு வந்தான். முயலின் வயிற்றிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இந்தக் கோரக் காட்சியைக் காணச் சகிக்காமல் மகுடபதி கண்ணை மூடிக் கொண்டான். முயலின் மேல் பாய்ந்த குண்டு உண்மையில் தன்னை உத்தேசித்து விடப்பட்டதுதான் என்பது அவன் உள்ளத்திற்குத் தெரிந்து போயிற்று.

'ஆமாம்; பக்கத்துக் காட்டில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டுதான் கவுண்டர் மோட்டரை நிறுத்தியிருக்கிறார். தாம் தேடி வந்த ஆசாமி அங்கே காட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் துப்பாக்கி வேட்டுத் தீர்த்திருக்கிறார். அர்த்த ராத்திரியில் முயல் வேட்டையாட அவர் வரவில்லை என்பது நிச்சயம். மனித வேட்டையாடத்தான் வந்திருக்கிறார்!'

இந்த நினைவினால் மகுடபதியின் தேகம் நடுங்கிற்று. அந்த ஜனவரி மாதத்துக் குளிரில் அவனுடைய உடம்பு சொட்ட வியர்த்துவிட்டது.

கவுண்டரும் மற்றவர்களும் காரில் மறுபடியும் ஏறி உட்கார்ந்தார்கள். கார் கிளம்புவதற்குள்ளே கள்ளிப்பட்டிக் கவுண்டர் முன்னாடியிருந்த வண்டிக்காரனைப் பார்த்து, "ஏனப்பா! நீங்க வருகிற வழியிலே யாராவது ஒரு பையனைக் கண்டீங்களா?" என்று கேட்டார்.

அப்போது செங்கோடன், மகுடபதி இரண்டு பேருடைய நெஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டன.

முன் வண்டிக்காரன் இல்லிங்களே! ஒரு ஈ காக்காய் வழிலே கிடையாது!" என்று பதில் சொன்னது காதில் விழுந்த பிறகுதான், அவர்களுடைய பதட்டம் அடங்கிற்று.

கார் உடனே கிளம்பி, கட்டைவண்டிகள் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு, சாலைப் புழுதியை அமோகமாய்க் கிளப்பி விட்டுவிட்டு அதிவேகமாய்ச் சென்று மறைந்தது.

பிறகு செங்கோடக் கவுண்டன் மகுடபதியைப் பற்றி மேலும் விசாரித்தான். கடைசியில் "தம்பி! நான் சொல்கிறதைக் கேள். என் மாமியார் வீடு சேவல் பாளையத்தில்தான் இருக்கிறது. கோழி கூப்பிடுகிற நேரத்திற்கு அங்கே போய்ச் சேருவோம். உன்னை என் மாமியார் வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன். நன்றாய்ப் பார்த்துக் கொள்வார்கள். பகலெல்லாம் படுத்துத் தூங்கு. திரும்ப நான் இராத்திரி வருகிறேன். பேசாமல் என்னோடு ஊருக்கு வந்துவிடு. காங்கிரஸும் காந்தியும் சுயராஜ்யம் கொண்டு வருகிற காரியம் நீ ஒருவன் இல்லாததனாலே கெட்டுப் போய்விடாது..." என்றான்.

மகுடபதி உடம்பும் மனமும் சோர்ந்திருந்தான். அந்த நிலைமையில் செங்கோடக் கவுண்டன் சொன்னது அவனுக்குப் பக்குவமாகப் பட்டது. "ஆகட்டும்!" என்றான் மகுடபதி. ஆனால் வண்டி கடகடவென்று ஆடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தபோது, அவன் மனமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. "வாஸ்தவந்தான்! காங்கிரஸும் காந்திமகானும் நான் ஒருவன் இல்லாமலே காரியத்தைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் செந்திருவின் கதி என்ன? அவளும் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிடுகிறதா?" என்ற கேள்வி அவன் மனதில் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

கோயமுத்தூருக்கு இப்பால் ஆறு மைல் தூரத்தில் சேவல்பாளையம் கிராமம் இருக்கிறது. பெரிய சாலையிலிலிருந்து பிரிந்து ஒரு மைல் தூரம் குறுக்குப் பாதையில் போகவேண்டும். செங்கோடன் அங்கே தன் வண்டியைப் பிரித்து ஓட்டிக் கொண்டு போய்ச் சேவல்பாளையம் சின்னசாமிக் கவுண்டர் வீட்டில் மகுடபதியை விட்டான். சின்னசாமிக் கவுண்டர் காலமாகிக் கொஞ்ச காலமாயிற்று. செங்கோடனுடைய மாமியாரும், கல்யாணமாகாத ஒரு மைத்துனியும் இரண்டு மைத்துனர்களுந்தான் இருந்தார்கள். மைத்துனர்கள் சிறுபிள்ளைகள். அவர்கள் காங்கிரஸ் தொண்டன் மகுடபதியைப் பற்றி ரொம்பவும் கேள்விப் பட்டிருந்தார்கள். மகுடபதிக்கு அந்த வீட்டில் ராஜோபசாரம் நடந்தது.

செங்கோடன் வண்டியுடன் கோயமுத்தூருக்குக் கிளம்பியபோது, மகுடபதி, அவனிடம் "அண்ணாச்சி! கோயமுத்தூரில் எனக்கு அவசியமாக ஒரு காரியம் ஆக வேண்டும். உன்னால் முடியக்கூடிய காரியம்தான். செய்து வருவாயா?" என்று கேட்டான். "ஆகட்டும்; என்ன காரியம்?" என்றான் செங்கோடன். "பிரமாதம் ஒன்றுமில்லை. பென்ஷன் ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீடு எங்கே இருக்கிறதென்று விசாரித்து அடையாளம் தெரிந்து கொண்டு வரவேண்டும். அவரிடம் ஒரு முக்கியமான காரியம் எனக்கு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு பிறகு ஊருக்கே வந்து விடுகிறேன்" என்றான் மகுடபதி. "சரி" என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் போனான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:53 am

மகுடபதி அன்று முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைப்பாறினான். எப்படியோ அந்த வீட்டில் அவன் என்றும் அறியாத ஒரு மன அமைதியை அனுபவித்தான். வீட்டுப் பிள்ளைகள் இரண்டு பேரும் மகுடபதியிடம் கலகலவென்று பேசிக்கொண்டும், காங்கிரஸையும் காந்தியையும் சிறைவாசத்தையும் பற்றிக் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அடிக்கடி அவர்கள் 'மகாத்மா காந்திக்கு ஜே!', 'பாரத மாதாவுக்கு ஜே!', 'மகுடபதிக்கு ஜே!' என்று கோஷித்து விட்டு, புன்னகையுடன் மகுடபதியைக் கடைக்கண்ணால் பார்த்தார்கள். அவர்களுடைய அக்காவுக்குப் பதினேழு, பதினெட்டு வயதிருக்கும், படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனால் முகத்திலே நல்ல குறுகுறுப்பு இருந்தது. அவள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் இடையிடையே மகுடபதியின் பேரில் ஒரு கடைக்கண் பார்வையை மின்வெட்டைப் போல் வீசிவிட்டுப் போனாள். இந்த மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு சிவனேயென்று அமைதியான கிராம வாழ்கை என் நடத்தக் கூடாது என்று மகுடபதி எண்ணினான்.

செங்கோடனுடைய மாமியாருடன் அவன் பேசிக் கொண்டிருந்தபோது, இறந்துபோன பாவாயியைப் பற்றியும், அவளுக்குக் கள்ளிப்பட்டிக் கவுண்டருடன் நடந்த கல்யாணத்தைப் பற்றியும், அவர்களுடைய இல்வாழ்க்கையைப் பற்றியும் பல விவரங்கள் அறிந்தான். பாவாயிதான் அந்த வீட்டின் மூத்த பெண். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லையாதலால் பாவாயியை இரண்டாந்தாரமாகக் கொடுத்தார்கள். பாவாயிக்கு ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பட்டிக் கவுண்டரின் பெரிய சொத்து முழுவதும் அந்தக் குழந்தைக்கு வரும் என்று ஆசைப்பட்டுக் கொடுத்தார்கள். பாவாயிக்கு அவ்விதமே ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனாலும், அதற்குப் பிறகு கள்ளிப்பட்டிக் கவுண்டர் மூன்றாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டார்.

பாவாயியின் பிள்ளைக்கு நாலு வயதான போது பாவாயி இரண்டாவது பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு அவள் மேல் எப்படியோ வெறுப்பு உண்டாகி, அவளை அடித்து உபத்திரவப்படுத்த ஆரம்பித்தார். இதனால்தானோ என்னமோ, பாவாயிக்கு அகாலப் பிரசவமாகிக் குறைபிறந்து தாயாரும் இறந்துபோனாள். அதே சமயத்தில் அவளுடைய நாலு வயதுப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது.

கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குப் பாவாயி இறந்ததில் துக்கம் இல்லை. ஆனால், பிள்ளை காணாமல் போனது பற்றி அவருக்குத் துக்கமும் கோபமும் அசாத்தியமாயிருந்தன. பாவாயியுடன் அவர் துணைக்கு அனுப்பியிருந்த வேலைக்காரப் பெரியண்ணன் மேலும் அவருடைய சகலன் செங்கோடக் கவுண்டன் மேலும் அவருக்குச் சந்தேகம் உதித்திருந்தது. அவருடைய கோபத்துக்குப் பயந்து பெரியண்ணன் கண்டிக்கு ஓடிப் போய்விட்டான். செங்கோடக் கவுண்டன் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு உயிருடன் தப்பிய பாடு பெரும்பாடாகிவிட்டது.

மகுடபதி இன்னும் கொஞ்சம் விசாரித்து, அப்போது கண்டிக்குத் தப்பி ஓடிய பெரியண்ணன் தான் குடிப்பேயினிடமிருந்து தப்புவித்த பெரியண்ணன் என்பதைத் தெரிந்து கொண்டான். "ஐயோ! பெரியண்ணனை மறுபடியும் காண்போமா?" என்று அவனுடைய மனம் தத்தளித்தது.

அன்றிரவு செங்கோடன் கோயமுத்தூரிலிருந்து திரும்பி வந்தான். மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் விலாசத்தைத் திட்டமாக விசாரித்துக் கொண்டு வந்து மகுடபதியிடம் தெரிவித்தான். ஒரு அநியாயக் கேஸ் சம்பந்தமாக் யோசனை கேட்க வேண்டியிருக்கிறதென்றும், அவரைக் கண்டு பேசிவிட்டு உடனே வேங்கைப்பட்டிக்கு வந்து விடுவதாகவும் மகுடபதி செங்கோடனிடம் கூறி, வேங்கைப்பட்டியில் தன் தாயாரைப் பார்த்து அவ்விதம் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டான். மறுநாள் காலையில் செங்கோடன் தன்னுடைய கிராமமான காட்டுப்பாளையத்துக்கும், மகுடபதி கோயமுத்தூருக்கும் கிளம்பினார்கள்

மகுடபதி கோயமுத்தூருக்குக் கிளம்பிய போதும், அன்று பிற்பகல் அய்யாசாமி முதலியார் வீட்டு வாசலை அடைந்தபோதுங்கூட, தான் இன்னான் என்பதைச் சொல்லிச் செந்திருவைப் பற்றி விசாரிக்கும் எண்ணத்துடன் தான் வந்தான். ஆனால் செவி மந்தமுள்ள முதலியாரின் மனைவி, "தவிசுப்பிள்ளையா?" என்று கேட்டபோது, அம்மாதிரி தவிசுப் பிள்ளையாய் நடித்தால் ஒரு வேளை சீக்கிரத்தில் உண்மை தெரியலாம் என்ற யோசனை மகுடபதிக்கு உண்டாயிற்று. காங்கிரஸ் விடுதிகளில் மகுடபதி சமையல் வேலையும் நன்றாய்க் கற்றுக் கொண்டிருந்தான். ஆகவே பங்கஜத்தின் தாயாருக்குச் சந்தேகம் தோன்றாதபடி அவனால் சமையல் அறையில் வேலை செய்ய முடிந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:54 am

நள்ளிரவில், அய்யாசாமி முதலியார் பங்களாவின் முன்புறத்துக் கொடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, மகுடபதி மேற்கூறிய வரலாறுகளைச் சுருக்கமாகப் பங்கஜத்தினிடம் தெரிவித்தான். அவன் சொல்லாவிட்டால் பங்கஜம் விடுகிற வழியாயில்லை. நாவல் பைத்தியம் முற்றியவளான பங்கஜம், நிஜ வாழ்க்கையில் நடக்கும் இவ்வளவு அபூர்வ சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் விடமுடியுமா? ஆகவே மகுடபதி எதையாவது விட்டால்கூட, பங்கஜம் நோண்டிக் கேட்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.

கடைசியாக மகுடபதி, "இவ்வளவெல்லாம் நான் சிரமப்பட்டதில் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை. நாளைக்கே நான் மறுபடியும் பகிரங்கமாக மறியல் செய்து ஜெயிலுக்குப் போய்விடுகிறேன்" என்றான்.

உடனே அவன், "இல்லை, இல்லை, மறியலும் ஆச்சு மண்ணாங்கட்டியுமாச்சு! இந்தக் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டுபோய் அந்தக் கார்க்கோடக் கவுண்டரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, போலீஸிடம் நேரே போய் ஒப்புக் கொண்டு விடுகிறேன்..." என்றான்.

"பைத்தியந்தான்!" என்றாள் பங்கஜம்.

"யாரைச் சொல்லுகிறாய்?"

"ஆமாம்; பைத்தியம் உமக்குத்தான்; என் தோழிக்கு இல்லை."

"அதெப்படிச் சொல்லுகிறாய்? உனக்கு என்னமாய்த் தெரியும்?"

"சொல்லுகிறேன், கேளும் மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் செந்திருவும் மயிலாப்பூரில் அடுத்தடுத்த வீட்டில் இருந்தோம். அப்போது நான் ஒரு கதை எழுதினேன். அதில் கதாநாயகி ஒரு துஷ்டனிடம் அகப்பட்டுக் கொண்டு விடுகிறாள். 'என்னைக் கல்யாணம் செய்து கொள்' என்று அந்தத் துஷ்டன் வற்புறுத்துகிறான். மனோன்மணி - கதாநாயகி - மாட்டேன் என்றாள். அவனுடைய பலவந்தத்திலிருந்து அவள் எப்படித் தப்புவது. இதற்கு ஏதாவது யுக்தி கண்டுபிடிப்பதற்கு நான் யோசித்தேன். எவ்வளவோ யோசித்தும் யுக்தி ஒன்றும் தோன்றவில்லை. செந்திருவிடம் கேட்டேன். அவள் உடனே 'மனோன்மணிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக வையேன்' என்றாள். 'அடி சுட்டி! பேஷான யோசனையடி' என்றேன். அன்று செந்திரு என் கதைக்குக் கூறிய யுக்தி இப்போது அவளுக்கு நிஜமாகவே உபயோகப் பட்டிருக்கிறது. அதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் என் சமர்த்துத் தோழி இப்போது பைத்தியம் போல் நடித்திருக்கிறாள்..."

"இதுமட்டும் நிஜமாயிருந்தால்?..." என்றான் மகுடபதி அளவற்ற ஆவலுடன்.

"சந்தேகமே இல்லை. என் மனது சொல்லுகிறது. என் தோழிக்கு நிஜப் பைத்தியம் இல்லையென்று அப்பா சொல்லும்போதே எனக்கு இது தோன்றிவிட்டது. ஆனால் அவரிடம் சொல்லிப் பிரயோசனமில்லையென்றுதான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். செந்திருவின் சமர்த்தே சமர்த்து; ஆனானப்பட்ட கார்க்கோடக் கவுண்டரையும், போலீஸ் சூபரிண்டெண்டையும், என் அப்பாவையும் கூடத் தனக்குப் பைத்தியந்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறாளே? அந்தக் கெட்டிக்காரியை எப்படியாவது விடுதலை செய்யவேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றாள் பங்கஜம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக