புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_m10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_m10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_m10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_m10வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 06, 2010 5:56 am

தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர்.

தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர், அவர் காலத்தில் வழங்கிய நம்பிக்கைகளைக் கூறுவதில் வியப்பில்லை.

இதோ வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள்:

1. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (குறள்: 969)


தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போல வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் மானம் போகும் நிலை ஏற்படுமானால் கவரிமானைப் போல உயிர் விடுவார்களாம். கவரிமான் இப்படி உயிர் விடுவது உண்மையா? எந்த விலங்கியல் புத்தகத்திலும் இந்தச் செய்தி இல்லை! ஆயினும் அறிவியல் ரீதியில் ஆராயலாமே! கவரிமான் என்பதைச் சட எருமை Yak என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். கம்பரும் இந்த உவமையைக் கையாள்கிறார். "மானம் நோக்கின் கவரி மான் அளைய நீரார்" (கம்பராமாயணம், மந்திரப் படலம் 7) என்று கூறுகிறார்.

2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (குறள்: 90)


மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம். அதைப் போல வீடு தேடி வந்த விருந்தினரை "ஏன் வந்தீர்கள்?" என்ற எண்ணத்துடன் பார்த்தாலும் வாடி விடுவார்களாம். இப்படி ஒரு பூ உண்மையிலேயே உள்ளதா? அதன் தாவரவியல் பெயர் (botanical name) என்ன? அதை முகர்ந்து பார்த்தால் வாடும் என்பது உண்மையா?

3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் (குறல்: 1203)


எனக்குத் தும்மல் வருவது போல இருக்கிறது. ஆனால் உண்மையில் தும்மவில்லை. ஒரு வேளை காதலர் என்னை நினைக்க இருந்து நினையாமல் விட்டு விட்டாரோ என்று காதலி வருந்துகிறாள். இந்தக் குறளில் மட்டுமல்ல. குறள் 1312,1317,1318 ஆகிய மூன்றிலும் தும்மல் பற்றிய தமிழரின் நம்பிக்கை காணப்படுகிறது. அதாவது தும்மல் வந்தால் யாரோ ஒருவர் நம்மை ஆழமாக நினைக்கிறார் என்றும் அவரது எண்ணத்தின் சக்தியே தும்மலை உருவாக்குகிறது என்றும் தமிழர்கள் நம்பினார்கள். இதில் விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருப்பதாக எந்த ஆங்கில மருத்துவப் புத்தகமும் கூறவில்லை. ஆனால் உலகெங்கிலும் தும்மல் பற்றியும், புரை ஏறுதல் பற்றியும் இப்படி நம்பிக்கைகள் உள்ளன. மேலை நாடுகளில் யாராவது தும்மல் போட்டால், அருகில் உள்ளவர்கள் "கடவுள் காப்பாற்றட்டும்" (bless you) என்றும், இந்தியாவில் "தீர்க்க ஆயுஸ்" (நீடூழி வாழ்க) என்றும் கூறுவர் தும்மலையும் விஞ்ஞான முறையில் ஆராயலாமே.

4. ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126)


ஆமையானது தனது உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல ஒருவன் ஐம்புலன்களையும் அடக்குவானானால் அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு கிடைக்கும் என்பது இதன் பொருள். ஒரு விந்தை என்னவென்றால் இதே பாடல் பகவத்கீதை (2-58), மனு தர்மசாஸ்திரம் திருமந்திரம், சிவக சிந்தாமணி (2824), கம்பராமாயணம் (சடாயு - 23) ஆகிய அனைத்திலும் உள்ளன. ஆமை தான், உலகிலுள்ள பிராணிகளில் அதிகமான ஆயுள் உடையது (250 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை) என்று கின்னஸ் சாதனை நூல் கூடக் கூறுகிறது. ஆமையின் நீண்ட ஆயுள் ரகசியத்தை அறிந்துதான், வள்ளுவர் இந்த உவமையைப் பயன்படுத்தினாரா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

5. தெய்வம் தொழு‘அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள்: 55)


கடவுளை விடத் தனது கணவனையே தெய்வமாக வணங்கும் பெண், இயற்கைச் சக்திகளைக் கூடக் கட்டுப்படுத்துவாளாம். அவள் "பெய்" என்று சொன்னால் மழை பெய்யுமாம்! இந்தக் குறளின் கருத்து எவ்வளவு பரவியிருந்தது என்பதற்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே எடுத்துக் காட்டுக்கள். அவ்விரு காப்பியங்களிலும் இந்தக் குறள் வரிகள் உள்ளன!

பத்தினிப் பெண்கள் - கணவனை மட்டுமே வழிபடும் பெண்கள் - சொன்னால் மழை பெய்யுமா? மேகத்தில் ரசாயனப் பொருட்களைத் தூவிச் செயற்கை மழை பெய்வித்ததாய் நாம் அறிவோம். பத்தினிப் பெண்கள் சொல்லி மழை பெய்ததற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் எங்கே?

திருவள்ளுவரின் மனைவி வாசுகியை அவர் அழைத்த போது அவள் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாளாம். வள்ளுவர் கூப்பிட்டவுடன் வாசுகி ஓடி வந்தாளாம். திரும்பிச் சென்ற போது கிணற்றில் குடம், அவர் விட்ட நிலையிலேயே தண்ணீருடன் நின்று கொண்டிருந்ததாம். இவையெல்லாம் அக்காலப் பத்தாம் பசலி நம்பிக்கைகளா? உண்மையா? ஆராயலாமே! "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்பது அக்கால நம்பிக்கை.

6. வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் (குறல்: 85)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளயுளும் தொக்கு (குறள்: 545)


வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உணவு அளித்து விட்டு மிகுதியை உண்பவனின் நிலத்தில் விதையே விதைக்க வேண்டாமாம், தானாகத் தானியம் விளையுமாம். அதே போல அற நூல்களின் படி ஆட்சி செய்யும் மன்னர் நாட்டில் நல்ல மழையும் விளைச்சலும் இருக்குமாம். 559 -வது குறளில் இதை மேலும் வலியுறுத்திச் சொல்கிறார்.

இது உண்மையா? யாராவது ஒரு ஆராய்ச்சியாளர் மழை, விளைச்சல் பற்றி விவரங்களை ஆட்சியாளரின் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிட்டு ஆராயலாமே!

உலகப் புகழ் பெற்ற வட மொழிக் கவிஞன் காளிதாசன் எழுதிய ரகுவம்சம் (5-29/33) என்னும் நூலில் இதைவிட மேலும் ஒருபடி செல்கிறான். அறநெறிப்படி ஆண்டால் தங்கக் காசுகள் மழையாகப் பெய்து கஜானாவை நிரப்பி விடுமாம்.

சாமிநாதன்
ஆய்வுக்கோவை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Sun Oct 10, 2010 12:08 pm

வள்ளுவனை வணங்குவோம் வாழ்நாள் முழுவதுமே
அன்புடன் நா.கோ.நாராயணசுவாமி பாடகன்

avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Sun Oct 10, 2010 12:13 pm

ஐ லவ் யூ வாழ்க வளமுடன் வாழ்க வள்ளுவர் புகழ்
அன்புடன் சுவேதா பிரியா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 10, 2010 12:16 pm

வள்ளுவர் புகழ் வாழ்க.
அருமையான படைப்பு. நன்றி திரு சுவாமிநாதன் & திரு சிவா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 12:17 pm

ஒரு முறை இந்தியாவில் பெரிய ஐஸ்பறைகள் மலையாக பொழிந்தது என படித்துள்ளேன் அப்புறம் லட்டின் அமெரிக்காவில் நாணய மழை பொழிந்ததாகவும் படித்தேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 12:17 pm

சிவா wrote:மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம். இப்படி ஒரு பூ உண்மையிலேயே உள்ளதா? அதன் தாவரவியல் பெயர் (botanical name) என்ன? அதை முகர்ந்து பார்த்தால் வாடும் என்பது உண்மையா?

அண்ணா இந்த மலருக்கு நாகமல்லி என்ற வேறு பெயரும் உண்டு ஆனால் அது முகர்ந்து பார்த்தாலே வாடுமா என்பது தெரியாது. இதுதான் அந்த மலர்

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 12:19 pm

balakarthik wrote:
சிவா wrote:மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம். இப்படி ஒரு பூ உண்மையிலேயே உள்ளதா? அதன் தாவரவியல் பெயர் (botanical name) என்ன? அதை முகர்ந்து பார்த்தால் வாடும் என்பது உண்மையா?

அண்ணா இந்த மலருக்கு நாகமல்லி என்ற வேறு பெயரும் உண்டு ஆனால் அது முகர்ந்து பார்த்தாலே வாடுமா என்பது தெரியாது. இதுதான் அந்த மலர்

[You must be registered and logged in to see this image.]

இது தான
[You must be registered and logged in to see this image.]



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 10:53 am

கார்த்திக் wrote:இது தான
[You must be registered and logged in to see this image.]

அருமை நண்பா இத நான் தேடினேன் ஆனா இவ்வளவு பெருசா கிடைக்கல



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:03 am

balakarthik wrote:
கார்த்திக் wrote:இது தான
[You must be registered and logged in to see this image.]

அருமை நண்பா இத நான் தேடினேன் ஆனா இவ்வளவு பெருசா கிடைக்கல

தேடனும் கிடைக்கிற வரைக்கும் தேடனும் ,
தேடினா கிடைக்காதது ஏதும் இல்லை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 11:06 am

கார்த்திக் wrote:தேடனும் கிடைக்கிற வரைக்கும் தேடனும் ,
தேடினா கிடைக்காதது ஏதும் இல்லை

அப்போ என் மூளைய காணும் கொஞ்சம் தேடிகொடுபா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக