புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
prajai
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Barushree
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_m10மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 26, 2010 9:07 am




உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.

இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.

மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 9:34 am

எனது 45 ஆவது வயதில் எனக்கு மாரடைப்பு வந்தது. காரணம் மன அழுத்தமே..! எவ்வித அறிகுறியும் இல்லை என்பதாக முன்னர் நினைத்திருந்தாலும் இப்போது சில அறிகுறிகள் எனக்கு நினைவுக்கு வந்தன. அதைப் பகிர்கிறேன்..!

1. மாரடைப்பின் சில நாட்களுக்கும் முன்னரேயே அதீத நிலையின்மை ( restless stage ) இருந்தது.

2. ஒருவாரம் முன்னதாக பைக் ஓட்டும் போது மின்னலாய் எனது வலது தோள்பட்டையில் மின்வெட்டு போல சில வினாடிகளுக்கு உனர்ந்தேன்.

3. சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 2.30க்கு மூச்சுத்திணறலும் ஒரு வித இருப்பின்மையும் உணர்ந்தேன்.

4. கைகளில் மின்னல் போல் கடுமையான அதிர்ச்சியை உணர்ந்தேன்.

5. உடலில் கொழுப்புச்சத்து அதிகமின்றி இருப்பினும் என் ஆசிரியப்பணியின் காரணமாக அதிக உடல் உழைப்பும் நடைபயிற்சியும் இல்லாமல் இருந்தது மிக முக்கிய காரணம்.

6. சில உளப்பிரச்சினைகள் காரணமாய் மன இறுக்கத்தை ஒருமாதகாலமாய் உணர்ந்திருந்தேன். அதீத கோபம் எரிந்து விழுதல் போன்ற உயர்ரத்த அழுத்த அறிகுறிகளும் இருந்தன.

இவை மூலம் எனது அனுபவ அறிவுரை :

1. 35 வயதைத் தாண்டிய ஆண்பெண் இருவரும் உணவில் இனிப்பு உப்பு காரம் புளிப்பு இந்த சுவைகளைப் பாதியாக குறைத்தல் முக்கியம்.

2. மாதம் ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

3. எதைக்குறித்தும் ஆழமாகச் சிந்தித்தலைத் தவிர்க்க வேண்டும். ஆழ்நிலை தியானம் யோகம் ஆகியவை உதவும்.

4.கோபப்படுதலைத் தவிர்த்தல் முக்கியம்.

5 இறை நம்பிக்கை உடையவர்கள் தினமோ அல்லது வாரமொருமுறையோ கோயிலுக்குச் சென்று அமைதியாக அரைமணி நேரம் அமர்ந்து தியானம் செய்யலாம்.

6. மாமிச உணவை ( மிக முக்கியமாக ஆட்டிறைச்சி /மாட்டிறைச்சி / பன்றி இறைச்சி ஆகியவை) தவிர்த்தல் நலம்.

7 மீன்களைப் போதிய அளவு உணவில் சேர்த்துக்கொள்ளவும். அசைவத்தில் தீங்கு விளைவிக்காத ஒரே உணவு மீன் தான் என்று அடித்துக் கூறலாம்.

8. புகை மது போதைப் பொருள்களைத் தவிர்க்கவேண்டும்.

9. முக்கியமாக எதையும் லேசாக எடுத்துக்கொண்டு முடிந்த அளவு மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுதல் மிகச்சிறந்த ஒன்று.

இவை அனைத்தும் எனது சொந்த அனுபவத்திலிருந்தே வழங்குகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக