Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
+11
மஞ்சுபாஷிணி
balakarthik
கோவை ராம்
உதயசுதா
vbharathan
mmani15646
கலைவேந்தன்
அன்பு தளபதி
sathyan
சிவா
சரவணன்
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
First topic message reminder :
யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?
அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!
இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்![/left]
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).
இதுல கொடுமை என்னன்னா……
அவரோட இந்த எட்டு வருட தொண்டு வாழ்க்கையில, 2004 ஆம் ஆண்டு தொடங்கி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகத்தார்கள்ல, CNN-IBN தொலைக்காட்சியோட Reliance Real Heroes நிகழ்ச்சியும், இந்தியா டுடே, தினமலர் ஆகிய பத்திரிக்கைச் செய்திகளின் எண்ணிக்கை வெறும் 10 உட்பட்டவை அப்படீங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல/கேட்க நினைக்கிறது என்னன்னா,
சினிமாக்காரங்களையே துரத்தி, துரத்தி படமெடுத்தும், கிசு கிசு செய்தி எழுதியும், ஒரு திரைப்படம் வெளிவரும்போது பக்கம் பக்கமா படம்போட்டும், செய்தி எழுதியும் சினிமாவை வாழ வைக்கிற ஊடகத்தாரும்….,
அதைப்பார்த்து பல நிழலுலக சூப்பர்ஸ்டார்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் படங்கள் வெளியாகும்போது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அவர்களையே மீண்டும் மீண்டும் கோடிகளில் புரளச்செய்யும் ரசிகப்பெருமக்களாகிய நாமும்,
புத்தி சுவாதீனமில்லாதவங்களுக்கும், நலிந்தவர்களுக்கு தொண்டுசெய்யக்கூட வேணாம், குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த/இன்னும் தெரியாத சில பல கிருஷ்ணன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து இந்த சமுதாயத்தை மேம்படுத்த, உலக அரங்கில் இந்திய-தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கச்செய்ய,
1. இந்தத் தொடர்புக்குச்சென்று நம்ம புது ( நிஜ உலக) சூப்பர் ஸ்டாரு நாராயணன் கிருஷ்ணன் 2010-ன் உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்களுள் ஒருவராக தேர்வுபெற ஒரு ஓட்டு போடுவோம்…..
2. முடிஞ்சா நம்மால முடிஞ்ச ஒரு தொகையை, இங்கே போய் நன்கொடையாக கொடுத்து, அது அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவச்செய்வோம்……
3. மிக மிக குறைந்தபட்சமா, இவரப்பத்தின விவரங்கள நம்ம ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் பக்கங்கள்ல வெளிப்படுத்தி, நம்ம நண்பர்களையும், பொதுமக்களையும் இவருக்கு ஓட்டுப்போடவும், உதவவும் சொல்லுவோம்…..
இதையெல்லாம் உங்களச் செய்யச்சொல்லிக்கேட்டுக்கத்தான் இந்தப் பதிவு.செய்வீங்களா?
நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)
நன்றி: http://padmahari.wordpress.com
தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார், மதுரையைச் சேர்ந்த “நாராயணன் கிருஷ்ணன்”!!
இன்னிக்கு சக பதிவர் ஒருத்தரோட பதிவுல, CNN நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், நடத்திவரும் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படீங்கிற போட்டியின் ஒரு வேட்பாளரா, நம்ம மதுரையைச் சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா படிக்க நேர்ந்தது. “அட இங்கப்பார்ரா”, அப்படீன்னு ஒரு சக தமிழனா பெருமைப்பட்டுக்கிட்டு, அவரைப்பத்தி விவராமாப்படிக்க சில தொடர்புகளுக்கு போனேன். அவரப்பத்தி ஒவ்வொரு விஷயம் படிக்கும்போதும், நெகிழ்ச்சியாகவும், குற்ற உணர்ச்சியுடனும், நாமளும் ஏதாவது செய்யனும்னும், அவருக்கு/அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யனும்னும், பலவிதமான உணர்வுகள் மனசை ஒரு மாதிரி இம்சை பண்ண ஆரம்பிச்சிட்டுது
.இன்னிக்கு சக பதிவர் ஒருத்தரோட பதிவுல, CNN நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், நடத்திவரும் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படீங்கிற போட்டியின் ஒரு வேட்பாளரா, நம்ம மதுரையைச் சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா படிக்க நேர்ந்தது. “அட இங்கப்பார்ரா”, அப்படீன்னு ஒரு சக தமிழனா பெருமைப்பட்டுக்கிட்டு, அவரைப்பத்தி விவராமாப்படிக்க சில தொடர்புகளுக்கு போனேன். அவரப்பத்தி ஒவ்வொரு விஷயம் படிக்கும்போதும், நெகிழ்ச்சியாகவும், குற்ற உணர்ச்சியுடனும், நாமளும் ஏதாவது செய்யனும்னும், அவருக்கு/அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யனும்னும், பலவிதமான உணர்வுகள் மனசை ஒரு மாதிரி இம்சை பண்ண ஆரம்பிச்சிட்டுது
அதான், அவரு 2010-ன் தலைசிறந்த ஹீரோவா ஆகுறதுக்கு, அவருக்கு உங்களோட ஓட்டுப்போடச் சொல்லி கேட்டுக்கிட்டு, அவரு ஹீரோ ஆகுறது மூலமா, இந்த நாட்டோட, தமிழகத்தோட அசிங்கமான பல முகங்கள்ல ஒன்றான, வறுமையை ஒழிக்க மற்றும் சமுதாய அக்கரையின்மை, பொதுநலத்தன்மை இதையெல்லாம் வளர்த்துக்க, நமக்கு ஒரு உந்துசக்தி, ஊக்கம், இடித்துறைத்தல், வழிகாட்டியா திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களுடைய லட்சியம் , கொள்கைகளப்பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு இப்படியொரு பதிவை எழுதுறேன்!
யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?
என்னை மாதிரி, உங்கள மாதிரி பள்ளிப்படிப்பை முடிச்சுக்கிட்டு, சமையற்கலையில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடிச்சி, பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியிலமர்ந்தவர்தான் நம்ம ஹீரோ கிருஷ்ணன்! பணியில் சிறந்து, அதற்க்கான அங்கீகாரமாய் பல விருதுகளை வாங்கிய கிருஷ்ணனுக்கு, சுவிட்சர்லாந்தில் பணிபுரிவதற்க்கான ஒரு அரிய வாய்ப்பை ஓட்டல் நிறுவனம் வழங்குகிறது! அந்த வேலைக்குச் செல்ல, வீடு சென்று பெற்றோரிடம் விடைபெற்றுச்செல்ல மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.
அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்க்குமுன், கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிலில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்க்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞ கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
ஏன்னா, அப்போ அவரு மனக்கண் முன்னாடி, 500 ரூபாயில் வாங்கிய ஃப்ரைடு ரைசில், பாதியை சாப்பிட்டு, நாகரீக அடிப்படையில் மீதியை அப்படியே விட்டுச்செல்லும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேல்தட்டு வாடிக்கையாளர்களே வந்துசெல்கிறார்கள்! உணவோட மதிப்பு தெரியாம, இல்லாதவர்களின் கனவான உணவை உதாசீனப்படுத்திச்செல்லும், இதுமாதிரியானவங்களுக்கு சமைச்சுப்போட்டு, உள்ளிருக்கும் மனிதத்தைக்கொன்றுவிட்டு, பை நிறைய காசு பார்க்கும், ஒரு சராசரி சமையற்காரனாய் (அதுவும் வெளிநாட்டில்) குப்பைக்கொட்டுவதைவிட, தனக்கான உணவை தானே கேட்டுக்கூட பிச்சையாய் பெறமுடியாத, புத்திசுவாதீனமில்லாத பலரின் தினப்பசியை போக்குவதை மன நிறைவோடு செய்யலாம்னு முடிவு பண்ணிக்கிறாரு! அப்போ அவருக்கு வயசு 21.
அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!
இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்![/left]
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).
இதுல கொடுமை என்னன்னா……
அவரோட இந்த எட்டு வருட தொண்டு வாழ்க்கையில, 2004 ஆம் ஆண்டு தொடங்கி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகத்தார்கள்ல, CNN-IBN தொலைக்காட்சியோட Reliance Real Heroes நிகழ்ச்சியும், இந்தியா டுடே, தினமலர் ஆகிய பத்திரிக்கைச் செய்திகளின் எண்ணிக்கை வெறும் 10 உட்பட்டவை அப்படீங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல/கேட்க நினைக்கிறது என்னன்னா,
சினிமாக்காரங்களையே துரத்தி, துரத்தி படமெடுத்தும், கிசு கிசு செய்தி எழுதியும், ஒரு திரைப்படம் வெளிவரும்போது பக்கம் பக்கமா படம்போட்டும், செய்தி எழுதியும் சினிமாவை வாழ வைக்கிற ஊடகத்தாரும்….,
அதைப்பார்த்து பல நிழலுலக சூப்பர்ஸ்டார்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் படங்கள் வெளியாகும்போது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அவர்களையே மீண்டும் மீண்டும் கோடிகளில் புரளச்செய்யும் ரசிகப்பெருமக்களாகிய நாமும்,
புத்தி சுவாதீனமில்லாதவங்களுக்கும், நலிந்தவர்களுக்கு தொண்டுசெய்யக்கூட வேணாம், குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த/இன்னும் தெரியாத சில பல கிருஷ்ணன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து இந்த சமுதாயத்தை மேம்படுத்த, உலக அரங்கில் இந்திய-தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கச்செய்ய,
1. இந்தத் தொடர்புக்குச்சென்று நம்ம புது ( நிஜ உலக) சூப்பர் ஸ்டாரு நாராயணன் கிருஷ்ணன் 2010-ன் உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்களுள் ஒருவராக தேர்வுபெற ஒரு ஓட்டு போடுவோம்…..
2. முடிஞ்சா நம்மால முடிஞ்ச ஒரு தொகையை, இங்கே போய் நன்கொடையாக கொடுத்து, அது அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவச்செய்வோம்……
3. மிக மிக குறைந்தபட்சமா, இவரப்பத்தின விவரங்கள நம்ம ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் பக்கங்கள்ல வெளிப்படுத்தி, நம்ம நண்பர்களையும், பொதுமக்களையும் இவருக்கு ஓட்டுப்போடவும், உதவவும் சொல்லுவோம்…..
இதையெல்லாம் உங்களச் செய்யச்சொல்லிக்கேட்டுக்கத்தான் இந்தப் பதிவு.செய்வீங்களா?
நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)
நன்றி: http://padmahari.wordpress.com
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
அதே போல் , சி.என்.என்.நின் சூப்பர ஸ்டார் பட்டியலில் உள்ள அனுராத கொய்ரால என்ற நேபாள அம்மையாரின் சேவையை பாராட்ட கூடிய ஒன்று. " International Justice Mission " என்கிற தொண்டு நிறுவனத்தின் உதவியின் மூலம் பலர் வாழ்விலே முடங்கிக்கிடந்த , இருட்டிலே வாழ்க்கையை தொலைத்து தனது ஒரு சான் வயிற்று பிழைப்புக்காக உடலை விற்று வாழத பல பெண்களின் வாழ்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அம்மையாருக்கு எனது ஒரு ஒட்டு.
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
நன்றி பரதன். பொருளுதவி செய்யமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இவரை வெளிவுலகிற்கு கொண்டுவருவதால் பலர் இந்த தொண்டில் ஈடுபடலாம் என்றுதான் இங்கு பதிந்தேன். நன்றி!vbharathan wrote:இம்மாதிரியான பதிவிற்கு நான் முதலுரிமை கொடுக்கிறேன்..
ஒரு தன்னலமில்லாத கருணை உள்ளம் கொண்டவரை இந்த ஈகரையின் மூலம் அரிய கிடைத்தமைக்கும், பிச்சை என்பவற்றின் இந்த பதிவிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இம்மாதிரியான நல்ல உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எவருக்கும் என்றென்றும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
உண்மையிலுமே இது பெருமை பட வேண்டிய விஷயம்.
ஆனா அவரோட உழைப்புல நாம இது வரை பங்கேற்காமா
அவரால ஏற்பட போகும் பெருமையில் பங்கேற்கிரோம்ன்னு நினைச்சாதான் மன உறுத்தலா இருக்கு. என்னால முடிஞ்சவரை எத்தனை முறை வாக்களிக்க முடியுமோ அத்தனை தடவை வாக்கு அளிக்கிறேன், என் நண்பர்களையும் வாக்கு அளிக்க கூறுகிறேன்.
ஆனா அவரோட உழைப்புல நாம இது வரை பங்கேற்காமா
அவரால ஏற்பட போகும் பெருமையில் பங்கேற்கிரோம்ன்னு நினைச்சாதான் மன உறுத்தலா இருக்கு. என்னால முடிஞ்சவரை எத்தனை முறை வாக்களிக்க முடியுமோ அத்தனை தடவை வாக்கு அளிக்கிறேன், என் நண்பர்களையும் வாக்கு அளிக்க கூறுகிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
ஈகரையே கூடி தேர் இழுக்கிறது .வாழ்த்துக்கள்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
vbharathan wrote:இம்மாதிரியான பதிவிற்கு நான் முதலுரிமை கொடுக்கிறேன்..
ஒரு தன்னலமில்லாத கருணை உள்ளம் கொண்டவரை இந்த ஈகரையின் மூலம் அரிய கிடைத்தமைக்கும், பிச்சை என்பவற்றின் இந்த பதிவிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இம்மாதிரியான நல்ல உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எவருக்கும் என்றென்றும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பேன்.
நான் இரண்டு முறை வாக்களித்து விட்டேன் மேலும் எனது நண்பர்களையும் வாக்களிக்கும்படி கூறியிருக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
நேற்று நைட் கலை சொன்னதுமே முடிந்தவரை ஓட்டு போட்டுக்கொண்டே இருந்தேன்...
தகுதியான ஒன்றுக்கு இத்தனை பேரை பரிந்துரை செய்றாங்கன்னா கண்டிப்பா அதில் மகத்தான காரியங்களை இவர்கள் எல்லோருமே செய்திருப்பதாக தானே அர்த்தம்...
முடிந்தவரை ஓட்டு போட்டுக்கொண்டே இருப்போம்...
அன்பு நன்றிகள் நல்லது செய்ய வாய்ப்பு தந்தமைக்கு...
உதவனும் என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் உதவி கேட்போரைக்கூட கடவுள் நமக்கு காட்டினால் தான் உதவக்கூடிய சந்தர்ப்பம் நமக்கும் கிடைக்கும்...
தகுதியான ஒன்றுக்கு இத்தனை பேரை பரிந்துரை செய்றாங்கன்னா கண்டிப்பா அதில் மகத்தான காரியங்களை இவர்கள் எல்லோருமே செய்திருப்பதாக தானே அர்த்தம்...
முடிந்தவரை ஓட்டு போட்டுக்கொண்டே இருப்போம்...
அன்பு நன்றிகள் நல்லது செய்ய வாய்ப்பு தந்தமைக்கு...
உதவனும் என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் உதவி கேட்போரைக்கூட கடவுள் நமக்கு காட்டினால் தான் உதவக்கூடிய சந்தர்ப்பம் நமக்கும் கிடைக்கும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
முடிந்தவரை வாக்களித்து விட்டேன்...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
நண்பர் பிச்சைக்கு என் நன்றிகள்...
இப்படிப்பட்ட செய்திகள் தான் நமக்கு தேவை...
ஓட்டு போடுவதோடு இல்லாமல்...அது போன்ற
நலிவடைந்தவர்களுக்கு..
நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்...
இப்படிப்பட்ட செய்திகள் தான் நமக்கு தேவை...
ஓட்டு போடுவதோடு இல்லாமல்...அது போன்ற
நலிவடைந்தவர்களுக்கு..
நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்...
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
தன்னலம் கருதாது இப்பெரும் தொண்டு ஆற்றி வரும் இப்பெருமகனாருக்கு வாக்களித்து நாம் தமிழர் என்ற பெருமையைக் கொள்வோம்..
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு
» CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» இரண்டாயிரத்து Twelve சூப்பர் ஸ்டார் எங்கள் பவர் ஸ்டார்!
» என் குரு சூப்பர் ஸ்டார் - பவர் ஸ்டார்
» CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» இரண்டாயிரத்து Twelve சூப்பர் ஸ்டார் எங்கள் பவர் ஸ்டார்!
» என் குரு சூப்பர் ஸ்டார் - பவர் ஸ்டார்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|