ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு வரலாறு

+3
அன்பு தளபதி
ரபீக்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty பொது அறிவு வரலாறு

Post by சிவா Sun Oct 24, 2010 8:01 pm

First topic message reminder :

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty பொது அறிவு பொது அறிவு வரலாறு  - Page 2 Empty வரலாறு



சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3250 முதல் 2750 வரை.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்.

மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு ‘இறந்தவர் மேடு’ என்று பொருள்.

சிந்து சமவெளி எழுத்துமுறை, ‘சித்திர எழுத்து முறை’.

சிந்து சமவெளி மக்கள் ‘பசுபதி’ என்ற ஆண் தெய்வத்தையும் ‘அன்னை’ என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர்.

சிந்து சமவெளி மக்கள், உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது ஆரிய நாகரிகம்.

ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுவது: வேதங்கள், உபநிடதங்கள்.

வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண என 4 வகை.

வேதங்களில் பழைமையானது ரிக் வேதம்.

ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.

யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்திய இசைக் கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.

அதர்வண வேதம் பில்லி, சூனியம் பற்றிக் குறிப்பிடுகிறது.

உபநிடதங்கள் மொத்தம் 108.

ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சப்த சிந்து பகுதியில் குடியேறினார்கள்.

ஆரியர்கள், தங்கள் தலைவரை ‘ராஜன்’ என்று அழைத்தனர்.

ராஜனுக்கு அறிவுரை கூற, ‘சபா’ என்ற மூத்தோர் சபையும், ‘சமிதி’ என்ற பொது சபையும் இருந்தன.

முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.

ரிக் வேத காலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.

பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது.

ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.

மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் போரஸ் என்ற புருஷோத்தமன்.

மௌரிய வம்சத்தைத் துவக்கியவர் சந்திரகுப்த மௌரியர்.

சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு சாணக்கியர்.

அலெக்ஸாண்டரின் படைத் தலைவரான செலுக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.

மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா.

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்.

பிந்துசாரரின் மகன், சக்கரவர்த்தி அசோகர்.

கி.மு. 216ல் நடந்த கலிங்கப்போரில் அசோகர் கலிங்கத்தை வென்றார்.

கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.

அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு: உபகுப்தா.

மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள்: சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி.

சாணக்கியர் எழுதிய நூலான ‘அர்த்த சாஸ்திரம்’ அரசு நிர்வாகம் பற்றியது.

அசோகர் தனது கல்வெட்டுகளில் ‘தேவனாம்பிரிய பிரியதர்ஷி’ என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.

‘மாஸ்கி’ என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.

கி.பி. 78ல் அரசேற்ற குஷான அரசரான கனிஷ்கர், சக ஆண்டைத் தொடங்கினார்.

கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

கனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம், இப்போது பெஷாவர்.

கனிஷ்கர், 4வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

கனிஷ்கர் கால புத்தமதம் மஹாயானம்.

கனிஷ்கர் காலத்தில் அஷ்வகோஷர் ‘புத்த சரிதம்’ நூலை எழுதினார்.

கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.

குப்த வம்சத்தின் முதல் அரசர், ஸ்ரீகுப்தர்.

முதலாம் சந்திரகுப்தர் ‘மஹாராஜாதிராஜா’ என சிறப்புப் பெயர் பெற்றார்.

‘இந்திய நெப்போலியன்’, ‘கவிராஜா’, ‘சாஹாரி’ என்ற பட்டப் பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.

இரண்டாம் சந்திரகுப்தர் ‘விக்கிரமாதித்யர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

‘நவரத்தினங்கள்’ என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர்.

குப்தர் காலம் ‘இந்தியாவின் பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் குமார குப்தர்.

குப்தர்கால ஓவியங்கள் மஹராஷ்டிராவில் ஒளரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘தியோகார்’ என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.

‘மெஹருலி’ என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச்சின்னங்களில் ஒன்று.

குப்தர்காலம் இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சி காலமாகும்.

வர்த்தமான அரசர்களில் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.

ஹர்ஷரின் தலைநகரம் தானேஷ்வர்.

'ரத்னாவளி', 'பிரியதர்ஷிகா', 'நாகநந்தம்' ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.

ஹர்ஷரின் அவைப்புலவரான பாணபட்டா, 'ஹர்ஷசரிதம்', 'காதம்பரி' ஆகிய நூல்களை எழுதினார்.

சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷரின் அவைக்கு வந்தார்.

ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.

யுவான் சுவாங் எழுதிய பயண நூல் ‘சியூக்கி’.

ஹர்ஷரை ‘சகோலதாரபதநாதா’ என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.


பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Sun Oct 24, 2010 8:19 pm

காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தி.

காந்திஜியின் குரு கோபாலகிருஷ்ண கோகலே.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய்.

காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா.

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி.

இரண்டு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜேந்திரபிரசாத்.

லாலா லஜபதி ராயின் படுகொலைக்குக் காரணமான 'சாண்டர்ஸ்' என்ற போலீஸ்காரரைக் கொன்றவர் பகத்சிங்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ.டயரை கொன்றவர் உத்தம்சிங்.

இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு 1885.

முஸ்லிம் லீக் தொடக்கப்பட்ட ஆண்டு 1906.

சுயராஜ்ய கட்சியைத் தொடங்கியவர்கள் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.

பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கியவர் சுபாஷ் சந்திரபோஸ்.

ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு 1920.

சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்ற ஆண்டு 1930.

கிலாபத் இயக்கத்தை 1920ல் தொடங்கியவர்கள் முகமது அலி, சௌகத் அலி சகோதரர்கள்.

ராஷ்டிரிய சுயம் சேவக்(RSS) அமைப்பை 1925ல் தொடங்கியவர் ஹெட்கேவார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு (Loksabha) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயது 25.

மாநிலங்களவைக்கு (Rajya sabha) தேர்ந்தெடுக்கப் படுவதற்கான குறைந்தபட்ச வயது 30.

உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65.

உயர்நீதி மன்ற நீதிபதியின் ஓய்வு வயது 62.

இந்தியாவின் தேசிய வருமானத்தைக் கணக்கிடுவது மத்திய புள்ளியியல் நிறுவனம்.

ஐந்தாண்டுத் திட்டங்களைத் தயாரிப்பது திட்ட ஆணையம்.

இந்திய தேசிய ராணுவத்தை (INA) தொடங்கியவர் சுபாஷ் சந்திரபோஸ்.

இந்திய சுதேச சமஸ்தானங்களை இணைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.

ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் நிதித்துறைச் செயலாளர்.

பிற ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து இடுபவர் ரிசர்வ் வங்கியின் கவர்னர்.


பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 8:37 pm

அருமையான பயனுள்ள தகவல்கள் சிவா....

கோன் பனேகா கரோர்பதி போக இது போன்று பொது அறிவுக்கேள்விகள் பற்றி விவரங்கள் அறிய இந்த பகிர்வு மிகவும் உதவியாக இருக்கும்பா....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொது அறிவு வரலாறு  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Sun Oct 24, 2010 10:44 pm

//காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தி.//

தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் குரு காமராசர் என்று படித்துள்ளேன் சிவா.

ஒரு முறை சென்னை சர்வகலா சாலையின் துணைவேந்தர் பொறுப்பை ஆங்கில அரசு தீரர் சத்தியமூர்த்திக்கு கொடுக்க முன் வந்த போது பலர் அவரை அப்பொறுப்பை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் சத்திய மூர்த்தி காமராசரிடம் ஆலோசனை கேட்டாராம். காமராசர் தனிப்பட்டவர்கள் சட்ட மறுப்பு வரப்போகிறது. துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை என்னாவது? அதனால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளக் கூடாது என்று கூறினாராம். சத்தியமூர்த்தியும் அப்படியே நடந்தாராம். இது போல பல சமயங்களில் காமராசரிடம் அவர் ஆலோசனை கேட்பது வழக்கமாம். காமராசரும் அவரை சூழ்ச்சி வலைகளில் விழாமல் பலமுறை தப்பிக்க வைத்துள்ளாராம். (திரு. முருக. தனுஷ்கோடி, காமராசரின் இனிய நண்பர், நவசக்தி இதழின் ஆசிரியர், காமராசரைப்போலவே திருமணம் செய்து கொள்ளாமல் காமராசருடன் இணைந்து நாட்டுப்பணி ஆற்றியவர்)

தவறிருந்தால் மன்னிக்கவும்.


பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 12:36 am

3. அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இங்கு இப்படித்தான் அக்கா உள்ளது!


Last edited by சிவா on Mon Oct 25, 2010 1:01 am; edited 1 time in total


பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Mon Oct 25, 2010 12:57 am

சிவா wrote:3. அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%௮

இங்கு இப்படித்தான் அக்கா உள்ளது!
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)


பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 1:04 am

Aathira wrote:
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)

இருவரும் ஒருவரை ஒருவர் குருவாக எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்! அதனால்தான் இவ்வாறு செய்திகள் வந்துள்ளது!

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இதுதான் சரியான முகவரி அக்கா!


பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by கலைவேந்தன் Mon Oct 25, 2010 1:04 am

இருவருமே சளைத்தவர் இல்லை என்பதால் இருவருமே ஒருவருக்கொருவர் குரு என்று முடிவுக்கு வரலாம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 1:06 am

கலை wrote:இருவருமே சளைத்தவர் இல்லை என்பதால் இருவருமே ஒருவருக்கொருவர் குரு என்று முடிவுக்கு வரலாம்..!

அப்படியே ஆகட்டும் ஜீ!


பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Mon Oct 25, 2010 1:31 am

சிவா wrote:
Aathira wrote:
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)

இருவரும் ஒருவரை ஒருவர் குருவாக எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்! அதனால்தான் இவ்வாறு செய்திகள் வந்துள்ளது!

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இதுதான் சரியான முகவரி அக்கா!

அப்படித்தான் இருக்க வேண்டும் சிவா. இல்லா விட்டால் இப்படி எழுத முடியாது. கலை சொல்வது போல இருவருமே மண்டைச் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்பாகள். இந்தக் காலா காந்திக்குக் கிடைத்த நல் நண்பர் தீரர் சத்திய மூர்த்தி. நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்தல் என்பது ஒருதலையாக இருக்க் முடியாதே.


பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by selvam1986 Tue Aug 12, 2014 2:15 pm

nice
selvam1986
selvam1986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/08/2014

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum