புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

# ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
# அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
# அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
# நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
# உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
# ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
# செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
# உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
# தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
# கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
# பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
# வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
# நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
# மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:16 am

அயர்லாந்து

* அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
* எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
* கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
* தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
* பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
* நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
* நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாராமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
* புலால் இருக்கும்போது பசி இல்லை. பசி வரும்போது புலால் இல்லை.
* பொய்யன் வீடு தீப்பறி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
* முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி சுமப்பது மேல்.
* ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
* மூடின பாலில் ஈ விழாது.
* ‘மக்களாட்சி’ என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்துச் செல்லும் வண்டியைப் போன்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:16 am

அல்பேனியா

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
* ஒழுக்கத்தைப் பறிகொடுத்துக் கிடைக்கம் இலபத்திற்கு ‘நஷ்டம்’ என்று பெயர்.
* ஒரு கையைத் தட்டினால் ஓசை எழாது.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்குப் பொருந்தும்.
* கசப்பான சொல் வெறுப்பை வளர்க்கிறது.
* கத்தும் பூனை எலியைப் பிடிக்காது.
* சிறந்த பொருளை சுருக்கமாக மனதில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழயின் தன்மை.
* பழமொழிகளைப்போல் வேறெதுவும் நினைவில் பதிவதும் நீண்ட நாள் தங்குவதும் இல்லை.
* பணத்தை இழந்தால் குறைந்த நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மட்டும் மறந்துவிடாதே!
* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:16 am

அர்மீனியா

* அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
* எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
* ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
* ஒன்றோடு ஒன்று சண்டைபோடும் நாய்கள் ஓநாய்க்கு எதிராக ஒன்றுபடுகின்றன.
* ஓர் இரகசியத்தை அறிய விரும்புகிறாயா? ஒரு குழந்தை, ஒரு பைத்தியம், ஒரு குடிகாரன், ஒரு மனைவி இவர்களிடம் கேள்.
* எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
* கள்வனிடத்திலிருந்து ஒருவன் திருடும்போது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கிறான்.
* குடுவையிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.
* சத்தியத்திற்கு மற்றொருபெயர் ‘மனசாட்சி’
* பள்ளிக்கூடத்தில் போய் முட்டுவதால் மட்டும் படிப்பு வருவதில்லை.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
* தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
* தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
* நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
* நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல். நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
* நொண்டியைவிடப் பொய்க்காலன் விரைவில் வீழ்வான்.
* நம்பிக்கை செழிப்பைத் தராது. ஆனால், தாங்கி நிற்கும்.
* யூதனைப்போல் கணக்குப் பார். சகோதரனைப்போல் ஏற்றுக்கொள்.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:17 am

அரேபியா

* பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
* தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
* பேனாவின் வழுக்கலைவிட காலின் வழுக்கல் குறைந்த அபாயமாகவே இருக்கிறது.
* நரை மயிர் மரணத்தின் கடிதம்.
* நீ சாகும்போது உன் தங்கையின் கண்ணீர் போகப்போக உலர்ந்து போகும். உன்னை இழந்தவளின் கண்ணீர் மற்றொருவனுடைய தோள்களில் ஓய்ந்து போகும். ஆனால் உன்னுடைய தாய் அவள் மரணம் அடைகின்ற நாள்வரை உனக்காகத் துக்கப்படுவாள்.
* மணிமுடி மிக கணமாக இருக்கிறது. ஒரு கிரீடத்தின் கீழே இரவிலே முத்துக்களைவிட அடிக்கடி அதிகமாகக் கண்ணீர் வழிகிறது.
* மற்றவர்கள் அனுபவத்திலிருந்து ற்கின்றனர். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் அவ்களது சொந்த அனுபவங்களிலிருந்தோ அன்றி பிறர் அனுபவங்களிலிருந்தோ கற்பதில்லை. இவர்கள் மூடர்கள்.
* எவன் அஞ்சுகிறானோ அவன் மட்டுமே உண்மையான வீரன்.
* அதிர்ஷ்டக்காரனை நைல் ந்தயில் தலை கீழாகத் தள்ளினாலும் அவனுடைய வாயில் ஒரு மீனோடு வெளிவருவான்.
* அதிர்ஷ்டசாலியான மனிதனுடைய வழியைப் பின்தொடர்க. நீ அதிர்ஷ்ட சாலி ஆவாய்.
* அழுத்தத்தினாலன்றி எண்ணெய் வெளிவராது.
* ஒரு மூடன் தன்னுடைய வாயில் தன் அறிவைப் பெற்றிருக்கிறான். ஓர் அறிஞன் தன் வாயை அறிவால் நிரப்பி வைத்திருக்கிறான்.
* அறிவைத் தேடும் ஒருவருக்கு தேவதைகள் தங்களுடைய சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
* ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
* எனக்குச் செருப்புகள் இல்லை. நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பாதங்களே இல்லாத ஒரு மனிதனைச் சந்நிக்கும் வரை.
* உங்கள் கூடாரங்களைத் தனித்தே வைத்திருங்கள். இதயங்களை ஒன்றாக கொண்டு வாருங்கள்.
* அன்போடு அன்பைத் திரும்ப வழங்கு.
* அன்புடைமையைத் தவிர அன்புடைமைக்கு வேறு ஏதாவது கைமாறு உண்டோ?
* இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
* ஒரு பொய் அறிவுள்ளதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே ஞானமாக இருக்கிறது.
* பிறப்பு மரணத்தின் தூதுவன்
* ஒன்றும் தெரியாத நிலையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்துகொண்டிருப்பவன் ‘சாதாரணமானவன்’. வழிகாட்டப்பட வேண்டிவன்.
* எல்லாம் தெரிந்த நிலையில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற புரிந்து கொண்டிருப்பவன் ‘புத்திமான்’ பின்பற்றப்பட வேண்டியவன்.
* தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
* போர்வாளே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் திறவுகோள்.
* தகுதிக்கு மீறிச்செலவு செய்கிறவன் தன் உயிரை முடித்துக் கொள்ள கயிறு திரிக்கிறான்.
* அவன் முன்பு பனையாக இருந்தான். ஆனால், இப்போது சம்மட்டியாக இருக்கிறான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:17 am

அமெரிக்கா

* ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
* உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.
* செயலே புகழ் பேசும்.
* உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
* சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன
* தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது.
* தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.
* வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.
* பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.
* ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போது தான் தெரியும்.
* ஒரு மனிதனுக்கு உணவு மற்றவனுக்கு நஞ்சு
* தள்ள முடியவில்லையென்றால் இழு; இழுக்க முடியவில்லை என்றால் வழியைவிட்டுப் போய்விடு.
* ஆபத்து இல்லை; புகழும் இல்லை.
* நம்முடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் வெறுக்கிறோம். நம்முடைய அறிவுரைப்படி நடக்கிறவரை நாம் வஞ்சிக்கிறோம்.
* அதிர்ஷ்டம் தைரியத்திற்குச் சலுகை புரிகிறது.
* ஒருவரைத் தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமை உள்ளதாகும்.
* ஒரு பறவையும் ஒரு கூண்டையும் நீ விரும்பினால், நீ முதலில் கூண்டை வாங்கு.
* மேதைத் தன்மை ஒரு பரம்பரை உரிமையன்று.
* பொதுவான விதி ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வில்கு உண்டு.
* வெறுமையான பை நேராக நிற்க முடியாது.
* ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு நேரமும் நீ அவனை பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.
* கோயிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகுதூரம்.
* இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் மரணத்தின் வாயில்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
* உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.
* உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:18 am

ஆப்பிரிக்கா

* ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
* அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
* ஒரு ஆணியின் மேலேயே உன் துணிகள் எல்லாவற்றையும் தொங்கவிடாதே!
* மனித இனத்தைத் தவிர இயற்கையின் எல்லா இனங்களிலும் பெண் இனத்தைவிட ஆண் இனம் அழகாக இருக்கிறது.
* நம் இதயம்தான் நம்மைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துச் செல்கிறது.
* அழகான பெண் அழகான தொல்லை.
* ஆற்றின் கீழே இருக்கும் பாறாங்கல்லுக்கு பாதைமேல் இருக்கும் பாறாங்கல்லின் வருத்தம் தெரியாது.
* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.
* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.
* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:18 am

இத்தாலி

* சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
* விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
* மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.
* முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.
* புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
* எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.
* உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.
* உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.
* அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
* வறுமை அழகைச் சிதைக்காது.
* அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.
* மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.
* மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.
* நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.
* உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .
* வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.
* சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.
* கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.
* குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் த்த்துவத்தின் சாவி.
* சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.
* ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?
* ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:19 am

இங்கிலாந்து

* அரசனைவிட பெண் அதிகத் தந்திரம் உள்ளவள்.
* இன்று செயல்படுங்கள். இன்று சேமியுங்கள். இன்று நல்லது செய்யுங்கள். நாளை நன்கு ஓய்வு எடுக்கலாம்.
* உலகம் ஒரு காய்ந்த மரம். சாகும் மனிதனே அதில் சாய்ந்து நிற்காதே!
* உடம்பே, நீ தேய்ந்து போ! உள்ளமே, நீ உறுதியாக இரு.
* உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இந்த மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். அந்த மூன்றுமே இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
* உன்னைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புன்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
* ஒரு யானையின் உதையை இன்னொரு யானைதான் தாங்க முடியும்.
* ஒரு பொய் ஈட்டியைவிட அதிகமான துன்பத்தைக் கொடுக்க முடியும்.
* எத்தனையோ, அநீதிகள் பழக்கத்தால் நீதிகளாகத் தோன்றுகின்றன.
* ஓநாய்க்குக் கருணை காட்டுவது ஆட்டுக் குட்டிக்குக் கொடுமை செய்வதாகும்.
* கரி சாம்பலைப் பார்த்து சிரிக்கிறது.
* கஞ்சனுடைய பணப் பெட்டியைத் திறக்கும் சாவி, சாவின் கையில் இருக்கிறது.
* இதயம் ஒரு வெள்ளாடு போன்றது. அனைக் கட்டிப்போட வேண்டும்.
* இதயம் ஒரு சிறு குழந்தை.
* ஏழ்மைப்பார்த்து சிரிப்பவன் அதனைத் தன் பக்கம் இழுக்கிறான்.
* ஓர் அழகான பெண் மகிழ்ச்சியடைந்தால் பணப்பை கண்ணீர் விடும்.
* ஒரு சங்கிலியின் வலிமை அச்சங்கிலியிலுள்ள வலிமை குறைந்த வளையத்தைப் பொறுத்தது. ஒரு குழுவின் வலிமை அதிலுள்ள வலிமையற்றவனைப் பொறுத்திருக்கிறது.
* காதல் நோய்க்கு மருத்தவன் இல்லை.
* நாக்குதான் மனிதனைக் கொல்கிறது. நாக்குதான் மனிதனைக் காப்பாற்றுகிறது.
* திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக்கொண்டு செல்கிறது.
* பணக்காரன், குழந்தை வேண்டுமென்று கேட்டால் பணம் வருகிறது. ஏழை பணம் வேண்டும் என்று கேட்டால் குழைந்தைக் கிடைக்கின்றன.
* மனித குலம் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
* பொருள் வாங்குபவனுக்கு ஆயிரம் கண்கள் தேவை விற்பவனுக்கோ ஒரு கண் போதும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக