ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Poll_c10 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Poll_m10 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

+2
சாந்தன்
ரபீக்
6 posters

Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by ரபீக் Thu Oct 21, 2010 9:55 am

ஒரேயொரு குறை எனக்கிருக்கிறது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான். அந்த ஒற்றுமை மாத்திரம் வந்து நிலைத்து விட்டால்; அ.தி.மு.க. அல்ல - ஆயிரம் அ.தி.மு.க-க்கள் வந்தாலும், நம்மை யாரும் வெல்ல முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

மாவட்ட வாரியாக திமுகவினருடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. கலைஞர் அரங்கில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில், முதலில் ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியைத் தவிர, அன்பழகன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தனர்.

அப்போது கருணாநிதி பேசுகையில்,

தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகளைப் பற்றியெல்லாம் இங்கே வியந்து போற்றினீர்கள்; கழகத் தலைவர்களுடைய ஆற்றலைப் பாராட்டினீர்கள். இவற்றையெல்லாம் வியந்து போற்றவும், பாராட்டவும் உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டுமென்ற ஒரு சூழ்நிலை இருக்க வேண்டுமேயானால், எங்களுக்காகக் கூட அல்ல; எனக்காகக் கூட அல்ல; தலைமைக் கழகத்தில் இருக்கின்ற மற்றவர்களுக்காகக் கூட அல்ல; உங்களுக்காகவே நீங்கள் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம். எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம், குற்றம் சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல; அண்ணா காலத்திலேயிருந்து நாம் பின்பற்றி வருகிறோம்.

நான் பல நேரங்களில் சொல்லியிருக்கின்றேன் - இப்போதும் சொல்ல விரும்புகின்றேன். அப்போது நடந்த கதையைச் சொல்கிறேன். ஒரு பொதுக் குழுவில் அண்ணா மீதே ஒருவர் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அண்ணா எழுந்து, "பொதுச் செயலாளராகிய என் மீது குற்றச்சாட்டு வருகிற நேரத்தில், நான் இங்கே அமர்ந்திருப்பது அழகல்ல; ஆகவே, நான் கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறேன் - தோழர் ஆசைத்தம்பி இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து தீர்ப்பு அளிக்கட்டும்'' என்று சொல்லிவிட்டு; யாருடைய மறுப்பையோ, பதிலையோ எதிர்பாராமல் கீழே இறங்கி, பொதுக் குழுவிலே மற்ற உறுப்பினர்களோடு அமர்ந்து கொண்டார்.

பிறகு அண்ணாவின் மீது சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டிற்கான இருபுறத்து வாதங்களையும் ஆசைத்தம்பி கேட்ட பின்பு, தீர்ப்புக் கூறினார் இறுதியாக. "இதிலே அண்ணா மீது எந்தக் குற்றமும் இல்லை - இந்தப் புகாரைச் சொன்னவர்கள்தான் குற்றவாளிகள்'' என்று ஆசைத்தம்பி தீர்ப்பளித்தார்.

இது நம்முடைய இயக்கம். அண்ணா காலத்திலேயிருந்து இதுவரையிலே கடைப்பிடித்து வருகின்ற ஜனநாயகம். அப்படிப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்கி அதைத் தருவாக்கி, நிழல் தருகின்ற ஒரு இயக்கமாக, திராவிட இயக்கமாக மலர்ந்திருக்கின்ற இந்த இயக்கத்திற்கு சோதனைகள் எத்தனையோ வந்ததுண்டு. அந்தச் சோதனைகளையெல்லாம் தாண்டி, வெற்றிகளை இன்றைக்குக் குவித்து வருகிறது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தமிழகத்திலே மாத்திரமல்லாமல், வேறு மாநிலங்களிலும் பரவ வேண்டும்; நம்முடைய கொள்கைகளைப் பிற மாநிலத்தாரும் உணர வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலே நாம் ஈடுபட ஆயத்தம் செய்து வருகின்ற இந்த நேரத்திலே, தமிழகத்திலே தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் - வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி பெற வேண்டியது மிகமிக முக்கியமானது என்பதை மறந்து விடக்கூடாது.

அப்படிப் பெறுகின்ற வெற்றிக்கு இன்றைக்குத் தடை போட வேண்டும் என்று சில கட்சிகள் - குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலே இருக்கின்ற அ.தி.மு.க. பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் இடம் தரக்கூடாது. இங்கே சிலர் சொன்னார்கள். தலைவரிடத்திலே மனுக்கள் கொடுத்தோம் - கவனிக்கப்படவில்லை; அமைச்சரிடத்திலே புகார்கள் சொன்னோம் - அவை கவனிக்கப்படவில்லை; அமைச்சரிடத்திலே போய் மாவட்டத்தில் நடைபெறுகின்ற சில காரியங்களைப் பற்றிச் சொன்னோம்; ஆனால், அவர் அதை அலட்சியப்படுத்தி விட்டார் என்று;

இப்படி அமைச்சர் மீது, தலைவர் மீது - நம் பிரதிநிதிகள் மீது சொல்லப்பட்ட குறைகளே தவிர, வேறு பெரும் குறைகள் எதுவுமில்லை. கொள்கைக்குப் புறம்பாக நடந்து கொண்டார் என்றோ, லட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டார் என்றோ யாரையும் குறை சொல்லி - இங்கே யாரும் பேசவில்லை.

ஒரேயொரு குறை எனக்கிருக்கிறது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான். அந்த ஒற்றுமை மாத்திரம் வந்து நிலைத்து விட்டால்; அ.தி.மு.க. அல்ல - ஆயிரம் அ.தி.மு.க-க்கள் வந்தாலும், நம்மை யாரும் வெல்ல முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

நேற்றைக்கு முன்தினம் மதுரை மாநகரத்தில் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டியதாக, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டு, தன்னுடைய ஆதரவுப் பத்திரிகைகளை அதைப் பற்றி எழுதச் சொல்லி, படங்கள் போட்டு - உலகத்திலே ஒரு பெரிய அதிசயம்போல; ஒரு கம்யூனிஸ்டு பத்திரிகையில், முதல் பக்கத்தில், அரை பக்கம் அளவிற்கு மதுரையிலே நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டப் படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால்; இதைவிட காக்கா பிடிக்கின்ற காரியம் வேறு எது இருக்கும் என்று கருதுகிறீர்கள்? எந்த கம்யூனிஸ்டு? கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு - அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பழங்குடி மக்கள், ஆதி திராவிட மக்களுடைய நிலங்களை எல்லாம் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்; அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த கம்யூனிஸ்டு தலைவர்கள் என்னிடத்திலே கொண்டு வந்து மனு கொடுத்தார்களோ, அந்தத் தலைவர்கள் நடத்துகின்ற பத்திரிகையில், அவ்வளவு பெரிய விளம்பரத்தைப் போட்டு, ஏதோ இந்தியாவிலேயே பெரிய கட்சி அ.தி.மு.க.தான் என்பதைப்போலவும், அதனுடைய நிழலிலே தாங்கள் இருப்பதைப் போலவும் காட்டிக்கொள்கிறார்கள் என்றால்; இதிலே ஏமாறப்போகிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் ஏமாறுவார்கள்.

நம்மை வெற்றி பெறுவதற்கு - நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் வலிமையோடு இருந்தால், நாம் எந்தக் கணத்திலும் நிதானம் இழக்காமல், நேர்மையான முறையில், அண்ணா வழியில் அயராது உழைத்து, தொடர்ந்து நம்முடைய தொண்டினை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆற்றிக் கொண்டிருந்தால், யாராலும் நம்மை அசைக்க முடியாது.

ஆகவே, காலையிலேயிருந்து இதுவரை நடைபெற்ற விவாதங்களுக்கு நான் மேலும் விரிவான பதில்களைச் சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் இங்கே வந்து பேசிய பல விஷயங்களை - அதிலே உங்களில் பலருக்கு மாறுபட்ட விஷயங்கள் இருந்தால், ஒருவரைக் குறை கூறிப் பேசியிருந்தால், அவற்றையெல்லாம் இந்த இடத்திலேயே மறந்துவிட்டு; வீட்டுக்குச் சென்றதும், நண்பர்களாக, தோழர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உடன்பிறப்புகளாக நீங்களெல்லாம் சேர்ந்திருக்க வேண்டும் - மற்றவற்றை இங்கேயே மறந்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கூட்டம் முடிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.தங்கவேலன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ரூ.616 கோடி செலவில் காவிரி படுகையில் இருந்து தண்ணீர் கொண்டுபோய் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியே இல்லாமல் முதல்வர் கருணாநிதி செய்துள்ளார். ஆகவே அந்த மகாராஜனுக்குத்தான் ஓட்டு என்று மக்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கூறினோம்.

இது மட்டும் அல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.156 கோடி பயிர் இன்சூரன்சு கொடுக்கப்பட்டது. இது விவசாயிகளிடம் பிரமாண்டமாக பேசப்படுகிறது. தலைவர் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்த திட்டங்கள் எல்லாம் தொடரும் என்றும், இல்லாவிட்டால் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் கிராம மக்கள் பேசுகிறார்கள் என்று கூட்டத்தில் எடுத்துக்கூறினோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்று கலைஞரிடம் எடுத்துக்கூறினோம். தி.மு.க. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லவேண்டும் என்றும், எல்லாரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுங்கள் என்றும் எங்களுக்கு தலைவர் கலைஞர் அறிவுரை வழங்கினார்.

எங்களுக்குள் கோஷ்டி பூசல் இருந்தால் அதை எல்லாம் மறந்து பணியாற்ற வேண்டும் என்றும் தலைவர் கேட்டுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. கடந்த தேர்தலைப்போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்கவேண்டும் என்றும் தலைவர் எங்களிடம் எடுத்துக்கூறியுள்ளார். தலைவரின் அறிவுரை எங்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக உள்ளது. இந்த புத்துணர்ச்சியுடன் நாங்கள் தேர்தல் களத்தில் இறங்குவோம் என்றார்.

அடுத்து கோவை, நெல்லை

22-ந் தேதி காலை 10 மணிக்கு கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டத்துக்கும், மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கும், நவம்பர் மாதம் 1-ந் தேதி தென் சென்னை மாவட்டத்திற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by சாந்தன் Thu Oct 21, 2010 10:01 am

அண்ணா காலத்தில் வாரிசு அரசியல் இல்லை ...
இப்போது அரசியலே வாரிசாகி விட்டது ....

எல்லாம் கால கொடுமை ....
பள்ளிகூட பிள்ளைங்களுக்கு சைக்கிள் கொடுத்தீர்கள் சரி ...
இப்போ பூசாரிகளுக்கு எதுக்கப்பா சைக்கிள் ... அவங்களுக்கு கோவிலில் வருகிற பணத்தை மூட்டை போட்டு தூக்கி போகவா ????

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 10:12 am

என்ன தலைவர் இவ்வளவு உறுதியா இருகார் ... முன்பே தேர்தல் அதிகாரி_______________________?


முதல்வர் ஒற்றுமையை பற்றி எப்பொழுது பேசினார்?

இது தான் நம்பிக்கை என்பதா? அருமை அருமை இந்த
தள்ளாத வயதிலும் தமிழ் மக்களை இன்னும் பல
வருடங்களுக்கு ஏய்பன் என்பது!!!!!!
தமிழ் மொழி விரைவில் மு.க மொழி என்று பெயர் மாற்றம் செய்ய படும் .......உனக்கு கொட நாடு எனக்கு
தமிழ் (மு.க ) நாடு ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by அருண் Thu Oct 21, 2010 11:05 am

அ.தி.மு.க. அல்ல - ஆயிரம் அ.தி.மு.க-க்கள் வந்தாலும், நம்மை யாரும் வெல்ல முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி ..
எம்ஜியார் இருந்தப்ப 10 முறை தோற்றது ஞாபகம் இருக்கா..... ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by balakarthik Thu Oct 21, 2010 11:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம்  1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by சாந்தன் Thu Oct 21, 2010 11:32 am

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எதுக்கு இப்ப கை தட்டல் பாலா ... புரியலியே அநியாயம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by balakarthik Thu Oct 21, 2010 11:43 am

சாந்தன் wrote:
balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எதுக்கு இப்ப கை தட்டல் பாலா ... புரியலியே அநியாயம்

புரிய கூடாது அதுதான் அரசியல்


ஈகரை தமிழ் களஞ்சியம்  1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty ஆயிரம் அ.தி.மு.க.,க்கள் வந்தாலும் வெல்ல முடியாது: முதல்வர்

Post by பூஜிதா Thu Oct 21, 2010 5:58 pm

""உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டால், ஆயிரம் அ.தி.மு.க.,க்கள் வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இங்கு விவாதிக்கப்பட்ட கருத்துக்களை நீங்களே சிந்தித்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவீர்கள் என நம்புகிறேன். இந்த ஆட்சியின் சாதனைகளையெல்லாம் வியந்து போற்றினீர்கள். கட்சித் தலைவர்களின் ஆற்றலை பாராட்டினீர்கள். ஜனநாயகத்தில் யாரும், எந்த பொருள் பற்றியும் பேசலாம். எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம், குற்றம் சாட்டலாம். அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று, நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே பின்பற்றி வருகிறோம்.



அப்படிப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்கிய இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு. அதையெல்லாம் தாண்டி, வெற்றிகளை குவித்து வருகிறது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் தமிழகத்திலே மாத்திரமல்ல, வேறு மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். நாம் ஆட்சியில் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில், சட்டசபை தேர்தலிலே வெற்றி பெற வேண்டியது மிக, மிக முக்கியம்.



நமது வெற்றிக்கு தடை போட அ.தி.மு.க., பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதற்கு இடம் தரக் கூடாது. இங்கே சிலர், தலைவரிடத்திலே மனுக்கள் கொடுத்தோம். அமைச்சர்களிடத்திலே புகார்கள் சொன்னோம் அவை கவனிக்கப்படவில்லை. அமைச்சரிடத்திலே, மாவட்டத்தில் நடைபெறும் சில காரியங்களைப் பற்றி சொன்னோம். அதை அவர் அலட்சியப்படுத்தி விட்டார் என குறைகளைச் சொன்னார்கள். அதைத் தவிர வேறு பெரிய குறை இல்லை. ஒரேயொரு குறை எனக்கிருக்கிறது.



அது உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான். அந்த ஒற்றுமை வந்து விட்டால், ஒரு அ.தி.மு.க., அல்ல; ஆயிரம் அ.தி. மு.க.,க்கள் வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது. இங்கே பேசிய உங்களில் மாறுபட்ட விஷயங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் இங்கேயே மறந்து, வீட்டுக்கு சென்றதும், நண்பர்களாக, தோழர்களாக, தி.மு. க.,வினராக சேர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by பூஜிதா Thu Oct 21, 2010 6:06 pm

ஆயிரம் அ.தி.மு.க.,க்கள் வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஒரு தே.மு.தி.க போதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by சாந்தன் Thu Oct 21, 2010 6:09 pm

இது காலையிலேயே பதியப்பட்டு விட்டது சகோதரி ....
இருந்தாலும் நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி Empty Re: 1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி
» "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
» 1000 பிரபாகரன் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் விடாது - இளங்கோவன்
» ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum