புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_m10இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 21 Oct 2010 - 10:24

உடம்பில் மச்சம் போல், ஊழலும் நம்முடன் ஒன்றிக் கலந்துவிட்டதால், ஊழல் புகார்கள் குறித்த எந்த செய்தியும் நம்மை கலவரப்படுத்துவதே இல்லை. ஆனாலும், சமீபத்தில் படித்த ஒரு ஆய்வறிக்கை என்னை அதிரச் செய்தது.

அமெரிக்காவின் 'குளோபல் பைனான்சியல் இன்டகரிட்டி' என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி எட்டாண்டுகளில் (2000 முதல் 2008 வரை) 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 6.5 லட்சம் கோடி) இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெரிந்து இவ்வளவு. தெரியாமல் எவ்வளவோ? இந்த அறிக்கையின் முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அப்படி வெளிவரும் போது, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் வாசிக்கப்பட்டால் கூட நாம் அவர்களை புறக்கணிக்கப் போகிறோமா என்ன? 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....' என்று சுரணை துளியும் இன்றி அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பி விடுவோம்.

இந்தியர்களில் மூன்றில் ஒருவர் ஊழல்வாதியாய் இருக்கும் போது, சூடு, சுரணையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அல்வா இல்லாத திருநெல்வேலியா என்பது போல் ஊழல் இல்லாத அரசியல்வாதியா என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அரசியலில் சுத்தம், சுத்தமாய் இல்லை!!! அரசியல் குறித்து விவாதம் செய்ய முனைந்தாலே, 'நாம பேசி என்னாகப் போகுது? வேற ஏதாச்சும் பேசு....' என்று அலட்சியப்படுத்தும் நிலை ஏன் வந்தது? ஊழலை ஒரு பொருட்டாக நாம் ஏன் மதிப்பதே இல்லை?

ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒரு மத்திய அமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.88 லட்சம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது. நான் அதிர்ந்தே போனேன். அவரின் சொத்து மதிப்பு 88 கோடி என்று சொன்னாலாவது நம்பலாம். 88 லட்சமெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்...? அதிகாரத்தில் இருப்பவர்கள் தெரிந்தே ஏமாற்றுகிறார்கள்! நாமும் தெரிந்தே ஏமாறுகிறோம். சமயங்களில் எதிர்க்கட்சிகள் ஊழல் புகார் எழுப்பினால் கூட, 'உன் ஆட்சியில் தேனாறும் பாலாறுமா ஓடியது? அதிலும் ஊழல் தானே திளைத்தது?' என்ற பதில் அறிக்கை வருமே தவிர, 'என் ஆட்சியில் ஊழலே இல்லை' என்று யாரும் சொல்வதே இல்லை. நாமும் அதை கண்டு கொள்வதே இல்லை. இன்றைய தேதியில் மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருவதால், நாட்டில் விவாகரத்துகள் பெருகி விட்டன. என்ன வினோதம் பாருங்கள்....எங்கு சகிப்புத்தன்மை வேண்டுமோ அங்கு நம்மிடம் அது இருப்பதே இல்லை. எங்கு இருக்கக் கூடாதோ, அங்கு நிரம்பவே இருக்கிறது!

போகிற போக்கைப் பார்த்தால் லஞ்சம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கி, பொதுமக்கள் ஒவ்வொருவரையும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் எதற்காக கொடுத்தார்கள் என்பதைப் பதிவு செய்யச் சொன்னால், தேசத்தின் மொத்த லஞ்ச லாவண்ய கணக்குகள் துல்லியமாய் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

ஊழல் நாடுகளின் பட்டியலில் இங்தியா 84 வது இடத்தில் இருக்கிறது. அது விரைவில் முதல் ஐம்பது இடங்களுக்குள் வர வேண்டும் என்று இந்திய அரசியல்வாதிகள் தீவிரமாய் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் தீவிரவாதிகள் நாட்டை அழிக்க மூளையை கசக்கத் தேவையில்லை; அப்பாவி மக்களை கொன்றழிக்கத் தேவையில்லை. இந்த இரண்டையும் நம் அரசியல்வாதிகள் கச்சிதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் - '2001-ல் தீவிரவாதிகள் திட்டமிட்டபடி நம் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்திருந்தால், பாதி நாடாளுமன்றம் காணாமல் போயிருக்கும். நம்ம நாடும் கொஞ்சம் சுத்தமா ஆயிருக்கும்....பாவிப் பயலுக...பொழைச்சுட்டானுங்க!'. விரக்தியின் விளிம்பில் வெளிப்பட்ட ஒரு சாதாரணனின் இந்த எண்ணம் அபாயகரமானது. (இந்த கருத்துக்கு நான் உடன்படவில்லை என்பது வேறு விஷயம்)

இந்தியாவின் சாபக்கேடே எல்லா மட்டத்திலும் ஊழல் வேரூன்றி இருப்பது தான். சரி....இதற்குத் தீர்வு தான் என்ன? ஒரு அரசாங்கத்தின் எல்லா அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்வதை எளிதில் கட்டுப்படுத்தலாம். உறுதியான தலைமையும், வெளிப்படையான நிர்வாகமும் இருந்தால். தலை சரியாய் இருந்தால், கிளை, இலையெல்லாம் ஏன் ஆடப் போகிறது? என்ன தான் முயன்றாலும், தலைமை சரியில்லை என்றால், ஊழலை கட்டுப்படுத்தவே முடியாது. அடுத்து, தேர்தல் முறை உடனடியாய் மாற்றி அமைக்கப் பட வேண்டும். கோடி கோடியாய் செலவழித்தால் தான் வெற்றி என்னும் போது, யோக்கியன் எப்படி வெற்றி பெறுவான்? அவனிடம் எப்படி நேர்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியும்? தேர்தலில் கோடிகளை கொட்டாமல் வெற்றி கிடைக்கும் வரை, நல்லவன் நிற்கப் போவதில்லை. நல்லவன் நிற்காதவரை நிலைமை மாறப்போவதில்லை. மூன்றாவது, சமூக விமர்சகர் ஞாநி சொன்னது போல், ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் 49ஓ வாக்குச்சீட்டில் இடம் பெற வேண்டும். ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட, 49ஓவிற்கு அதிக வாக்குகள் பதிவானால், அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்துச் செய்யப்படும். பழைய வேட்பாளர்கள் யாரும் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது. கட்சிகள் அனைத்திற்கும் தரமான , நேர்மையான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அதிகாரத்தில் இருப்பவர்களை 'ஏன்' என்று கேள்வி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி இளைஞர்களிடம் சொல்கிறார். நல்ல விஷயம் தான். ஆனால் யதார்த்தம் என்ன...?அதிகாரத்தில் இருப்பவர்கள் கேட்கக் கூடிய நிலையிலா இருக்கிறார்கள்? 'ஏன்' என்று கேள்வி கேட்டவர்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? சுரங்கத் தொழில், மின் வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 11 பேர் இந்த ஆண்டில் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கடுமையாய் மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர். கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் ஊழலை ஆதாரத்துடன் எதிர்த்து போராடிய வைத்தியலிங்கம் பாலசுப்ரமணியம் தமிழகத்தின் நாயகன்பேட்டையில் பிணமாகத் தான் மீட்கப்பட்டார். கடந்த வருடம் மழையால் கடுமையாய் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கான நிவாரணத் தொகையை அதிகாரிகளே மொத்தமாய் தின்று விட்டனர். இதை தட்டிக் கேட்ட பாலசுப்ரமணியம் தட்டப்பட்டிருக்கிறார். ஊழலை எதிர்த்து போராடுபவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் ஏன் இன்னும் முழுமையாய் அமல்படுத்தப்படவே இல்லை.

சென்ற ஆண்டு தில்லி உயர் நீதி மன்றம் 65 வயதுடைய மகேந்தர குமாருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. யார் இந்த மகேந்தர குமார்? தன் உயர் அதிகாரிகளின் ஊழலை எதிர்த்து ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்தவர். இந்த வழக்கும் வழக்கம் போல் பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்தது. இறுதியில் நீதி வென்று துணிச்சலானவர் என்று பாராட்டப் பட்டாலும், இவர் இழந்ததென்ன...? பதவி உயர்வுகள், வாழ்க்கை, உடல் நலம், நிம்மதி, இப்படி எக்கச்சக்கம்...! இத்தனை இழந்த மகேந்தர குமார் தன் மகனுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? ' நேர்மையாய் இருக்காதே! தொல்லை தவிர உனக்கு வேறெதுவும் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவில் நேர்மையாளன் தூற்றப்படுவான், குற்றவாளி போற்றப்படுவான்'!

நேர்மைக்காய் போராடுபவன் சமூகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் துரத்தியடிக்கப்படும் போது, விரக்தி தவிர அவனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?


-அருண் சிதம்பரம்



இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu 21 Oct 2010 - 10:58

காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்: கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்?

காங்கிரஸ் என்றாலே நாற்பது வருடங்களாக ஊழல் என்றுதான் பொருள். காமராஜர், கக்கன் எல்லாம் காங்கிரசைத் துறந்தபின் கட்சியில் ஆதிக்கம் செலுத்துபவர்களில் ஒருவன் கூட மக்களுக்காக தொண்டாற்றும் நாணயஸ்தன் இல்லை. கொள்ளையர்களின் கூடாரமே அந்தக் கட்சி.

ஓட்டுக்கு பணம் என்பதை அறிமுகம் ---அறிஞ்சர்
அதை நடைமுமுறைக்கு கொண்டுவந்தவர் --
மலையாள - தமிழக முதல்வர்
அதை இன்று முதல் கடைப்டிபவர்கள் -- நமது திராவிட ''
கண்மணிகள் ....

வாழ்க திராவிடம் ...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக