ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

+6
sathyan
கோவை ராம்
அருண்
balakarthik
ரபீக்
பூஜிதா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர் - Page 2 Empty அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

Post by பூஜிதா Tue 19 Oct 2010 - 13:03

First topic message reminder :

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மிரட்டல்களையும் மீறி லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சித்திரைத் திருவிழா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில், திரண்ட தொண்டர்களால் மதுரையே குலுங்கியது.

கோவை, திருச்சியை தொடர்ந்து, மதுரையில் கடந்த மாதம் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. பல காரணங்களால் ஆர்ப்பாட்ட தேதி தள்ளிபோனது. அக்., 18ல்(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜெயலலிதா மதுரை வருவதால், தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். பல லட்சம் பேர் குவியும் வகையில், மதுரை ரிங் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உழைத்தனர்.



"மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது, மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்' என, ஜெயலலிதாவுக்கு தொடர் மிரட்டல்கள் விடப்பட்டன. அதை பொருட்படுத்தாமல், ஜெயலலிதா சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், மதுரை வந்தார்.அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்கள் பிரசாதம் கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் முதல் மேடை வரை சீருடை அணிந்த மாணவரணியினர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.விமான நிலையம் நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை போலீசார் தடுத்ததால், தொண்டர்கள் மறியல் செய்ய முயன்றனர்.



அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க., பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், "இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரது காருக்கு பின்னால் தான் நாம் செல்ல வேண்டும்' என சமரசம் செய்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.தொண்டர்களால் நிரம்பி வழிந்த ரிங் ரோட்டில், கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு, மாலை 4.18 மணிக்கு மேடைக்கு ஜெயலலிதா வந்தார். மாலை 4.44 மணிக்கு பேச்சை துவக்கி 6.39க்கு முடித்தார்.பேச்சின் பெரும்பகுதி மத்தியமைச்சர் மு.க.அழகிரியை தாக்குவதிலேயே இருந்தது. பின், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசினார்.



"இந்த ஆட்சியில் எனக்கும் பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்றார்.பெரியாறு பிரச்னையில் தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், தொடர் மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு, ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டு கடத்தல், சினிமா, கேபிள், "டிவி' துறைகளில் குடும்ப ஆதிக்கம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவேசமாக எடுத்துரைத்தார்.ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்து, திருச்சி கூட்டம் குறித்து சரியாக செய்தி வெளியிடவில்லை என ஊடகங்களையும் சாட, ஜெயலலிதா தவறவில்லை.



இந்நிலையில், கூட்டம் நடந்த ரிங் ரோட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. மேடை அருகே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், அவரது பேச்சை கவனித்தனர். மொத்தத்தில் சித்திரைத் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்த மதுரை மலைத்தது.போலீஸ் பாதுகாப்பு: ஜெ.,வுக்கு தொடர் மிரட்டல் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், ஏழு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



தேர்தல் வரட்டும்; மக்கள் முடிவு அப்போது தெரியும்! : அ.தி.மு.க., ஆட்சி அமைய "கவுன்ட் டவுண்' துவங்கியது : ஜெயலலிதா பேசியதாவது:வைகை கரைக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, எனக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை அழைப்பிதழாக ஏற்று நீதிகேட்க வந்துள்ளீர்கள். தெற்கு தமிழகத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் மதுரை, பாண்டிய மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் சங்கங்கள் தோன்றிய மதுரை. மகாலை உருவாக்கிய திருமலை நாயக்கர் ஆட்சி செத மதுரை. சிலப்பதிகாரத்தின் மையமாக இருந்த மதுரை. குற்றமற்ற கணவனுக்கு தண்டனை கொடுத்ததால், கற்புக்கரசி கண்ணகியால் எரிக்கப்பட்ட மதுரை. வீர பெண்மணி ராணிமங்கம்மாள் ஆட்சி செத மதுரை. வன்முறை, சுயநலம் உள்ள மதுரையாக இருப்பதை எப்படியும் எதிர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உட்பட நானும் தமிழகத்தில் ஆட்சி செத போது, தமிழ்நாடு எப்படி இருந்தது?



கருணாநிதி தந்திரம்: "தம்பி தலைமை ஏற்கவா' என்று நெடுஞ்செழியனை அண்ணாதுரை அழைத்தார். "நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும்' என எம்.ஜி.ஆரை அண்ணாதுரை அழைத்தார். கருணாநிதியை அழைக்கவில்லை. ஆனால் தமிழக அரசியலில் போதாத காலம், கருணாநிதியை தந்திரங்கள் வென்றன. மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவது, கோரிப்பாளையம் பள்ளிவாசல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவை மதுரை என்றாலே நம் கண் முன் நிற்கும். ஆனால் இப்போது வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளைதான் மனக்கண் முன் நிற்கின்றன.



இரு அரசுகள்: ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு. அழகிரி தலைவராகவும், "பொட்டு' சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.



பயம் இல்லை: இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர வேண்டுமா என மக்களாகிய நீங்கள் முடிவு செய வேண்டும். எனக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றதும், தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். ஜெயா "டிவி' எனது பேச்சை நேரடியாக ஒளிபரப்புகிறது. யாரோ ஒருவர் இதைகண்டு அஞ்சுகிறார். இவர்கள் மிரட்டலை பார்த்து நான் பயப்படவில்லை.அரசியலுக்கு வந்தது முதல் பல கொலை மிரட்டலை பார்த்துவிட்டேன். பொ வழக்குகள் போடப்பட்டன. கொலை முயற்சி நடந்தது. யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நான் முதல்வராக இருந்தபோது, மின்வெட்டு கிடையாது. உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலத்திற்கு விற்றதன் மூலம் வருவா கிடைத்தது. அனைத்து அனல்மின் நிலையங்களும் பராமரிக்கப்பட்டன. தரமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. தற்போது அனல்மின்நிலையம் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகள் கருணாநிதி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளன. மதுரையில் ஐ.டி. பூங்கா பணிகள் தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. அழகிரி பெயரில் மாட்டுத்தாவணி அருகே பல கோடி ரூபா செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.



கூட்டத்தை தடுத்த போலீஸ்: கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன. என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை "ஆஹா... ஓஹோ...' என எழுதச்சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும். கருணாநிதி குடும்பத்திற்கு ஆறு சினிமா கம்பெனிகள் உள்ளன. சென்ற ஜனவரி முதல் வெளியான 63 படங்களில் 34 படங்கள் இவர்கள் தயாரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றவர்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட தயாரிப்பாளர்களை அனுமதிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.



நல்ல தீர்ப்பு: மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தை ஜெயா "டிவி' நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆனால் பல இடங்களில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகின்றனர். என்னை அரசியலில் இருந்து விரட்டவும், ஒழித்துக் கட்டவும் முயற்சி நடக்கிறது. நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா? எனது ஆட்சியில் லாட்டரி விற்க தடைவிதித்தேன். இன்றும் அந்த தடை உள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்கப்படுகிறது. வாகனங்களில் கடத்துகிறார்கள்.



இலவச பம்ப் செட்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துயரங்களை எடுத்து கூறினேன். மறுநாளே இலவச பம்புசெட் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். 19 லட்சம் பேருக்கு இதை வழங்க 190 ஆண்டுகளாகும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 75 ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில், ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். நானூறு சதுரடி கொண்ட வீட்டிற்கு 3 லட்சம் ரூபா செலவாகும்.



ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தடம் மாறிவிட்டது. இந்தியாவே வெட்கி தலைகுனியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் ரூபாக்கு மேல் கொடுக்கலாம். தமிழக நலனுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த சக்தி உங்களிடம் உள்ளது. அனைத்து நதிகளும் இறுதியில் கடலை நோக்கி செல்கிறது. ஒரே ஒரு நதி கடலில் கலக்காமல் கண்மாயில் முடிகிறது. அது வைகை. சிவனுக்கு ஆலகால விஷம் கொடுத்ததால், கடலில் கலக்கக்கூடாது என நதிக்கு ரோஷம் வந்தது. இப்படி நதிக்கு கூட ரோஷம், வீரமுள்ள மண் மதுரை. அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான "கவுன்டவுண்' முன்பே துவங்கிவிட்டது.மதுரைக்கு பூரண விடுதலை கிடைக்கும். தீய சக்திகள் அப்புறப்படுத்தப்படுவர். தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. பணத்தை கொடுத்தால், வாக்காளர்கள் அடிபணிந்து ஓட்டுப்போடுவர் என்ற நம்பிக்கையில் தி.மு.க., உள்ளது.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர் - Page 2 Empty Re: அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

Post by sathyan Tue 19 Oct 2010 - 14:32

உதயசுதா wrote:இந்தம்மா புள்ளி விவரமெல்லாம் நல்லாத்தான் சொல்லுறாங்க.
ஆரம்பம் என்னவோ நல்லாத்தான் இருக்கு மேடம்.
ஆனா உங்க கிட்ட பினிசிங் சரி இல்லையே

இந்த டைம் பினிஷிங்கும் நல்லா இருக்கும் ,பார்ப்போம்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர் - Page 2 Empty Re: அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

Post by உமா Tue 19 Oct 2010 - 14:38

sathyan wrote:மதுரைக்கு மட்டும் அல்ல .தமிழ் நாட்டிற்கே விடுவு காலம் பிறந்த மாதிரி இருக்கு கலக்குங்க

நிச்சயம் பிறக்கும் ..............
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர் - Page 2 Empty Re: அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
»  அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
» ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum