Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நான் இளங்கோ ஆனது எப்படி?
4 posters
Page 1 of 1
"நான் இளங்கோ ஆனது எப்படி?
"நான் முதல் தலைமுறை பட்டதாரி. என் அம்மா தன் தாய்மாமாவையே மணந்தார்.
நெருங்கிய உறவுக்குள் நடந்த திருமணத்தின் பாதிப்பால் எனக்குப் பிறக்கும்போதே பார்வை இல்லை. 10-ம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்த நான், ப்ளஸ் 1 முதல் பொதுப் பள்ளியில் சேர்ந்து மற்ற மாணவர்களுடன் போட்டி போடத் தொடங்கினேன். லயோலாவில் பி.ஏ., ஆங்கிலத்தில் கோல்டு மெடல். எம்.ஏ-வில் ஒலியியல் பாடத்தில் மீண்டும் தங்கம். மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எவ்வாறு கற்றுத் தருவது என்று ஆசிரியர்களுக்கு உணர்த்தும் வகையில் நான்செய்த ஆராய்ச்சிக் கட்டுரை இன்றும் பேசப்படுகிறது. பாராட்டு... பாராட்டு... இதுவே வாழ்வில் என்னைத் தாங்கிப் பிடிக்கும் தாரக மந்திரம்!"- பிறவியிலேயே பார்வை சவால் உள்ளவராகப் பிறந்த இளங்கோ, இன்று இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிக£ட்டி!
"கல்லூரி விரிவுரையாளருக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தனியார் கல்லூரி ஒன்றின் ஆங்கி லத் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளர் பணி. 'எஃபெக்டிவ் கம்யூனிகேஷன்' என்ற தலைப்பிலான ஆங்கிலப் பாடத்துக்குவார இறுதி நாட்களில் சென்று வகுப்பு எடுப் பேன். மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்த துணைவேந்தர், அந்தப் பாடத்தை எம்.ஏ-வில் முதன்மைப் பாடமாகச் சேர்த்தார். இன்றும் அந்தப் பாடம் நடந்து வருவதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சி. பல நிறுவனங்களில் இருந்தும் பணிபுரிய அழைப்பு வந்தது. கொஞ்சம் யோசித்து நானே 'ஏஸ் பனேசியா சாஃப்ட் ஸ்கில்ஸ்' என்று ஒரு நிறுவனம் தொடங்கி னேன். வாழ்வியல் திறன்களை மேம்படுத் துதல், இலக்கை நிர்ணயித்தல், ஆளுமைத் திறன் வளர்த்தல் போன்ற துறைகளில் தமிழகம் தாண்டியும் பல்வேறு நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.
இதில் முக்கியமானது ஆங்கிலம் கற்றுத் தருதல். உலகிலேயே மிக எளிமையாக கற்றுக்கொள்ளக்கூடிய மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. 'ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி' என்ற பெயரில், இன்று வணிக நோக்கோடு செயல்படும் பல நிறுவனங்கள் மாணவர்களின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல்இயங்கு கின்றன. 'ஓவர் நைட்டில் ஒபாமாவிடம் பேசலாம்!', 'காலையில் சேர்த்தால் மாலையே பில்கேட்ஸுடன் டின்னர் சாப்பிடலாம்' என உசுப்பேற்றும் விளம்பரங்களை நான் நம்புவது இல்லை. இலக்கணம் என்ற பெயரில்மாண வர்களை மிரள வைக்கக் கூடாது என்பது என் பாலிசி. தவறோ, சரியோ முதலில் அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்வேன். தவறாகவே இருந்தாலும் பேசுங்கள். பேசப்பேசத்தான் தெளிவு வரும். என் தன்னம்பிக்கையும், நன்னம்பிக்கை அணுகுமுறையும் அவர்களிடமும்தொற்றிக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களில் என்னையும் அவர் களுக்குப் பிடித்துப் போகும். இவை எல்லாவற்றையும் விட, நான் தயாரித்த ஆங்கிலப் பாடத்திட்டம் அவர் களுக்கு ரொம்பவே பிடித்துவிடும்.
சின்ன வயதில்'நல்லா பாடுறியேடா' என்று நான் பாடுவதை நண்பர்கள் பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டுதான் இன்று என்னைப் பாடகனாக்கி இருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா உட்பட பலருடன் மேடைக் கச்சேரிகள் செய்துள்ளேன். 'எங்க அப்பா பாடலை எஸ்.பி.பி. அங்கிளுக்கு அடுத்து அருமையா பாடுறது நீங்கதான்' என்பார் யுவன். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறேன். எனக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான பாடல்களின் பின்னணி இசையை மட்டும் என் செல்போனில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பின்னணி இசையை ஒலிக்கவிட்டபடி நான் பாடும் பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 'பூவே செம்பூவே உன் வாசம் வரும்' என்று பாடிக்கொண்டே இசை மட்டும் ஒலிக்கும் இடங்களில், 'இந்தப் பாடலை எழுதியவர், பாடல் கம்போஸிங் போது நடந்த சம்பவங்கள்' எனத் தகவல்களைப் பரிமாறுவேன். சரியாக இசை முடியும் இடத்தில் 'நிழல்போல நானும்' என்று பாடலின் அடுத்த வரியை நான் பாடும்போது கைதட்டல்கள் அள்ளும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல... அடுத்தநாள் கொடுக்கவேண்டிய லெக்சர், கம்பெனியின் வரவு- செலவு விவரங்கள் என அனைத்தையும் நான் செல்போனில்தான் இயக்குகிறேன். கணிப்பொறியைக் கச்சிதமாக இயக்குவேன். விலகி நின்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆனால், உள்ளே குதித்துவிட்டால் 'இவ்வளவுதானா' என்றாகிவிடும். அடுத்து விளம் பரங்கள், டாகுமென்ட்டரி ஃபிலிம்கள் என பல வீடியோ, ஆடியோ ஆல்பங்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து வருகிறேன். கணபதி சில்க்ஸ், பிரின்ஸ் ஜுவல்லரி என நீங்கள் கேட்கும் பல விளம்பரங்களின் 'பேஸ் வாய்ஸ்' என்னுடையதுதான்.
நான் கடவுள் மறுப்பாளன். பெரியாரின் மானசீக மாணவன். இங்கு மனிதர்களும், மனிதமும் மட்டுமே உண்மை. ஒருமுறை ஒரு பிரபல தனியார் சேனல் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்களுடன் என்னையும் நடுவராக அழைத்தது. 'நீங்கள் வந்து உட்கார்ந்திருங் கள். பாடலின் முடிவில் பாட்டு எப்படி இருந்தது என்று நாங்கள் எழுதித்தருவதை மட்டும் சொல்லுங்கள் போதும்' என்றார்கள். 'அதற்கு நான் எதற்கு?' என்று வந்துவிட்டேன். இந்த தன்மான உணர்வும் தன்னம்பிக்கையும் பெரியார் தந்தது. அதுதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.
டி.வி-யில் ஒளிபரப்பான என் பேட்டியைப் பார்த்துவிட்டு, திருவண்ணாமலையில் இருந்து ஒரு அம்மா என்னைத் தொடர்புகொண் டார். 'எங்க குடும்பத்தைத் தற்கொலையில் இருந்து காப்பாத்தி இருக்கீங்க' என்று அழுதார். என் நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் ஆட்டோகிராஃப் வாங்குகின்றனர். அதற்கு நான் தகுதியானவனா, இல்லையா என்பதல்ல பிரச்னை. அந்தப் பாராட்டுகளும், அங்கீகாரமுமே என்னை மேலும் மேலும் முன்னோக்கித் தள்ளுகின்றன. பார்வை சவால் உள்ள என்னாலேயே இவ்வளவு முடிகிறது என்றால், உங்களால் முடியாதா என்ன?"
இவர் ஏன் சகோதரர் பெரியப்பா மகன் நான் ஒரு முறை சந்தித்து இவருடன் தங்கி இருந்தேன் -மணி
Re: "நான் இளங்கோ ஆனது எப்படி?
அட ... இத்தகு வித்தகரின் தம்பியா நீங்க...
இவரது தன்னம்பிக்கையை வணங்குகிறேன்..!
இவரது தன்னம்பிக்கையை வணங்குகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: "நான் இளங்கோ ஆனது எப்படி?
கலை wrote:அட ... இத்தகு வித்தகரின் தம்பியா நீங்க...
இவரது தன்னம்பிக்கையை வணங்குகிறேன்..!
Re: "நான் இளங்கோ ஆனது எப்படி?
தன்னிடம் உள்ள குறையை சற்றும் பொருட்படுத்தாமல், வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் திரு இளங்கோ அவர்களுக்கு என் வாழ்த்துகள்! மணியின் அண்ணன் என்பதில் மிக்க மகிழ்ச்சியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "நான் இளங்கோ ஆனது எப்படி?
தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராடி வெற்றிச் சிகரத்தைத் தொட்ட இளங்கோவுக்கும் அவரின் தம்யன் குறுங்கோவுக்கும் என் வாழ்த்துக்கள்.. இவர்களைப் போன்றவர்களைப் போன்றவர்களைப் படித்தால் ஈகரை வாசிப்பு இளவல்கள் இன்னும் தன்னம்பிக்கை பெறும்.
Similar topics
» நான் முத்துமாரி ஆனது எப்படி?
» ''நான் இளையராஜா ஆனது எப்படி?''
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது?
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
» ''நான் இளையராஜா ஆனது எப்படி?''
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது?
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|