ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எப்ப வருவாக ?

4 posters

Go down

இனி எப்ப வருவாக ? Empty இனி எப்ப வருவாக ?

Post by மு.வித்யாசன் Fri Oct 15, 2010 4:55 pm

முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!


எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!



இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவ கொண்டு அருக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அருத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...

வானத்து நிலாவ பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா


இனி எப்ப வருவாக ?


அழுகை
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 11:50 pm


நண்பா...உன் மதுரை தமிழ் அழகாக உள்ளது...
இதுவரை பார்த்திராத வித்யாவின் வித்யாச
கவிதை...அருமை...
இனி எப்ப வருவாக ? 154550 இனி எப்ப வருவாக ? 154550 இனி எப்ப வருவாக ? 154550

நண்பா..எழுத்தின் அளவை குறைத்து வரிசை படுத்தினால்..
இன்னும் மெருகேறும்...நண்பா...
என்றும் உன் எழுத்தின் அக்கறையோடு...நான்...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by மு.வித்யாசன் Sun Oct 17, 2010 9:56 am

ந்னறி உனது தகவலுக்கு. இது 2005 ம் ஆண்டு நான் எழுதியது. பழைய நினைவுகள் என்பதால் மாற்றம் செய்ய மனம் இல்லை.
என் மீது அக்கறை கொள்ளும் உனக்கு என் மனக்கரையில் உனது கால்தடங்களை சேகரிக்க மறப்பதில்லை. நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by balakarthik Mon Oct 25, 2010 6:48 pm

மிகவும் யதார்த்தமான கவிதை நடை அருமை வித்யாசன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இனி எப்ப வருவாக ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by மு.வித்யாசன் Mon Oct 25, 2010 7:13 pm

balakarthik wrote:மிகவும் யதார்த்தமான கவிதை நடை அருமை வித்யாசன்


நன்றி நண்பா நன்றி நன்றி
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by Aathira Mon Oct 25, 2010 9:56 pm

அழகிய மொழி நடை. நாட்டுப்புற இலக்கியங்களில் என்றும் ஒரு அழகு மிளிரும். அது சற்றும் குறைவு இல்லாமல் ஒளி வீசுகிறது உங்களின் இந்தக் கவிதையில். அத்துடன் விவசாயிகளின் வறுமைப் போராட்டம் இயல்பாக வார்த்தைகாளாக்கி கோக்கப்பட்டுள்ளன். அருமை.. தொடர வாழ்த்துக்கள்..வித்யா.. இனி எப்ப வருவாக ? 678642


இனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Tஇனி எப்ப வருவாக ? Hஇனி எப்ப வருவாக ? Iஇனி எப்ப வருவாக ? Rஇனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by மு.வித்யாசன் Mon Oct 25, 2010 10:07 pm

Aathira wrote:அழகிய மொழி நடை. நாட்டுப்புற இலக்கியங்களில் என்றும் ஒரு அழகு மிளிரும். அது சற்றும் குறைவு இல்லாமல் ஒளி வீசுகிறது உங்களின் இந்தக் கவிதையில். அத்துடன் விவசாயிகளின் வறுமைப் போராட்டம் இயல்பாக வார்த்தைகாளாக்கி கோக்கப்பட்டுள்ளன். அருமை.. தொடர வாழ்த்துக்கள்..வித்யா.. இனி எப்ப வருவாக ? 678642


நன்றி உங்கள் அழகான பாராட்டிற்கு. கவிதை எழுதுவதை விட, எழுதுபவர்களை பாராட்டுவதுதான் மிகச் சிறந்த கவிதையாகும். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்.

நன்றி
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இனி எப்ப வருவாக ? Empty Re: இனி எப்ப வருவாக ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum