Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியம் : ராமதாஸ் நிம்மதி
Page 1 of 1
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியம் : ராமதாஸ் நிம்மதி
""உடம்பை பார்த்துக்கோங்க...'' -ராமதாஸ். ""உடம்பை நான் பார்த்துக்கிறேன்... உறவை நீங்க பார்த்துக்கோங்க...'' -முதல்வர் கருணாநிதி. நீண்ட இடைவெளிக்குப் பின், கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் தான், முதல்வரும், ராமதாசும் இப்படி பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பவர் ராமதாஸ். கூட்டணியை மாற்றி அமைத்து போட்டியிடும் பார்முலாவிலும் அவர் வெற்றி கண்டவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, ராமதாசுக்கும் கடந்த லோக்சபா தேர்தல் முடிவு சரியான பாடத்தை கற்பித்தது. அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும், பா.ம.க., மண்ணைக் கவ்வியது. சொந்த காரணங்களுக்காக, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டார். அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் எதிர்பார்த்தார். அதில், ஏமாற்றம் மிஞ்சியதால், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறமுடியாமல் தவியாய் தவித்தார். கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு, தி.மு.க.,வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, எந்தக் கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்கிறதோ, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு, ஒரு பக்கம் அ.தி.மு.க., தரப்பிலும், மற்றொரு பக்கம் தி.மு.க., தரப்பிலும் திரைமறைவு பேச்சுக்களை பா.ம.க., நடத்தி வந்தது. பூரண மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை, ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்பினார். ஆனால், முதல்வரின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை.
இந்நிலையில், 27 ஜாதி சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் ராமதாஸ் அவசர, அவசரமாக கூட்டினார். அதில், "ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, 11ம் தேதிக்குள் முதல்வரை சந்தித்து வலியுறுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால், போராட்டத்தில் குதிப்போம்' என, ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை சோனியா வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன்நிறுத்தி பேசினர். இதனால், அதிருப்தியான முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு, "செக்' வைக்கும் வகையிலும், சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி கதவை திறந்து வைக்கும் வகையிலும், ராமதாசை 13ம் தேதி சந்திக்க முதல்வர் அனுமதி அளித்தார்.
மிகவும் உற்சாகத்துடன், 27 ஜாதி சங்கத் தலைவர்கள் புடைசூழ, கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். அச்சந்திப்பு தான், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பா.ம.க., ஐக்கியமாக வழிவகுத்துள்ளது. இருவரும் இணக்கமாக பேசி நீண்ட நாட்கள் ஆன நிலையில், இருவரும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே, கூட்டணி பேச்சையும் சந்தடி சாக்கில் துவக்கியுள்ளனர். "இனி, ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திப்பார்' என, முதல்வரிடம் ராமதாஸ் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பா.ம.க, நடந்துகொள்ளும் என்பதையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் தவியாய் தவித்துவந்த பா.ம.க., வுக்கு, இந்த சந்திப்பு மூலம் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாவது ஊர்ஜிதமாகியுள்ளது.
கொடுப்பதை வாங்க வேண்டியது தான்: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நுழைந்திருப்பதையடுத்து, தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., 31 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில், கடந்த தேர்தலை விட, கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என பா.ம.க., நினைக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விட, பா.ம.க.,வுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது, பா.ம.க.,வுக்கான தொகுதிகள் கண்டிப்பாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பவர் ராமதாஸ். கூட்டணியை மாற்றி அமைத்து போட்டியிடும் பார்முலாவிலும் அவர் வெற்றி கண்டவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, ராமதாசுக்கும் கடந்த லோக்சபா தேர்தல் முடிவு சரியான பாடத்தை கற்பித்தது. அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும், பா.ம.க., மண்ணைக் கவ்வியது. சொந்த காரணங்களுக்காக, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டார். அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் எதிர்பார்த்தார். அதில், ஏமாற்றம் மிஞ்சியதால், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறமுடியாமல் தவியாய் தவித்தார். கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு, தி.மு.க.,வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, எந்தக் கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்கிறதோ, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு, ஒரு பக்கம் அ.தி.மு.க., தரப்பிலும், மற்றொரு பக்கம் தி.மு.க., தரப்பிலும் திரைமறைவு பேச்சுக்களை பா.ம.க., நடத்தி வந்தது. பூரண மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை, ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்பினார். ஆனால், முதல்வரின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை.
இந்நிலையில், 27 ஜாதி சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் ராமதாஸ் அவசர, அவசரமாக கூட்டினார். அதில், "ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, 11ம் தேதிக்குள் முதல்வரை சந்தித்து வலியுறுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால், போராட்டத்தில் குதிப்போம்' என, ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை சோனியா வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன்நிறுத்தி பேசினர். இதனால், அதிருப்தியான முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு, "செக்' வைக்கும் வகையிலும், சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி கதவை திறந்து வைக்கும் வகையிலும், ராமதாசை 13ம் தேதி சந்திக்க முதல்வர் அனுமதி அளித்தார்.
மிகவும் உற்சாகத்துடன், 27 ஜாதி சங்கத் தலைவர்கள் புடைசூழ, கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். அச்சந்திப்பு தான், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பா.ம.க., ஐக்கியமாக வழிவகுத்துள்ளது. இருவரும் இணக்கமாக பேசி நீண்ட நாட்கள் ஆன நிலையில், இருவரும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே, கூட்டணி பேச்சையும் சந்தடி சாக்கில் துவக்கியுள்ளனர். "இனி, ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திப்பார்' என, முதல்வரிடம் ராமதாஸ் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பா.ம.க, நடந்துகொள்ளும் என்பதையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் தவியாய் தவித்துவந்த பா.ம.க., வுக்கு, இந்த சந்திப்பு மூலம் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாவது ஊர்ஜிதமாகியுள்ளது.
கொடுப்பதை வாங்க வேண்டியது தான்: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நுழைந்திருப்பதையடுத்து, தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., 31 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில், கடந்த தேர்தலை விட, கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என பா.ம.க., நினைக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விட, பா.ம.க.,வுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது, பா.ம.க.,வுக்கான தொகுதிகள் கண்டிப்பாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி
» சிவசக்தி ஐக்கியம்! - வழிபாட்டு முறை
» என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்
» பிரணாப் மகன் அபிஜித் பானர்ஜி மம்தா கட்சியில் ஐக்கியம்
» நிம்மதி
» சிவசக்தி ஐக்கியம்! - வழிபாட்டு முறை
» என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்
» பிரணாப் மகன் அபிஜித் பானர்ஜி மம்தா கட்சியில் ஐக்கியம்
» நிம்மதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|