புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_m10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10 
5 Posts - 63%
heezulia
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_m10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_m10சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 8:52 am

சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Large_106584

புதுடில்லி : டில்லியில் கடந்த 12 நாட்களாக நடந்த காமன்வெல்த் விளையாட்டு திருவிழா நேற்று இனிதே முடிந்தது. இதற்காக நடந்த வண்ணயமான நிறைவு விழாவில் கண்கவர் "லேசர் ஷோ, மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

டில்லியில் 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 3ம் தேதி துவங்கியது. துவக்க விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த 12 நாட்களாக ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த விளையாட்டு திருவிழா நேற்றுடன் முடிந்தது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தது, மிகுந்த நிம்மதி அளித்தது.

நேற்று ஜவர்கலால் நேரு மைதானத்தில் வண்ணமயமான நிறைவு விழா நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி சண்டை உள்ளிட்ட பல்வேறு மாநில தற்காப்பு கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி முதலில் நடந்தது. பின் ராணுவத்தினரின் "பாண்ட்' வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து "வந்தே மாதரம்' பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனம் ஆடினர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர். இந்திய குழுவுக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைமை ஏற்று வந்தார். இவர் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார்.

டில்லிக்கு "குட்பை':
வரும் 2014ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அடுத்த காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டின் பிரதிநிதி ராபர்ட் வின்டரிடம் காமன்வெல்த் போட்டியின் கொடியை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இளவரசர் எட்வர்ட், டில்லி போட்டி நிறைவு பெறுவதாக முறைப்படி அறிவித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கு பின் மிகவும் புதுமையான "லேசர் ஷோ' நடந்தது. "இசை மூலம் உலகளாவிய அன்பு' என்ற பகுதியில் சங்கர் மகாதேவன், இலா அருண் உள்ளிட்ட பிரபல பாடர்கள் பாட, நிறைவு விழா முடிவுக்கு வந்தது.


தினமலர்!



சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 8:52 am

சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! CWGL_32415



சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 9:14 am

டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில், இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு நடைபெற்ற வண்ணமிகு நிறைவு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.


19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, தலைநகர் டெல்லியில் கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

விளையாட்டு திருவிழா

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் இந்த விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். முன்பு இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த `காமன்வெல்த்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 71 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

கடந்த 12 நாட்களாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து பதக்கப்பட்டியலில் முன்னணியில் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 37 தங்கப்பதக்கங்களுடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் இருந்தது.

இந்தியாவின் புதிய சாதனை


போட்டியின் இறுதி நாளான நேற்று, `பேட்மிட்டன்' ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நேவால் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். `பேட்மிட்டன்' இரட்டையர் பிரிவில். ஜ×வாலா கட்டா-அஸ்வினி ஜோடியும் தங்கம் வென்றனர். இதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது.

இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடம் பிடித்து இருந்தது.



இந்தியாவுக்கு 38 தங்கம்


தற்போது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களை குவித்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலத்துடன் கனடா 4-வது இடத்தையும் பிடித்தன.

பிரமாண்ட நிறைவு விழா

காமன்வெல்த் போட்டிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட நிறைவு விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிறைவு விழாவில் பங்கேற்றார்.

இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கவர்னர் திஜேந்தர் கன்னா, முதல்-மந்திரி ஷீலாதீட்சித் மற்றும் பூடான் பட்டத்து இளவரசர் ஜிக்மே நம்ஜியால் வான்சுக் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குழு நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

தொடக்க விழாவை மிஞ்சும் விதத்தில், 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழாவை களை கட்டச்செய்தன. 5 பிரிவுகளாக ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.

வந்தே மாதரம் பாடல்


தொடக்க நிகழ்ச்சியான `அக்னி' பிரிவில் 800 கலைஞர்கள் பங்கேற்ற தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் இடம்பெற்றன.

`ஆஸ்கார் புகழ்' ஏ.ஆர்.ரகுமானின் `தாய் மண்ணுக்கு மரியாதை' இசை நிகழ்ச்சியில், `வந்தே மாதரம்' பாடலுக்கு, 2010 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நடனம் ஆடி பார்வையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.



பிரமிக்க வைத்த `லேசர் ஷோ'


அடுத்த காமன்வெல்த் போட்டி, 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. போட்டி நடத்தும் பொறுப்பை அந்த நாட்டில் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது, ஸ்காட்லாந்தின் பாரம்பரிய `பேக் பைப்பர்' குழுவினரின் புதுமையான வரவேற்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

லேசர் ஷோ நிகழ்ச்சியின்போது, வானம் வண்ண ஒளியால் ஜொலித்த `கிராபிக்' காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதிபலிக்கும் வகையிலும், உலகளாவிய நேசத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன.

இறுதியில் சர்வதேச சகோதரத்துவத்தை விளக்கும் வகையில், உஷா உதுப், சங்கர் மகாதேவன், இலா அருண், கல்யாணி மேனன் போன்ற இந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்கள் 29 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

வரலாறு காணாத பாதுகாப்பு

நிறைவு விழாவான நேற்று டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணிக்கு 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிறைவு விழா நடைபெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இரவு 7 மணி முதல் 10 மணி வரை டெல்லியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் வானில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன.

தினதந்தி!



சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Oct 15, 2010 9:49 am

சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 15, 2010 12:54 pm

சாந்தன் wrote:சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...
சியர்ஸ் சியர்ஸ்



சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக