Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
3 posters
Page 1 of 1
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Large_106584](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_106584.jpg)
புதுடில்லி : டில்லியில் கடந்த 12 நாட்களாக நடந்த காமன்வெல்த் விளையாட்டு திருவிழா நேற்று இனிதே முடிந்தது. இதற்காக நடந்த வண்ணயமான நிறைவு விழாவில் கண்கவர் "லேசர் ஷோ, மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
டில்லியில் 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 3ம் தேதி துவங்கியது. துவக்க விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த 12 நாட்களாக ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த விளையாட்டு திருவிழா நேற்றுடன் முடிந்தது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தது, மிகுந்த நிம்மதி அளித்தது.
நேற்று ஜவர்கலால் நேரு மைதானத்தில் வண்ணமயமான நிறைவு விழா நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி சண்டை உள்ளிட்ட பல்வேறு மாநில தற்காப்பு கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி முதலில் நடந்தது. பின் ராணுவத்தினரின் "பாண்ட்' வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து "வந்தே மாதரம்' பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனம் ஆடினர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர். இந்திய குழுவுக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைமை ஏற்று வந்தார். இவர் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார்.
டில்லிக்கு "குட்பை': வரும் 2014ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அடுத்த காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டின் பிரதிநிதி ராபர்ட் வின்டரிடம் காமன்வெல்த் போட்டியின் கொடியை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இளவரசர் எட்வர்ட், டில்லி போட்டி நிறைவு பெறுவதாக முறைப்படி அறிவித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கு பின் மிகவும் புதுமையான "லேசர் ஷோ' நடந்தது. "இசை மூலம் உலகளாவிய அன்பு' என்ற பகுதியில் சங்கர் மகாதேவன், இலா அருண் உள்ளிட்ட பிரபல பாடர்கள் பாட, நிறைவு விழா முடிவுக்கு வந்தது.
தினமலர்!
Last edited by சிவா on Fri Oct 15, 2010 8:54 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! CWGL_32415](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/CWGL_32415.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில், இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு நடைபெற்ற வண்ணமிகு நிறைவு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.
19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, தலைநகர் டெல்லியில் கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
விளையாட்டு திருவிழா
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் இந்த விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். முன்பு இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த `காமன்வெல்த்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 71 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
கடந்த 12 நாட்களாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து பதக்கப்பட்டியலில் முன்னணியில் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 37 தங்கப்பதக்கங்களுடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் இருந்தது.
இந்தியாவின் புதிய சாதனை
போட்டியின் இறுதி நாளான நேற்று, `பேட்மிட்டன்' ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நேவால் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். `பேட்மிட்டன்' இரட்டையர் பிரிவில். ஜ×வாலா கட்டா-அஸ்வினி ஜோடியும் தங்கம் வென்றனர். இதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது.
இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடம் பிடித்து இருந்தது.
இந்தியாவுக்கு 38 தங்கம்
தற்போது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களை குவித்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலத்துடன் கனடா 4-வது இடத்தையும் பிடித்தன.
பிரமாண்ட நிறைவு விழா
காமன்வெல்த் போட்டிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட நிறைவு விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிறைவு விழாவில் பங்கேற்றார்.
இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கவர்னர் திஜேந்தர் கன்னா, முதல்-மந்திரி ஷீலாதீட்சித் மற்றும் பூடான் பட்டத்து இளவரசர் ஜிக்மே நம்ஜியால் வான்சுக் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குழு நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
தொடக்க விழாவை மிஞ்சும் விதத்தில், 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழாவை களை கட்டச்செய்தன. 5 பிரிவுகளாக ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.
வந்தே மாதரம் பாடல்
தொடக்க நிகழ்ச்சியான `அக்னி' பிரிவில் 800 கலைஞர்கள் பங்கேற்ற தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் இடம்பெற்றன.
`ஆஸ்கார் புகழ்' ஏ.ஆர்.ரகுமானின் `தாய் மண்ணுக்கு மரியாதை' இசை நிகழ்ச்சியில், `வந்தே மாதரம்' பாடலுக்கு, 2010 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நடனம் ஆடி பார்வையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.
பிரமிக்க வைத்த `லேசர் ஷோ'
அடுத்த காமன்வெல்த் போட்டி, 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. போட்டி நடத்தும் பொறுப்பை அந்த நாட்டில் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது, ஸ்காட்லாந்தின் பாரம்பரிய `பேக் பைப்பர்' குழுவினரின் புதுமையான வரவேற்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
லேசர் ஷோ நிகழ்ச்சியின்போது, வானம் வண்ண ஒளியால் ஜொலித்த `கிராபிக்' காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதிபலிக்கும் வகையிலும், உலகளாவிய நேசத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன.
இறுதியில் சர்வதேச சகோதரத்துவத்தை விளக்கும் வகையில், உஷா உதுப், சங்கர் மகாதேவன், இலா அருண், கல்யாணி மேனன் போன்ற இந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்கள் 29 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாறு காணாத பாதுகாப்பு
நிறைவு விழாவான நேற்று டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணிக்கு 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிறைவு விழா நடைபெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இரவு 7 மணி முதல் 10 மணி வரை டெல்லியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் வானில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன.
தினதந்தி!
19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, தலைநகர் டெல்லியில் கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
விளையாட்டு திருவிழா
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் இந்த விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். முன்பு இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த `காமன்வெல்த்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 71 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
கடந்த 12 நாட்களாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து பதக்கப்பட்டியலில் முன்னணியில் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 37 தங்கப்பதக்கங்களுடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் இருந்தது.
இந்தியாவின் புதிய சாதனை
போட்டியின் இறுதி நாளான நேற்று, `பேட்மிட்டன்' ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நேவால் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். `பேட்மிட்டன்' இரட்டையர் பிரிவில். ஜ×வாலா கட்டா-அஸ்வினி ஜோடியும் தங்கம் வென்றனர். இதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது.
இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடம் பிடித்து இருந்தது.
இந்தியாவுக்கு 38 தங்கம்
தற்போது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களை குவித்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலத்துடன் கனடா 4-வது இடத்தையும் பிடித்தன.
பிரமாண்ட நிறைவு விழா
காமன்வெல்த் போட்டிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட நிறைவு விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிறைவு விழாவில் பங்கேற்றார்.
இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கவர்னர் திஜேந்தர் கன்னா, முதல்-மந்திரி ஷீலாதீட்சித் மற்றும் பூடான் பட்டத்து இளவரசர் ஜிக்மே நம்ஜியால் வான்சுக் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குழு நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
தொடக்க விழாவை மிஞ்சும் விதத்தில், 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழாவை களை கட்டச்செய்தன. 5 பிரிவுகளாக ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.
வந்தே மாதரம் பாடல்
தொடக்க நிகழ்ச்சியான `அக்னி' பிரிவில் 800 கலைஞர்கள் பங்கேற்ற தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் இடம்பெற்றன.
`ஆஸ்கார் புகழ்' ஏ.ஆர்.ரகுமானின் `தாய் மண்ணுக்கு மரியாதை' இசை நிகழ்ச்சியில், `வந்தே மாதரம்' பாடலுக்கு, 2010 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நடனம் ஆடி பார்வையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.
பிரமிக்க வைத்த `லேசர் ஷோ'
அடுத்த காமன்வெல்த் போட்டி, 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. போட்டி நடத்தும் பொறுப்பை அந்த நாட்டில் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது, ஸ்காட்லாந்தின் பாரம்பரிய `பேக் பைப்பர்' குழுவினரின் புதுமையான வரவேற்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
லேசர் ஷோ நிகழ்ச்சியின்போது, வானம் வண்ண ஒளியால் ஜொலித்த `கிராபிக்' காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதிபலிக்கும் வகையிலும், உலகளாவிய நேசத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன.
இறுதியில் சர்வதேச சகோதரத்துவத்தை விளக்கும் வகையில், உஷா உதுப், சங்கர் மகாதேவன், இலா அருண், கல்யாணி மேனன் போன்ற இந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்கள் 29 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாறு காணாத பாதுகாப்பு
நிறைவு விழாவான நேற்று டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணிக்கு 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிறைவு விழா நடைபெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இரவு 7 மணி முதல் 10 மணி வரை டெல்லியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் வானில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன.
தினதந்தி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...
மிக்க நன்றி சிவா அண்ணா ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
சாந்தன் wrote:சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி
» காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
» சறுக்கியது "நம்பர்-1 இந்தியா! * லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி * சாதித்தது இங்கிலாந்து அணி
» காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?
» காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
» சறுக்கியது "நம்பர்-1 இந்தியா! * லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி * சாதித்தது இங்கிலாந்து அணி
» காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|