புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
11 Posts - 41%
mini
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
368 Posts - 59%
heezulia
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
mini
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%
Saravananj
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 9:37 pm

மனிதனைத்
திறக்கும் சொல் ஒன்று
காலங்காலமாய்
பூட்டியே கிடக்கிறது
தன்னைத்
திறந்து கொள்ளத் தெரியாமல்

கிடைக்காது என
நினைக்கும் போதெல்லாம்
கிடைத்து விடுகிறது
ஏதோ ஒன்று

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

உங்கள் பின்னால்தான்
வந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
உங்கள் முன்னால்
சென்று கொண்டிருக்கிறேன்

நடந்து போனவர்களின்
சுவடுகளில்
படிக்க எதுவுமே இல்லை

கவிதையின் அடிவாரத்தில்
படுத்துக்கிடந்தேன்
நிம்மதியைப் போர்த்தியபடி

ஜன்னலோரம்
அமர்ந்த பறவையை
விரட்டிவிட்டு
எல்லோருக்கும்
இடம் வேண்டும்
என்று எழுத
எப்படி மனம் வந்தது

போய்விட்டார்கள்
காலடித்தடங்களில்
நெளிகிறது மொழி

நடந்து முடிந்த
அறுநூற்று அறுபத்தாறு
குற்றங்களையும் செய்த
குற்றவாளி நான்தான்
என்னை விட்டுவிட்டு
அறுநூற்று அறுபத்தியேழாவது
நபரை கைது செய்து
விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஏதோ கிடைத்துவிடும் என்ற
அதீத நம்பிக்கையில்

ஓவியம் என்று
சொல்லாதீர்கள்
ஒற்றை கோட்டை
ஒற்றைக் கோடு
என்றே சொல்லுங்கள்

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று

திரும்பிப் பார்த்தேன்
வயதுகளின் பாதையில்
ஓடிவந்தபடி ஒரு குழந்தை

வானம் கூப்பிட்டும்
போகவில்லை
கனவில் விழுந்த நட்சத்திரம்

நேரம் இல்லை
நினைவுகளில்
சந்திப்பவர்கள்

என்போல்
ஒற்றைக் கிளையில்
மதிய காகம்

கதை சொன்ன குருவி
பறந்து போனது
என்னையும் கதாபாத்திரமாய்
எடுத்துக் கொண்டு

சுற்றிலும் நாடகங்கள்
என் வேடத்தை
பலப்படுத்த வேண்டும்

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

என்னைத் திறந்து
வெளியேறிய கனவில்
கலந்திருந்தன
கையள்ளக்கூடிய
கவிதைகளும்

அழவேண்டும்
போலிருக்கிறது
எனக்கும் தெரியாமல்

ஒளி வீசும் வார்த்தைகளால்
இருளை எழுதிக்கொண்டிருந்தவனை
ஒரு இரவில் சந்தித்தேன்

நான் இரவிலிருந்தேன்
அவன் பகலில் இருந்தான்

அறையிலிருந்த
ஒவ்வொருவரும்
தங்களுக்குள் ரகசியமாக
சொல்லிக் கொண்டார்கள்
என்னைத் தவிர
எல்லோரும்
இறந்து போவார்கள்

உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்

கை அள்ளிய
இருளை இறுக்க
மூச்சற்றுப் போகும் பயம்

உங்களது பாத்திரம்
நிரம்பி வழிவது குறித்து
உங்களுக்கு ஆனந்தம்

எனது பாத்திரம்
நிரம்பாமல் வழிவது குறித்து
எனக்குப் பேரானந்தம்

நான்கள்
மொய்த்துக் கிடக்கும் என்னை
விடுவிப்பதெப்படி

கிடைக்காது எனப்போட்டுப்
பூட்டி வைத்த கேள்விகள்
பெட்டியை சவப்பெட்டியாக்கி
உடைத்து வெளியேறின
கிடைக்கும் பதில்கள் என்ற
பாய்ச்சலுடன்

என்னைத் தேடாதீர்கள்
எழுதும் கவிதை
வழி நுழைந்து
வெளியேறி விடுவேன்

பூமியில் பறக்கவும்
வானில் நடக்கவும்
கற்றுக் கொடுக்கின்றன
குதிரையின் கால்களும்
பறவையின் சிறகுகளும்

இந்த தோல்விகளை வைத்து
ஆடப்போகும் விளையாட்டில்
ஜெயித்துவிட முடியும்

மை இருட்டில்
மெய் இருட்டை எழுத
போனது
பொய் இருட்டு



இல்லாதது எதுவும்
இருப்பதில்லை
நுரைத்த வார்த்தைகளை
துப்பிவிட்டு நடந்தேன்
எச்சில் பொய்களுடன்



காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென


மரணத்தை சிறிதளவு
ஒரு மாத்திரையைப் போல
விழுங்கிவிட்டுப் படுத்தேன்
நன்றாகத் தூக்கம் வந்தது

நன்றி ராஜா சந்திரசேகர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 12, 2010 10:01 pm

"உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்"

அற்புதமான வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 10:11 pm

இது பல கவிதைகளின் தொகுப்பு போல தெரிகிறது தம்பி. ரசிக்க இயலவில்லை. பொறுமையாய் பின்னர் வாசித்து கருத்திடுவேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 1:43 pm

கலை wrote:இது பல கவிதைகளின் தொகுப்பு போல தெரிகிறது தம்பி. ரசிக்க இயலவில்லை. பொறுமையாய் பின்னர் வாசித்து கருத்திடுவேன்.

ஆமாம் சார் ஜென் கவிதைகள் முறையிலும் படிம முறையிலும் எழுதிஉள்ளார்
கண்டிப்பாக உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 1:44 pm

bhuvi wrote:"உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்"

அற்புதமான வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி தங்கையே

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 1:56 pm


காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென


அருமை வரிகள்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக