புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனச் சோலை துபாய் I_vote_lcapபாலைவனச் சோலை துபாய் I_voting_barபாலைவனச் சோலை துபாய் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பாலைவனச் சோலை துபாய் I_vote_lcapபாலைவனச் சோலை துபாய் I_voting_barபாலைவனச் சோலை துபாய் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாலைவனச் சோலை துபாய் I_vote_lcapபாலைவனச் சோலை துபாய் I_voting_barபாலைவனச் சோலை துபாய் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனச் சோலை துபாய்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 13, 2010 1:20 am

அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபாய், புஜெய்ரா, ராஸ் அல் கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் இதன் அயல் நாடுகளாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால் இந்நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் உயர்ந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவிலும் 39 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தகவலின்படி இதன் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக அளவில் 5 ஆவது இடத்தில் உள்ளது.
பொருளாதாரம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது.வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து,

உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:

* அபுதாபி
* அஜ்மான்
* துபாய்
* புஜெய்ரா
* ராஸ் அல் கைமா
* சார்ஜா
* உம் அல் குவெய்ன்

அபுதாபி :ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் ஆகும். முழு நாட்டினதும் தலைநகரமான அபுதாபி நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார்.

அஜ்மான் :ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.

துபாய் :என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய அமீரகத்தையும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும். இது மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது.நீண்டகாலமாகவே துபாய், முத்துக்குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபிப் பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் மக்ட்டூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது.

புஜேரா :என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

ராஸ் அல் கைமா :ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த எமிரேட்டின் மக்கள் தொகை 250,000 ஆகும்.

சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல் குவெய்ன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.

துபாய் ஷொப்பிங் விழா - உலகக் கிராமம்

துபாய் ஷொப்பிங் விழாவில், "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும்.

ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டிலும் அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்லும் இது, 2004 ஆம் ஆண்டில் 58 நாடுகளின் காட்சியகங்களைக் கொண்டுள்ளது.

ஓவ்வொரு ஆண்டும், இந்நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், புத்துப்புதுக் கருத்து வடிவங்களைக் கொண்டு, இந்தத் தற்காலிகக் கட்டிடங்களைக் கண்கொள்ளாக் காட்சியாகத் தருகின்றன.

2003 ல், ராஜஸ்தான் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தியக் காட்சியகம், சிறந்த காட்சியகமாகத் தெரிவுசெய்யப்பட்டது. 2004 ல், இந்தியக் காட்சியகம் கேரளத்தின் பாணியைத் தழுவியுள்ளது.

இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன.

ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

பாம் தீவுகள்:

துபாய், அமீரகத்தின் கடற்கரையை அண்டிக் கடலுக்குள், பேரீச்ச மரங்களின் வடிவில் அமைக்கப்பட்டுவரும் மூன்று பெரிய தீவுகள் பாம் தீவுகள் என அழைக்கப்படுகின்றன.

இது அல் நக்கீல் புரொபர்ட்டீஸ் (Al Nakheel Properties) என்னும் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகிறது. இத் தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு பேரீச்ச மர வடிவத்தையும் அதன் தலைப் பகுதியைச் சூழ ஒரு பிறை வடிவத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

துபாய்க் கடற்கரையின் அகலமான கண்டத் திட்டும், பாரசீக வளைகுடா ஆழம் குறைவாக இருப்பதும் இத் தீவுகள் கட்டப்படுவதைச் சாத்தியமாக்கி உள்ளன.



இந்த பாம் தீவுகள் மூன்று இருக்கின்றது

1.ஜுமேரா பாம்
2.ஜபல் அலி பாம்
3.டெய்ரா பாம்

இவற்றில் முதல் இரண்டும் பயன் பாட்டுக்கு வந்து விட்டது, மூன்றாவது தற்போது வேலை நடந்து கொண்டு இருக்கின்ரது.

அடுத்து அங்கு கட்டவிருப்பது "குலோபல் ஐலன்ட்" ( கீழே உள்ள படம்) இதுல் நடிகர் ஷாருக் ஒரு மனை வாங்கிப் போட்டுள்ளாராமே... டுபாயில் நாம்(வெளிநாட்டவர்கள்) நிலம் வாங்கி்னால் அவர்களுக்கு 90 வருட டுபாய் விசா வழங்கப்படும்

புர்ஜ் துபாய்

புர்ஜ் துபாய் (அரபு மொழி: برج دبي என்னும் துபாய் கோபுரம்) தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வானளாவியைக் (skyscraper) குறிக்கும். உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரைப்பெறும் நோக்கத்துடன் கட்டப்படும் இக் கட்டிடத்தின் உயரம், மாடிகளின் எண்ணிக்கை என்பன இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது.

இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது.

அண்மைக்காலக் கட்டுரையொன்றில், துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனத் தெரிகிறது.

இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார்.

எனினும் இது கட்டிடத்தின் உரிமையாளர்களான "இமார்" நிறுவனத்தினால் உறுதிசெய்யப்படவில்லை.

புர்ஜ் துபாய் என்னும் துபாய் கோபுரம். 2008ல் கட்டி முடித்தபின் 818 மீட்டர் உயரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 12, 2007ல் உலகிலேயே மிக உயரமான கட்டடமான கனடாவில் உள்ள சி.என் கோயிரத்தை உயரத்தில் மீறியது

நன்றி ,
புதைனா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக