புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
92 Posts - 61%
heezulia
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
eraeravi
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
284 Posts - 45%
heezulia
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
19 Posts - 3%
prajai
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
முத்தாரம்மன் வரலாறு Poll_c10முத்தாரம்மன் வரலாறு Poll_m10முத்தாரம்மன் வரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தாரம்மன் வரலாறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2009 9:01 am

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. பல்வேறு இன மக்களுக்கு முத்தாரம்மன் குலதெய்வமாக இருக்கிறாள். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள குலசேகரப்பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று பல காலம் வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந் நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.

ஏழு அரக்கியர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அரக்கியர் எழுவருக்கும் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று மக்கள் பிறந்தனர். அரக்கியர் பூமியில் தோன்றிய காரணம் முடிந்ததும் தம் மக்கள் மூவரையும் ஒரு வனத்தில் விட்டு விட்டு மறைந்தனர். அந்த வனத்தில் மூன்று குழந்தைகளும் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்.

அவ் வனத்தில் சக்தி முனி என்பவன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப் புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் பார்வதியிடம் முறையிட பார்வதியும் வனத்திற்குப் புறப்பட்டு வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் பார்வதி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை வழித்துக் கீழே விட்டாள் பார்வதி. அந்த வியர்வை முத்து பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். அந்த முத்தாரம்மனை, அநாதையாய்க் காட்டில் திரியும் அரக்கியரின் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள் பார்வதி. பார்வதியின் கட்டளையின்படி முத்தாரம்மன் புறப்பட்டாள்.

நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளும் அநாதையாய்த் திரிவதைக் கண்டுபிடித்தாள் முத்தாரம்மன். பிறகு அவர்களை வைத்துக் காக்க வேண்டி, காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புரக் கோட்டை ஒன்றை அமைத்தாள். அதில் தன் குழந்தைகளான மூவரையும் வைத்து வளர்த்தாள் முத்தாரம்மன். அந்த மூவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன்.

நீலன், குமுதன், ஆதித்தன் என்கிற மூன்று பேருக்கும் சந்தவாழ்குமரன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மக்கள் மூவர் பிறந்தனர். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். 'அரக்கத்'தனமான குணம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அதன் விளைவால் தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால் கையை விரித்துவிட்டார்.

தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாகச் சிவபெருமானும் வாக்களித்தார். தற்காலிகமான மன நிம்மதியோடு தேவர்கள் கலைந்தனர். முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்கச் சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர். வந்த காரியத்தை மறந்த சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டுக் கைகொட்டிச் சிரித்தார். உடனே முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்தாள்.

சிவனிடம் சென்று அவர் செய்த கொலைக்காகத் தனக்கும் தன் மக்களுக்கும் கோடி வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். சிவனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். தம் மகன்கள் தவிர, இப் பூவுலக மக்களையும் காக்கப் பல வரங்கள் பெற்றாள். பிறகு ஒரு வண்டியில் தன் மகன்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல வரங்கள் அளித்து வந்தாள். பின்னர் தன் சக்தியை அங்கங்கு விட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறாள் முத்தாரம்மன் என்று சொல்லப்படுகிறது.

4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Sat Aug 08, 2009 9:18 am

மூல சக்தி, அதிலிருந்து தோன்றும் முக்குணங்கள், அது பல்கிப்பெருகி பல நல்ல தீயசக்கியாவது, அதனால் நல்ல எண்ணங்கள் துன்புறுவது, ஞானத்தால் முக்குணத்தை எரிப்பது, முடிவு எல்லாமே நல்ல சக்கிகாளாவது என கொஞ்சம் புரிகிறது, நிறைய புரியவில்லை.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக