புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_lcapவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_voting_barவாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலியிடம் பேச்சிழந்த இராமன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Mon Oct 11, 2010 3:17 pm

First topic message reminder :




கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.

வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்

(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா?” என்று கேட்கிறான்).

அந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.

வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.

(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியிருக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்?)

வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.

(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே! நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா?)

இப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு? நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்?”

ஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை?

(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)

வசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.

மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!



தன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்

”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.

இரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)

வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.

-என்.கணேசன்

[You must be registered and logged in to see this link.]




கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 5:46 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

நம்புங்கப்பா நானும் ரவுடிதான்

காமெடி பண்ணாதிங்க .... .. . .

அம்மா சத்தியமா நானும் ரவுடிதாம்பா இவுங்களோட இவ்வளவுநேரம் பேசிகிட்டு இருந்தேனே நீ பாக்கலையா

அப்ப நாங்க யாரு [You must be registered and logged in to see this image.]



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 5:50 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:

காமெடி பண்ணாதிங்க .... .. . .

அம்மா சத்தியமா நானும் ரவுடிதாம்பா இவுங்களோட இவ்வளவுநேரம் பேசிகிட்டு இருந்தேனே நீ பாக்கலையா

அப்ப நாங்க யாரு [You must be registered and logged in to see this image.]

எனக்கு ராமன் வரலாறுதான் தெரியும் இவுங்க வரலாறு தெரியாது அது சரி இவுங்க தானே மை டியர் லிசா மோனோலிசா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 5:53 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

அம்மா சத்தியமா நானும் ரவுடிதாம்பா இவுங்களோட இவ்வளவுநேரம் பேசிகிட்டு இருந்தேனே நீ பாக்கலையா

அப்ப நாங்க யாரு [You must be registered and logged in to see this image.]

எனக்கு ராமன் வரலாறுதான் தெரியும் இவுங்க வரலாறு தெரியாது அது சரி இவுங்க தானே மை டியர் லிசா மோனோலிசா

யாருக்கு தெரியும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 6:00 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:

அப்ப நாங்க யாரு [You must be registered and logged in to see this image.]

எனக்கு ராமன் வரலாறுதான் தெரியும் இவுங்க வரலாறு தெரியாது அது சரி இவுங்க தானே மை டியர் லிசா மோனோலிசா

யாருக்கு தெரியும்

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 6:21 pm

நல்ல பதிவு நன்றி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




[You must be registered and logged in to see this image.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 11, 2015 9:39 pm

balakarthik wrote:வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.


உண்மைதான் ஆனால் ஒருவிசயம் வால்மீகி ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர் இராமாயணதை பார்த்து அதை நேரில் கண்டு படைத்தவர் அதுதான் மிக மிக உண்மையான ராமாயணம், ஆனால் கம்பனோ வால்மிகியின் ராமாயணத்தை மூலமாகக்கொண்டு படைத்தவர், கம்ப ராமாயணத்தில் பல கற்பனை செய்திகள் உண்டு அது கம்பரின் சொல் வளமைக்கும் கவிதை நயத்துக்கும் எடுத்துகாட்டு, கம்பராமாயணம் தமிழில் இருக்கும் மிக அருமையான கவிதை நயம் மிக்க ஒரு சரித்திரத்தின் தொகுப்பு ஆனால் வால்மீகி ராமாயணமோ ராமர் என்ற ஒரு அரசனின் உண்மை வாழ்கை சரித்திரம் வால்மீகி ராமாயணமே உண்மையான இதிகாசம், கம்பர் ராமாயணம் கற்பனை கலர்ந்த ராம காவியம்
[You must be registered and logged in to see this link.]

வால்மீகி இராமாயணம் - மூலநூல்
கம்ப இராமாயணம் - வழி நூல்

வழிநூல் , மூலநூலை வென்று விட்டது என்பதே இலக்கியவாதிகள் சொல்லும் உண்மை !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 9:55 pm

வாலியிடம் பேச்சிழந்த இராமன் - Page 2 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:49 pm

balakarthik wrote:வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.


உண்மைதான் ஆனால் ஒருவிசயம் வால்மீகி ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர் இராமாயணதை பார்த்து அதை நேரில் கண்டு படைத்தவர் அதுதான் மிக மிக உண்மையான ராமாயணம், ஆனால் கம்பனோ வால்மிகியின் ராமாயணத்தை மூலமாகக்கொண்டு படைத்தவர், கம்ப ராமாயணத்தில் பல கற்பனை செய்திகள் உண்டு அது கம்பரின் சொல் வளமைக்கும் கவிதை நயத்துக்கும் எடுத்துகாட்டு, கம்பராமாயணம் தமிழில் இருக்கும் மிக அருமையான கவிதை நயம் மிக்க ஒரு சரித்திரத்தின் தொகுப்பு ஆனால் வால்மீகி ராமாயணமோ ராமர் என்ற ஒரு அரசனின் உண்மை வாழ்கை சரித்திரம் வால்மீகி ராமாயணமே உண்மையான இதிகாசம், கம்பர் ராமாயணம் கற்பனை கலர்ந்த ராம காவியம்
[You must be registered and logged in to see this link.]

எனக்கும் பாலா சொல்வதில் தான் உடன்பாடு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக