ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

+5
ரிபாஸ்
கலைப்பிரியன்
கார்த்திக்
தாமு
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Empty பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

Post by சிவா Sun Oct 10, 2010 10:15 pm

First topic message reminder :

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Sabana%20Azmi


1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

பிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப் பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.

ஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த `பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.

இவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.

"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே?''

"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரபல கவிஞரான எனது தந்தையின் `அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.

பெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.

நான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''

"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே?

"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''

"தீபா மேத்தாவின் `பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து?''

"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒருசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''

"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா `வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

தற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும்? எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் கருத்தூன்றி உணரவேண்டும்.

ஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' என்கிறார் ஷபனா, வசீகரிக்கும் புன்னகையுடன்.

ஞாயிறு மலர்!


பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Empty Re: பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

Post by உதயசுதா Mon Oct 11, 2010 4:14 pm

முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 440806
உண்மை கொஞ்சம் கசக்க தான் செய்யும் mubis.
அவங்க சொல்லி இருக்கறது சரிதானே.


பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Uபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Dபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Aபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Yபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Aபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Sபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Uபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Dபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Hபெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Empty Re: பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

Post by ரபீக் Mon Oct 11, 2010 4:17 pm

உதயசுதா wrote:
முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 440806
உண்மை கொஞ்சம் கசக்க தான் செய்யும் mubis.
அவங்க சொல்லி இருக்கறது சரிதானே.

உங்களிடம் புடிச்சதே ,,இப்படி அடிக்கடி காமெடி பண்றதுதான் அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி - Page 2 Empty Re: பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum