Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
4 posters
Page 1 of 1
நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
புதுடில்லி:காமன்வெல்த் போட்டியில் 4வது தங்கம் வென்று அசத்தினார், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங். மல்யுத்தம் உள்ளிட்ட மற்ற போட்டிகளிலும் இந்திய நட்சத்திரங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது.
டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் 50 மீ., "ரைபிள்-3' துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ககன் நரங், தங்கம் வென்றார். இது இவர் வென்ற 4வது தங்கப் பதக்கம். இதன்மூலம் டில்லி காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 10 மீ., ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இரட்டையர், 50 மீ., ரைபிள்-3 தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் லாரன் மிட்செல் (ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்டிஸ்டிக்), அலிசியா கவுட்ஸ் (நீச்சல்) உள்ளிட்ட வீராங்கனைகள் நான்கு பதக்கம் வென்றுள்ளனர்.
விஜய்-ஹர்பிரீத் அபாரம்:ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 25 மீ., "சென்டர்பயர் பிஸ்டல்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1159 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் விஜய் குமார், ஹர்பிரீத் சிங் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஜோடிகள் கைப்பற்றின.
இதுகுறித்து ஹர்பிரீத் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பதக்கத்தை இந்திய கடற்படை மற்றும் எனது உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் சாதித்திருக்க முடியாது,'' என்றார்.
சுமா-கவிதா வெண்கலம்:பெண்களுக்கான இரட்டையர் பிரிவு 10 மீ., "ஏர்ரைபிள்' பிரிவு போட்டியில், இந்தியாவின் சுமா ஷிருர், கவிதா யாதவ் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது. மலேசியா, சிங்கப்பூர் ஜோடிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
யோகேஷ்வர் தங்கம்:ஆண்களுக்கான 60 கி.கி., "பிரிஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் பைனலில் இந்தியாவின் யோகேஷ்வர் தத், கனடாவின் ஜேம்ஸ் மான்சினியை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 74 கி.கி., "பிரிஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் பைனலில் இந்தியாவின் நார்சிங் பான்சம் யாதவ், தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் பிரைன் அடினல்லை வீழ்த்தி, தங்கம் வென்றார். இது இந்தியாவின் 24வது தங்கப் பதக்கம்.
2வது வெண்கலம்:ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில், இந்தியாவின் ஹர்மிந்தர் சிங், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1 மணி 23 நிமிடம் 27 வினாடிகளில் கடந்தார். முதலிரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் ஜார்டு டேலன்ட் (1:22.18), லுக் ஆதம்ஸ் (1:22.31) பிடித்தனர். இதன்மூலம் தடகள போட்டியில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. நேற்று முன்தினம் நடந்த 10000 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கவிதா ராத் வெண்கலம் வென்றார்.
காமன்வெல்த் நடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் ஹர்மிந்தர் சிங். தவிர, காமன்வெல்த் தடகள போட்டியில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீரரானார். முன்னதாக மில்கா சிங் (1958), பிரவீண் குமார் (1966), மொகிந்தர் சிங் கில் (1970, 74), சுரேஷ் பாபு (1978) உள்ளிட்ட இந்திய வீரர்கள் பதக்கம் வென்றனர்.
டேபிள் டென்னிஸ் வெண்கலம்:ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, நைஜீரியா அணிகள் மோதின. இதில் அஜந்தா சரத் கமல் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சரத் கமல், அபிஷேக் ரவிச்சந்திரன், அமல்ராஜ் உள்ளிட்டோர் விளையாடினர்.
பல்லிகல் விலகல்
ஒற்றையர் போட்டியை தொடர்ந்து, இரட்டையர் போட்டிகளில் இருந்தும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் விலகினார். இதனால் பெண்கள் பிரிவில் இந்திய அணியின் பதக்க வாய்ப்பு வீணானது. ஏற்கனவே லேசான காய்ச்சல் காரணமாக, பல்லிகல் ஒற்றையர் போட்டியிலிருந்து விலகினார். தற்போது காய்ச்சல் குணமடையாத பட்சத்தில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து சகவீரர் சவுரவ் கோசால் கூறுகையில், ""ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-சின்னப்பா ஜோடி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் காரணமாக பல்லிகல் விலகியதை அடுத்து இந்திய அணியின் பதக்க கனவு வீணானது,'' என்றார்.
அரையிறுதியில் அமன்தீப்
குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த 49 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அமன்தீப் சிங், மலேசியாவின் முகமது பாவட்டை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அமன்தீப், அயர்லாந்தின் பட்டி பார்னசை சந்திக்க உள்ளார்.
இதேபோல 52 கி.கி., எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், மலேசியாவின் முகமது சுப்ரியை 9-2 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அரையிறுதியில் சுரன்ஜாய் சிங், பாகிஸ்தானின் ஹாரூன் இக்பாலை எதிர்கொள்ள உள்ளார்.
இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
அகில் குமார் பதிலடி
56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அகில் குமார், இங்கிலாந்தின் இயான் வீவரை 11-6 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வீவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் அகில் குமார்.
சில நிமிடங்களுக்கு முன் நடந்த பரபரப்பான போட்டியில் அகில்குமார் தோல்வியடைந்தார்!
இரண்டாவது அதிகபட்சம்
டில்லி, காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 24 தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் காமன்வெல்த் அரங்கில், 2வது அதிகபட்ச தங்கப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. முன்னதாக கடந்த 2002ல் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 30 தங்கம் வென்றிருந்தது. கடந்த 2006ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் 22 தங்கம் வென்றிருந்தது.
சானியா வெள்ளி
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியோனோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை ரோடியோனோவா 6-3 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட சானியா 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்று "டை-பிரேக்கர்' வரை நீடித்தது. இதில் இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியியல், நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் சானியா (6-7). இறுதியில் சானியா 3-6, 6-2, 6-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
பூச்சிகள் தொல்லை
நேற்று டென்னிஸ் போட்டிகள் நடந்த ஆர்.கே. கண்ணா டென்னிஸ் மைதானத்தில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் வீரர்கள் மட்டுமல்லாமல், போட்டியை காண வந்த ரசிகர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பெண்கள் ஒற்றையர் பைனலில் போது சானியா மிர்சா, அனஸ்டாசியா ரோடியோனோவா இருவரும் பாதிப்படைந்தனர். பின்னர் நடந்த ஆண்கள் இரட்டையர் 3வது இடத்துக்கான போட்டியில் பயஸ்-பூபதி, போபண்ணா-சோம்தேவ் ஜோடிகள் மோதின. இதில் சோம்தேவ் கண்ணுக்குள் பூச்சி சென்றதால், பாதிப்புக்கு உள்ளனார். பூச்சிகளை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெரும் ஏமாற்றம் அளித்தது.
மோனிகா வெண்கலம்
பெண்களுக்கான 75 கி.கி., பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மோனிகா தேவி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பயஸ்-பூபதி வெண்கலம்
ஆண்கள் இரட்டையர் 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, சகநாட்டைச் சேர்ந்த சோம்தேவ் தேவ்வர்மன்-ரோகன் போபண்ணா ஜோடியை சந்தித்தது. இதில் பயஸ்-பூபதி ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.
ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்
பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் நேற்று இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீபிகா தாகூர் (11, 21வது நிமிடம்), சுரிந்தர் கவுர் (34வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணிக்கு பிட்டி கோயட்சி (46வது) கோல் அடித்தார்.
இதன்மூலம் "ஏ' பிரிவு லீக் போட்டியில் மூன்று வெற்றி கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. தலா 7 புள்ளிகள் பெற்று இந்தியா (+8 கோல்), தென் ஆப்ரிக்கா (+11 கோல்) அணிகள் இருந்தன. இதில் கோல் அடிப்படையில் இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் நாளை நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 5வது இடத்துக்கான போட்டியில் மலேசியா அணியுடன் மோதுகிறது.
ஆண்கள் ஹாக்கி: இந்தியா வெற்றி
ஆண்கள் ஹாக்கி "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு முன்னேறிவிடும். "ஏ' பிரிவில் மூன்று வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது.
தினமலர்
டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் 50 மீ., "ரைபிள்-3' துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ககன் நரங், தங்கம் வென்றார். இது இவர் வென்ற 4வது தங்கப் பதக்கம். இதன்மூலம் டில்லி காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 10 மீ., ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இரட்டையர், 50 மீ., ரைபிள்-3 தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் லாரன் மிட்செல் (ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்டிஸ்டிக்), அலிசியா கவுட்ஸ் (நீச்சல்) உள்ளிட்ட வீராங்கனைகள் நான்கு பதக்கம் வென்றுள்ளனர்.
விஜய்-ஹர்பிரீத் அபாரம்:ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 25 மீ., "சென்டர்பயர் பிஸ்டல்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1159 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் விஜய் குமார், ஹர்பிரீத் சிங் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஜோடிகள் கைப்பற்றின.
இதுகுறித்து ஹர்பிரீத் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பதக்கத்தை இந்திய கடற்படை மற்றும் எனது உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் சாதித்திருக்க முடியாது,'' என்றார்.
சுமா-கவிதா வெண்கலம்:பெண்களுக்கான இரட்டையர் பிரிவு 10 மீ., "ஏர்ரைபிள்' பிரிவு போட்டியில், இந்தியாவின் சுமா ஷிருர், கவிதா யாதவ் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது. மலேசியா, சிங்கப்பூர் ஜோடிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
யோகேஷ்வர் தங்கம்:ஆண்களுக்கான 60 கி.கி., "பிரிஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் பைனலில் இந்தியாவின் யோகேஷ்வர் தத், கனடாவின் ஜேம்ஸ் மான்சினியை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 74 கி.கி., "பிரிஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் பைனலில் இந்தியாவின் நார்சிங் பான்சம் யாதவ், தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் பிரைன் அடினல்லை வீழ்த்தி, தங்கம் வென்றார். இது இந்தியாவின் 24வது தங்கப் பதக்கம்.
2வது வெண்கலம்:ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில், இந்தியாவின் ஹர்மிந்தர் சிங், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1 மணி 23 நிமிடம் 27 வினாடிகளில் கடந்தார். முதலிரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் ஜார்டு டேலன்ட் (1:22.18), லுக் ஆதம்ஸ் (1:22.31) பிடித்தனர். இதன்மூலம் தடகள போட்டியில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. நேற்று முன்தினம் நடந்த 10000 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கவிதா ராத் வெண்கலம் வென்றார்.
காமன்வெல்த் நடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் ஹர்மிந்தர் சிங். தவிர, காமன்வெல்த் தடகள போட்டியில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீரரானார். முன்னதாக மில்கா சிங் (1958), பிரவீண் குமார் (1966), மொகிந்தர் சிங் கில் (1970, 74), சுரேஷ் பாபு (1978) உள்ளிட்ட இந்திய வீரர்கள் பதக்கம் வென்றனர்.
டேபிள் டென்னிஸ் வெண்கலம்:ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, நைஜீரியா அணிகள் மோதின. இதில் அஜந்தா சரத் கமல் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சரத் கமல், அபிஷேக் ரவிச்சந்திரன், அமல்ராஜ் உள்ளிட்டோர் விளையாடினர்.
பல்லிகல் விலகல்
ஒற்றையர் போட்டியை தொடர்ந்து, இரட்டையர் போட்டிகளில் இருந்தும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் விலகினார். இதனால் பெண்கள் பிரிவில் இந்திய அணியின் பதக்க வாய்ப்பு வீணானது. ஏற்கனவே லேசான காய்ச்சல் காரணமாக, பல்லிகல் ஒற்றையர் போட்டியிலிருந்து விலகினார். தற்போது காய்ச்சல் குணமடையாத பட்சத்தில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து சகவீரர் சவுரவ் கோசால் கூறுகையில், ""ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-சின்னப்பா ஜோடி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் காரணமாக பல்லிகல் விலகியதை அடுத்து இந்திய அணியின் பதக்க கனவு வீணானது,'' என்றார்.
அரையிறுதியில் அமன்தீப்
குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த 49 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அமன்தீப் சிங், மலேசியாவின் முகமது பாவட்டை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அமன்தீப், அயர்லாந்தின் பட்டி பார்னசை சந்திக்க உள்ளார்.
இதேபோல 52 கி.கி., எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், மலேசியாவின் முகமது சுப்ரியை 9-2 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அரையிறுதியில் சுரன்ஜாய் சிங், பாகிஸ்தானின் ஹாரூன் இக்பாலை எதிர்கொள்ள உள்ளார்.
இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
அகில் குமார் பதிலடி
56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அகில் குமார், இங்கிலாந்தின் இயான் வீவரை 11-6 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வீவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் அகில் குமார்.
சில நிமிடங்களுக்கு முன் நடந்த பரபரப்பான போட்டியில் அகில்குமார் தோல்வியடைந்தார்!
இரண்டாவது அதிகபட்சம்
டில்லி, காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 24 தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் காமன்வெல்த் அரங்கில், 2வது அதிகபட்ச தங்கப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. முன்னதாக கடந்த 2002ல் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 30 தங்கம் வென்றிருந்தது. கடந்த 2006ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் 22 தங்கம் வென்றிருந்தது.
சானியா வெள்ளி
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியோனோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை ரோடியோனோவா 6-3 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட சானியா 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்று "டை-பிரேக்கர்' வரை நீடித்தது. இதில் இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியியல், நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் சானியா (6-7). இறுதியில் சானியா 3-6, 6-2, 6-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
பூச்சிகள் தொல்லை
நேற்று டென்னிஸ் போட்டிகள் நடந்த ஆர்.கே. கண்ணா டென்னிஸ் மைதானத்தில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் வீரர்கள் மட்டுமல்லாமல், போட்டியை காண வந்த ரசிகர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பெண்கள் ஒற்றையர் பைனலில் போது சானியா மிர்சா, அனஸ்டாசியா ரோடியோனோவா இருவரும் பாதிப்படைந்தனர். பின்னர் நடந்த ஆண்கள் இரட்டையர் 3வது இடத்துக்கான போட்டியில் பயஸ்-பூபதி, போபண்ணா-சோம்தேவ் ஜோடிகள் மோதின. இதில் சோம்தேவ் கண்ணுக்குள் பூச்சி சென்றதால், பாதிப்புக்கு உள்ளனார். பூச்சிகளை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெரும் ஏமாற்றம் அளித்தது.
மோனிகா வெண்கலம்
பெண்களுக்கான 75 கி.கி., பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மோனிகா தேவி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பயஸ்-பூபதி வெண்கலம்
ஆண்கள் இரட்டையர் 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, சகநாட்டைச் சேர்ந்த சோம்தேவ் தேவ்வர்மன்-ரோகன் போபண்ணா ஜோடியை சந்தித்தது. இதில் பயஸ்-பூபதி ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.
ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்
பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் நேற்று இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீபிகா தாகூர் (11, 21வது நிமிடம்), சுரிந்தர் கவுர் (34வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணிக்கு பிட்டி கோயட்சி (46வது) கோல் அடித்தார்.
இதன்மூலம் "ஏ' பிரிவு லீக் போட்டியில் மூன்று வெற்றி கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. தலா 7 புள்ளிகள் பெற்று இந்தியா (+8 கோல்), தென் ஆப்ரிக்கா (+11 கோல்) அணிகள் இருந்தன. இதில் கோல் அடிப்படையில் இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் நாளை நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 5வது இடத்துக்கான போட்டியில் மலேசியா அணியுடன் மோதுகிறது.
ஆண்கள் ஹாக்கி: இந்தியா வெற்றி
ஆண்கள் ஹாக்கி "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு முன்னேறிவிடும். "ஏ' பிரிவில் மூன்று வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
சற்றுமுன் முடிவடைந்த காலிறுதி 60Kg -க்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் ஜெய் பகவான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நைஜீரிய வீரரின் முகத்தில் பத்துக் குத்துகள் விட்டு அபார வெற்றி பெற்றார். இதில் நைஜீரிய வீரரின் எந்தக் குத்தும் ஜெய் பகவானின் முகத்தில் விழாமல் மிக அபாரமாக சமாளித்தார் என்பதைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள்!
10-0 என அபார வெற்றி பெற்றுள்ளார் ஜெய் பகவான். இந்த குத்துக்கள் அரையிறுதியிலும் தொடர வாழ்த்துகள்!
10-0 என அபார வெற்றி பெற்றுள்ளார் ஜெய் பகவான். இந்த குத்துக்கள் அரையிறுதியிலும் தொடர வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
சோதனையிலும் சாதனைகள் மென்மேலும் பெருக வாழ்த்துகள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
இந்தியா மற்ற விளையாட்டு துறையிலும் இது போல சாதிக்க வேண்டும் நாமும் ஆதரவு தர வேண்டும்
Last edited by maniajith007 on Sun Oct 10, 2010 3:04 pm; edited 1 time in total (Reason for editing : வேண்டும் என்பதற்கு பதில் வேண்டாம் என தவறாக இருந்துது)
Re: நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
இப்பொழுது இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது!
நேற்று இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தது!
நேற்று இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான்காவது தங்கம் வென்றார் நரங்! இந்திய நட்சத்திரங்கள் அபாரம்
வீரர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்
» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
» மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
» துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்
» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
» மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|