புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_m10அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Oct 10, 2010 8:16 pm



நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது. இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா?

முதலில் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெரிய டெக்னிகல் வார்த்தைகளுக்குப் போகாமல் பொதுவாக கண்டறியப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம்.

அணுக்களில் இருந்து x கதிர்களும், பலவிதமான சக்தி வெளிப்பாடுகளும் வெளிப்படுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப் பார்த்தார்கள்.

அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில ப்ரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். உதாரணமாக ஒரு மிகப் பெரிய மண்டபத்தை அணுவென்று எடுத்துக் கொண்டால் கடுகு அளவு தான் அதன் உட்கரு இருந்தது.

அந்த அணுத்துகள்களை ஆராய்ந்த போது தான் விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். எதையும் ஆணித்தரமாக சொல்லும் சக்தி படைத்ததாக கருதப்பட்ட விஞ்ஞானம் அணுவைப் பிளந்து பார்த்த போது பிரமித்து பேச்சிழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்தத் துகள்கள் சில சமயங்களில் திடப் பொருளாகக் காணப்பட்டாலும் சிலசமயங்களில் அலைகளாக மாறுவதைக் கண்டு அதிசயித்தார்கள். துகள் என்றால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அலை என்றால் அது எங்கும் பரவி இருப்பது. ஆனால் ஒரே வஸ்து இந்த முரணான இரட்டை நிலைகளில் எப்படி இருக்க முடியும்? சில சமயங்களில் பார்க்கின்ற போதே பார்க்கும் விதத்திற்குத் தக்க துகள்கள், அலைகள் என மாறிக் காட்சி அளிக்கும் இந்த வினோதம் விஞ்ஞானம் இது வரை கண்டிராதது. இதுவே ஐன்ஸ்டீன் சொன்ன க்வாண்டம் சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம்.

மேலும் ஒரு துகள் அணுவுக்குள் இந்த இடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு துகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு கோணத்தில் பார்க்கும் போது துகளாகத் தெரிவது வேறொரு கோணத்தில் காணாமல் போய் அலையாக மாறி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாய் எப்படி அது இருக்க முடியும் என்பதை விஞ்ஞானம் விளக்க முடியாமல் திணறியது.

கடைசியில் அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக் கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். அவை சக்திகளை பல விதங்களில் வெளிப்படுத்துவதையும், புதிது புதிதாக மாறுவதையும் கண்டு அதிசயித்தனர். இயற்கை விஞ்ஞானிகளுக்கு வசதியாக எதையும் தனியாகப் பிரித்துக் காட்டவில்லை. அவர்களால் உணர முடிந்ததெல்லாம் அந்த துகள்களின் இயக்கத்தின் விளைவுகளையே. முடிவில்லாத இந்த இயக்கத்தின் விளைவாக ஏற்படும் ஒட்டு மொத்த வடிவமைப்பே நாம் காணும் பொருள்கள். உண்மையில் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் சக்தி இயக்கம் தான், உலகமே சக்தியின் துடிப்பு தான் என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது. சில உண்மைகள் தெளிவாக வார்த்தைப்படுத்த முடியாதவை என்பதையும் அறிவியல் ஒத்துக் கொண்டு இருக்கிறது.

இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.

சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே"

"அதை உடை"

"உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:
"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.
அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."

இதையெல்லாம் முதலில் சொன்ன அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகளை அறிந்தும் உணர்ந்துமிருந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா?

- என்.கணேசன்







அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 8:20 pm

பொதுவாக வெளிநாடுகளில் நூற்றாண்டு பொருள் பெரும் அதிசயம் அனால் நெல் கொட்டும் பத்தாயம் கூட நூற்றாண்டுகளை கடந்து வாழும் ஒன்று நமது பட்டன் சொத்து மட்டுமல்ல அறிவையும் சேர்த்து மேற்க்கத்திய மோகத்தில் அழித்து கொண்டிருக்கிறோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 8:24 pm

'அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி’ என அன்றே ஔவையாரும் கூறியுள்ளார்.

இன்றைய அறிவியலுக்கு, உபநிடதங்களில் எடுத்துக்காட்டுகளைக் கூறி, நம் முன்னோர்கள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் என சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்!



அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 10, 2010 9:57 pm

சிவா wrote:'அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி’ என அன்றே ஔவையாரும் கூறியுள்ளார்.

இன்றைய அறிவியலுக்கு, உபநிடதங்களில் எடுத்துக்காட்டுகளைக் கூறி, நம் முன்னோர்கள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் என சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்!

”ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால் நாழி”
இதுவும் ஒளவையாரின் அறிவியல். non - compressibility of liquids.
அழுத்தத்தினால் திரவப்பொருள்கள் அளவில் சுருங்காது என்பது.

இது கம்பன் கவி:
”தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்”
தொலைநோக்கியின் தத்துவம் அன்றே.

இன்னும் நிறைய பக்திப் பாடல்களிலும் உள்ளன.

அருமையான உபநிடதச் சான்றுக்கு நன்றி அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் 678642



அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Aஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Aஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Tஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Hஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Iஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Rஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Aஅன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக