புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
prajai
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
383 Posts - 49%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
26 Posts - 3%
prajai
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:08 pm

* கன்னியின் கற்பு கண்ணாடிப் பாத்திரம் போன்றது. உடைந்தால் உதவாது.
* துருப்பிடித்துத் தேய்வதைவிட உழைத்து தேய்வது மேலானது.
* மனிதனுக்கு வலிமை அளிப்பன மூன்று. மரட்டுப் பயில் உறங்குதல், குளிர்ந்த காற்றைச் சுவாசித்தல், உலர்ந்த உணவை உணவை உண்ணுதல்.
* வாழ்க்கையின் துன்பங்களுக்குப் புகழ் ஒரு எளிமயான பிரதிபலன்.
* வக்கீல் வீட்டின் கூரைகள் வழக்காடிகளின் தோல்களால் வேயப்பட்டிருக்கின்றன.
* முதுமைக்கு நூறு கோளாறுகள்.
* செல்வத்தைவிட ஒரு தொழில் மேலானது.
* வம்பு பேசுபவனின் வாய் சைத்தானின் தபால் பை.
* முடிந்ததைச் செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் மேலானது.
* மனிதன் பணத்தைக் கூட்டிக்கொண்டிருகிறான். கடவுளோ அவன் ஆயுளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.
* பணம் என்பது என்ன தெரியுமா? கொஞ்சம் கடனை வாங்கிப்பார். அப்போது தெரியும்.
* மனிதர்கள் கொள்கைக் குருடர்கள்.
* நாம் வைத்திருப்பதைக் கொண்டல்ல. அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி நாளில் கணக்கிடப்படும்.
* பணத்திற்காகத் திருமணம் செய்யாதே! அதை இன்னும் மலிவாகக் கடன் வாங்கலாம்.
* குழந்தைகள் இளமையாக இருக்கும்போது பெற்றோர்களுக்குத் தலைவலி.
* போக்கிரியைக் கட்ட வடம் வேண்டும். ஆனால், நாணயம் உள்ளவனைக் கட்ட நூலே போதும்.
* மனிதன் ஆகாயத்திலிருந்து கொலைக் குண்டுகளை வீசுகிறான். கடவுள் அவனைக் குளிர்விக்க.
* தகாத மனைவியுடன் ஏற்பட்ட வாழ்க்கையானது கண்ணில் பட்ட தூசி போலவும், செருப்பில் சிக்கிய கல்லைப் போலவும் இருக்கும்.
* பணம் இல்லாத மணிப்பர்ஸ் வெறும் தோல்தான். வேண்டுமானால் நாயை விட்டுச் சோதித்துப்பார்.
* புகழ், நீர்மட்டம்போல் பெரிதாகிப் பின்னர் மறைந்துவிடுகிறது.
* விஷயம் இல்லாமல் ஒருவன் நீண்ட நேரம் பேசலாம்.
* மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியது; அவை சென்றதை மறபதுந நிகழ்காலத்தை நேர் வழியில் செலுத்துவது வருங்காலத்தைப்பற்றிச் சிந்திப்பது.
* எல்லா மனிதர்களும் உலகத்திற்கு வர ஒரே மாதிரி நுழைவு வாயிலைப் பெற்றுள்ளனர். ஆனால், வெளியேற அவ்வாறில்லை.
* நெருக்கடியில் துன்பப்படாதவன் ஒருபோதும் புத்தராக முடியாது.
* நல்ல விமர்சகர் மோசமாகச் செயல்படுபவர்.
* மற்றவர்கள் விழுந்ததைப் பற்றிச் சிந்திக்காதே! முன்னால் உள்ள பாதை வழுக்கலானது.
* என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
* கல் மிதக்கும்போது இதழ்கள் அமிழ்ந்து விடுகின்றன.
* கண்கள் தங்களையே நம்புகின்றன. காதுகள் மற்றவர்களை நம்புகின்றன.
* அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பது மரணத்திகாகக் காத்துக்கொண்டிருப்பதுதான்.
* தன்னுடைய அறியாமையை ஒத்துக்கொள்கிறவன் அதை ஒருமுறை காட்டுகிறான். தன்னுடைய அறியாமையை மறைக்கின்றவன் அதை பலமுறை காட்டுகிறான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:08 pm

ஜெர்மனி

* அதிர்ஷ்டம் என்பவள் பலவீனமான கைகளையே பெற்றிருக்கிறாள். எவரை அவள் மேலே உயர்த்துகிறாளோ அவரை விரைவில் கீழே போட்டுவிடுகிறாள்.
* அயலானை நேசி. அதற்காக அவளையும் உன்னையும் பிரித்து வைக்கும் வேலியைப் பிரித்து வீசாதே!
* அன்பும் மனைவியும் இருப்பதுதான் வாழ்க்கை.
* அயோக்கியனைக் கேட்காதே! அவன் தன் கருத்தையே சொல்வான்.
* அநேக வேளைகளில் கவலை ஒரு சிறிய காரியத்திற்குப் பெரிய நிழலைத் தருகிறது.
* அன்னையின் அன்பிற்கு வயதே கிடையாது.
* இளம் மனைவி தன் நிழலாகவும் எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.
* உங்களுடைய கவலைகளை உங்களுடைய முழங்காலுக்கு மேலே போக விடாதீர்கள்.
* உணவிற்குப் பின் ஓய்வு கொள். உன் பெற்றோர்கள் இறந்திருந்தாலும் கூட.
* எப்போதும் உங்களைச் சோம்பல் ஏமாற்றமால் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்று ஒரு நாளை அதற்கு விட்டுக் கொடுத்தால் அடுத்த நாளை அதுதானே திருடிக்கொள்ளும்.
* ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பயணம் கடினம். திரும்பி வருவது எளிது.
* எளிமையே உயர்ந்த இன்ப வாழ்க்கை.
* ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கிறது.
* உன்னடைய நோக்கம் தூய்மையான தென்றால் கடலின் மேலும் நடக்கலாம்.
* ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.
* ஒரு புலி இறக்கும்போது தனது தோலை விட்டுச் செல்கிறது. ஒரு மனிதன் தான் இறக்கும்போது தனது நற்பெயரை விட்டுச் செல்கிறான்.
* ஒரு பெண்ணுடைய உபதேசம் கேவலமானதுதான். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாதவன் முட்டாளாகின்றான்.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்.
* கடவுள் பல இல்லாதவனுக்குப் பாதாம் கொட்டை வழங்குகறான்.
* பயத்தைக்குறை - துணிவைப் பெருக்கு
* உணவைக் குறை - உழைப்பைப் பெருக்கு
* குடியைக் குறை - மூச்சைப் பெருக்கு
* பேச்சைக் குறை - அன்பைப் பெருக்கு
* எல்லா நன்மைகளும் உன்னுடையதாகும்.
* கடன் வாங்குவது பிச்சை எடுப்பதின் அடுத்தபடி.
* கருணையை எதிர்க்கும் வலிமையுள்ள வாளாயுதம் எதுவுமே இல்லை.
* காரிகை, காற்று, காசு இவை மூன்றும் மாறிக்கொண்டே இருப்பவை.
* காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றவன் துன்பத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
* குற்றத்தை ஒப்புக்கொள்வது நேர்மையின் முல்படி.
* தாயின் நற்குணம் கடவலைவிட ஆழமானது.
* த்தைஇன் நற்குணம் மலையைவிட உயரமானது.
* தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்துபோகும் பயிருக்குச் சம்மானவள்.
* பட்டாடை அணிந்து ரகம் செல்வதைவிட, கந்தை அணிந்து சொர்க்கம் செல்வது மேலானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:09 pm

# பச்சாதப்ப்படாதவனை மன்னிப்பது எனபது நீரின் மேல் சித்திரம் வரைவதைப் போலாகும்.
# படுக்கப்போகும் முன் கவலைகளைச் செருப்போடு கழற்றி வைக்க வேண்டும்.
# பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
# பெரிய பணக்கார்ர்கள் மூன்று தலைமுறைக்கு மேல் பெரிய பணக்கார்ர்களாக இருக்க முடியாது.
# மனித இனம் பெருந்தன்மையானதுதான். ஆனால், மனிதர்கள் சிறுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
# மனைவியரும், படுக்கும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பாய் இருப்பவை.
# மூளையின் அறியாமையால் உடல் களைப்படைகிறது.
# மாமியாருக்கு மரியாதை காட்டினால் தினமும் மூன்று முறை வந்து சலிப்படையச் செய்வாள்.
# மூன்று பொருட்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன - நீர், பூக்கள், அழகிய முகம்.
# மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கே கோபம் வரும்.
# விகாரமான பெண் கண்ணாடியைக் கண்டு அஞ்சுவாள்.
# வெற்றி பெற்றவர்கள் அரசர்கள். தோல்வியுற்றவர்கள் திருடர்கள்.
# ஒருமுறை மகள் வாயில் நுழைகிறவன் மிக அரிதாகவே அவைகளிலிருந்து வெளியே வருகிறான்.
# ஒவ்வொரு மணிநேரமும் காயப்படுத்துகிறது. கடைசி மணிநேரம் கொன்றுவிடுகிறது.
# அரசர்களின் நாய்க்கும் பேன் பிடிப்பதுண்டு.
# புரிந்துகொள்வதற்கு கடினமானதை உங்கள் முன்னால் வையுங்கள். புரிந்துகொள்வதற்கு இலகுவானதை உங்கள் பின்னால் வையுங்கள்.
# பூமியில் ஒரு குடிசையைக் கட்டச் சாமர்த்தியம் இல்லாத பலர் காற்றில் கோட்டைகளைக் கட்டுகின்றனர்.
# திறந்த பெட்டி, துறவிகளையும் ஊழல் புரியச் செய்கிறது.
# மேன்மக்கள் பாவம் புரியம்போது ஏழை மக்கள், பாவபரிகாரம் செய்கிறார்கள்.
# பன்னிரண்டாவது வயதில் பிள்ளைப் பிராயமும், பதினெட்டாது வயதில் இளமையும், இருபத்தியோராவது வயதில் காதலும் முப்பதாவது வயதில் மனிதர்களின் விசுவாசமும், நாற்பதாவது வயதில் நம்பிக்கைகளும், ஐம்பதாவது வயதில் ஆசைகளும் அறுபதுக்குமேல் சிறுகச் சிறுக ஐம்புலன்களும் புதைக்க படுகின்றன.
# கைக்கும் வாய்க்கும் இடையே நிறைய இழப்பு இருக்கிறது.
# விடுமுறை நாட்கள் அரசைர்போல வருகிறது. பிச்சைக்காரர் போலப் போகிறது.
# ஒரு விதவை தாழ்ந்த தாழ்ந்த வேலி. அதன்மேல் ஒவ்வொருவரும் தாண்டுகிறார்கள்.
# இரண்டு பெண்கள் உள்ள அங்கே வீடே இல்லை.
# எப்போதுமே வாழப்போகிறோம் என்று ஒருவர் வீடுகட்ட வேண்டும். நாளையே சாகப்போகிறோம் என்று வாழ வேண்டும்.
# வெய்யிலில் இருப்பது ஒன்று பழுக்கிறது அல்லது உதிர்கிறது.
# நேர்மை எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஆனால், வெற்றி எப்போதும் நேர்மையில் இருக்கிறது.
# முகஸ்துதி இனிய நஞ்சு
# பிர்ர்த்தனை செய், எந்த வேலையும் துணை புரியாது என்பதைப்போல, வேலை செய், எந்தப் பிரார்த்தனையும் துணை புரியாது என்பதைப்போல.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:09 pm

ஸ்காட்லாந்து

* அறிவைவிட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
* அநேக சமயங்களில் ஒரு மனிதனின் அறியாமைக்காக ஒரு நாடே துன்பப்படுகிறது.
* அழகிய பெண் எது செய்தாலும் நம்மால் குற்றம் கண்டுபிடிக்க முடியாது.
* அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்போதும் மோசமான குழந்தைகள்.
* அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
* அழகான கடைக்காரி புளித்த கள்ளையும் விற்க முடியும்.
* அதிகப் பேச்சு, பொய் இவை இரண்டும் நெருங்கிய உறவினர்கள். ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு இடையில் ஒரு உறுதியான சுவர் இருக்கட்டும்.
* ஆணகள் சந்திக்கும்போது ஒருவர் பேச்சை ஒருவர் கேட்கிறார்கள். பெண்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.
* இறந்துபோன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.
* இதயமும் நாக்கும் சிறியவை. ஆனால், அவை ஒரு மனிதனின் உயர்வைக் காட்டுகின்றன.
* இளங்கன்னிகள் திராட்சைப் பழங்கள்.
* இளமையில் சூதாடுபவர்கள் முதுமையில் பிச்சை எடுப்பார்கள்.
* இசைக்கருவியைப் போல் காதலியை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்திட முடியாது.
* இதயம் சாவதைவிட கண்கள் சாவது மேலானது.
* உலகமானது வீர்ர்க்கே உரியது.
* உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்காதீர்கள்.
* உழைப்பின் வேர்கள் கசப்பானவை; அதன் கனிகள் இனிப்பானவை.
* கணவனின் அன்பு - பெண்ணின் வாழ்வு.
* கண் உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான்.
* கறுப்பும் ஒரு நிறமே.
* கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
* கடன்படுகிறவன் எவனோ அவன் கவலையைத் தேடி கொண்டிருக்கிறாள்.
* கணவனுக்கு குணத்திற்கு முன்னால் அறிவு தேவை. மனைவிக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
* கடிதம் பாதி சந்திப்புக்குச் சமம்.
* காப்பியும் காதலும் சூடாயிருந்தால்தான் சுவைக்கும்.
* காதலின் கண்ணுக்கு ரோஜா மலர்தான் தெரியும். முட்கள் தெரியாது.
* குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பவள் காவிய மனைவி.
* குடுட்டுக் குதிரையை விற்பவன் அதன் கால்களைப் புகழ்வான் கொடுத்த வாக்குறுதகளை உடனே நிறைவேற்றாவிட்டால், அது நாளுக்கு நாள் தேய்ந்து விடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:10 pm

# கூக்குரலைவிடப் பெருமூச்சு அதிக தூரம் செல்கிறது.
# சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டு தொங்கும்.
# சொத்தையான விதையைப் போட்டுவிட்டு முளைக்கவில்லையே என்று வருந்துகிறவன் படுமுட்டாள்.
# தந்திரம் ஆடையணிந்து செல்ல வேண்டும். ஆனால் சத்தியம் நிர்வாணமாக செல்கிறது.
# தன்னை அறிவது அறிவு. தன்னை மறப்பது மடமை.
# தானும் கட்டளையிட மாட்டான். பிறரின் கட்டளைக்கும் கீழ்ப்படியமாட்டான். அவன்தான் ஒன்றும் உதவாதவன்.
# பணக்காரனாக விரும்புகிறவன் தனது மனசாட்சியை தன் பெட்டியினுள் வைத்துக்கொள்ள வேண்டும்.
# பயந்தவன் பத்து தைரியசாலிகளைப் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி விடுவான்.
# நட்பு என்ற செடிக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
# நல்லவளாக இருப்பதைவிட அழகியா இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விருப்புகிறாள்.
# நீ மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்பாததை, மற்றவர்களிடமிருந்து நீ கேட்க்க் கூடாது.
# நீ போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய். கடல் பயணம் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய். ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்போத மூன்று தடவை பிரார்த்தனை செய்.
# நெருப்பில் ஊதினால் கண்களில் தீப்பொறிகள் விழும்.
# நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்துகொள்.
# நோயைத் தெரிந்து கொள்பவன்தான் மருத்துவன்.
# நெருப்புக்காகப் புகையைப் பொறுத்துக்கொள்கிறோம்.
# நேராக இதயத்திலிருந்து வருவது நேராக இதயத்திற்கு செல்கிறது.
# மனைவி வரும்வரை என் மகள் என்னுடைய மகள். என் மகள் அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடைய மகள்.
# முதுமை எல்லா நோய்களையும் ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனை.
# முதுமையில் எவ்வளவு தேவைப்படும் என்பது இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி தன் பணப் பையை மூடிக்கொள்ளும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:11 pm


ஹாலந்து


* ஒருவனிடத்தில் பணம் இருக்கிறது. மற்றொருவனிடத்தில் பணப் பை இருக்கிறது. உலகில் இப்படித்தான் நடக்கிறது.
* திருமணத்தை ஒரு முறை செய்துகொள்வது கடமை. இருமுறை செய்துகொள்வது முட்டாள்தனம். மும்முறை செய்து கொண்டாலோ பைத்தியக்காரத்தனம்.
* சன்னலருகே உட்காரந்திருக்கும பெண் ஒரு நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் பழுத்திருக்கும் திராட்சைப் பழக் கொத்துக்களைப் போன்றவள்.
* சாபங்கள் - கோழிக்குஞ்சுகள் போன்றவை. அவை வீட்டிற்குத் திரும்பிவிடும்.
* நண்பர்கள்தான் மிக நெருங்கிய உறவினர். காதல் கடிதம் எழுதும் காதலி மெலிகிறாள். கடிதம் கொண்டுபோய்க் கொடுப்பவர்கள் இரு பக்கங்களிலும் பணம் கிடைப்பதால் கொழுக்கிறார்கள்.
* முடியாமைகள் மீது மோதிப் பார்ப்பதற்கு அறிவாளி எப்போதும் விரும்ப மாட்டான்.
* நீ என்பது என்னவென்று சொல். நீ யார் என்பதை நான் சொல்கிறேன்.
* நேற்று செய்த தவறை ஒத்தக்கொண்டால் இன்று நீ அறிவாளி என்பதை உணர்த்தும்.
* வைரம் போன்ற மகள் திருமணமானதும் கண்ணாடியாக மாறுகிறாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:11 pm

பல்கேரியா

* அவசர வேலை இரட்டிப்பு வேலை.
* ஆண்களைவிட பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு.
* இன்சொல் இரும்புக் கதவைத் திறக்கிறது.
* உலகில் மூன்று பொருட்கள் மிகவும் மதிப்புள்ளவைகளாக கணக்கிடப்படுகின்றன. அறிவு, தானியம், நட்பு.
* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே ஆண்டவன் இருக்கிறான்.
* ஒருவனின் உள்ளச் சிந்தனைகள்தான் ஒரு மனிதனுடைய செல்வம்.
* என்னைத் துன்புறுத்துகிறவன் எனக்கு பலத்தைப் போதிக்கிறான்.
* ஓநாயைப் பார்த்தவன் ஒரு தனவை கூச்சலிடுவான். அதைப் பார்க்காதவன் இரண்டு தடவை கூச்சலிடுவான்.
* கடவுஇடம் கேட்டால் கிடைக்காதது ஒன்றுமில்லை.
* சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம் நிதானமாக இருப்பது நல்லது.
* சிரியுங்கள், உங்களுடன் சிரிக்க நிறையப்பேர் வருவார்கள். அழுங்கள், எவரும் உங்களுடன் வரமாட்டார்கள்.
* பசி தீர்ந்தவன் பசிக்கிறவனை நம்புவதில்லை.
* பழத்தைச் சாப்பிட பூவைப் பாதுகாத்தல் வேண்டும்.
* பணத்தில் ஒரு பகுதியை மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும். இரண்டு பகுதிகளை தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும். நான்காவது பகுதியைச் சேமித்து வைக்க வேண்டும். அது அவசரத்திற்கு உதவும்.
* பாலைக் கறப்பதற்கு முன் அவர்களைப் பசுவை தடவிக்கொடுக்கிறார்கள்.
* பொறுமை வாழ்வின் காய கல்பம். கள்வனுடைய தோழன் கள்வன்.
* மனம் கடல் போன்றது. பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.
* மெதுவாகச் சாப்பிட்டால் வயிற்றுவலி வராது.
* மேகங்களைப்போல் நல்லவர்கள் கொடுப்பதற்காகவே பெறுகிறார்கள்.
* முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பல் இல்லாக் கடல் யாத்திரை போன்றது.
* நீ நூறு வருடம் வாழ்பவனைப் போல் வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப்போல் சிந்தனை செய்.
* நரகத்திலிருந்து வந்தவன் கடும் சாம்பலுக்கு அஞ்சமட்டான்.
* நாக்கும் பற்களும் இடையிடையே சண்டையிடுகின்றன.
* நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:11 pm

# விசாரித்தறிவது நஷ்டமும் அல்ல. கேவலமும் அல்ல. அதிகம் கொக்கரிக்கும் கோழி சின்ன முட்டைகளை இடும்.
# வருகை புரியாதவன் நல்லவன்.
# புண்ணியம் இல்லாமல் வீரன் இல்லை.
# இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
# நீண்ட காலம் வாழ விரும்பினால் இதயத்தைத் திற.
# நம்முடைய இளமையில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக நம்புகிறோம். முதுமையின் பல விஷயங்கள் உண்மையாக இருக்கிறதா என சந்தேகப்படுகிறோம்.
# இளமையில் திருமணம் செய்துகொள். நீ இன்னும் இளமையாக இருக்கும்போதே பெரிய குழந்தைகளை அடையலாம்.
# இளமை தெரிந்திருந்தால் முதுமை செய்ய முடிந்தால் அற்புதம் நிகழும்.
# கலப்பையும் மண்வெட்டியும் உலகிறகு உணவு ஊட்டுகின்றன.
# உணவுக்குகந்த பறைவைகள் நீண்ட காலம் வாழ்வதில்லை.
# தலைகள் உள்ள காலம் வரையில் தொப்பிகள் இருக்கும்.
# பல நல்ல வாய்ப்புகள் கதவின் மேல் கட்டப்படாததால் நழுவிவிடுகின்றன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:12 pm

பாரசீகம்

* ஒவ்வொரு வியாதிக்கும் இறைவன் ஒரு மூலிகையைப் படைத்திருக்கிறார்.
* ஒரு பவுண்டு அறிவைப் பெறுவதற்கு, பத்துப் பவுண்டு பகுத்தறிவைப் பெற வேண்டியிருக்கிறது.
* சட்டைப் பையிலுள்ள பூந்தோட்டத்தைப் போன்றது புத்தகம். முட்டை வேண்டுமென்பவன் கோழிகளின் சலசலப்பை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
* பாவத்தில் வாழ்கிறவன் உயிரோடு புதைகப்படுவான்.
* நான்கு புத்தகங்களை வைத்திருப்பவனுக்கு நான்கு கண்கள்.
* கணவன் இல்லாத பெண் கடிவாளம் இல்லாத குதிரை.
* கடைசிப் பல் இருக்கும்வரை நரிக்கு பக்தி ஏற்படாது.
* கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் இழக்கப்பட்டிருக்கின்றன.
* கவலை இல்லாத தலை தோட்டத்தில் கிடக்கும் பூசணிக்காய் மாதிரி.
* சகுமில்லாத எவனும் பணக்காரனல்ல.
* எண்ணி ஒதுக்கி வைக்கப்பட்ட ஆடுகளையும் ஓநாய் தின்னும்.
* நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், நீ உன் இதயத்தை திற.
* கல்யாணத்திற்கு அழைப்பு வந்து செல்ல வேண்டும்; சாவிற்கு அழைக்காமலேயே செல்ல வேண்டும்.
* முதல் மனைவி மனைவியாக இருப்பாள். இரண்டாம் மனைவி வீட்டு எஜமானியாய் இருப்பாள். மூன்றாமவள் சிலுவைபோல் கும்பிட வைப்பாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:13 pm

பிரான்சு

* ஆசை இல்லாத மனிதன் ஆத்ம மகனல்ல.
* கண் மறைந்ததும் மனமும் மறைகிறது.
* வேட்கை வாலிபத்தின் தவறல்ல.
* காலத்தாலும், பொறுமையாலும் முசுக்கொட்டை இலை பட்டாசு ஆகிவிடுகிறது.
* முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்துவிடாதே, உன்னை விழுங்கிவிடும்.
* பழம் இருக்கும் மரத்தை நோக்கித்தான் கற்களையும் கழிகளையும் விட்டெறிகிறார்கள்.
* பெண்ணால் துயரமே வரும். இருப்பினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
* பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்; இல்லாதவனுக்கு கவலை.
* பணக்காரன் பைத்தியக்காரனைப் போல.
* முகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது.
* கன்னிப் பெண்ணைச் சுட்டாலும் சுடு. ஆனால், அவளை அவதூறாக மட்டும் பேசாதே!
* மக்கள் உன் நற்பெயருக்கு தீங்குச் செய்யலாம். உன்னுடைய நற்குணத்திற்கு அல்ல.
* ஒவ்வொரு மனிதனும் தனது நாட்டை நேசிக்கிறான். அது நரகமாக இருந்தாலும் கூட.
* குறைவாகக் கொடுப்பவன் தனது நெஞ்சத்திலிருந்து கொடுக்கிறான். மிகுதியாக்க் கொடுப்பவன் தன் செல்வத்திலிருந்து கொடுக்கிறான்.
* மன்னன் ஒருபிடி உப்பைத் தனக்கென்று அள்ளினால், மறு வினாடி உப்பு மலையே காணாமல் போய்விடும்.
* வாலிபன் கண்ணாடி மூலம் பார்த்து அறிவதை, அனுபவசாலி செங்கல் மூலம் கூடப் பார்த்துத் தெரிந்துகொள்வான்.
* காதல், இருமல், புகை, பணம் ஆகியவை நெடுநாள் அந்தரங்கமாக இருக்க முடியாது. என்ன செலவழிக்கிறான் என்று அறிய மாட்டான்.
* சந்தேகப்படுபவனை வேலைக்கு வைக்கக் கூடாது. வேலை செய்கிறவர்களைச் சந்தேகப்படக்கூடாது.
* வேறு அழகு எதுவும் இல்லை, உண்மையைத் தவிர.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக