புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகப் பழமொழிகள் - Page 3 I_vote_lcapஉலகப் பழமொழிகள் - Page 3 I_voting_barஉலகப் பழமொழிகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:23 am

# உலகில் மனிதனைவிட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. மனிதனின் மனத்தைவிட உயர்ந்த பொருளும் ஒன்றில்லை.
# வெட்டி வீழ்த்திய கோடரியையும் மணக்கச் செய்கிறது சந்தனம்
# மழைக்காலத்தில் பயணம் புறப்பட விரும்புவாய்; ஆனால் கோடைக்காலத்தில் சக்கரங்கள் செய்.
# அதிகமாகப் பயன்படுத்தப்பட கலப்பை மின்னுகிறது. தேங்கிய தண்ணீர் நாறுகிறது.
# கொண்டு வருபவர் இல்லையென்றால் பெற்றுக் கொள்பவரும் இலை. திருடர்கள் இல்லையென்றால் வேலியும் இல்லை.
# உழுகின்ற கைகளையும் ரொட்டிக்கு மாவு பிசையும் கைகளையும் போற்றி வணங்கு.
# கடவுளுக்குக் காலம் உண்டு; உழவர்களுக்கு ரொட்டியுண்டு.
# வசந்த காலத்தில் உழவன் ஒரு மூட்டை அறியாமையைச் சுமக்கிறான். இலையுதிர் காலத்தில் ஒரு மூட்டை அறிவைச் சுமக்கிறான்.
# பித்தளை ஏழைகளின் தங்கம், ஈயம் தேவையானவர்களுக்கு வெள்ளி.
# புண்ணியவதியும் உடைந்த காலும் வீட்டிலேயே தங்கிவிட வேண்டும்.
# எது உன்னை அடிக்கிறதோ அது உனக்கொரு பாடம். எது உன்னை இழந்ததோ அது வீணானது.
# எங்கு உன்னால் எதையும் எட்டிப்பிடிக்க முடியவில்லையோ, அங்கு உன் கையை நீட்டாதே!
# பெண்ணிடம் சொன்ன இரகசியத்தைவிட, அதிகத் தண்ணீரை சல்லடை பிடித்து வைத்திருக்கிறது.
# போதும் என்பது ஒவ்வொருவரின் எஜமான்ன்.
# மருமகள் மாமியாரின் மருந்து.
# எவருக்கும் தாயும் தந்தையும் கற்றுத் தரவில்லையோ அவருக்கு உலகம் கற்றுத் தருகிறது.
# மிகுந்த பணிவு பாதி கர்வம்.
# சமமான பாதையில் ஒரு சிறு கல்கூட சுமை வண்டியைப் புரட்டிவிடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 2:58 pm

ஐரிஷ்

* எவ்வளவு காலம் நீ வீட்டைவிட்டு வெளியே இருந்தாலும் நீ உன்னைப்பற்றி ஒரு கெட்ட கதையை வீட்டுக்கு கொண்டு வராதே!
* வாயிலே உறவு, மனதிலே பகை.
* களிப்புற செய்வதற்கும் விருந்தோம்பலுக்கும் கெட்டவனாக இருக்கும் மனிதன் உன்குப் பாதையைக் காட்டுகிற நல்லவன்.
* மூடிய வாய் அமைதி நிறைந்தது.
* ஒரு வழக்கத்தை உடைத்து எறியாதே! புதிதாக ஒரு வழக்கத்தை கண்டுபிடிக்காதே!
* எங்கே வரதட்சணை உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது.
* உன் சொந்த மூக்கு இன்னும் உனக்கு அறிவுரை கூறலாம்.
* காலிப் பையினுள் கையை விடுவதால் ஒரு நன்மையும் இல்லை.
* பாதை வளைந்திருக்கட்டும்; நேராக இருக்கட்டும் நெடுஞ்சாலை தான் குறுக்கு வழி.
* தன்னைவிடச் சிறந்த தூதனை குள்ளநரி ஒருபோதும் அனுப்பாது.
* அபூர்வம் என்பது எதற்கும் கடைசி. முதன்மையை விட சிறந்தது.
* தனக்கு எதிராகச் சில விஷயங்கள் போகும்வரை ஒருவர் புத்திசாலி இல்லை.
* இதயம் திருப்தியானால் கண்களுக்கும் திருப்தியே.
* கப்பலின் ஆரம்பம் ஒரு ‘பலகை’. சூளையின் ஆரம்பம் ஒரு ‘கல்’ இளவரசரின் ஆட்சிக்கு ஆரம்பம் ‘வருக’ என ஒரு நல்வாழ்த்து உடல் நலத்தின் ஆரம்பம் ‘உறக்கம்’
* நட்சத்திரங்கள் ஓசை இடுவதே இல்லை.
* தனிமையைவிட வாக்குவாதமே மேல்.
* சுமை ஏறிய சோளக் கதிர்தான் தன் தலையை மிகத் தாழ்த்தித் தொங்கப் போட்டுக்கொள்ளும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 2:59 pm

கலிபோர்னியா

* அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்தம் வருந்தியதே இல்லை.
* செல்வம் என்பது பணம் மட்டுமல்ல.
* கணவனின் பலம் கையிலிருக்கிறது; மனைவியின் பலம் நாக்கிலிருக்கிறது.
* கைம்பெண் கூரையில்லாத கட்டிடம்.
* கிழவிகளையும் ஓநாய்களையும் படைத்த இறைவன் உலகைப் பாழாக்கிவிட்டான்.
* சமையல் மோசமானால் ஒருநாள் இழப்பு; அறுவடை மோசமானால ஓராண்டு இழப்பு; திருமணம் மோசமானால் ஆயுள் முழுதும் இழப்பு.
* பயமின்றி வளரும் பெண்குழந்தை பெருமையில்லாமல் இறக்கும்.
* ஊசி இல்லாத பெண், நகம் இல்லாத பூனை.
* ஏழைப் பெண்ணின் வயல் அவள் முந்தானையிலேயே இருக்கும்.
* ஒருத்தியை நீ அடையும்வரை அவள் கவர்ச்சியாகத்தான் இருப்பாள்.
* கணவன் தலை - மனைவி இதயம். இப்படியுள்ள திருமணம் இன்பமானது.
* மாதா கோயிலுக்குச் செல்லும் பாதையில் இருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே!
* மனைவி, கப்பல், குதிரை இம்மூன்றையும் மற்றவரை நம்பி ஒப்படைக்காதே!
* மற்றவர்களுடைய தவறுகள் நமக்கு நல்ல ஆசிரியர்கள்.
* அமைதியான நீர் ஆழமான குளம்.
* நீதிக்கு நட்பில்லை.
* பழக்கத்தைப் பசி, சத்தியத்தைப் பேசு.
* தீய செயலைப் பனிக்கட்டியின் மேல் எழுது; ஆனால், நற்செயலை பாறையின் மேல் எழுது.
* கடின உழைப்பாளியும் நற்சுகமும் நண்பர்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 2:59 pm

கிரேக்கம்

* எல்லாத் தீமைகளின் ஆதாரமும் குடி.
* அவர்கள் உன்னைக் குடித்திருக்கிறாய் என்று சொல்லும்போது சுவரைப் பிடித்துக்கொள். போய்க்கொண்டே இரு.
* உதாரணத்திலிருந்து பிறந்த தத்துவமே சரித்திரம்.
* ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு தேள் தூங்குகிறது.
* எல்லா மக்களைப் பற்றியும் நல்லதாகப் பேசுவதே எப்போதும் நல்லது.
* எதையும் விரும்பாதவன் உண்மையான செல்வந்தன். எல்லாவற்றையும் விரும்புவன் உண்மையன ஏழை.
* குள்ளநரிகளைவிட மிகவும் உற்றுக் கவனிப்பது அண்டைவீட்டுக்காரரே.
* முழு வாழ்வைவிடப் பாதி வாழ்வு எவளவு சிறந்தது என்பதை இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
* உண்மையின் கதை எளிதானது.
* இழப்பு தரும் துன்பங்களின் அளவிற்கு ஆதாயங்கள்.
* கேளாத இசை மதிப்பை அடையவில்லை.
* பல காரியங்கள் அனுபவத்திற்கு மாறாகவே நடக்கின்றன.
* அறிஞன் தன்னுடைய அதிர்ஷ்டத்தை தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.
* அவதூறுக்கு சேதப்படுத்தும் வகையில் புகழ் நம்மை உருவாக்குகிறது.
* அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு ஒவ்வொருவரும் உறவினர்.
* குழல் ஊதுபவர்களிடையேகூட நாவிலிருந்து ஒரு ஓசை வர இயலும்.
* குஷ்டரோகிக்கு மோதிரத்தை விற்க முயல்வது பயன்றறது.
* அறிஞன் அனுமதிக்காவிட்டால் அது கெட்டது. ஒரு முட்டாள் புகழ்ந்தால் அது மோசமானது.
* மௌனம் தீங்கு செய்வது அரிது.
* இளமையில் மௌனம் சிறந்தது பேச்சைவிட.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:00 pm

# எங்கே வலி இருக்கிறதோ அங்கே கை இருக்கிறது.
# பள்ளிக்கூடத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும் விலங்குகள் தங்களுடைய மோசமான எதிரிகளை எதிர்த்து இயல்பாகவே காத்துக்கொள்கின்றன.
# உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.
# மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.
# பெண்ணின் ஆயும் கண்ணீர்.
# அதிர்ஷ்டசாலிக்குச் சேவல்கூட முட்டையிடும்.
# ஒரு விநாடி பொறுமை பத்து விநாடி சுகம்.
# பொய்யன் உணைமையைச் சொல்லும்வரை அவனைப் பொய்கள் சொல்லவிடு.
# இனிமையான குணநலன்கள் கொண்ட நல்ல மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் தன்னுடைய வாரிசுகளாவே ஆக்கிவிடுகிறான்.
# முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.
# காதல், அரசியல் இரண்டும் சூதாட்டம்; இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் செய்வதால்தான் வெற்றிபெற முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:00 pm

சீனா

* அறத்தின் வாசல் திறப்பதற்குக் கடினம். ஆனால், சுலபமாக மூடப்படாது.
* தோண்டும் கலையில் ஒரு சுண்டெலிகூட தத்துவ ஞானிக்குப் போதிக்கலாம்.
* சாமர்த்தியமான மனிதன் பெரும் தொல்லைகளை சின்னவைகளாக மாற்றிவிடுகிறான். சின்னத் தொல்லைகளை ஒன்றமே இல்லாதவைகளாக மாற்றிவிடுகிறான்.
* சகிப்புத் தன்மை என்ற ஒருசொல்லே ஒரு வீட்டின் விலை மதிக்க முடியாதது.
* மனிதர்கள் நூறு ஆண்டுகள் வாழ்வதில்லை. எனினும் ஓராயிரம் ஆண்டுகளுடைய துன்பங்களுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
* சொர்க்கத்திற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால், ஒருவரும் அதில் பயணம் செய்வதில்லை. நரகத்திற்கு வாசல் இல்லை. ஆனால், மனிதன் அங்கே உள்ளே போக ஊடுருவிச் செல்கிறான்.
* சோம்பேறி நீண்ட நூலைப் பயன்படுத்துகிறான். கைப்பழக்கம் இல்லாதவன் வளைந்த ஊசியைப் பயன்படுத்துகிறான்.
* கலகக்காரனாக இருப்பதைவிட நாகரீகமற்றவனாக இருப்பதே மேல்.
* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.
* கைக்கும் வாய்க்கும இடையே நிறை இழப்பு இருக்கிறது.
* இழந்துபோனது எப்போதும் ஒரு தங்கப் பிடியைப் பெற்றிருக்கிறது.
* பத்தில் மூன்று பகுதி மனிதனுடைய திறமையைப் பொறுத்தது. பத்தில் ஏழு பகுதி அவனுடைய ஆடையை பொறுத்தது.
* புதுத் துணிகளும் பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.
* சிறு அன்புடமையை மறக்காதே!. சிறு தவறுகளை நினைக்காதே!
* மனிதனின் இதயம் இயற்கையிலேயே நீதி நிறைந்தது.
* என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர் என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத் தீங்கு செய்கிறார்.
* ஓராயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலும் அன்பு ஒன்று மட்டும் அழுத்தமாய் பதிகிறது. கண்டிப்பு அல்லவே அல்ல.
* வீட்டிலிருந்து வெகு தூரத்திற்குச்சென்று தூப தீபங்கள் கொளுத்துவதைவிட அருகிலேயே அன்புடைச் செயல் செய்வது மேலானது.
* பிறரைக் கடிந்து கொள்வதுடன் தன்னையே கடிந்துகொள்வதற்கும் உன் இதயத்தைப் பயன்படுத்தினால் குறைகள் குறைவாக இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:01 pm

# ஒவ்வொரு காலையிலும் மனிதன் அவனுடைய தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். ஏன் அவனுடைய இதயத்தை அவ்வாறு செய்யக்கூடாது.
# கொடுப்பதன் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மனிதனுடைய அன்பான இதயத்தை அளக்க முடியாது.
# தலைசிறந்த ஆறு சிறிய ஓடைகளை ஒதுக்குவதில்லை.
# ஆறுகள் ஊற்றுக்களைப் பெற்றிருக்கின்றன. மரங்கள் வேர்களைப் பெற்றிருக்கின்றன.
# ஒருவரை ஏழு குழந்தைகள் காத்திடார். அறிவுச் செடி காக்கும்.
# கடும் சினம், பேசும்போது அறிவுடைமை தன்முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொள்கிறது.
# அறிஞர் என்ன செய்கிறார என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், சொல்ல முடியாததை ஒருபோதும் அவர் செய்வதில்லை.
# ஒன்றை எப்படிச் செய்வது என்று அறிபவர் அதைக் கடினம் எனக் காட்ட மாட்டார். கடினம் எனக் காண்பவர் அதை எப்படிச்செய்வது என அறியமாட்டார்.
# அறியாமை மனத்தின் இரவு. நிலவும் நட்சத்திரங்ளும் இல்லாத ஒரு இரவு.
# பார்க்கப்படுவதற்கு செய்யப்படும் அறம் உண்னையான அறம் அல்ல. பார்க்கப்டுவதற்கே பயங்கரமான பாவம் உண்மையான பாவம்.
# நீ தர்ம குணம் உள்ளவனாக இருந்தால், உன்னால் பணக்காரனாக முடியாது. நீ பணக்காரனாக இருந்தால் உன்னால் தர்ம குணம் உள்ளவனாக இருக்க முடியாது.
# ஒரே அறநெறியை உடைவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். ஒரே வியாபாரத்தை நடத்துகிறவர்கள் ஒருவர்யொருவர் வெறுக்கின்றனர்.
# அழகிய பறவைதான் கூண்டில் அடைபடுகிறது.
# பாலங்களைக் கட்டுபவரும், சாலைகளைச் சீர்படுத்துபவரும் இரு கண்களையும் இழந்து குருடராகிவிடுவார்கள். கொலை புரிபவரும், வீட்டுக்கு நெருப்பு வைப்பவரும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
# அதிர்ஷ்டம் வந்தால் யார் வருவதில்லை? அதிர்ஷ்டம் வராவிட்டால்யர் வருவார்கள்?
# மெதுவாகப் போவதற்கு அஞ்சாதே! இன்னும் நின்றுகொண்டு இருப்பதற்கு மட்டும் அஞ்சு.
# அச்சத்தினால் சாகின்றவனுக்கு மாதா கோயில் முற்றத்தில் ஓர் இடத்திற்குத் தகுதியில்லை..
# அவைகள் உங்களுடைய சொந்தமானதைப் போல மனிதர்களுடைய புண்ணியங்களையும் பேசுங்கள். அவர்கள் அடைய வேண்டிய தண்டனைக்கு நீங்களே உரியவ்ர்கள் என்பதைப்போல் அவர்களுடைய பாவங்களைப் பேசுங்கள்.
# இந்த உலகத்தில் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று விருப்பத்திலிருந்து எழுகிறது. இந்த உலகத்தில் துன்பம் எதுவாக இருந்தாலும் சுயநலத்திற்கு இடம் கொடுப்பதிலிருந்து அது தோன்றுகிறது.
# மருந்து குணமாக்க நோயைக் குணப்படுத்துகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:01 pm

# நீ மலைமேல் ஒருபோதும் ஏறவில்லை என்றால் சமதளம் எதைப்போல் இருக்கிறது என்று நீ ஒருபோதும் அறியமாட்டாய்.
# ஒரு பெரிய மனிதர், ஒரு சின்ன மனிதரின் தவறுகளைப் பார்க்கமாட்டார்.
# நீ வணங்குவதாக இருந்தால் தாழ வணங்கு.
# ஒரு மனிதன் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்காவிட்டால் தூர தேசம் போகும்போது அவன் உபசரிப்பவர்களைப் பெறமாட்டான்.
# நல்ல வினா ஒரு அழகிய மணியைப் போன்றது.
# வீடு கட்டு; உறவினர்களிடமிருந்து மிகத் தூரமாகவம், நீர் நலைகளுக்கு அருகாமையிலும்.
# அதிக வேலைக்காரர்கள் அதிகப் பகைவர்கள்.
# கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடங்களுக்குத்தான் முட்டாள் கேள்வியே கேட்காதவன் எப்போதும் முட்டாள்.
# இவ்வுலகில் முடியாத்து ஒன்றுமே இல்லை. ஒரே யொரு அச்சம் உறுதியுடைய மனிதர்கள் தேவைப்படுகின்றனர் என்பதுதான்.
# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான்.
# மலைகளின் ஏகாந்தத்தில் படிப்பது பாதைகளின் சந்திப்பில் அமர்ந்துகொண்டு மனிதர்களின் பேச்சைக்கேட்பதற்குச்சம்ம்.
# மாபெரும் மனிதர்களின் அரண்மனைகள் முழுவதும் பெண்கள். ஏழைகளின் குடிசை முழுவதும் குழந்தைகள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:03 pm

சுவிட்சர்லாந்து

* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்துகொண்டே இருக்கும்.
* ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர். பெண்கள் குணத்தை ஒரு அழகாகப் பார்க்கின்றனர்.
* ஆயிரம் முறை தலை குனிந்து பிரார்த்தனை செய்வதைவிட மனிதன் ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையைச் செய்வது சாலச் சிறந்தது.
* உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும் கூட நீ அவர்களை நேசிப்பாயாக!
* உலகிற்கு வெட்கப்படாதவன் கடவுளுக்குப் பயப்படமாட்டான்.
* அயலான் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடு சீக்கிரம் உன் தலையில் விழும்.
* ஒரு சிறிய பழமொழியிலிருந்து நல்லதொரு, பாடத்தை மிக மலிவான இலையில் நீ காதால் வாங்கிக்கொண்டிரு.
* ஒவ்வொரு மனிதனும் மக்கள்.
* ஏழ்மையின் காரணமாக உன்னைத் தாழ்த்தாதே! செல்வத்தின் காரணமாக உன்னை உயர்த்தாதே!
* ஒரு வேலை உணவை இழத்தல் - நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.
* ஒருவன் ஒரு முறை கீழே விழுந்தால் எல்லோரும் அவனை மிதித்துவிடுவார்கள்.
* ஓர் ஆடு வேலியைத் தாண்டினால் மற்றவையும் அதனையே தொடரும்.
* தனது நடத்தை அளவுக்கு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
* திருமணம் மூடிய தட்டிலிட்ட உணவு.
* மனைவியின் முகத்தைப் பார்த்தாலே கணவனின் பண்பு புரியும்.
* புத்தகமும், நண்பர்களும் குறைவாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும்.
* நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி, ஒருவன் அதனைத் தனக்கே செய்கிறான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:07 pm

ஜப்பான்

* அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள்.
* அன்பிருந்தால் பெரும் குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடியும். அன்பு குறைந்து போய்விட்டால் சிறிய குறைகள் கூட மாபெரும் குறைகளாகத் தெரியும்.
* அந்நியனை நம்புகிறவன் அழிந்து போவான்.
* அடக்கி வைத்திருப்பதைவிட திறந்துவிடுவது மேலானது.
* அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
* அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை. அது தன்னுடைய எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.
* ஆண்கள் வாய்ச் சண்டை போடும்போது எதிரியின் அயோக்கியத்தனங்கள் அம்பலமாகும். ஆனால், பெண்களோ எதிரிகளின் அவலட்சணத்தைத்தான் அம்பலப்படுத்துவார்கள்.
* இறந்தவனைத் தவிர எவரும் நிம்மதியாய் இல்லை.
* இருட்டிலும் தனிமையிலும் ஒழுக்கமாக இருக்கிறீர்களா? அதுதான் உண்மையான ஒழுக்கம்.
* இளைஞர்களுக்கு பதினெட்டு வயதில் பேயும் பேரழகியாகத் தோன்றும்.
* உச்சியிலிருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளிவிடுவான்.
* உள்ளம் நிறைந்துவிட்டால் உதடு பேசும்.
* உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால், அவனுக்கு அவமானம். இரண்டு தடவை ஏமாற்றினால், உனக்கு அவமானம்.
* என்னுடையது, உன்னுடையது என்றில்லாவிட்டால் உலகம் சொர்க்கமாக இருக்கும்
* ஏதாவது ஒரு மூலையில் பெண்ணொருத்தி இல்லாமல் ஒரு தீய கரியமும் நடந்ததில்லை.
* ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு பழக்கம்.
* ஒழுகும் கூரையும், பகையடையும் புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டைவிட்டுக் கிளப்பிவிட முடியும்.
* ஒரு பாவம் நூறு பாவங்களை இழுத்துக்கொள்ளும்.
* ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.
* ஒரு கதவு மூடும்போது வேறொரு கதவு திறக்கிறது.
* எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம் விரைவில் அதையே தேடி அலையச் செய்யும்.
* கள்வனின் தாய் மகிழ்ச்சியாலும பயத்தாலும் இரண்டு தடவை நடுங்குகிறாள்.
* எதற்கும் அளவுண்டு; தர்மத்திற்கு இல்லை.
* இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
* குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை, அறியாது.
* கல்யாணமானவன் சம்பாதிக்க ஆரம்பித்தால், அவன் இறந்த பிறகுதான் பணக்காரனாகிறான்.
* சத்தியம், நிதானம், சகிப்புத் தன்மை ஆகிய மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
* திருமணத்திற்குப் பெண்ணைத் தேடும்போது கண்களை மூடிக் கொண்டே கடவுளைத் தியானம் செய்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக