ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:15 am

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:19 am

# நல்ல புத்தகத்தைக் காட்டிலும் நம்பிக்கையுள்ள மனிதன் உலகில் எதுவுமில்லை.
# வழக்கம் என்பது முதலில் ஓட்டை. பிறகு இரும்புச் சங்கிலி.
# செயலழகைத் தவிர வேறு அழகில்லை.
# போட்டியிடு! பொறாமைப்படாதே!
# பொறுமையால் அதிகம் சாதிக்க முடியும்.
# குழந்தைகளுக்கு செவிகள் அகலமானவை. நாக்குகள் நீளமானவை.
# மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.
# தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை.
# தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.
# பணிவான சொல், செல்லும் பாதையை எளிமை ஆக்குகிறது.
# உலகம் ஒரு பயணிகள் விடுதி.
# நீயும் நானும் ஒத்துப் போய்விட்டால் வழக்கறிஞர் எதற்கு?
# கத்தி சானைக்கல்லைத் தின்கிறது. சாணைக்கல் கத்தியைத் தின்கிறது?
# அடுத்தவன் தாடியில் தீ பிடித்தால் உன் தாடியை நீரில் நனைத்துக்கொள்.
# பழக்கம் ஒரு முழு வளர்ச்சியடைந்த மலை. அதைத் தாண்டுவதும் கடினம். தகர்ப்பதும் கடினம்.
# தேவையும் துன்பமும் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரியாது.
# பணத்தைத் தவிர மற்ற யாவும் உன்னைத் திருப்திப்படுத்தும்.
# எவ்வளவு பணம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பணம் மேலும் உனக்குத் தேவைப்படும்.
# குழந்தைகள் தெய்வங்களோடு பேசுகின்றன.
# வீரனின் வியர்வை இரத்தம்.
# பணம் பனி போன்றது.
# தான் தின்னி திருடன்.
# பொய்கள் ஈக்களைப்போல் இரைகின்றன. ஆனால், சத்தியத்தில் சூரியப் பிரகாசம் உண்டு.
# உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை, பிரார்த்தனை அல்ல.
# உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
# ஏழ்மைப் பார்த்துச் சிரிப்பவன் அதைத் தன் க்கம் இழுக்கிறான்.
# பத்து வலிமை மிக்க மனிதர்களைவிட தன்னிச்சையாகச் செயல்படுபவனே மேலானவன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:19 am

# இட்டப் பணியைச் செய்து முடித்தால் இன்பமான தூக்கம்.
# மூப்பு- இது நோய்கள் சேரும் துறைமுகம்.
# சோதிடம் உண்மை- ஆனால், அதனைச் சோதிடர்கள் கண்டுபிடிக்க முடியாது.
# இயந்திரங்கள் சுழல்வதால் கெடாது; உராய்வதால் கெடும்.
# சரிகை ஆடைகளுடன் எரியூருக்குப் போவதைவிட கூந்தல்களுடன் விண்ணுலம் செல்வது மேல்.
# குண்டூசியை எடுக்கக் குனிய முடியாத மனிதன், ஒரு பவுன் கூட சேர்க்க முடியாது.
# செல்வங்கள் சிரமப்பட்டு சேர்க்கப்படுகின்றன. கவலையுடன் பாதுகாக்கப்படுகின்றன. துக்கத்தோடு இழக்கப் பெறுகின்றன.
# உங்களுடைய உடை உங்களுடைய தொழிலுக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளவும்.
# குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன். கிழங்கைப் போலவே அவன் பெருமையும் மண்ணக்குள் மறைந்திருக்கும்.
# புரியாத காரியத்திற்குத் தாமதமாக் கற்பித்துக்கொள்ளும் வழக்கம் மூட நம்பிக்கை. அது காலம் கடந்தும் தங்கி நிற்கும்.
# கடவுள் நமக்கு உறவினரைத் தந்துள்ளார். ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
# நண்பர்களைப் பற்றி நல்லது பேசு. விரோதிகளைப் பற்றி ஒன்றும் பேசாதே!
# இளமையில் ரோஜா மலர்களின் மீது படுக்க விரும்பினால் முதுமையில் நீங்கள் முட்களின் மீது படுக்க வேண்டிவரும்.
# மூட நம்பிக்கை மனவலிமையற்றவர்களின் மதம்.
# நூறு ஆசான்களுக்கு ஒப்பானவர் பொறுப்பு மிக்க தந்தை.
# காரியங்கள் தாமாக நடப்பதில்லை. நடக்கச் செய்ய வேண்டும்.
# மிகக் குறைந்த முட்டாளே அறிவாளி.
# மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ மேலே ஏற முடியாது.
# செல்வத்திற்குப் பின்னால் வறுமை வருவதைக் காட்டிலும் வறுமைக்குப் பின் செல்வம் வருவது மேல்.
# நாற்பது வயதிற்கு மேல் மனிதன் த்த்துவ ஞானியாக மாறுவான். அல்லது முட்டாளாக மாறுவான். இல்லையெனில் இறந்துவிடுவான்.
# குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
# குழந்தைகளே ஏழையின் செல்வங்கள்.
# குழந்தையை கொண்டாடினால் தாயின் அன்பைப் பெறலாம்.
# குழந்தை இல்லாதவனுக்கு அன்பு என்றால் என்ன வென்றே தெரியாது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:20 am

# இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட கலப்பை பிடிப்பது மேல்.
# பெண் தேடி வெகுதூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான்.
# குற்றத்தை கடவுள் மன்னிக்கிறார். ஆண்கள் சிறுகச் சிறுக மறக்கிறார்கள். பெண்களோ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
# விதவை, துக்கம் ஆறும் முன் மணம் செய்துகொள்ள வேண்டும்.
# பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதிதான்.
# ஆயிரத்தில் ஒரு நல்லவனை அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பெண்ணை அறிந்துகொள்ள முடியாது.
# ஒருவருக்கு ஆகாரமாவது மற்றொருவருக்கு நஞ்சாகும்.
# குழந்தைகள் கண்களைத்தான் உபயோகிக்க வேண்டும். செவிகளை அல்ல.
# கரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கடவுள் பார்க்கிறார். நிறைவாக இருக்கின்றனவா என்பதையல்ல.
# ஒரு சிறு குறை நீண்டகால சேவையை அழிக்கிறது.
# எந்தத் தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
# உலகின் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன.
# வாக்களிப்பது கடன்படுவதுபோல.
# பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு.
# நோயின் தந்தை யாரோ? தவறான உணவுதான் அதன் தாய்.
# பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள்.
# கோபக்காரனிடமிருந்து கொஞ்சம் விலகி இரு. மௌனம் இருப்பவனிடமிருந்து என்றுமே விலகி இரு.
# ஓர் ஏழைக்கு மற்றொரு ஏழை உதவும்போது கடவுள் சிரிக்கிறார்.
# தர்மம் ஒருபோதும் ஏழை ஆக்கியது இல்லை. செழுமை ஒருபோதும் அறிவாளியாக்கியது இல்லை.
# கவலைக்கு மிகப் பாதுகாப்பான மருந்து வேலையில் ஈடுபடுதல்
# மகிழ்ச்சி வீட்டில் செய்யப்பட்ட ஒரு பண்டம்.
# எப்போதும் பயந்துகொண்டிருப்பதைவிட ஆபத்தை ஒரு தடவை துணிவாக எதிர்ப்பது மேலானது.
# தாயின் செல்லக் குழந்தைகள் இறுதியில் வெண்ணெய் வெட்டு வீர்ர்களாகவே இருப்பார்கள்.
# பெண் குழந்தைகளும் கோழிக்குஞ்சுகளும் எப்பொழுது தின்றுகொண்டே இருக்கும்.
# நீண்ட கேசம் பெண்ணிற்கு ஒரு கருவூலம்.
# கணவன் இருந்தால் ஒய்யாரம் இறந்தால் ஒப்பாரி.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:20 am

# எட்டாம் பேறு பெண் என்றால், எட்டிப் பார்த்த வீடு குட்டிச் சுவர்
# அறிவைக் கொண்டவள் சிங்காரி. அகந்தை கொண்டவள் அலங்காரி.
# பெண்ணுகு எதிரி அவள் அழகு.
# கடன் மோசமான வறுமை.
# தண்ணீரைவிட நெருப்புக்குக் கப்பல் அஞ்சுகிறது.
# ஆட்டை கொடுப்பதைவிட கம்பளி கொடுப்பது மேல்.
# ஊதாரி பிச்சைக்காரனாகவே இருக்கிறான்.
# பறவைகளின் காரணமாக உலோபி விதைப்பதில்லை.
# குடிசையைப் பெருக்கிக் கூட்டுபவன் துடைப்பத்தின் மேல் உட்காரக் கூடாது.
# நான் துணி அணிந்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
# விதி விரும்பியதை வழி நடத்துகிறது. விரும்பாததை இழுத்துக் கொண்டு செல்கிறது.
# போகவிட்ட ஒரு சொல்லும் ஒரு கல்லும் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாதவை.
# தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது.
# நாய் குரைக்காததும் குதிரை கனைக்காததுமான நகரத்தில் நீ வசிக்காதே!
# பதற்றத்துடன் வருபவன் திடீரென விழுகிறான்.
# எல்லா விலைகளையும் கணக்குப் பார்ப்பபவன் ஒருபோதும் கலப்பையை மண்ணில் வைக்க மாட்டான்.
# பூமித்தாயின் தொழில் உறவுகொண்ட ஒருவரும் நஷ்டமடைந்து வெளியேறியதில்லை.
# உண்மை எப்போதும் ஒரு நொண்டித் தூதுவன் மூலம் வருகிறது.
# உண்மை ஒரு கீறலான முகத்தைப் பெற்றிருக்கிறது.
# சரியான பொய்யைச் சொல்வதைவிட கொடூரமான உண்மை பேசுவது மேல்.
# பாதி உண்மை முழுப் பொய்.
# துருப்பிடித்த வாள், காலியான பணப்பை உடன்படிக்கைகளை எதிர்த்துப் பேசும்.
# உன் உணவை உண்பதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
# ஆபத்துக்களையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டியே ஆராய்ந்து கொண்டிருப்பவன் ஒருபோதும் யாத்திரை செல்ல மாட்டான்.
# எங்கே ஆதாயம் பின்தொடர்கிறதோ, அங்கே வலிமறக்கப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:21 am

# கடன் வாங்கிய ஆடைகள் ஒருபோதும் நன்கு பொருந்தாது.
# பிறருக்காக இரக்கப்படுவன் தன்னையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளட்டும்.
# ஆன்மாவைவிட உடல்தான் அதிகமாக ஆடை அணிந்திருக்கிறது.
# ஆன்மா எங்கு வசிக்கிறதோ அந்த இடத்தில் அது இல்லை. அது நேசிக்கும் இடத்தில் ஆன்மா இருக்கிறது.
# மூடுபனிக்கு வழியனுப்பு விழா. அடுத்தது சுகமான பருவகாலம்.
# தனது அறிவைப் பாராட்டிக் கொள்பவன் அவனுடைய அறியாமையைத் தம்பட்டம் அடிக்கிறான்.
# அறம் மிகவும் விலை உயர்ந்த ஆபரணம்
# அறம் தன்னுள் எல்லாப் பொருட்களையும் பெற்றிருக்கிறது.
# கோழையின் அறம் ஐயத்திற்குரியது.
# பாவமாவது அறத்தின் பழக்கத்தால் அடிக்கடி உடைந்து போகிறது.
# ஒரு நல்ல மனிதனுக்கு அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டு. அவன் அதை அறமாக மாற்றுவான்.
# பொருள் இலாபம் கருதும் மனிதனின் மனத்திலிருந்து அறம் பறந்துபோகிறது.
# அறம் மட்டுமே உண்மையான குடிமை.
# காதலிலும் போரிலும் எல்லாமே அழகுதான்.
# அச்சத்திற்கு மருந்தில்லை.
# புலியின்மேல் சவாரி செய்பவர் கீழே இறங்குவதற்கு அஞ்சுகிறார்.
# அவன் என்னவாக இருக்கிறான் என்பதை அவனது உரையாடல் காட்டுகிறது.
# குற்றத்தின் மூலம் எவன் ஆதாயம் அடைகிறானோ, அவனே அக்குற்றத்தைச் செய்கிறான்.
# சம்பவம் நடந்த பிறகு புத்திசாலியாக இருப்பது சுலபமே!
# நீண்ட பயணத்திலோ அல்லது சிறு சத்திரத்திலோ ஒரு மனிதன் தன்னுடைய நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்கிறான்.
# மயில் ஓசையோடு அகவும்போது நாம் மழையையும் சண்டையையும் பெறலாம்.
# மரியாதையை விரும்புகிறவர்கள் மரியாதைக்குத் தகுதி உடையவர்கள் அல்லர்.
# அடிக்கடி வரும் விருந்தாளிளுக்கு நல் வரவேற்பு இல்லை.
# கடனாக வாங்குவதைவிட விலைக்கு வாங்குவதே மேல்.
# எசமான்னாக இருக்கும் முன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
# வைகறையில் எழாதவன் ஒருபோதும் ஒருநல்ல நாள் வேலையைச் செய்யமாட்டான்.
# சாந்தமான மனசாட்சி இடியோசையில் உறங்குகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:21 am

இஸ்ரேல்

* அச்சம் இதயத்தின் சிறை.
* அடுப்படியில் அடைகாக்கும் கணவன் அடிவயிற்றில் வலி.
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.
* ஆரோக்கியத்திற்கு அடிப்படை நோயை அடையாளம் காணுதல்.
* ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் அன்னையைப் படைத்தான்.
* இதயம் நல்லதாக இருந்தால் துரதிரஷ்டங்களையும் தகர்த்துவிடலாம்.
* இத்தாலியில் பிறந்து, குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* தந்தை இல்லாக் குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* கோடி கலைகளும் வயிற்று உணவுக்காகத்தான்.
* ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
* எந்த விரலை கடித்தாலும் வலி ஒன்றுதான்.
* பொய்கள் அமர்வதற்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுக்காதீர்கள். அப்படி அமைத்தால் நீங்கள் உண்மைக்குத் தூக்கு மேடை அமைத்தவர்களாவீர்கள்.
* விளைச்சல் நன்றாக இருந்தால் தானியங்களை உடனே விற்று விடுங்கள். விளைச்சல் குறைவாக இருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.
* எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒருதேச இருப்பான்.
* உங்களையே கிள்ளிப்பாருங்கள். மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் துன்பம் எப்படி இருக்குமென்று புரியும்.
* மேற்கே பார்த்துக்கொண்டிருந்தால் சூரிய உதயத்தை காணவே முடியாது.
* பத்து மனிதர்கள் 11 வித நிறம் கொண்டவர்கள்.
* ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
* இன்று செய்த நன்மை நாளைய இன்பம்
* இழந்த பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.
* அகம்பாவம் ஒரு முரட்டுக் குதிரை போன்றது. ஒரு முறையாவது சொந்தக்காரனையே வீழ்த்தும்.
* அயோக்கியன் கூட மேடை ஏறிவிட்டால் நல்லதையே பேசுவான்.
* ஆத்திரம் செயல் வேகத்தை மட்டுப்படுத்தும்.
* இளமையில் பட்ட அடிகள் முதுமையில் உணரப்படுகின்றன.
* அதிர்ஷ்டம் உள்ளவனுகு நண்பன் கிடைப்பான். துரதிர்ஷ்டம் பிடித்தவனுக்குப் பெண் கிடைப்பாள்.
* அன்புள்ள பெற்றோர்கள் உண்டு. அன்புள்ள பிள்ளைகள்தான் இல்லை.
* அற்பத் தொல்லைகளுக்கு அஞ்சுபவன் அரிய சாதனை செய்யமாட்டான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:21 am

# அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!
# அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்தால் தூரத்தில் இருப்பவர்களும் தேடி வருவார்கள்.
# அறிவு என்னும் கதிர் அறுக்க கண்ணீர் மழை பொழிய வேண்டும்.
# அறிந்தவர்கள் அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசுபவர்கள் அறிந்தவர்கள் இல்லை.
# ஆகாயத்திலிருந்து ஈச்சம் பழம் விழுந்தால் நீயும் வாயைத்திறக்கத்தான் வேண்டும்.
# அறிவிலி கூறும் பொன்மொழி, வாயில் உருளும் கூழாங்கல்.
# அன்பு இருந்தால் யானையைக்கூட ஒரு மயிரில் கட்டி இழுக்கலாம்.
# அறிவுப் பெருக்கத்திற்குச் சரியான சாவி ‘ஐயம்’
# அந்நியர்களுடன் நந்தவனத்தில் உலவுவதைவிட நண்பர்களுடன் விலங்கிட்டிருப்பதே மேல்.
# ஆட்டு மந்தை கிளப்பும் தூசி ஓநாய்க்கு இன்பமான காட்சி.
# இந்த உலகில் மூன்று நண்பர்கள் உண்டு. புத்தி, தைரியம், பகுத்தறிவு.
# ஆணின் சொற்கள் அம்பு, பெண்ணின் சொற்கள் ஒடிந்த விசிறி.
# இன்பமாக வாழ வேண்டுமா? செவிடாக,குருடாக, ஊமையாக இருந்துவிடு.
# இழந்துவிட்ட சட்டைப் பையில் இருந்ததெல்லாம் தங்கம்தானாம்.
# அறிவாளி பயன்படுத்தும் மேற்கோள் விரலில் பளிச்சிடும் மோதிரம்.
# அறிவில் போடும் முதலீடு அதிக இலாபம் தரும்.
# அம்பு வேகமுள்ளது. பழி வாங்கல் படுவேகம் உள்ளது செய்த தவறுக்கு வருந்துதல் அதைவிட வேகமானது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:22 am

இலங்கை

* உரையாடல் பயணத்திற்கு ஏணி.
* பொன்னாலான ஆயுதத்தால் குத்திய குத்தும், மற்ற எந்த ஆயுதங்களையும் போலவே வலி நிறைந்ததே!
* சுய கட்டுப்பாடு ஒருவனை இறைவனிடம் சேர்க்கிறது.
* உன் மகன் நல்லவனாக இருந்தால் நீ ஏன சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனாக இருந்தால் அவனுக்காக நீ ஏன் சேமிக்க வைக்க வேண்டும்?
* குழந்தைக்குச் சோறு கொடுத்தால் தாய்ப்பாலை மறக்கும். பெண்ணுக்குக் கணவன் வந்தால் தாயை மறப்பாள்.
* திட்டுவதில் ஐம்பது நாக்குகள் படைத்தவன் கூட ஒரு நாக்கு படைத்த பெண்ணிற்கு நிகராக முடியாது.
* பழக்கமில்லாமல் ஒருவன் தன் பற்களைக்கூட சுத்தம் செய்ய முடியாது.
* யாராவது உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் உங்களிடம் உள்ள கேடயம் ஞாபகம் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். என்ன கேடயம்? நீங்கள் அவர்களிடத்தில் காட்டிய அன்பு.
* உரையாடல் காதுகளின் உணர்வு.
* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:22 am

எகிப்து

* அவசரம் பிசாசின் குணம்.
* இருவர் கூடியிருப்பது என்பது கிடையாது. இறைவனையும் சேர்த்து மூன்று பேர்.
* உருவம் சிறியதென்று எண்ணாதே! ஊசி உருக்கினால் செய்யப்பட்டது.
* உன் மனைவி குள்ளமாக இருந்தால் நீ குனிய வேண்டும்.
* ஒவ்வொருவரும் தன் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால் தெரு தானாகவே சுத்தம் ஆகிவிடும்.
* உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காகவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
* ஒரு நல்ல காரியத்திலிருந்து மற்றொரு நன்மை உண்டாகிறது. பாலிலிருந்து வெண்ணெய் வருகிறது.
* தாயிலே கெட்டவருமில்லை. சாவிலே நல்லதும் இல்லை.
* கடன் வாங்குதல் ஏழைக்கப் பிறக்கும் முதல் குழந்தை.
* நல்ல மாற்றாந்தாய்கு சொர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.
* தாயை அழவிடுவதில் மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால், ஆண்டவன் அவர்களுடைய கண்ணீரை எண்ணிப் பார்க்கிறான்.
* களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது.
* நிலவு உன்னோடு இருந்தால் நட்சத்திரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:23 am

எஸ்டோனியா

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
* உயர்வான இடத்தைச் சுற்றிப் போ; தாழ்வான இடத்தைத் தாண்டிப் போ.
* அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.
* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.
* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
* முதலில் முட்டையிடு; பின்னர் கொக்கரி.
* நல்ல மனசாட்சி இறைவனின் குரல்.
* அழுதுகொண்டே உலகிற்கு வருகிறாய். ஆனால், சிரித்துக் கொண்டே அதை விட்டுச் செல்லும்படி வாழ்வாயாக!
* நாய்க்கு உணவளிக்காதவன் கள்வனுக்கு அளிப்பான்.
* பொய் கனவின் ஆரம்பம்.
* நல்ல மனசாட்சி மென்மையான தலையணை.
* குறைவாகச் சாப்பிட்டு விட்டோம் என்று ஒருபோதும் கவலை கொள்ளாதே!
* வேறொருவனிடம் சொல்ல வேண்டியதை முதலில் உனக்கே சொல்லிப் பார்.
* இலாபமும் நட்டமும் இரட்டைச் சகோதரர்கள்
* நரகத்தில் விசிறிகள் இல்லை.
* ‘உழைப்பே வாழ்வு’ என்பதை உணர்ந்து உழைத்திடு.
* நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
* பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.
* பணக்காரனிடம் பணம் இருக்ககிறது. ஏழைகளிடம் மன அமைதி இருக்கிறது.
* சாவுக்குப் பயந்தவன வாழ்வை இழந்துவிட்டான்.
* வானில் பறவையின் பாதையைக் காண முடியாது. காதலியை நாடும் காதலன் காதையையும் காண முடியாது.
* வீட்டைக் கட்டிப் பாராதவன் மணிலிருந்து அவர்கள் முளைத்து இருப்பதாகக்கூட நினைக்கக் கூடும்.
* பிறர் புகழும் குதிரையை வாங்கு. பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
* மதிய உணவிற்குப் பிறகு இரண்டடியாவது நட.
* மடையனைத் திருத்தலாம். ஆனால், முரடனைத் திருத்த முடியாது.
* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினால் என்ன? நின்றால் என்ன?
* நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உனது உயருள்ளபோதே நீ தேடிவைத்துக்கொள்ள வேண்டும்.
* அன்னை உன்னைப் பத்து மாதங்கள் சுமந்தவள். மூன்று ஆண்டுகள் பாலூட்டி வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படியாக நடந்துவிடாதே!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் - Page 2 Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum