Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)
3 posters
Page 1 of 1
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)
செந்தமிழ் வீசிய தென்றல் மறந்தின்று
சிங்களம் பேசுகுதே
முந்திஎழுந்தெம்மை கொன்றமொழிஈழ
மண்ணில் இழைகிறதே
தந்தையும் தாயும் இருந்து தமிழ்பேசி
சொந்தம் வளர்த்த இடம்
நங்கியும் மல்லியும் வந்து நடந்தீது
எங்கள் ஊர் என்கிறதே
பைந்தமிழ் பேர்கொண்ட வீதிபலகைகள்
சிங்களமாய் திரிந்தே
சந்தியெல்லாம் அபே ரட்ட என்னுமொரு
சந்தம் எழுந்திடுதே
தொன்று தொட்டுவந்த எங்கள்பரம்பரைச்
சொத்து அழிகிறதே
கொன்று புதைத்த குழிகளிலே புத்த
கோவில் எழுகிறதே
சந்தியிலே நேற்று நின்றஆலமர
தொந்திவிநாயகரோ
அந்தி கருகி விடிந்திட புத்தனென்
றாகி கிடக்கிறதே
முந்திமணி யொலித்தெங்கள் திருமறை
சொன்ன திருத்தலத்தில்
வந்தொரு காவி உடுத்தவரும் வந்து
வாசல் மறைத்தனரே
வள்ளிமுருகனும் தெய்வானையும் வரும்
ஆற்றில் எறிந்துவிட்டு
அந்தணர் பூணூல் அவிழ்த்து மறைக்கின்ற
காட்சி நடக்கிறதே
தெள்ளுத்தமிழ் மணம் வீசும் சுதந்திர
காற்றை விரும்பிநின்றால்
உள்ள உயிர் மூச்சும் உன்னதில்லைஎன்று
மூக்கை நசித்தனரே
சந்தனம் நீறு தரித்த மனிதர்கள் சென்ற
தெருவி லெங்கும்
மங்கியகாவி தொங்கியதோர் உடை
கொண்டவர் செல்லுகிறார்
பொங்கும் கடலினுள் தள்ளிவிழுத்தியெம்
பூமி அபகரித்து
சிங்கம் வழிவந்தோர்பங்கிடவே ஒரு
திட்டம் நடக்கிறதே
கம்பி வேலியிட்டு நற்றமிழர்தன்னை
கட்டி இருத்திவிட்டு
கொள்ளையடித்திடும் கும்பல் மறுபக்கம்
மண்ணை பறிக்கிறதே
சிந்திய இரத்தமும் சென்றவரும் வீரம்
சொல்லிய மைந்தரெல்லாம்
இந்தநிலையெண்ணியல்லவோ கைகளில்
குங்குமம் பூசி நின்றார்
தத்தி நடக்கும்குழந்தை மணல்வீடு
கட்டக்குழி பறித்தால்
புத்த சிலை ஒன்று உள்ளே இருக்குதென்
றோடி உள் வைத்தெடுத்தார்
வெட்டிஅரச மரமிட்டுபக்கமாய் புத்தவிகாரை கட்டி
பூட்டனும் பாட்டியும் வாழ்ந்த இடம் எம்மை
போஎன்றே தள்ளுகிறார்
திட்டமிட்டு இனம் சுத்தப்படுத்துதலோர்
சட்டபடி நடக்கு
விட்டுவிட்டால் இது சத்தமில்லாமுள்ளி
வாய்க்கா லென்றாகிவிடும்
ரத்தமில்லாத போர் தன்னை நிறுத்திட
அத்தனை பேர் தமிழீர்
சுத்தும் உலகின் எம்சொந்தங்களே ஈழம்
செத்திடமுன் விழிப்பீர்
சிங்களம் பேசுகுதே
முந்திஎழுந்தெம்மை கொன்றமொழிஈழ
மண்ணில் இழைகிறதே
தந்தையும் தாயும் இருந்து தமிழ்பேசி
சொந்தம் வளர்த்த இடம்
நங்கியும் மல்லியும் வந்து நடந்தீது
எங்கள் ஊர் என்கிறதே
பைந்தமிழ் பேர்கொண்ட வீதிபலகைகள்
சிங்களமாய் திரிந்தே
சந்தியெல்லாம் அபே ரட்ட என்னுமொரு
சந்தம் எழுந்திடுதே
தொன்று தொட்டுவந்த எங்கள்பரம்பரைச்
சொத்து அழிகிறதே
கொன்று புதைத்த குழிகளிலே புத்த
கோவில் எழுகிறதே
சந்தியிலே நேற்று நின்றஆலமர
தொந்திவிநாயகரோ
அந்தி கருகி விடிந்திட புத்தனென்
றாகி கிடக்கிறதே
முந்திமணி யொலித்தெங்கள் திருமறை
சொன்ன திருத்தலத்தில்
வந்தொரு காவி உடுத்தவரும் வந்து
வாசல் மறைத்தனரே
வள்ளிமுருகனும் தெய்வானையும் வரும்
ஆற்றில் எறிந்துவிட்டு
அந்தணர் பூணூல் அவிழ்த்து மறைக்கின்ற
காட்சி நடக்கிறதே
தெள்ளுத்தமிழ் மணம் வீசும் சுதந்திர
காற்றை விரும்பிநின்றால்
உள்ள உயிர் மூச்சும் உன்னதில்லைஎன்று
மூக்கை நசித்தனரே
சந்தனம் நீறு தரித்த மனிதர்கள் சென்ற
தெருவி லெங்கும்
மங்கியகாவி தொங்கியதோர் உடை
கொண்டவர் செல்லுகிறார்
பொங்கும் கடலினுள் தள்ளிவிழுத்தியெம்
பூமி அபகரித்து
சிங்கம் வழிவந்தோர்பங்கிடவே ஒரு
திட்டம் நடக்கிறதே
கம்பி வேலியிட்டு நற்றமிழர்தன்னை
கட்டி இருத்திவிட்டு
கொள்ளையடித்திடும் கும்பல் மறுபக்கம்
மண்ணை பறிக்கிறதே
சிந்திய இரத்தமும் சென்றவரும் வீரம்
சொல்லிய மைந்தரெல்லாம்
இந்தநிலையெண்ணியல்லவோ கைகளில்
குங்குமம் பூசி நின்றார்
தத்தி நடக்கும்குழந்தை மணல்வீடு
கட்டக்குழி பறித்தால்
புத்த சிலை ஒன்று உள்ளே இருக்குதென்
றோடி உள் வைத்தெடுத்தார்
வெட்டிஅரச மரமிட்டுபக்கமாய் புத்தவிகாரை கட்டி
பூட்டனும் பாட்டியும் வாழ்ந்த இடம் எம்மை
போஎன்றே தள்ளுகிறார்
திட்டமிட்டு இனம் சுத்தப்படுத்துதலோர்
சட்டபடி நடக்கு
விட்டுவிட்டால் இது சத்தமில்லாமுள்ளி
வாய்க்கா லென்றாகிவிடும்
ரத்தமில்லாத போர் தன்னை நிறுத்திட
அத்தனை பேர் தமிழீர்
சுத்தும் உலகின் எம்சொந்தங்களே ஈழம்
செத்திடமுன் விழிப்பீர்
Re: ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
(மன்னிக்கவும் வார்த்தைகள் வரண்டு விட்டது. எம் தமிழர் வாழ்வைப்போல்)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை)
» எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)
» தமிழை அல்லவா கடலில் கரைத்தோம்.(தலைப் படத்துக்கு கவிதை )
» காக்கா கரைகிறது
» சிபிஎம் வேகமாக கரைகிறது-கருணாநிதியை சந்தித்த பின் கோவிந்தசாமி
» எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)
» தமிழை அல்லவா கடலில் கரைத்தோம்.(தலைப் படத்துக்கு கவிதை )
» காக்கா கரைகிறது
» சிபிஎம் வேகமாக கரைகிறது-கருணாநிதியை சந்தித்த பின் கோவிந்தசாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|