புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_m10விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுகள் - அறிந்ததும் அறியாயதும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 9:04 pm

நோபல் பரிசு!

நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1901-ல் நிறுவினார். இவர் ‘டைனமைட்’ என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தவர்.

அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

முதல் நோபல் பரிசு பெற்றவர்களில் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), X-Ray - யைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.

மேரி க்யூரி இயற்பியல், வேதியியல் துறைகளில் இருமுறை நோபல் பெற்றுள்ளார். அமைதிக்காகவும் வேதியியலுக்காகவும் இரு முறை நோபல் பெற்றவர் லினஸ் பாலிங். இயற்பியலில் மட்டுமே இரு முறை நோபல் பெற்றவர் ஜான் பார்டீன்.

நோபல் பரிசு, ஆண்டு தோறும் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்துறையில் பெண்கள் யாருமே நோபல் பரிசு பெற்றதில்லை.

இதுவரை 6 இந்தியர்கள் நோபல் பெற்றுள்ளனர். நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர், (1913-ல் இலக்கியத்திற்காக). இயற்பியலுக்காக சி.வி.ராமனும், விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்ரமணியன் சந்திரசேகரும் நோபல் பெற்றனர். ஜீன்-ஐ செயற்கை முறையில் தயாரித்ததற்காக, ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார். அமைதிக்கான நோபல் பரிசை முதல் முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பொருளாதாரத் துக்காக நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க காரணமாக இருந்த டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.

கணிதமேதை பெட்ரண்ட் ரஸ்ஸல் 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.

போரிஸ் பாஸ்டர்நாக் இலக்கியத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்டார்.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 9:18 pm

ஆஸ்கர் விருது!


ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர், American Academy of Motion Picture Arts and Science.

ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர் செட்ரிக் கிப்பன்ஸ். இவரே 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.

இதுவரை அதிக (தலா 11) ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள்: பென்ஹர், டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ்.

ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தம்பதியினர்: விவியன் லேய் - லாரன்ஸ் ஆலிவர் (1951).

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா. ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பிற்காக இதைப் பெற்றார்.

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்கள் மதர் இண்டியா, சலாம் பாம்பே, லகான்.

* 1957 - மதர் இந்தியா இயக்கம் மெகபூப் கான். நடிகர்கள் நர்கிஸ், சுனில் டட் - வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
* 1963 - ஷகிப் விவி ஔர் குலம் by குரு டத்.
* 1974 - அங்கூர் இயக்கம் ஷியாம் பெனிகல்.
* 1978 - மந்தன் இயக்கம் ஷியாம் பெனிகல்.
* 1985 - சாரன்ஸ் இயக்கம் மகேஷ் பத். நடிகர்கள் அனுபம் கெர் மற்றும் ரோஹினி கடங்கடி.
* 1986 - ஸ்வாதி மூத்யம் இயக்கம் டாக்டர்.K.விஷ்வனாத். நடிகர்கள் கமல்ஹாசன், ராதிகா.
* 1987 - நாயகன் இயக்கம் மணிரத்னம், நடிகர்கள் கமல்ஹாசன்.
* 1988 - சலாம் பாம்பே! இயக்கம் மீரா நாயர். 'வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
* 1989 - பரிந்தா இயக்கம் விது வினோத் சோப்ரா.
* 1990 - அஞ்சலி இயக்கம் மணிரத்னம்
* 1991 - ஹெனா இயக்கம் ரந்திர் கபூர்
* 1992 - தேவர் மகன் இயக்கம் பரதன், நடிகர்கள் கமல்ஹாசன்.
* 1993 - ருடாலி இயக்கம் கல்பனா லஸ்மி. நடிகர்கள் டிம்பிள் கப்பாடியா.
* 1994 - பாண்டிட் குயின் இயக்கம் சேகர் கபூர். நடிகர்கள் சீமா விஸ்வாஸ்.
* 1995 - குருதிப்புனல் இயக்கம் பி.சி சிறீராம். நடிகர்கள் கமல்ஹாசன், அர்ஜூன், டாக்டர்.கே.விஷ்வனாத் மற்றும் நாசர்.
* 1996 - இந்தியன் இயக்கம் ஷங்கர். நடிகர்கள் கமல்ஹாசன், மனீசா கொய்ராளா and ஊர்மிலா மடொண்ட்கர்.
* 1997 - குரு இயக்கம் ராஜீவ் அஞ்சால். நடிகர்கள் மோகன்லால்.
* 1998 - ஜீன்ஸ் (திரைப்படம்) இயக்கம் ஷங்கர். நடிகர்கள் பிரசாந்த், ஜஸ்வர்யா ராய்.
* 1999 - ஏர்த் இயக்கம் தீபா மேதா. நடிகர்கள் அமீர்கான், ராகுல் கன்னா, நந்திதா தாஸ்
* 2000 - ஹே ராம் இயக்கம் கமல்ஹாசன். நடிகர்கள் கமல்ஹாசன், சாருக்கான் மற்றும் ராணி முகர்ஜி.
* 2001 - லகான் இயக்கம் அஸுதோஸ் கௌவாரிகர். நடிகர்கள் அமீர்கான், கிரேசி சிங் - 'வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
* 2002 - தேவ்தாஸ் இயக்கம் சஞ்சேய் லீலா பன்சாலி. நடிகர்கள் சாருக்கான், மாதுரி தீக்சீத் மற்றும் ஜஸ்வர்யா ராய்.
* 2003 - இவ்வாண்டில் ஆஸ்கார் விருதிற்காக திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* 2004 - ஷ்வாஸ் இயக்கம் சஞ்சேய் சாவந்த். நடிகர்கள் அருன் நலவதே, அஷ்வின் சித்தலே.
* 2005 - பகெலி இயக்கம் அமொல் பலேக்கர். நடிகர்கள் சாருக்கான், ராணி முகர்ஜி.
* 2006 - ரங் தே பசந்தி இயக்கம் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. நடிகர்கள் அமீர்கான்,குனால் கபூர் சோஹா அலி கான்,மாதவன்.
* 2007 - ஏகலவா இயக்கம் விது வினோத் சோப்ரா.
* 2008 - தேரே சமீர் பர் இயக்கம் அமீர்கான்
* 2009 - Harishchandrachi Factory (Marathi) இயக்கம் பாரேஷ் மொகாஷி
* 2010 - Peepli Live இயக்கம் அனுஷா ரிஷ்வி (நிலுவையில் உள்ளது)



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 9:22 pm

இலக்கிய விருதுகள்!


இலக்கியத்திற்கான சிறந்த பரிசுகளில் முக்கியமானது புக்கர். இது காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

புக்கர் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி.எஸ். நைபால் ஆகியோர். சல்மான் ருஷ்டி ‘midnight's Children’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். (1981). வி.எஸ்.நைபால் ‘In a Free State’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். (1971). அருந்ததிராய்க்கு ‘The God of Small Things’ என்ற நூலுக்காக இப்பரிசு கிடைத்தது (1997).

இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருது ஞானபீட விருது. ஞானபீட விருது முதல் முதலாக 1965 -ல் மலையாள எழுத்தாளரான சங்கர குரூப்புக்கு ‘ஓடக்குழல்’ நூலுக்காக வழங்கப்பட்டது. ஞானபீட விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் அகிலன் (1975-ல் ‘சித்திரப் பாவை’ நாவலுக்காக). ஞானபீட விருது ஆண்டு தோறும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாதெமி விருது ஆண்டு தோறும் 22 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியங்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் முதலாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழர் ரா.பி. சேதுப்பிள்ளை (தமிழின்பம் என்ற நூலுக்காக).

தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்!


* 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
* 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
* 1957 - (விருது வழங்கப்பட வில்லை)
* 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
* 1959 - (விருது வழங்கப்பட வில்லை)
* 1960 - (விருது வழங்கப்பட வில்லை)
* 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
* 1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
* 1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
* 1964 - (விருது வழங்கப்பட வில்லை)
* 1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
* 1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
* 1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
* 1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
* 1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
* 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
* 1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
* 1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
* 1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
* 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - K.D.திருநாவுக்கரசு
* 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - R.தண்டாயுதம்
* 1976 - (விருது வழங்கப்பட வில்லை)
* 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
* 1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
* 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
* 1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
* 1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - M.ராமலிங்கம்
* 1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
* 1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
* 1984 - ஒரு காவிரியைப் போல - திரிபுரசுந்தரி லக்குமி
* 1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. சா. ஞானசம்பந்தன்
* 1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
* 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
* 1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - V.C.குழந்தைச்சாமி
* 1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாம்ருதம்
* 1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
* 1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
* 1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
* 1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
* 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
* 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
* 1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
* 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
* 1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - ச. கந்தசாமி
* 1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
* 2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
* 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
* 2002 - ஒரு கிராமத்து நாடி (கவிதைகள்) - சிற்பி. பாலசுப்பிரமணியம்
* 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
* 2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
* 2005 - கல்மரம் (நாவல்) - G.திலகவதி
* 2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
* 2007 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
* 2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 9:25 pm

புலிட்சர் விருது


பத்திரிகைத் துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் உயர்ந்த விருது புலிட்சர்.

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.

இந்திய வம்சாவளியினரான Jhumpa Lahiri, ‘Interpreter of Maladies’ என்ற நூலுக்காக புலிட்சர் விருது பெற்றுள்ளார்.

இந்தியாவில் பத்திரிகைத் துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது பி.டி. கோயங்கா விருது.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 9:28 pm

ரமன் மக்சேசே விருது


‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் விருது ‘ரமன் மக்சேசே விருது’. இது விருது விமான விபத்தொன்றில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் ராமன் மகசேசே நினைவாக 1958 முதல் ஆசியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படு கிறது. இந்த விருது, அரசு சேவை, பொதுச் சேவை, சமூகத் தலைமை, பத்திரிகையியல், இலக்கியம், படைப்புக் கலை, சர்வதேச உறவு ஆகிய துறைகளில் வழங்கப்படுகிறது.

ரமன் மக்சேசே விருது பெற்ற முதல் இந்தியர், வினோபா பவே (1958).

ஜே.எம்.லிங்டோ, கிரண்பேடி, டி.என். சேஷன் போன்றோர் சிறந்த அரசாங்க சேவைக்காக ராமன் மகசேசே விருது பெற்றுள்ளனர்.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், ‘வெண்மை புரட்சி’க்குக் காரணமான வர்கீஸ் குரியன், இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் ரமன் மக்சேசே விருது பெற்ற சில இந்தியர்கள்.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 10:04 pm

இந்திய பொதுத்துறை விருதுகள்


இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த பொதுத்துறை விருது பாரத ரத்னா.

1954-ல் முதல் முதலாக ‘பாரதரத்னா’ விருது பெற்ற மூவர் ராஜாஜி, சர்.சி.வி. ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்.

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி இந்திரா காந்தி (1971).

இறப்புக்கு பின் சுபாஷ் சந்திர போஸுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

பாரத ரத்னா விருது பெற்ற மூன்று தமிழக முதல்வர்கள் ராஜாஜி (1954), காமராஜர் (1976) மற்றும் எம்.ஜி.ஆர். (1988).

எம்.எஸ். சுப்புலட்சுமி, சி. சுப்பிரமணியம், அப்துல் கலாம் ஆகியோர் 1998-ல் பாரத ரத்னா விருது பெற்றனர்.

பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ - இதுவே இந்திய பொதுத்துறை விருதுகளின் சரியான வரிசைமுறை ஆகும்.

இளம் வயதில் பத்மஸ்ரீ பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த்.

பத்மஸ்ரீ பெற்ற முதல் திரைப்பட நடிகை நர்கீஸ்தத்.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 10:06 pm

ராணுவ விருதுகள்



இந்திய ராணுவ விருதுகளில் மிக உயர்ந்தது பரம்வீர் சக்ரா.

போர்க்காலங்களில், போரில் வீர சாகசம் நிகழ்த்தும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பரம்வீர் சக்ரா வழங்கப்படுகிறது.

அமைதி காலங்களில் செய்யப்படும் சாகசங்களுக்கான ராணுவ விருதுகளின் வரிசை: அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சூரிய சக்ரா.

வீர சாகசம் புரியும் சிறுமிக்கு ‘கீதாசோப்ரா’ விருதும் வீர சாகசம் புரியும் சிறுவனுக்கு ‘சஞ்சய்சோப்ரா’ விருதும் வழங்கப்படுகிறது.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 10:08 pm

விளையாட்டுத்துறை விருதுகள்



இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 10:10 pm

சினிமா விருதுகள்


இந்தியாவில் சினிமாவுக்கான உயர்ந்த விருது தாதா சாஹிப் பால்கே விருது. முதல் முதலாக தாதா சாஹிப் பால்கே விருதைப் பெற்றவர் தேவிகா ராணி (1969).

தாதா சாஹிப் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் (1996).

சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘பாரத்’. ‘பாரத்’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். (ரிக்ஷாக்காரன் - 1971).

சிறந்த நடிகைக்கான தேசிய விருது ‘ஊர்வசி’.

நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.

நடிகர் விக்ரம் ‘பிதாமகன்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் (2003).

இந்தியாவிலேயே சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுத்தும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது ‘நர்கீஸ் தத் விருது’. இயக்குநர் மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பாம்பே’ படங்கள் ‘நர்கீஸ் தத் விருது’ பெற்றுள்ளன.

புதுமுக இயக்குநரின் முதல் சிறந்த படத்திற்கான தேசிய விருது ‘இந்திரா காந்தி விருது’. ‘புதியபாதை’ படத்திற்காக இந்த விருதைப் பெற்றவர் பார்த்திபன்.

சிறந்த படத்திற்கான ‘தங்கத் தாமரை’ விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் ‘மறுபக்கம்’.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் இயக்குநர் அகத்தியன் (காதல் கோட்டை).



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 10:15 pm

அறிவியல் விருதுகள்

அறிவியல் துறைக்கு சேவை செய்வோருக்கு UNESCO அமைப்பு வழங்கும் விருது ‘கலிங்கா’.

CSIR சிறந்த விஞ்ஞானிகளுக்கு ‘பட்நாகர் விருது’ வழங்குகிறது.

பிற விருதுகள்

இசைத்துறைக்கான உயர்ந்த விருதான கிராமி விருதுகளை அமெரிக்கா வழங்குகிறது.

சிறந்த இலக்கியத்திற்கு பிர்லா ஃபவுண்டேஷன் வழங்கும் விருது ‘சரஸ்வதி சம்மான்’. இந்த விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (ராமானுஜர் - நாடகம்).

அமைதிக்காக இந்தியா வழங்கும் உயர்ந்த விருது ‘இந்திரா காந்தி அமைதிப் பரிசு’. இந்தப் பரிசைப் பெற்றவர்கள்

1986 பன்னாட்டு செயலுக்குக்காக நாடாளுமன்றத்தினர் நாடாளுமன்றத்தினர்களின் பன்னாட்டு சங்கம்
1987 மிக்கைல் கொர்பசோவ் முன்னாள் சோவியத் ஒருங்கியம் தலைவர்
1988 க்ரோ ஹார்லம் ப்ருன்ட்லாண்ட் நார்வேயின் முன்னாள் பிரதமர்
1989 UNICEF ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
1990 சாம் நுஜோமா நமீபியாவின் முதல் அதிபர்
1991 ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் (இறப்பின் பின்னர்)
1992 சபுரோ ஓகிடா சப்பானிய பொருளியலாளர்
1993 வாக்லாவ் ஹவெல் முதல் செக் குடியரசு அதிபர்
1994 திரவோர் அடல்ஸ்டன் இனவொதுக்கலுக்கு எதிரான தன்னார்வலர்
1995 ஒலுசெகன் ஒபாசன்யோ 12வது நைஜீரிய அதிபர்
1996 மெடிசன் சான் பிரான்தியர்ஸ் தன்னார்வலர் நிறுவனம்
1997 ஜிம்மி கார்டர் 39வது ஐக்கிய அமெரிக்க அதிபர்
1998 முகமது யூனஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், 2006
1999 எம் எஸ் சுவாமிநாதன் இந்திய வேளாண் அறிவியலாளர்
2000 மேரி ராபின்சன் 7வது அயர்லாந்து அதிபர்
2001 சடகோ ஓகாடா முன்னாள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயராணையர்
2002 சிறீதத் ராம்பால் 2வது பொதுநலவாய நாடுகள் செயலர்நாயகம்
2003 கோபி அன்னான் 7வது ஐக்கிய நாடுகள் செயலர்நாயகம்
2004 மகா சக்ரி சிரிந்தோர்ன் தாய்லாந்து இளவரசி
2005 ஹாமித் கர்சாய் 1வது ஆப்கானிஸ்தான் அதிபர்
2006 வான்கரி மாதாய் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் சேவையாளர்
2007 பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் தாபனம் அறக்கட்டளை
2008 மொகம்மது எல்பரதேய் 4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைவர்
2009 பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்
2010 ஷேக் ஹசீனா வங்கதேசப் பிரதமர்


ஜவஹர்லால் நேரு விருது பன்னாட்டு புரிதிறனுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ‘கலைமாமணி’ விருதுகளை வழங்குகிறது.

ஜி.பி. பந்த் விருது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

லால்பகதூர் சாஸ்திரி விருது பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இறப்புக்கு பின் பாரதரத்னா விருது பெற்ற முதல் மனிதர் லால் பகதூர் சாஸ்திரி (1966).

‘போர்லாக் விருது’ விவசாயத்துறையில் சாதனைபுரியும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வரும் சிறந்த மருத்துவருமான பி.சி. ராய் நினைவாக சிறந்த மருத்துவர்களுக்கு பி.சி. ராய் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த சிற்ப மற்றும் ஓவிய கலைஞர்களுக்கு லலித்கலா அகாதெமி ஆண்டு தோறும் விருது வழங்குகிறது.

ராஜராஜன் விருது: சிறந்த தமிழ் எழுத்தாளார்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கும் விருது. ‘சுந்தரகாண்டம்’ என்ற நூலுக்காக ஜெயகாந்தன் ராஜராஜன் விருது பெற்றார்.


சிறந்த திரைப்படங்களுக்கு...

சிறந்த இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது ‘தங்கத் தாமரை!

சிறந்த திரைப்படங்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு வழங்குவது, தங்க நந்தி விருது!

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க மயில் விருது.

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது ‘Golden palm Award’.

இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது ‘Golden Lion Award’.

ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் விழங்கப்படுவது ‘Golden Bear Award’.



விருதுகள் -  அறிந்ததும் அறியாயதும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக