ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்

2 posters

Go down

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Empty உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்

Post by balakarthik Wed 6 Oct 2010 - 20:52

எந்த சரக்கும் அடிக்காமலே மலையேறி விட்டார் குமரன். அறுபடை வீடுகளில் ஒன்றல்ல எனினும் அந்த மலைக்கோயிலுக்கு வரும் பகதர்களின் எண்ணிக்கைக்கு குறைவல்ல. சரியாக கீழிருந்து 54வது படியில் அமர்ந்திருந்தார் கண்ணாயிரம். இப்படி சில நேரம் ஆகிவிடுவது உண்டு. நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி, கண்ணாயிரமும் அந்த வகைதான். இரண்டும் கண்ணும் தெரியாமல் போவதற்கு முன்னிருந்தே அவர் கண்ணாயிரம் தான்.

தன்னுடைய தட்டை தட்டு தடுமாறி தொட்டுப் பார்த்தார். தட்டு மாறிவிடக்கூடும் அளவிற்கு வரிசையாக அமர்ந்திருந்தனர் அவரது கொலீகுகள். தடுமாறி தட்டு மாறிவிடமால் தொட்டவரின் கைகளில் எட்டு நாணயங்களே தட்டுப்பட்டன. பத்து ரூபாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆரோக்கியசாமியிடம் நேரம் என்னவிருக்கும் என்று கேட்க எத்தனிப்பதற்குள் அப்பா என ஓடி வந்தான் கண்ணாயிரத்தின் மகன் செல்வம். ஆசையோடு அள்ளி அணைத்தார். பள்ளிக்கூடத்துல இன்னைக்கு என்னப்பா சொல்லிக் கொடுத்தாங்க என்ற அவரின் கேள்வியை Pass செய்த செல்வம், பசிக்குதுப்பா என்றான். தட்டில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ரெண்டு தக்காளி சாதம் வாங்கி வரச் சொன்னார்.

துள்ளி ஓடிய செல்வம் 108 படிகளை அசாதரணமாய் கடந்து இரண்டு பொட்டலங்களுடன் வந்தான். அப்பாவை அருகிலிருந்த பாறைக்கு அழைத்து சென்று அமர வைத்தவன், பாட்டிலில் தண்ணிப் பிடிக்க அருகிலிருந்த டேங்க்கை நோக்கி ஓடினான். தண்ணியோடு வந்தவன் எங்கப்பா பாக்கெட்டு என்றான். சட்டையே இல்லாத கண்ணாயிரம் என்னப்பா என்றார். தக்காளி சாதம் ரெண்டு வச்சேனே என்று பார்வையை திருப்பினான். நாய்கள் இரண்டு கவ்விக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. நாய் தூக்கிட்டு போச்சுப்பா என்று கத்திய செல்வத்தை அணைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்கினார் கண்ணாயிரம்.

கொஞ்சம் பொறுத்துக்குப்பா என்று மீண்டும் லைனில் சென்று அமர்ந்தார். சற்று நேரத்தில் ஐந்து ரூபாய் ஒரே காய்னாக தட்டில் விழ செல்வம் செல்வம் என்று செல்வத்தை தேடினார். ஓடி வந்தான். இந்தாப்பா. நீ போய் சாப்பிட்டு வா என்றார். உனக்கும் வாங்கிட்டு வர்றேன். எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கே என்றான்.

ஏது?

நானும் லைன்ல உட்க்கார்ந்தேன்ப்பா.

அடித்து விட்டார் கண்ணாயிரம். உனக்கு எதுக்குடா இந்த பொழப்பு? இதெல்லாம் வேணாம்ன்னு தானே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வேணாம் டா கண்ணு. உனக்கு படிப்பு வரலைன்னாலும் பரவாயில்ல. உழைச்சு சாப்பிடனும்டா. எந்த வேலை செஞ்சாலும் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடு. உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான். என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு. உனக்கென்ன என்று அழத் தொடங்கியவரை அழாதப்பா என்றான் செல்வம். தக்காளி சாதம் வாங்கிவர மீண்டும் கீழே வந்தான்.

E252 ரக Benz கார் அங்கிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. கையில் ஒரு பெட்டியுடன் இறங்கினார் அந்த கோட்டு சூட்டு மனிதர். யாரையோ தேடியவர் பின் மலையை நோக்கி நடந்தார். அவரை நோக்கி ஓடிய செல்வம் “அய்யா. நான் இந்தப் பொட்டிய தூக்கிட்டு வரவா? கொடுக்கறத கொடுங்க” என்றான். இதுக்குத்தான் ஆள தேடினேன் என்றவர் சிரித்தப்படி கொடுத்தார். மலை உச்சிக்கு அவர்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும். நடை சாத்தப்பட்டிருந்தது.

என்னப்பா கோயில் மூடியிருக்கு என்றார் அவர்.

தெர்ல சார். வாரம் ஒரு நாள் இப்படி மூடுவாங்க. என்னைக்குன்னு தெரில என்றான்.

இங்க உண்டியல் இருக்குதாப்பா?

அதோ.அங்க இருக்கும் சார்.

கண்களை மூடி கையெடுத்து கும்பிட்டு சொன்னார். “குமரா.உன்னை நம்பித்தான் இந்த பிசினச ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாபடியாய் போது. என் காணிக்கையா இத ஏத்துக்குப்பா என்றவர், பெட்டியில் இருந்த சில கரன்சி கட்டுகளை எடுத்து உண்டியலில் போட்டார். மலையை விட்டு இறங்கியவர் செல்வத்திடம் அஞ்சு ரூபாய் நோட்டை நீட்டினார். சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்.

ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்று அஞ்சு ரூபாயை தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். செய்வதறியாமல் நின்ற செல்வம் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து குனிந்து அஞ்சு ரூபாயுடன் அருகில் இருந்த கூரான கல்லையும் எடுத்தான். ”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Empty Re: உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்

Post by balakarthik Sat 9 Oct 2010 - 13:00

அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Empty Re: உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்

Post by கார்த்திக் Sat 9 Oct 2010 - 13:15

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை கதை ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Empty Re: உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum