Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லவன் மகள்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பல்லவன் மகள்
First topic message reminder :
அன்பு நன்பர்களே, புலியை கண்டு பூனை சூடு போட்டு கொள்ளலாமா. இந்த பூனை சூடு போட்டு கொள்ள போகிறது. மனதிற்குள் பல ஆயிரம் கதை இருந்தாலும் எழுத்து வடிவத்தில் வெளி கொணர்வது இதுவே முதல் தடவை. தவறு இருப்பின் மன்னித்து அருள்வது உமது தலயாய கடமை. இனி நாம் நமது கதைக்கு செல்வோம் நம்மை வரவேற்க அரசரும் அரசியரும் தோழியரும் காத்து இருக்கின்றனர். நாம் சற்றே ஆறாம் நூறான்டை நோக்கி பயனப்படுவோம்
ஆதிவராகன் கோவில்
முன்னிறவு வேளையில் கடல் மல்லை சற்றே உறக்க கோலத்தொடு காட்சி அளித்து கொண்டு இருந்தது. வீதிகளிலும் துறைமுகதிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. பெரிய பெரிய பண்டகசாலைகளில் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக காத்து இருந்தது. மல்லையில் அன்று இந்திர விழா கொண்டாடபட்டதால் மக்கள் விரைவாகவே வீடு சென்று விட்டனர் போலும். காஞ்சியில் இருந்து மன்னரும் இளவலும் வந்து சென்றது மக்களுக்கு மன நிறைவை அளித்திருக்க கூடும்.
அந்த முன்னிறவு வேளையில் வெகுதூரம் ஓடி களைத்துவிட்ட தனது குதிரையை விரட்ட மனமில்லாமல் மெதுவாகவே செலுத்தி வந்த அந்த வீரன் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாக பன்டங்களை சுமந்து தொலைவில் நிற்க்கும் கப்பல்களை நோக்கி சென்று கொன்டிருந்தன. சிம்ம விஷ்னு சக்ரவர்த்தியின் காலத்தில் இருந்து சிறிய துறைமுகமாக விளங்கிய மல்லை மகேந்திர சக்ரவர்த்தியின் காலத்திலும் பிறகு நரசிம்ம சக்ரவர்த்தியின் காலத்திலும் தலைமை துறைமுகமாக உருவெடுத்து விட்டது. இலங்கைக்கும் கலிங்கதிற்க்கும் கடல் வாணிபம் பெருத்து விட்டது.
கடற்கரை ஓரமாக தனது குதிரையை செலுத்திய அவ்வீரன் மெதுவாக ஊரை தாண்டி பாறைகளை குடைந்து குகை கோவில்களாக மாற்றபட்ட இடத்தை நோக்கி சென்றான். சற்றே தயக்கதுடன் வெளி வரும் நிலவொளியில் அவனை சிறிது உற்று பார்ப்போம். நடுத்தற வயதினை தாண்டினாலும் கஷ்டமில்லாமல் அவன் குதிரை மீது அமர்ந்து வந்தது அவனது இடைவிடாத உடற்பயிற்ச்சியை நமக்கு உணர்த்தியது.
மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றி சென்று ஆதி வராகன் கோவில் எனப்படும் குகையை அடைந்த அவ்வீரன் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கை நன்கு தூண்டி பிரகாசமாக்கினான். நரசிம்ம சக்ரவர்த்தியால் உருவாக்க பட்ட அக்கோவிலில் நாரயனான ஆதி வராகர் உக்கிரமும் சாந்தமும் கலந்து நோக்கி கொண்டிருந்தார். ஆதி வராகரை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த அவ்வீரனை விளக்கொளியில் உற்று நோக்குவோம். ஆஜானுபாகுவாக இருந்த அவ்வீரனின் அளவோடு சிறுத்த இடுப்பும், பறந்த மார்பும், முதுகும் அவனது உடற்பலத்தினை சற்றே உணர்த்தியது. சற்றே அகற்றி நிற்பதால் அவனது கால்களும் இரும்பினால் செய்யப்பட்டதாகவே தோன்றியது. அதிக சதைபிடிப்பு இல்லாத அவன் தேகமும் இடையில் இருந்த வாளின் மீது வைக்க பட்டிறுந்த நீண்ட கரமும் அவனது வீரத்தை நமக்கு பறைசாற்றின.
விளக்கொளியில் அவனது கூரிய விழிகள் அங்கு ஒரு மூலையில் இருந்த மகேந்திரவர்மரின் சிலையை பார்த்து இருப்பதை கண்டால் அச்சிலை அவனுடன் ஏதோ பேசுவதை போலவே காட்சி அளித்தது. அவன் நின்ற தோரனையும் அடிக்கடி குகை வாயிலை பார்ப்பதையும் கண்டால் யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் என்றே தோன்றும் வேளையில் தூரத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது
அன்பு நன்பர்களே, புலியை கண்டு பூனை சூடு போட்டு கொள்ளலாமா. இந்த பூனை சூடு போட்டு கொள்ள போகிறது. மனதிற்குள் பல ஆயிரம் கதை இருந்தாலும் எழுத்து வடிவத்தில் வெளி கொணர்வது இதுவே முதல் தடவை. தவறு இருப்பின் மன்னித்து அருள்வது உமது தலயாய கடமை. இனி நாம் நமது கதைக்கு செல்வோம் நம்மை வரவேற்க அரசரும் அரசியரும் தோழியரும் காத்து இருக்கின்றனர். நாம் சற்றே ஆறாம் நூறான்டை நோக்கி பயனப்படுவோம்
ஆதிவராகன் கோவில்
முன்னிறவு வேளையில் கடல் மல்லை சற்றே உறக்க கோலத்தொடு காட்சி அளித்து கொண்டு இருந்தது. வீதிகளிலும் துறைமுகதிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. பெரிய பெரிய பண்டகசாலைகளில் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக காத்து இருந்தது. மல்லையில் அன்று இந்திர விழா கொண்டாடபட்டதால் மக்கள் விரைவாகவே வீடு சென்று விட்டனர் போலும். காஞ்சியில் இருந்து மன்னரும் இளவலும் வந்து சென்றது மக்களுக்கு மன நிறைவை அளித்திருக்க கூடும்.
அந்த முன்னிறவு வேளையில் வெகுதூரம் ஓடி களைத்துவிட்ட தனது குதிரையை விரட்ட மனமில்லாமல் மெதுவாகவே செலுத்தி வந்த அந்த வீரன் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாக பன்டங்களை சுமந்து தொலைவில் நிற்க்கும் கப்பல்களை நோக்கி சென்று கொன்டிருந்தன. சிம்ம விஷ்னு சக்ரவர்த்தியின் காலத்தில் இருந்து சிறிய துறைமுகமாக விளங்கிய மல்லை மகேந்திர சக்ரவர்த்தியின் காலத்திலும் பிறகு நரசிம்ம சக்ரவர்த்தியின் காலத்திலும் தலைமை துறைமுகமாக உருவெடுத்து விட்டது. இலங்கைக்கும் கலிங்கதிற்க்கும் கடல் வாணிபம் பெருத்து விட்டது.
கடற்கரை ஓரமாக தனது குதிரையை செலுத்திய அவ்வீரன் மெதுவாக ஊரை தாண்டி பாறைகளை குடைந்து குகை கோவில்களாக மாற்றபட்ட இடத்தை நோக்கி சென்றான். சற்றே தயக்கதுடன் வெளி வரும் நிலவொளியில் அவனை சிறிது உற்று பார்ப்போம். நடுத்தற வயதினை தாண்டினாலும் கஷ்டமில்லாமல் அவன் குதிரை மீது அமர்ந்து வந்தது அவனது இடைவிடாத உடற்பயிற்ச்சியை நமக்கு உணர்த்தியது.
மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றி சென்று ஆதி வராகன் கோவில் எனப்படும் குகையை அடைந்த அவ்வீரன் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கை நன்கு தூண்டி பிரகாசமாக்கினான். நரசிம்ம சக்ரவர்த்தியால் உருவாக்க பட்ட அக்கோவிலில் நாரயனான ஆதி வராகர் உக்கிரமும் சாந்தமும் கலந்து நோக்கி கொண்டிருந்தார். ஆதி வராகரை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த அவ்வீரனை விளக்கொளியில் உற்று நோக்குவோம். ஆஜானுபாகுவாக இருந்த அவ்வீரனின் அளவோடு சிறுத்த இடுப்பும், பறந்த மார்பும், முதுகும் அவனது உடற்பலத்தினை சற்றே உணர்த்தியது. சற்றே அகற்றி நிற்பதால் அவனது கால்களும் இரும்பினால் செய்யப்பட்டதாகவே தோன்றியது. அதிக சதைபிடிப்பு இல்லாத அவன் தேகமும் இடையில் இருந்த வாளின் மீது வைக்க பட்டிறுந்த நீண்ட கரமும் அவனது வீரத்தை நமக்கு பறைசாற்றின.
விளக்கொளியில் அவனது கூரிய விழிகள் அங்கு ஒரு மூலையில் இருந்த மகேந்திரவர்மரின் சிலையை பார்த்து இருப்பதை கண்டால் அச்சிலை அவனுடன் ஏதோ பேசுவதை போலவே காட்சி அளித்தது. அவன் நின்ற தோரனையும் அடிக்கடி குகை வாயிலை பார்ப்பதையும் கண்டால் யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் என்றே தோன்றும் வேளையில் தூரத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது
Re: பல்லவன் மகள்
யவன பெருமன்னனான சிக்கந்தரைப்பற்றி அறிஎது கொள்வதில் அவர் ஆவலாக இருந்தார். 800 ஆண்டுகளுக்கு முன் எப்படி அப்பெருமன்னனால் 10 வருடங்கள் தொடர் படையெடுப்பு நடத்த முடிந்தது, அவனது போர் சாஸ்திரம், போர் சாகசம் பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார். கரியாட்டியும் தனக்கு தெரிந்ததையும் தெரியாததை மற்ற யவனர்களிடம் கேட்டு வந்து சொன்னான்.
தஷினபாரதத்தை காண ஹர்ஷரின் உதவியோடு பல்லவ தேசம் வந்த சீன புத்த யாத்ரீகரை தனது கப்பல் மூலம் கலிங்கதுக்கு அழைத்து சென்ற கரியாட்டி அவரிடம் இருந்து ஆயுதம் இன்றி போரிடும் முறையை கற்று கொண்டான். இதை மேலும் கற்று கொள்ள சீன தேசம் சென்ற கரியாட்டி சீன வாட்போர் முறையையும் கற்று தேர்ந்தான். அவனது திறமைகளை கண்ட வீரசேனர் அவனை தனது அந்தரங்க ஒற்றனாக வைத்துக்கொண்டார். கடலோடியும் யவனனுமான கரியாட்டி மற்றவர்கள் புக முடியாத இடத்தில் எல்லாம் புகுந்து செய்தி திரட்டி வந்தான்.
தனது குடிசையில் தன்னை மறந்து அயர்ந்து உறங்கும் வீரசேனரை கண்ட கரியாட்டி அவர் முகத்தில் தெரிந்த அயர்ச்சியும், கவலையையும் பார்த்து மனம் கலங்கினான். வீரசேனர் உண்மையில் யார் என்பதை வெகு காலம் முன்பே அவன் அறிந்தவனாதலால் பல்லவ மன்னன் மீது கோபம் கொண்டான்.
தஷினபாரதத்தை காண ஹர்ஷரின் உதவியோடு பல்லவ தேசம் வந்த சீன புத்த யாத்ரீகரை தனது கப்பல் மூலம் கலிங்கதுக்கு அழைத்து சென்ற கரியாட்டி அவரிடம் இருந்து ஆயுதம் இன்றி போரிடும் முறையை கற்று கொண்டான். இதை மேலும் கற்று கொள்ள சீன தேசம் சென்ற கரியாட்டி சீன வாட்போர் முறையையும் கற்று தேர்ந்தான். அவனது திறமைகளை கண்ட வீரசேனர் அவனை தனது அந்தரங்க ஒற்றனாக வைத்துக்கொண்டார். கடலோடியும் யவனனுமான கரியாட்டி மற்றவர்கள் புக முடியாத இடத்தில் எல்லாம் புகுந்து செய்தி திரட்டி வந்தான்.
தனது குடிசையில் தன்னை மறந்து அயர்ந்து உறங்கும் வீரசேனரை கண்ட கரியாட்டி அவர் முகத்தில் தெரிந்த அயர்ச்சியும், கவலையையும் பார்த்து மனம் கலங்கினான். வீரசேனர் உண்மையில் யார் என்பதை வெகு காலம் முன்பே அவன் அறிந்தவனாதலால் பல்லவ மன்னன் மீது கோபம் கொண்டான்.
Re: பல்லவன் மகள்
மதில் மேல் பூனை
அந்த வருஷத்தில் ஆனி மாத ஆரம்பத்திலேயே பலத்த மழை பெய்ததால் வைகையில் வெள்ளம் வந்து விட்டது. இரு கரையையும் மீறி வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. வெள்ளதின் வேகம் வெகு பலமாக இருந்தது. அப்படி இருந்தும் இளஞ்சிறுவர்கள் இடுப்பில் கயிறு கட்டி கொண்டு நீந்த முயற்சித்து கொண்டு இருந்தார்கள். கை சளைத்து தடுமாறியவர்களை கரையில் இருந்தவர்கள் கயிற்றை பிடித்து கரைக்கு இழுத்தார்கள். ஆக மொத்தத்தில் சிரிப்பும் கும்மாளமுமாக பொழுதை கழித்து கொண்டிருந்த அவர்களை கவனியாமல் தன் குதிரையை மதுரை நோக்கி செலுத்தினான் வீரசேனன். மனதிற்க்குள் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதியதால் கண் முன்னே தென்பட்ட இயற்கை அழகினை கூட கண்டு பருகாமல் விரைந்து சென்றான். உறையூரிலிருந்து கரியாட்டி அறிந்து வந்த செய்திகளும், காஞ்சியில் இருந்து வந்த செய்திகளும் அவரை மிகவும் துன்புறுத்தின. தன் காலத்தில் ஏற்படுத்தபட்ட சமாதானம் இப்படி சீரழிந்து போனதை எண்ணி எண்ணி அவர் மனம் வெம்பியது
மதுரை நகருக்குள் நுழையாமல் குதிரையை அவர் அழகர் மலை காட்டினுள் செலுத்தினார். காலில் கல் தைத்து தடுமாறிய குதிரையின் மேலிருந்து இறங்கி அக்கல்லை குளம்பில் இருந்து விடுவித்த அவருக்கு கரியாட்டி சொன்னது நினைவிற்க்கு வந்தது. குதிரையின் குளம்பில் இரும்பை வளைத்து லாடம் அடிப்பதாமே, இது சாத்தியம் தானா, நமது கொல்லர்களால் அது முடியுமா, என தனக்குள்ளே கேட்டு சிரித்து கொண்டார். தனஞ்ஜெயா நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தானடா என தன் குதிரையை தடவி கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தினால் ஏற்பட்ட ஆனந்தத்தில் அக்குதிரை கனைத்தது. அக்கனைப்பின் எதிரொலி போல் மற்றொரு குதிரையும் தூரத்தில் கனைத்தது.
அழகர்மலை அடிவாரத்தில் அக்காட்டின் நடுவே இருக்கும் அந்த தாமரைக்குளத்தினை சற்று அருகே சென்று பார்ப்போம். அட, என்றும் இல்லாத அதிசயமாக இன்று இங்கு ஒரு ரதம் நிற்க்கின்றதே. குதிரையின் கனைப்பை கேட்டு அதை தடவி சமாதானம் செய்ய சென்ற ஆடவன் குளகக்ரையில் சிலை போல் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து," மாமா, எதற்கு நம்மை இங்கு சந்திப்பதாக சொன்னார், நேராக அரண்மனை வந்திருக்கலாமே," என்றான்.
பேசாமடந்தை போல் அமர்ந்திருந்த பாண்டிய ராணி மங்கையர்க்கரசியின் தெய்வீக முகத்தில் ஒரு சிறு சலனம் தோன்றி மறைந்தது. "ஐயா, மாமா காரணமில்லாமல் நம்மை இங்கு வரச்சொல்லி இருக்கமாட்டார், ஏதோ முக்கிய காரணம் இல்லாமல் போகாது".
அந்த வருஷத்தில் ஆனி மாத ஆரம்பத்திலேயே பலத்த மழை பெய்ததால் வைகையில் வெள்ளம் வந்து விட்டது. இரு கரையையும் மீறி வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. வெள்ளதின் வேகம் வெகு பலமாக இருந்தது. அப்படி இருந்தும் இளஞ்சிறுவர்கள் இடுப்பில் கயிறு கட்டி கொண்டு நீந்த முயற்சித்து கொண்டு இருந்தார்கள். கை சளைத்து தடுமாறியவர்களை கரையில் இருந்தவர்கள் கயிற்றை பிடித்து கரைக்கு இழுத்தார்கள். ஆக மொத்தத்தில் சிரிப்பும் கும்மாளமுமாக பொழுதை கழித்து கொண்டிருந்த அவர்களை கவனியாமல் தன் குதிரையை மதுரை நோக்கி செலுத்தினான் வீரசேனன். மனதிற்க்குள் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதியதால் கண் முன்னே தென்பட்ட இயற்கை அழகினை கூட கண்டு பருகாமல் விரைந்து சென்றான். உறையூரிலிருந்து கரியாட்டி அறிந்து வந்த செய்திகளும், காஞ்சியில் இருந்து வந்த செய்திகளும் அவரை மிகவும் துன்புறுத்தின. தன் காலத்தில் ஏற்படுத்தபட்ட சமாதானம் இப்படி சீரழிந்து போனதை எண்ணி எண்ணி அவர் மனம் வெம்பியது
மதுரை நகருக்குள் நுழையாமல் குதிரையை அவர் அழகர் மலை காட்டினுள் செலுத்தினார். காலில் கல் தைத்து தடுமாறிய குதிரையின் மேலிருந்து இறங்கி அக்கல்லை குளம்பில் இருந்து விடுவித்த அவருக்கு கரியாட்டி சொன்னது நினைவிற்க்கு வந்தது. குதிரையின் குளம்பில் இரும்பை வளைத்து லாடம் அடிப்பதாமே, இது சாத்தியம் தானா, நமது கொல்லர்களால் அது முடியுமா, என தனக்குள்ளே கேட்டு சிரித்து கொண்டார். தனஞ்ஜெயா நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தானடா என தன் குதிரையை தடவி கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தினால் ஏற்பட்ட ஆனந்தத்தில் அக்குதிரை கனைத்தது. அக்கனைப்பின் எதிரொலி போல் மற்றொரு குதிரையும் தூரத்தில் கனைத்தது.
அழகர்மலை அடிவாரத்தில் அக்காட்டின் நடுவே இருக்கும் அந்த தாமரைக்குளத்தினை சற்று அருகே சென்று பார்ப்போம். அட, என்றும் இல்லாத அதிசயமாக இன்று இங்கு ஒரு ரதம் நிற்க்கின்றதே. குதிரையின் கனைப்பை கேட்டு அதை தடவி சமாதானம் செய்ய சென்ற ஆடவன் குளகக்ரையில் சிலை போல் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து," மாமா, எதற்கு நம்மை இங்கு சந்திப்பதாக சொன்னார், நேராக அரண்மனை வந்திருக்கலாமே," என்றான்.
பேசாமடந்தை போல் அமர்ந்திருந்த பாண்டிய ராணி மங்கையர்க்கரசியின் தெய்வீக முகத்தில் ஒரு சிறு சலனம் தோன்றி மறைந்தது. "ஐயா, மாமா காரணமில்லாமல் நம்மை இங்கு வரச்சொல்லி இருக்கமாட்டார், ஏதோ முக்கிய காரணம் இல்லாமல் போகாது".
Re: பல்லவன் மகள்
" இருக்கட்டும் தேவி, ஆனாலும் அரண்மனைக்கு வராமல் நம்மை இங்கு வரச்சொன்ன காரணம் தான் எனக்கு புரியவில்லை"...
"ஐயா, அதோ மாமாவே வந்து விட்டார், வாருங்கள் இதை அவரிடமே கேட்ப்போம்.."
தன்னை வணங்கி நின்ற பாண்டிய மன்னனையும், அரசியையும் வாழ்த்திய வீரசேனர் மன்னன் நெடுமாறனை நெஞ்சுற அணைத்துக்கொண்டார். "நெடுமாறா, உன்னை இப்படி காண மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காழி வாழ் மகான் ஞானசம்பந்தரின் மகிமையே மகிமை. என் தந்தையும் இப்படி வாகீசரின் துணையால் அகக்கண் திறக்கப்பெற்றார். எல்லாம் அந்த ஈசன் செயல்.."
"மாமா, கூன் பாண்டியனாக இருந்த என்னை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய அந்த சம்பன்த பெருமானின் அருளை என்னவென்று சொல்லுவேன், வாருங்கள், அங்கு அமர்ந்து பேசுவோம்
"பாண்டிய மன்னா.." என்று ஆரம்பித்த வீரசேனரை தடுக்க முயன்ற நெடுமாறனை நோக்கி," இன்று நான் பல்லவ மன்னனின் தூதனாக வரவில்லை, இந்த தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்தை உனக்கு விளக்கவே உன்னை இவ்விடம் வரச்செய்தேன்..."
"இருந்தாலும், என்னை மன்னா என்று தாங்கள் அழைப்பது சரியல்லவே.."
"ஐயா, அதோ மாமாவே வந்து விட்டார், வாருங்கள் இதை அவரிடமே கேட்ப்போம்.."
தன்னை வணங்கி நின்ற பாண்டிய மன்னனையும், அரசியையும் வாழ்த்திய வீரசேனர் மன்னன் நெடுமாறனை நெஞ்சுற அணைத்துக்கொண்டார். "நெடுமாறா, உன்னை இப்படி காண மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காழி வாழ் மகான் ஞானசம்பந்தரின் மகிமையே மகிமை. என் தந்தையும் இப்படி வாகீசரின் துணையால் அகக்கண் திறக்கப்பெற்றார். எல்லாம் அந்த ஈசன் செயல்.."
"மாமா, கூன் பாண்டியனாக இருந்த என்னை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய அந்த சம்பன்த பெருமானின் அருளை என்னவென்று சொல்லுவேன், வாருங்கள், அங்கு அமர்ந்து பேசுவோம்
"பாண்டிய மன்னா.." என்று ஆரம்பித்த வீரசேனரை தடுக்க முயன்ற நெடுமாறனை நோக்கி," இன்று நான் பல்லவ மன்னனின் தூதனாக வரவில்லை, இந்த தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்தை உனக்கு விளக்கவே உன்னை இவ்விடம் வரச்செய்தேன்..."
"இருந்தாலும், என்னை மன்னா என்று தாங்கள் அழைப்பது சரியல்லவே.."
Re: பல்லவன் மகள்
"இல்லை நெடுமாறா, இன்று நான் ஒரு சாதாரணன். என் மகன் இறந்து நான் உயிரோடு இருப்பது, என்னை மிகவும் துயரப்பட வைக்கிறது. எனக்கு போர் மீது சிறிதும் நாட்டமில்லை. ஆனால், நடப்பதை கவனித்தால் போரை தவிர்க்க முடியாது போல் இருக்கிறது.."
இது வரை பேசாமல் இருந்த பாண்டிய ராணி," போர் பாண்டிய நாட்டையும் பாதிக்குமா, மாமா?.."
"தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போர் மதுரை வரை நீளும் என்பது நிச்சயம் தாயே. நெடுமாறா, உனது தந்தை எனக்கு எதிராக புலிகேசியோடு அணி சேர்ந்தார். புலிகேசி காவிரியில் யானைப்பாலம் அமைத்து சோழ நாட்டை அபகரிக்க துணை நின்றார். வாதாபி சென்ற எனக்கு உதவி செய்ய வந்த உன்னை உன் தந்தையின் உடல் நலம் கருதி மதுரைக்கு திருப்பி அனுப்பினேன் நான். இப்போது காஞ்சியில் அரசாள்வது பரமேஸ்வரன் அவனை எதிர்ப்பதோ ஸ்ரீராமபுண்யவல்லபரின் துணை கொண்ட விக்ரமாதித்தன்.
"மாமா, ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கவலைபடுவதாக எனக்கு தோன்றுகிறது,"
"இல்லை நெடுமாறா, நிலைமை உனக்கு இன்னும் பிடிபடவில்லை. புலிகேசியாவது யானைப்பாலம் கட்டி காவிரி கடந்து சோழ நாடு வந்தான், தென் நாட்டை வீரத்தால் அடைய முயன்றான், ஆனால் ஸ்ரீராம புண்யவல்லபர் மித்ர பேதம் செய்வதில் வல்லவர். நான் வாதாபி போருக்குப்பின் செய்ய நினைத்ததை செய்து முடித்திருந்தால் இன்று இந்த போர் மூண்டு இராது".
இது வரை பேசாமல் இருந்த பாண்டிய ராணி," போர் பாண்டிய நாட்டையும் பாதிக்குமா, மாமா?.."
"தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போர் மதுரை வரை நீளும் என்பது நிச்சயம் தாயே. நெடுமாறா, உனது தந்தை எனக்கு எதிராக புலிகேசியோடு அணி சேர்ந்தார். புலிகேசி காவிரியில் யானைப்பாலம் அமைத்து சோழ நாட்டை அபகரிக்க துணை நின்றார். வாதாபி சென்ற எனக்கு உதவி செய்ய வந்த உன்னை உன் தந்தையின் உடல் நலம் கருதி மதுரைக்கு திருப்பி அனுப்பினேன் நான். இப்போது காஞ்சியில் அரசாள்வது பரமேஸ்வரன் அவனை எதிர்ப்பதோ ஸ்ரீராமபுண்யவல்லபரின் துணை கொண்ட விக்ரமாதித்தன்.
"மாமா, ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கவலைபடுவதாக எனக்கு தோன்றுகிறது,"
"இல்லை நெடுமாறா, நிலைமை உனக்கு இன்னும் பிடிபடவில்லை. புலிகேசியாவது யானைப்பாலம் கட்டி காவிரி கடந்து சோழ நாடு வந்தான், தென் நாட்டை வீரத்தால் அடைய முயன்றான், ஆனால் ஸ்ரீராம புண்யவல்லபர் மித்ர பேதம் செய்வதில் வல்லவர். நான் வாதாபி போருக்குப்பின் செய்ய நினைத்ததை செய்து முடித்திருந்தால் இன்று இந்த போர் மூண்டு இராது".
Re: பல்லவன் மகள்
"நெடுமாறா, ஹர்ஷரின் ராஜ்யம் எவ்வளவு பெரிது என்று நீ அறிவாயா? 200 காத நீளமுள்ள ராஜ்யம் அது. நமது தென்னாட்டிலே 10 காதம் தாண்டுவதற்க்கு முன் மூன்று ராஜ்யங்களை கடக்க வேண்டும். ஹர்ஷரின் ராஜ்யத்தை போலவே தென் நாட்டில் இனி பல்லவ ராஜ்யம் மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியோடு இருந்த என்னை ஒரு மனிதனின் சுத்த வீரம் மாற்றியது. மீண்டும் ஒரு ராஜ்யமாக சேர்ந்து விக்ரமாதித்தனை எதிர்க்காவிட்டால் தமிழகம் பிரியப்போவது உறுதி."
வியப்புடன் வீரசேனர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த பாண்டிய மன்னன்," மாமா, தாங்கள் அனைத்தும் அறிந்தவர், இந்நிலையில் பாண்டிய தேசம் என்ன செய்ய வேண்டும் என தாங்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும்."
"மாமா, பொருட்சேதத்தையும்,உயிர் சேதத்தையும் தடுக்க வழி இல்லையா?", என கேட்ட மங்கையர்கரசியை நோக்கிய வீரசேனர், "இருக்கிறது தாயே, நான் வகுக்கும் திட்டம் நிறைவேறுமானால் சேதம் மிக குறைவாக இருக்கும். நெடுமாறா, நீ உடனே ரணதீரன் தலைமையில் ஒரு பெரிய படையை தென் பாண்டி சீமைக்கு அனுப்பி விடு. அங்கு அவர்கள் கடுமையாக போர் பயிற்சி பெறட்டும். காந்தளூர்சாலையிருந்து ஆசான்களை வரவழைத்து கடுமையான பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய். இது ரகசியமாக இருக்கட்டும். சளுக்க நாட்டில் இருந்து தூது வந்தால் பாண்டிய நாடு நடுநிலை வகுக்கும் என தெரிவித்து விடு. நான் இங்கிருந்து உறையூர் செல்கிறேன்".
தேரில் ஏறி வீரசேனரை பற்றி பேசியவாறே அரண்மனை திரும்பிய பாண்டிய மன்னனை எதிர்கொண்டது ஸ்ரீராம புண்யவல்லபரின் புன்னகை ததும்பிய முகம்
வியப்புடன் வீரசேனர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த பாண்டிய மன்னன்," மாமா, தாங்கள் அனைத்தும் அறிந்தவர், இந்நிலையில் பாண்டிய தேசம் என்ன செய்ய வேண்டும் என தாங்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும்."
"மாமா, பொருட்சேதத்தையும்,உயிர் சேதத்தையும் தடுக்க வழி இல்லையா?", என கேட்ட மங்கையர்கரசியை நோக்கிய வீரசேனர், "இருக்கிறது தாயே, நான் வகுக்கும் திட்டம் நிறைவேறுமானால் சேதம் மிக குறைவாக இருக்கும். நெடுமாறா, நீ உடனே ரணதீரன் தலைமையில் ஒரு பெரிய படையை தென் பாண்டி சீமைக்கு அனுப்பி விடு. அங்கு அவர்கள் கடுமையாக போர் பயிற்சி பெறட்டும். காந்தளூர்சாலையிருந்து ஆசான்களை வரவழைத்து கடுமையான பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய். இது ரகசியமாக இருக்கட்டும். சளுக்க நாட்டில் இருந்து தூது வந்தால் பாண்டிய நாடு நடுநிலை வகுக்கும் என தெரிவித்து விடு. நான் இங்கிருந்து உறையூர் செல்கிறேன்".
தேரில் ஏறி வீரசேனரை பற்றி பேசியவாறே அரண்மனை திரும்பிய பாண்டிய மன்னனை எதிர்கொண்டது ஸ்ரீராம புண்யவல்லபரின் புன்னகை ததும்பிய முகம்
Re: பல்லவன் மகள்
குந்தவியின் தயக்கம்
தூரத்தில் கோட்டை மணி இரவு மூன்றாம் ஜாமத்தை நெருங்கியதை பலமாக அறிவித்தது. எங்கு நோக்கினும் கும்மிருட்டு. இருள் தன் மேல் ஒரு போர்வையை போர்த்தி கொண்டதைப்போல் இருந்தது. குதிரையின் தலைகயிற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்த வீரசேனர் நேராக கரிகால் பெருவளத்தானின் பழைய மாளிகையை நோக்கி சென்றார். நகர காவலர்கள் அவரை கண்டும் காணாதது போல் இருந்தது அவர் வரவு எதிர்பார்க்கபட்டதே என நமக்கு தோன்றுகிறது.
மாளிகையை நெருங்கிய வீரசேனரின் கால்களில் வந்து விழுந்தான் கரியாட்டி. அவனை தூக்கி எழுப்பி மார்புற அணைத்துக்கொண்ட வீரசேனர் அவன் அதற்க்குள் எப்படி மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தான் என வியந்தார். அவரது முகக்குறியிலிருந்து அவருள் இருந்த கேள்வியை புரிந்து கொண்ட கரியாட்டி,"அய்யா, முதலில் உள்ளே வந்து சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள் பிறகு நான் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறேன்,"என்றான்
தூரத்தில் கோட்டை மணி இரவு மூன்றாம் ஜாமத்தை நெருங்கியதை பலமாக அறிவித்தது. எங்கு நோக்கினும் கும்மிருட்டு. இருள் தன் மேல் ஒரு போர்வையை போர்த்தி கொண்டதைப்போல் இருந்தது. குதிரையின் தலைகயிற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்த வீரசேனர் நேராக கரிகால் பெருவளத்தானின் பழைய மாளிகையை நோக்கி சென்றார். நகர காவலர்கள் அவரை கண்டும் காணாதது போல் இருந்தது அவர் வரவு எதிர்பார்க்கபட்டதே என நமக்கு தோன்றுகிறது.
மாளிகையை நெருங்கிய வீரசேனரின் கால்களில் வந்து விழுந்தான் கரியாட்டி. அவனை தூக்கி எழுப்பி மார்புற அணைத்துக்கொண்ட வீரசேனர் அவன் அதற்க்குள் எப்படி மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தான் என வியந்தார். அவரது முகக்குறியிலிருந்து அவருள் இருந்த கேள்வியை புரிந்து கொண்ட கரியாட்டி,"அய்யா, முதலில் உள்ளே வந்து சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள் பிறகு நான் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறேன்,"என்றான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இளைய பல்லவன் (கருணாகர பல்லவன் அல்லது தொண்டைமான்
» இளைய பல்லவன் (கருணாகர பல்லவன் அல்லது தொண்டைமான்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!
» பல்லவன் தந்த அரியணை -கௌதம நீலாம்பரன்
» இளைய பல்லவன் (கருணாகர பல்லவன் அல்லது தொண்டைமான்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!
» பல்லவன் தந்த அரியணை -கௌதம நீலாம்பரன்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|