Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை
Page 1 of 1
இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை
சமயங்கள் தமிழை வளர்த்தனவா, இல்லை தமிழால் சமயங்கள் வளர்ந்தனவா என்கிற தலைப்பு விவாதத்துக்குறியது
தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பினை விளக்கும் ஒரு பழம்பாடல் ஒன்று உண்டு....
”நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மான்புறு சீறாவும்”
நமது கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்தான பங்களிப்பில் இந்து மதம் சார்ந்த இலக்கியங்களே பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டது .கிருஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் படைப்புகள் பெயரளவிற்கே பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.
தமிழகத்திற்கும் இஸ்லாமிய உலகத்திற்குமான தொடர்புகளின் துவக்கமென பார்த்தால் பண்டைய காலத்திலான வர்த்தக தொடர்புகள் ஆதாரமாய் சொல்லலாம்.எனினும் தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண்டின் துவக்கமென சொல்லலாம்.
தமிழ் இலக்கியத்தில் மரபு சார்ந்த பிரபந்த வகைகள் தொண்ணூற்று ஆறு இருப்பதாக தெரிகிறது.இஸ்லாமிய தமிழறிஞர்கள் அநேகமாய் தமிழின் எல்லா எல்கைகளிலும் சென்று எழுதியிருக்கிறார்கள்.
இதனையும் தாண்டி இஸ்லாமிய தமிழறிஞர்கள் தமிழுக்கு புதிதாக எட்டு இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவை முறையே....
மஸலா
கிஸ்ஸா
நாமா
முனாஜாத்து
படைப்போர்
நொண்டி நாடகம்
திருமண வாழ்த்து
அரபுத் தமிழ்
முதல் வகையான மஸலா வகையினை பார்ப்போம்....
மஸலா என்பது அரபி வார்த்தையான மஸ் அலா என்கிற வார்த்தையின் மருவல் எனலாம். தொடர்புடைய தமிழ் அர்த்தமாய் தேடுதலும் தெளிதலுமெனலாம். கேள்வி கேட்டு அதன் மூலமாய் இஸ்லாமிய தத்துவங்களை விளக்குவதே இந்த வகை இலக்கியம்.
இந்த மஸலா வகையில் தமிழில் மூன்று நூல்கள் இருக்கின்றன.
1.ஆயிர மஸலாவென்று வழங்கும் அதிஜய புராணம்
2..நூறு மசலா
3. வெள்ளாட்டி மசலா
இவற்றுள் ஆயிர மஸலாவே காலத்தால் முந்தையது என தெரிகிறது. இதை இயற்றியவரின் பெயர் வண்ண பரிமள புலவர் என அறியப்படும் செய்கு முதலி இஸ்ஹாக்.1572 ம் ஆண்டு இந்த நூலை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார் என்பதும் வியப்பான ஒரு செய்தி. இந்த நூலில் 1095 பாடல்கள் உள்ளன.
வெள்ளாட்டி மஸலா என்கிற நூல் காலத்தால் பிந்தையது. 1852 ம் ஆண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது .வசன நடையில் உள்ள ஒரே மஸலா இதுவேயாகும். தமிழில் உள்ள மூன்று மஸலாக்களில் இதுவே சிறந்ததாய் கருதப் படுகிறது.
மூன்றாவது மஸலாவான நூறு மஸலாவினை எழுதியவர் பெயரோ அல்லது வெளியான காலக்குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனினிம் இந்த நூல் 1872ம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
மற்ற மஸலாக்களை விட இந்த நூறு மஸலாவே அதிகமாய் பதிப்பிக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பினை உணர்த்தும்.
”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி...
‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்ல்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.
கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.
சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....
•ஈசுபு நபி கிஸ்ஸா
•அலி(ரலி) கிஸ்ஸா
•இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
•முகமது அனிபு கிஸ்ஸா
•சைத்தூள் கிஸ்ஸா
•ஷம்ஊன் கிஸ்ஸா
•கபன் கள்ளன் கிஸ்ஸா
இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.
தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.
ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.
இஸ்லாமிய தமிழறிஞர்கள், தமிழுக்கு தந்த மற்றொரு கொடை நாமா வகை இலக்கியங்களாகும். ”நாமே” என்கிற பாரசீக மொழியின் தழுவலாகவே நாமா குறிக்கப் படுகிறது. இதற்கு ‘வரலாறு' என பொருள் படும்.
அருஞ்செயலாற்றிய இஸ்லாமிய பெரியார்களின் வரலாற்றினை தருவதே இவ்வகை இலக்கியத்தின் நோக்காய் இருந்தது. தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருப்பதாய் தெரிகிறது. இவற்றுள் புகழ் பெற்ற சில நாமாக்களையும் அது தொடர்பான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நூறு நாமா
மிஃஹ்றாஜ் நாமா
இருஷாது நாமா
சங்கறாத்து நாமா
நூறு நாமா அல்லது நூர் நாமா :
பாரசீக மொழியில் 'இமாம் கஸ்ஸாலி' என்பாரால் இயற்றப்பட்ட நூலின் தழுவலே இந்த நூறு நாமா. இதை நூர் நாமா என்றே அழைத்திட வேண்டும். நூர் என்கிற பாரசீக சொல்லுகு ஒளி என பொருள்தரும்.
'தொங்கல்'* எனும் செய்யுள் வடிவில் அமைந்த இருநூறு பாக்களில், இறைவன் ஒளியால் உலகத்தை படைத்தான் என்பதை மனித இனத்தின் வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நூல் இது. இதை இயற்றியவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அஹமது மரைக்காயர் என்பார் ஆவார்.
மிஃஹறாஜ் நாமா
அய்யம்பேட்டை மதாறு சாஹிபு புலவரால் இயற்றப் பட்ட இந்த நூல் நபிகள் நாயகமவர்கள் வானவர்கோன் ஜிஃப்ரீல்(அலை) அவர்கள் துனையுடன் விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானம் அடைந்து மீண்ட வரலாற்றினை விவரிக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெருங் கடமைகளை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.
இருஷாது நாமா
தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனை படைத்தான் என்கிற மரபு இஸ்லாத்தில் உண்டு. இதற்கு மாறாக இறைச்சிந்தனை இல்லாது, ஒழுக்கநெறி தவறி இம்மையில் வாழ்வோருக்கு மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் எத்தகைய தண்டனைகளை தருகிறான் என்பதை விளக்கிடும் நூல்தான் இருஷாது நாமா.
காயல் ஷமூனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது இந்த நூல். மனித குல மேன்மைக்கு தொழுகை எத்தனை அவசியமானது என்பதை வலியுறுத்தும் அருமையான நூல் இது. 'இர்ஷாத்' என்கிற அரபி நூலின் தழுவலே இருஷாது நாமா.
சக்கறாத்து நாமா
நாமா வகை இலக்கியங்களுள் மிகவும் புகழ் பெற்றது சக்கறாத்து நாமாவாகும்.பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாஹிபு அவர்களால் இயற்றப் பட்டது இந்த நூல். நூறு பாக்களை உள்ளடக்கிய இந்த நூல் பெரும்பாலும் 'தொங்கல்'* எனப்படும் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் ஆங்காங்கே வென்பாக்களும் இடம் பெற்றிருக்கிறது.
மரணம் என்பது மனிதகுலம் உட்பட எந்த ஒரு உயிரினமும் தவிர்க்க இயலாதது. மரணத்தின் அருகாமையில் மனிதன் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனை தொடர்பான அனுபவங்களையும், அவற்றில் இருந்து விடுபட தேவையான இறைச்சிந்தனை மற்றும் விவரித்துக் கூறும் நூல் இது.
* அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் ”தொங்கல்” என வழங்குவர்
நன்றி : http://tavusarpandi.blogspot.com/
தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பினை விளக்கும் ஒரு பழம்பாடல் ஒன்று உண்டு....
”நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மான்புறு சீறாவும்”
நமது கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்தான பங்களிப்பில் இந்து மதம் சார்ந்த இலக்கியங்களே பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டது .கிருஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் படைப்புகள் பெயரளவிற்கே பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.
தமிழகத்திற்கும் இஸ்லாமிய உலகத்திற்குமான தொடர்புகளின் துவக்கமென பார்த்தால் பண்டைய காலத்திலான வர்த்தக தொடர்புகள் ஆதாரமாய் சொல்லலாம்.எனினும் தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண்டின் துவக்கமென சொல்லலாம்.
தமிழ் இலக்கியத்தில் மரபு சார்ந்த பிரபந்த வகைகள் தொண்ணூற்று ஆறு இருப்பதாக தெரிகிறது.இஸ்லாமிய தமிழறிஞர்கள் அநேகமாய் தமிழின் எல்லா எல்கைகளிலும் சென்று எழுதியிருக்கிறார்கள்.
இதனையும் தாண்டி இஸ்லாமிய தமிழறிஞர்கள் தமிழுக்கு புதிதாக எட்டு இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவை முறையே....
மஸலா
கிஸ்ஸா
நாமா
முனாஜாத்து
படைப்போர்
நொண்டி நாடகம்
திருமண வாழ்த்து
அரபுத் தமிழ்
முதல் வகையான மஸலா வகையினை பார்ப்போம்....
மஸலா என்பது அரபி வார்த்தையான மஸ் அலா என்கிற வார்த்தையின் மருவல் எனலாம். தொடர்புடைய தமிழ் அர்த்தமாய் தேடுதலும் தெளிதலுமெனலாம். கேள்வி கேட்டு அதன் மூலமாய் இஸ்லாமிய தத்துவங்களை விளக்குவதே இந்த வகை இலக்கியம்.
இந்த மஸலா வகையில் தமிழில் மூன்று நூல்கள் இருக்கின்றன.
1.ஆயிர மஸலாவென்று வழங்கும் அதிஜய புராணம்
2..நூறு மசலா
3. வெள்ளாட்டி மசலா
இவற்றுள் ஆயிர மஸலாவே காலத்தால் முந்தையது என தெரிகிறது. இதை இயற்றியவரின் பெயர் வண்ண பரிமள புலவர் என அறியப்படும் செய்கு முதலி இஸ்ஹாக்.1572 ம் ஆண்டு இந்த நூலை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார் என்பதும் வியப்பான ஒரு செய்தி. இந்த நூலில் 1095 பாடல்கள் உள்ளன.
வெள்ளாட்டி மஸலா என்கிற நூல் காலத்தால் பிந்தையது. 1852 ம் ஆண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது .வசன நடையில் உள்ள ஒரே மஸலா இதுவேயாகும். தமிழில் உள்ள மூன்று மஸலாக்களில் இதுவே சிறந்ததாய் கருதப் படுகிறது.
மூன்றாவது மஸலாவான நூறு மஸலாவினை எழுதியவர் பெயரோ அல்லது வெளியான காலக்குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனினிம் இந்த நூல் 1872ம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
மற்ற மஸலாக்களை விட இந்த நூறு மஸலாவே அதிகமாய் பதிப்பிக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பினை உணர்த்தும்.
”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி...
‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்ல்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.
கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.
சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....
•ஈசுபு நபி கிஸ்ஸா
•அலி(ரலி) கிஸ்ஸா
•இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
•முகமது அனிபு கிஸ்ஸா
•சைத்தூள் கிஸ்ஸா
•ஷம்ஊன் கிஸ்ஸா
•கபன் கள்ளன் கிஸ்ஸா
இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.
தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.
ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.
இஸ்லாமிய தமிழறிஞர்கள், தமிழுக்கு தந்த மற்றொரு கொடை நாமா வகை இலக்கியங்களாகும். ”நாமே” என்கிற பாரசீக மொழியின் தழுவலாகவே நாமா குறிக்கப் படுகிறது. இதற்கு ‘வரலாறு' என பொருள் படும்.
அருஞ்செயலாற்றிய இஸ்லாமிய பெரியார்களின் வரலாற்றினை தருவதே இவ்வகை இலக்கியத்தின் நோக்காய் இருந்தது. தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருப்பதாய் தெரிகிறது. இவற்றுள் புகழ் பெற்ற சில நாமாக்களையும் அது தொடர்பான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நூறு நாமா
மிஃஹ்றாஜ் நாமா
இருஷாது நாமா
சங்கறாத்து நாமா
நூறு நாமா அல்லது நூர் நாமா :
பாரசீக மொழியில் 'இமாம் கஸ்ஸாலி' என்பாரால் இயற்றப்பட்ட நூலின் தழுவலே இந்த நூறு நாமா. இதை நூர் நாமா என்றே அழைத்திட வேண்டும். நூர் என்கிற பாரசீக சொல்லுகு ஒளி என பொருள்தரும்.
'தொங்கல்'* எனும் செய்யுள் வடிவில் அமைந்த இருநூறு பாக்களில், இறைவன் ஒளியால் உலகத்தை படைத்தான் என்பதை மனித இனத்தின் வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நூல் இது. இதை இயற்றியவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அஹமது மரைக்காயர் என்பார் ஆவார்.
மிஃஹறாஜ் நாமா
அய்யம்பேட்டை மதாறு சாஹிபு புலவரால் இயற்றப் பட்ட இந்த நூல் நபிகள் நாயகமவர்கள் வானவர்கோன் ஜிஃப்ரீல்(அலை) அவர்கள் துனையுடன் விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானம் அடைந்து மீண்ட வரலாற்றினை விவரிக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெருங் கடமைகளை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.
இருஷாது நாமா
தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனை படைத்தான் என்கிற மரபு இஸ்லாத்தில் உண்டு. இதற்கு மாறாக இறைச்சிந்தனை இல்லாது, ஒழுக்கநெறி தவறி இம்மையில் வாழ்வோருக்கு மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் எத்தகைய தண்டனைகளை தருகிறான் என்பதை விளக்கிடும் நூல்தான் இருஷாது நாமா.
காயல் ஷமூனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது இந்த நூல். மனித குல மேன்மைக்கு தொழுகை எத்தனை அவசியமானது என்பதை வலியுறுத்தும் அருமையான நூல் இது. 'இர்ஷாத்' என்கிற அரபி நூலின் தழுவலே இருஷாது நாமா.
சக்கறாத்து நாமா
நாமா வகை இலக்கியங்களுள் மிகவும் புகழ் பெற்றது சக்கறாத்து நாமாவாகும்.பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாஹிபு அவர்களால் இயற்றப் பட்டது இந்த நூல். நூறு பாக்களை உள்ளடக்கிய இந்த நூல் பெரும்பாலும் 'தொங்கல்'* எனப்படும் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் ஆங்காங்கே வென்பாக்களும் இடம் பெற்றிருக்கிறது.
மரணம் என்பது மனிதகுலம் உட்பட எந்த ஒரு உயிரினமும் தவிர்க்க இயலாதது. மரணத்தின் அருகாமையில் மனிதன் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனை தொடர்பான அனுபவங்களையும், அவற்றில் இருந்து விடுபட தேவையான இறைச்சிந்தனை மற்றும் விவரித்துக் கூறும் நூல் இது.
* அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் ”தொங்கல்” என வழங்குவர்
நன்றி : http://tavusarpandi.blogspot.com/
Similar topics
» வரலாற்றுப் பார்வை
» வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு
» ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!
» விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு
» ஈகரை இஸ்லாம் உறவுகளுக்கு “தமிழ் இஸ்லாம்” கருத்துக்களம் அறிமுகம்!
» விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|