ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

Go down

மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!  Empty மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

Post by கார்த்திக் Sun Oct 03, 2010 10:51 am

இந்த உலகத்துல எதுவுமே இல்லாமகூட வாழ்ந்துடலாம். ஆனா பணம் மட்டும் இல்லாம வாழவே முடியாது. ஏன்னா, பணம் பத்தும் செய்யும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். ஆக, பணம் இல்லாம வாழ்க்கையே இல்லை அப்படீங்கிற கருத்த, உலகத்தையே உருவாக்கினதா சொல்ற கடவுளோடவே ஒப்பிட்டுப்பாடினாரு ஒரு கவிஞரு…..

“காசேதான் கடவுளப்பா…..அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா……?!”

அது சரி, ஆமா பணத்தை ஏன் ஆனானப்பட்ட கடவுளோடவே ஒப்பிட்டுப்பார்க்குறாங்க? அதுக்கான காரணம் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். அதாவது, மனித வாழ்க்கையின் ஆதாரமான ஆசை என்கிற உந்துதலால், மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லவரு, உலகத்தின் சகலகலா வல்லவராக நம்பப்படும் கடவுள். ஆனா, இந்த 21 ஆம் நூற்றாண்டுல அந்தக் கடவுளாலயே பூர்த்தி செய்ய முடியாத ஆசை/தேவையைக் கூட பணம்/காசு பூர்த்தி செய்துவிடும் அப்படீங்கிற நிதர்சனத்தை வலியுறுத்தத்தான், அனேகமா காசேதான் கடவுளடா பாடியிருக்காரு அந்த கவிஞரு?!

ஒரு மனிதனின் ஆசைகள் நிறைவேறிட்டா, அவனோட மனசு மகிழ்ச்சியடையும். பணமிருந்தா, மனுசனோட பெரும்பாலான ஆசைகள் நிறைவேறிடும். ஆக, பணமிருந்தா மகிழ்ச்சியை வாங்கிடலாம் அப்படீன்னு ஒரு கருத்து நம்ம மனித சமுதாயத்துல இருக்கு! இப்படியொரு கருத்து எவ்வளவுதூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுன்னு மக்கள்கிட்டக் கேட்டா, வாழ்க்கையைப் பத்தின அவரவரின் புரிதலினடிப்படையில, ஏகப்பட்ட கருத்துகள முன்வைப்பாங்கங்கிறது உண்மைதான்னாலும், அதுல பெரும்பாலானவங்களோட கருத்து, “ஆமாம், பணமிருந்தால் மகிழ்ச்சியை வாங்கிவிடலாம்” என்பதாகத்தானிருக்கும் அப்படீன்னு நம்மலால யூகிக்கத்தான் முடியுமே தவிர திட்டவட்டமா சொல்ல முடியாது! அப்படியே ஒருத்தர் அடிச்சு (?) சொன்னாலும், சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாரும் அதை ஏத்துக்க மாட்டாங்க!!

ஆனா, இதுவே ஒரு திட்டமிட்ட ஆய்வுமூலமா, “பணத்தால் மகிழ்ச்சியை வாங்கிவிட முடியுமா” அப்படீங்கிற கேள்விக்கு பதில் சொல்ல முயற்ச்சிப் பண்ணினா, ஒரு நம்பகமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு கருத்து/முடிவுக்கு கண்டிப்பா வரமுடியும் இல்லீங்களா? அப்படியொரு திட்டமிடப்பட்ட ஆய்வுமூலமா, பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான ஒரு தொடர்பை, விஞ்ஞானப்பூர்வமாக விளக்கிச்சொல்லும் ஒரு ஆய்வுப்பத்தின, ஒரு சிறுகுறிப்பைத்தான் இனி நாம இந்தப் பதிவு முழுக்க பார்க்கப்போறோம். வாங்க, பணத்துக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பை அப்படியே பிரிச்சு மேஞ்சுடலாம்……

வருமானமும் மகிழ்ச்சியும், அவிழும் ஒரு முடிச்சு!

நம்மில் பலர் நம்பிக்கொண்டிருப்பது போல, “பணமிருந்தால் வாழ்க்கையில் ஒரு ஒட்டுமொத்த திருப்தி கிடைக்குமென்பது உண்மைதான். ஆனால், தேவைக்கதிகமான பணம் வாழ்நாள் முழுவதிலும் மகிழ்ச்சியும், குதூகலமும் இருக்கும் என்பதற்க்கான உத்தரவாதத்தை தருவதில்லை” என்று, வருமானம் மற்றும் மகிழ்ச்சி குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

“ஒருவரின் வருமானம் உயர உயர அவர்களின் வாழ்க்கையின் ஒட்டுமொத்த திருப்தி அதிகரித்தது என்றபோதும், ஒரு நாளின் பல தருணங்களில் ஒருவர் அடையும் மகிழ்ச்சியானது, அவர்களின் சமுதாய மற்றும் உடல் ரீதியிலான கூறுகளையே பெரிதும் சார்ந்திருந்தது” என்கிறது இந்த சர்வேயின் முடிவுகள். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாளில் ஒருவர் புகைப்பிடித்தாரா அல்லது அந்த நாளை தனிமையில் கழித்தாரா என்பதைப் பொறுத்தே அவரின் அன்றைய சந்தோஷம்/மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இந்த சர்வே முடிவுகள் முன்வைக்கும் கருத்து!

இந்த சர்வேயின் முடிவுகள், இதையொத்த மற்றுமோர் சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதே இந்த ஆய்வின் மற்றுமோர் சுவாரசியம். அதாவது, சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஒரு ஆய்வில், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக, தினசரி மகிழ்ச்சி அளவிலனடிப்படையில், சுமார் 132 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 26-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது!

மனநலம், வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கும் வருமானம்!

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தப் புதிய ஆய்வில், அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் டேனியல் கானேமேன் மற்றும் அங்குஸ் டீட்டன் ஆகியோர் அடங்கிய குழு, ஒருவரின் வருமானம் அவரின் இருவகையான நலங்களான, உணர்வுரீதியான நலம்/மனநலம் மற்றும் வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கிறதா என்றும் அப்படி பாதித்தால் எந்த விதத்தில் பாதிக்கிறது என்றும் அறிய முற்பட்டார்கள். இந்த ஆய்வை மேற்கொள்ள, ஒவ்வொரு நாளும் சுமார் 1000 அமெரிக்கர்களின் கருத்துகளை சேகரித்த, கேளப் நிர்வாகத்தின் “கேளப் ஹெல்த்வேய்ஸ் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup-Healthways Well-Being Index)”-லிருந்து சுமார் 4,50000 கருத்துகளை ஆராய்ந்த்தார்கள்! மேலும், இந்த ஆய்வில் வருமானத்தில் ஏற்பட்ட எண்ணிக்கை மாற்றத்தை தவிர்த்து விழுக்காடு மாற்றங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

“உதாரணமாக, ஒருவரின் வருமானத்தைப் பொறுத்தவரை, அவரின் மாத வருமானத்தில் ஏற்பட்ட 100 டாலர் ஏற்றம், குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய ஒரு மாற்றத்தை, அதே அளவு ஒரு நிதி நிறுவனத்தின் உயர்பதவியிலிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தவில்லை! ஆனால், இவ்விருவரின் வருமானத்தின் இரட்டிப்பு இவ்விருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

வாழ்க்கைத்தரம் குறித்த மதிப்பீட்டிற்க்காக, ஆய்வில் கலந்துகொண்டவர்கள் “1 முதல் 10″ வரையிலான எண்ணிக்கையில், மிகவும் மோசமான வாழ்க்கை தொடங்கி மிகவும் பிரமாதமான வாழ்க்கை என்கிற அடிப்படையில், தங்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். உணர்வுரீதியிலான நலம்/மனநலம் குறித்த மதிப்பீட்டிற்க்காக, ஆய்விற்க்கு முந்தைய தினம், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட சாதகமான/மகிழ்ச்சியான உணர்வுகள் அல்லது பாதகமான/சோகமான உணர்வுகள் குறித்த கேள்விகளுக்கு சரி/தவறு என்னும் பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!

ஆய்வின் முடிவில், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 85%, ஆய்விற்க்கு முந்தைய தினம் தாங்கள் அதிகமான சாதகமான உணர்வுகளான மகிழ்ச்சி, குதூகலம், சிரிப்பு/புன்னகை ஆகியவற்றை அனுபவித்ததாகவும், 24% மட்டுமே அதிகமாக சோகமான மற்றும் கவலையான உணர்வுகளை அனுபவித்ததாகவும் தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் சராசரியான வாழ்க்கைத்தர மதிப்பீடு 6.76 என்றும் அதில் அதிகபட்சமாக சில 10 வரையிலும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

உடல் நலக்குறைவு, தலைவலி, தனிமை, வயது முதிர்ந்தவர்கள் பராமரிப்பது போன்றவை குறைந்த உணர்வுரீதியிலான நலத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்றும், ஒரு கல்லூரி பட்டதாரியாக இருப்பது வாழ்க்கைத்தர மதிப்பீட்டில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அந்த கல்லூரி பட்டம் அவர்களின் தினசரி மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் காரணமாக இருக்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

பணம் பாதாளம் வரை பாயுமா? சில வரையரைகள்!

பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது போன்ற பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். ஆனால், பணம் உண்மையிலேயே பத்தும் செய்யுமா? அல்லது பாதாளம் வரைதான் பாயுமா? வாங்க பணம் என்னதான் செய்யுது, அதோட வரையரைதான் என்ன அப்படீங்கிறதப் பார்ப்போம்……

இந்த ஆய்வில், “ஒருவரின் குறைந்த வருமானமானது, அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் துரதிஷ்டங்களான, விவாகரத்து, உடல் நலக்குறைவு மற்றும் தனிமை உள்ளிட்டவையால் ஏற்படும் மன உளைச்சலை அதிகப்படுத்துவது” கண்டறியப்பட்டது! உதாரணமாக, சுமார் 3000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களில், 38% தங்களின் தினசரி வாழ்க்கையில் தலைவலி, நிறைந்த சோகம், கவலைகள் நிறைந்திருப்பதாகவும், ஆனால் 19% இவை இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஆனால், சுமார் 1000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதே தலைவலிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது என்றும், உதாரணமாக இவர்களில் சுமார் 70%, தலைவலி ஏற்பட்டபோது சோகத்துடன் தொடர்புடைய “நீல உணர்வுகள்” ஏற்பட்டதாகவும், 38% தலைவலி ஏற்படாதபோது நீள உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆனால் மிகவும் சுவாரசியமாக, சராசரியாக சுமார் 75,000 டாலர் ஆண்டுவருமானம் உள்ளவர்களின் வாழ்க்கையில், பணமானது அவர்களின் தினசரி மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதில் எந்த விதத்திலும் உதவியாய் இல்லை என்று தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆக, சுமார் 75,000 டாலருக்கு மேல் ஆண்டுவருமான ஈட்டுபவர்களுக்கு, அந்தப் பணமானது அவர்களின் உணர்வுரீதியிலான நலம்/மன நலத்துடன் தொடர்புடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளான, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, வலிகள் மற்றும் நோய்களை தவிர்ப்பது மற்றும் ஓய்வு நேரத்தை சந்தொஷமாக கழிப்பது போன்றவற்றை மேம்படுத்த எந்த விதத்திலும் உதவவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள் டேனியலும், அங்குஸும்!

அதாவது, ஒருவரின் ஆண்டுவருமானமானது, 75,000 டாலருக்கும் அதிகமாக உயரும்பட்சத்தில், மகிழ்ச்சியான உணர்வுகளை வாங்கும் சக்தி அல்லது திறனானது, சில பாதகமான காரணிகளால் ஒரு சம நிலையை அடைந்துவிடுகிறதென்றும், அதற்க்குச் சான்றாக “அதிக வருமானமானது, ஒருவரின் சின்ன சின்ன சந்தோஷங்களை குறைத்துவிடுகிறது” என்பதைக் கண்டறிந்த மற்றுமொரு முந்தைய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் டேனியலும், அங்குஸும்!

அது சரி, இதையெல்லாம் படிச்சதுக்கப்புறம் உங்களுக்கு என்ன தோணுது? பணம் மகிழ்ச்சியை வாங்குவது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க

நன்றி பத்மஹரி...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum