புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் குறவஞ்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 12:55 am

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர்.

- தலைவன் நாடெங்கும் பவனி வருதல்
- தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல்
- விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல்
- குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல்
- தலைவி தலைவனோடு சேருதல்.

இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள்.

குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன.

1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
3. அழகர் குறவஞ்சி
4. விராலிமலை குறவஞ்சி

இவைகளில்,

- குற்றாலக் குறவஞ்சியில் - இலக்கியச் செறிவும்
- சரபேந்திர பூபால குறவஞ்சியில் - இசை உயர்வும்
- அழகர் குறவஞ்சியில் - இலக்கியம், இசை இணைந்த அமைப்பும்
- விராலிமலை குறவஞ்சியில் - நடனக் கலையின் நளினமும் பிரகாசமாகக் காணப்படும்

அழகர் குறவஞ்சியில்,

- பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர்
- தலைவி மோகனவல்லி

"கருமுகில்மால் அழகராதி; மோகினியை மணந்த கதை" என்ற அடியால் இதனை உணரலாம்.
இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிக்குஞ்சர பாரதி.

சங்கீத மும்மூர்த்திகளான,

- ஸ்ரீதியாகராஜர்
- முத்துஸ்வாமி தீக்ஷிதர்
- சியாமா சாஸ்த்ரிகள்

ஆகியோரின் சமகாலத்தவர்.

இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெளரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது.

இக்குறவஞ்சி,

- வெண்பா
- விருத்தம்
- கீர்த்தனம்
- சிந்து
- திபதை
- அடிமடக்குத்திபதை
- கும்மிக்கண்ணிகள்
- ஓரடி கீர்த்தனம்

முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன.

சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.

"*மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும்
கொண்டைச் சொருக்கினாள்*"

"*துயிலும் இல்லை பசியும் இல்லை
பசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை*"

"*தவளநிறக் கருங்கூந்தல்
பவளச்செவ்வாய்க் கலைமகள்*"

"*அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம்
சிங்கம் தெலுங்கம்*."

என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள்
பிரகாசிக்கின்றன.

"*உருகு பெருகு கோடையில்
நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்*"

"*புயல் கண்ட மயில்போல*"

"*கிணற்று நீரைக் கொண்டு போமோ*?"

"*கல்லினும் நார் உரிப்பேன்
மணலையும் கயிரெனத் திரிப்பேன்*."

இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.

இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்" இராகத்தில் "ஸாமி மயூரகிரி வடிவேலா" என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத இலய வேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.

கட்டியக்காரன் வருகையை,

"*தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச்
சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாகப்
பையிலே துயின்ற திருவழகர்*."

என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார்.

சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும், சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி இராகத்தில்,

"*சோலைமலைச் சிங்கனும் வந்தான்
சிங்கியைத் தேடி*."

என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு.

- விறுக்கி
- முறுக்கி
- யுறுக்கி
- வீக்கி

என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.

சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான,

- வீணை
- மத்தளம்
- தாளம்
- துந்தி
- தம்புரு
- மேளம்
- பேரி
- முரசு
- டமாரம்
- உடுக்கு
- வேய்
- துடி

முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாட்டுப்பாடல் இசையான,

- நொண்டிச் சிந்து
- கும்மி
- திபதை

முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.

இம்மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா!

காரை ஏ.சங்கரசேது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக