ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு

Go down

மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு Empty மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு

Post by சிவா Thu 6 Aug 2009 - 0:11

* சட்ட ஆலோசனை வழங்க முன்வந்துள்ளது அம்னோ விலாயா
* ஹிஷாம் வரம்பு மீறியுள்ளார்


கடந்த சனிக்கிழமையன்று மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்த இசா எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து (GMI) சுமார் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருவதற்கு கோலாலம்பூரில் அங்காடிக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பிரதிநிதிக்கும் மூன்று நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன.இன்று காலை கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில், அந்த இயக்கத்துக்கு எதிராக, கூட்டரசுப் பிரதேச பூமிபுத்ரா வணிகர்கள் மன்றத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான், புகார் செய்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, வணிகர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஜிஎம்ஐயும், அதன் தலைவர் சைய்ட் இப்ராகிம் சைய்ட் நோவும் காரணம் என்று, அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகள், அபத்தமானவை என்று பாஸ் கட்சி பொருளாளர் ஹட்டா ரம்லி நேற்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டு அமைப்புகளான, மஸ்ஜித் இந்தியா அங்காடிக்காரர் சங்கம், பூமிபுத்ரா அங்காடி வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர் சங்கம் ஆகியவற்றையும் ரோஸ்லி பிரதிநிதிக்கிறார்.

அந்த மூன்று சங்கங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர். அப்பேரணியின்போது, சாதனங்களுக்கும் கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் வர்த்தக இழப்பும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

கலைந்தோடிய ஆர்ப்பாட்டக்கார்கள் பொருட்கள் மீது மோதியதால் பெரும்பாலான சேதம் ஏற்பட்டதென்றார் அவர். தங்களது பொருட்களை காணவில்லை என்றும் மேலும் சில வணிகர்கள் புகார் செய்துள்ளனர். இருப்பினும் இது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

“பொருட் சேதத்துக்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்கள் நிகழப்போவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களும், வதந்திகளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்தன.”

அதே வேளை, மஸ்ஜித் இந்தியா போன்ற சுறுசுறுப்பான வாணிக இடங்களை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதால், இழப்புகள் தொடருவதாகவும் ரோஸ்லி குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகரிடமிருந்து பொருட்களுக்கு அளிப்பாணையிட்ட வாடிக்கையாளர்கள், அவற்றை பெற்றுக் கொள்ள வரமாட்டார்கள்.”

கடந்த சனிக்கிழமை சம்பவத்தால், வர்த்தகர்கள், ஆதாய அடிப்படையிலும் மனரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றாரவர்.

அந்த போலீஸ் புகார், ஜிஎம்ஐக்கு எதிரான சட்ட நடவடிக்கையில், ஒரு மேற்கோளாக இருக்கும் என பத்திரிகையாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசுப் பிரதேச அம்னோ தொகுதி, சட்ட ஆலோசனை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. வழக்குரைஞர் குழுவொன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

போலீசார் மற்றும் அமைச்சருக்கு எதிராகப் புகார்கள்

மற்றொரு சம்பவத்தில், அதே போலீஸ் நிலையத்தில், இளம் மலாய்க்காரர் பட்டதாரிகள் கூட்டணியின் தலைவர் மொகமட் கைரோல் அசம் அப்துல் அசிஸ், இரண்டு புகார்களைச் செய்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காததற்காக ஒரு புகார், அரச மலேசியப் போலீஸ் படைக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசார் அறிந்திருந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர். இதில் வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரமும் அடங்கும்.

பேரணியை தடுக்கும்பொருட்டு, ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

போலீசாரின் பாராமுகத்தால், அன்றைய தினம் தனது குழந்தைகளை சோகோ விற்பனைத் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கு தாம் அளித்திருந்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதால் ஒரு தந்தை என்ற முறையில் தமது “கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும்” மொகமட் கைரோல் குறிப்பிட்டார்.

இரண்டாவது போலீஸ் புகார், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு எதிரானது. சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பேரணிக்கு முன்னர், போலீசாருக்கு அவர் ஆணையிட்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கை, அவசரக் காலச் சட்டத்தை மீறுகின்றது.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமது அதிகார வரம்புகளை ஹிஷாமுடின் மீறியுள்ளார். மேலும் போலீசாருக்கு நேரடியாக ஆணையிட்டதன் வழி, அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளார்.

“ஒரு போலீஸ் அதிகாரிதான், போலீசாருக்கு ஆணையிடலாம்”, என்றாரவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: ‘ஏடிஎம்’ஐ தகர்த்து 300,000 ரிங்கிட் கொள்ளை
» மலேசியா: இசா எதிர்ப்புப் பேரணியில் உறுப்பினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்
» மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை தடை செய்கிறது.
» மலேசிய ரிங்கிட் வரலாற்றில் இல்லாத அளவு கடும் சரிவு!
» ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum