ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி அன்ஷாரி

4 posters

Go down

 அயோத்தி அன்ஷாரி Empty அயோத்தி அன்ஷாரி

Post by Guest Fri Oct 01, 2010 3:03 pm

ஊர்வலம், பேரணிகளுக்குத் தடை’, ‘கேன்களில் டீசல், பெட்ரோல் விற்கத் தடை’, ‘மொத்தம் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பத் தடை’ என அரசின் ஏகப்பட்டத் தடைகளோடு நாடு முழுவதும் பெரும் எச்சரிக்கை முஸ்தீபுகள் செய்யப்பட்ட ‘அயோத்தி’ வழக்கின் தீர்ப்புக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் ஒரு இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. அந்த தீர்ப்பு குறித்து இன்னொரு தீர்ப்பு வருவதற்கு இந்த நாடு இனி காத்திருக்க வேண்டும். பொறுமையற்ற, கொந்தளிப்பான, எரிச்சல்மிக்க, சொல்லப்போனால் இதற்கெல்லாம் அவசியமற்ற இந்த நேரத்தில், தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும்.

1961ல் தொடுக்கப்பட்ட ‘அயோத்தி வழக்கின்’மனுதாரர்களில் உயிரோடு இருக்கும் ஒரே மனிதரான ஹசீம் அன்சாரி. ‘மசூதியைக் காட்டிலும் தேசமே முதன்மையானது’ என்று சொல்வதைக் கிண்டலாகவோ, நடிப்பாகவோ பலரும் கருதக்கூடும். அயோத்தியில் இருக்கும் அவரது வீட்டை இப்போது செய்தியாளர்கள் திரும்பவும் முற்றுகையிடுகின்றனர். ஊடகங்களின் கூத்துக்கள் அனைத்தையும் கடந்தகாலங்களில் பார்த்துவிட்ட அவர், வர இருக்கிற ‘அயோத்தி தீர்ப்பு’ தவிர மற்ற விஷயங்களையேப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“நேற்று கியான்தாஸை சந்தித்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று அவர் சாதாரணமாகச் சொல்கிறார். தாஸ் வேறு யாருமில்லை. ‘அகரா பரிஷத்தின்’ தலைவரும், புகழ்பெற்ற ஹனுமன் கோவிலின் குருக்களுமாவார். இந்த சர்ச்சையில் எதேனும் தீர்வு குறித்து அவர்கள் இருவரும் பேசியிருக்கக் கூடுமோ என நினைக்கத் தேவையில்லாமல் அவரே சொல்கிறார். “நீதிமன்ற வழக்கு தனி. அதனை எங்களுக்கிடையே அனுமதிப்பதில்லை. கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத உணர்வுகளை அவர் முகத்திலும், குரலிலும் பார்க்க முடிகிறது.

“எங்களிடையே கசப்புகள் இருந்ததில்லை. வழக்கு ஆரம்பிக்கும்போதும் நண்பர்களாயிருந்தோம். வழக்கு நடந்த காலங்களிலும் நண்பர்களாயிருந்தோம்” இப்படித்தான் இதர மனுதாரர்களோடு அவரது நட்பும், உறவும் இருந்திருக்கிறது. அயோத்தியின் உள்ளூர்வாசிகள் ஹசீம் அன்சாரியைப் பற்றி நிறையச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாலையிலும் ‘திகம்பர அகாராவின்’பரமஹன்ஸ் தாஸ் வீட்டுக்கு அன்சாரி சைக்கிளில் சென்று சீட்டு விளையாடுவாராம்! “நானும் பரமஹன்ஸும் சைக்கிளில் கோர்ட்டுக்கு ஒன்றாகவேச் செல்வோம். நான் அழுத்துவேன். அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார். ஒருதடவை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை அவர் கொண்டு வரவில்லை. நான் என்னிடமிருந்ததை நகலெடுத்துக் கொடுத்தேன்” என நினைவு கூர்ந்த அன்சாரி “அப்போதெல்லாம் சூழல் சேதமடையவில்லை” என்கிறார்.

அவரது வீட்டிலிருந்து ரோட்டைக் கடந்தால் இருக்கும் ‘பிரச்சினைக்குரிய இடத்தை’ அணுகுவதற்கு இன்று நான்கு அடுக்குகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவைகளைப் பார்த்தவாறே, 1949 டிசம்பரில் கடைசியாய் அவர் மசூதிக்குச் சென்ற நாளை எண்ணிப் பார்க்கிறார். அன்று இரவுதான் ராம்தாஸ் என்னும் உள்ளூர் சாது ஒருவன் மசூதியின் சுவர்களைத் தாண்டி உள்ளே சென்று ராமர் சிலைகளை வைத்ததாகவும் சொல்கிறார். அது நடந்து 12 வருடங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர், “இது உள்ளூர் பிரச்சினை. பிரச்சினையின் முகத்தையே அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறு வகையில் கையாண்டிருப்போம்” என்கிறார். குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியவாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்.

அயோத்தி, அதன் வழக்கமான கதியில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர். குல்தீப்சிங் என்னும் ஜவான், “இப்போது அமைதியாக இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு வேறு மாதிரியாகலாம். நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

நகரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றம் தன்னை அணுகாமல் அன்சாரி இருக்கிறார். ‘செப்டமர் 24 தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இத்தோடு முடியட்டும் என ஆசைப்படுகிறேன். ரொம்ப காலமாக இழுத்துக்கொண்டு இருக்கிறது. 1947க்கு முன்னால் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்களாக அழைக்கப்பட்டனர். மீண்டும் அப்படியொரு காலம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்கிறார்.

“ஒருவேளை முஸ்லீம்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு இருக்குமானால், நீங்கள் உச்சநீதிமன்றம் செல்வீர்களா?” என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. உடனடியாக, “மாட்டேன். அரசியல்வாதிகள் மேலும் அரசியல் செய்யட்டும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லட்டும். நான் இதனோடு 49 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். ஒரு முடிவுக்கு வருவதையே விரும்புகிறேன்” என மறுக்கிறார். அவரது வீட்டு முகப்பில் இருக்கிற துருப்பிடித்த உலோகத்தட்டில் இருக்கும் ‘முகமது ஹசீம் அன்சாரி, மனுதாரர், வழக்கு எண் 4/89’ என்ற எழுத்துக்களும் சரியாகத் தெரியாமல் அன்சாரியின் களைப்பைச் சொல்கின்றன.

ஆதாராம் http://blogs.outlookindia.com/default.aspx?ddm=10&pid=2328&eid=35

நன்றி மாதவராஜ்
avatar
Guest
Guest


Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by அன்பு தளபதி Fri Oct 01, 2010 3:06 pm

வித்தியாசமான மனிதர் தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by attacrc Fri Oct 01, 2010 3:54 pm

அடுத்த தீர்ப்பு அடுத்த அடுத்த தலைமுறைக்கு
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by kalaimoon70 Fri Oct 01, 2010 4:01 pm

புண்பட்ட மனது .சொல்லப்பட்ட உண்மையின் எண்ணம்,காலத்தின் காரணமாக இன்று காயத்தோடு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by Guest Fri Oct 01, 2010 5:03 pm

விடிவே கிடையாதா?
avatar
Guest
Guest


Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by ரபீக் Fri Oct 01, 2010 5:11 pm

வித்தியாசமான மனிதர்கள் நிறைந்த நாடு ,,,,,,நல்லவர்களும் கெட்டவர்களும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 அயோத்தி அன்ஷாரி Empty Re: அயோத்தி அன்ஷாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum