ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்

3 posters

Go down

அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம் Empty அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்

Post by சிவா Fri Oct 01, 2010 10:14 am

லக்னோ அயோத்தி வழக்கில் 3 நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். இதனால், மொத்தம் 8,189 பக்கங்களை கொண்ட நீண்ட தீர்ப்பு என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதில், நீதிபதி கான் தனது தீர்ப்பை 285 பக்கங்களில் எழுதி உள்ளார். அதே நேரத்தில் நீதிபதி அகர்வால் மொத்தம் 5,238 பக்கங்களில் 21 தொகுதிகளாக தொகுத்து எழுதியுள்ளார். நீதிபதி சர்மா 2,666 பக்க தீர்ப்பு அளித்துள்ளார். அவர்களின் தீர்ப்பு விவரம்:

மசூதி கட்டுவதற்காக கோயில் இடிக்கப்படவில்லை

நீதிபதி எஸ். யு .கான்: சர்ச்சைக்குரிய நிலமும், அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடமும் பாபருக்கோ அல்லது அவருடைய உத்தரவு பெற்றவர் களுக்கோ சொந்தமானது என்பதை நிரூபிக்க நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. பாபர் மசூதியை கட்டு வதற்காக அந்த இடத்தில் எந்த கோயிலும் இடிக்கப்படவில்லை. ஏற்கனவே பாழடைந்து கிடந்த வழிபாட்டு இடத்தின் மீதுதான் அது கட்டப்பட்டு இருக்கிறது.

இந்த மசூதி கட்டப்பட்ட சிறிது காலத்துக்குப் பிறகே, இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் அடையாளம் கண்டு வழிபட தொடங்கி இருக்கின்றனர். 1855க்குப் பிறகு அங்கு ராம் சபுத்ராவும், சீதா ரசோயும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதையும் இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக சர்ச்சைக்குரிய இடத்தை இந்து, முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

எனவே, இந்த இடத்துக்கு இரண்டு தரப்பினருக்குமே உரிமை இருக்கிறது. இந்த நிலப் பிரச்னையில் உதவி செய்வதற்காக நீதிமன்றம் நியமித்த ஸ்ரீசிவ சங்கர் குழு கொடுத்துள்ள வரைபடத்தின்படி, இந்த இடத்தை சன்னி வக்பு வாரியம், அகில பாரதிய இந்து மகாசபா மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய மூன்றுக்கும் சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிடப்படுகிறது. மசூதியின் மேல் கட்டப்பட்டுள்ள 3 கவிகை மாடங்களில், மத்திய கவிகை மாடத்தின் கீழ் ராமர் சிலை வைக்கப்பட்டு தற்காலிக கோயில் உள்ளது. இந்த இடத்தை இந்து மகாசபாவிடம் வழங்கவும், ராம் சபுத்ரா மற்றும், சீதை மாளிகை உள்ள இடத்தை நிர்மோகி அகாரா விடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்படுகிறது.

இந்த நிலத்தை பிரிக்கும்போது குறைபாடு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட அமைப்புக்கு, சர்ச்சைக்குரிய நிலத்துக்கு அருகில் மத்திய அரசு ஆர்ஜிதம் செய்து வைத்துள்ள இடத்தில் இருந்து நிலம் வழங்க வேண்டும். நிலம் பிரிக்கப்படும் வரை, 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்.

கோயில் உள்ள இடத்தில் அத்துமீறல், இடையூறு கூடாது

நீதிபதி அகர்வால்: சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் (பாபர் மசூதி) மூன்று கவிகை மாடத்தின் மைய மாடத்தின் கீழ் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம், அவர் பிறந்த இடமாக இந்துக்கள் நம்பி வழிபடுகின்றனர். அந்த இடம் இந்து மகாசபாவுக்கு சொந்தமானது. சன்னி வக்பு வாரியத்தை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் அத்துமீறவோ, இடையூறு செய்யவோ கூடாது. ராம் சபுத்ரா, சீதா ரசோய் உள்ள இடங்கள் நிர்மோகி அகாராவுக்கு சொந்தமானது.

மீதமுள்ள இடத்தை சன்னி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை தவிர மீதமுள்ள திறந்தவெளி பகுதிகளை மூன்று தரப்பும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். வக்பு வாரியத்துக்கு ஒதுக்கப்படும் இடம், மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் வெற்றி பெறுபவர்களிடம் ஒப்படைப்பதற்காக, ‘அயோத்தி சட்டம் 1993’ன்படி ஆர்ஜிதம் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலத்தில், வழக்கில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்க வேண்டும்.இந்த இடத்தை ஒருவருக்கு ஒருவர் இடையூறு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். இந்த நிலத்தை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் மத்திய அரசிடம் முறைப்படி அணுகலாம். நிலத்தை பிரிக்கும் வரை 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.

கோயில் இருந்ததை தொல்லியல் ஆய்வு நிருபிக்கிறது

சர்மா: சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வடிவில் கடவுள் ராமர் வழிபடப்படுகிறார். பிரச்னைக்குரிய கட்டிடம் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட ஆண்டு எது என்று உறுதியாகத் தெரியவில்லை. எனினும், இஸ்லாமின் கொள்கைகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளது. எனவே, மசூதிக்கான அறிகுறி அந்த கட்டிடத்துக்கு இல்லை.

ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இடித்து விட்டு அதன் மீதுதான் பிரச்னைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட கட்டிடம் இந்துக்களால் பெருமளவில் வழிபடப்பட்டது என்பதை மத்திய தொல்லியல் துறை ஆய்வு நிரூபித்துள்ளது. ஆனால், 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளுக்கு இடையே இரவில் பிரச்னைக்குரிய கட்டிடத்தில் ராமர் மற்றும் சீதை சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பிரச்னைக்குரிய இடம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இந்துக்கள் வழிபடும் இடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், பாதுகை, சீதை மாளிகை ஆகியவற்றை வழிபட இந்துக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், பிரச்னைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதி வழிபடுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த இடத்தை புனிதமாக கருதி அங்கு செல்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிராக கட்டப்பட்ட பிரச்னைக்குரிய கட்டிடத்தை ஒரு மசூதியாக கருத முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு நீதிபதி சர்மா கூறியுள்ளார்.

தினகரன்


அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம் Empty Re: அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்

Post by gunashan Fri Oct 01, 2010 10:19 am

மிகச்சரியான தீர்ப்பு சிவா. அறுபது ஆண்டு பிரச்சனைக்கு ஒரு ஆறுதல் தீர்வு. எல்லோரும் உணர்ந்து இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டால் நல்லது. நல்லதே நடக்கட்டும்..... நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம் Empty Re: அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 10:22 am

ஜாலி ஜாலி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம் Empty Re: அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு: இருதரப்பையும் திருப்திபடுத்தும் முதல்வர் கருத்து
»  டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum