ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை

Go down

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Empty தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை

Post by மனுபரதன் Wed Sep 29, 2010 2:21 pm

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தில், தாமிர உருக்காலை துவங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தினசரி 234 டன் தாமிரம், 638 டன் சல்ப்யூரிக் ஆசிட் தயாரிக்கும் திறனில் இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 1995ம் ஆண்டு முதலில் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 1995ம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதைனையடுத்து, 1995ம் ஆண்டு மே மாதம் மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கியது. தாமிர உருக்காலை துவங்குவதற்கு அப்போது பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை, தூத்துக்குடி சி.ஐ.டி.யு., மாவட்ட குழுவின் செயலர் கனகராஜ், இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் மோஹன்ராஜ் ஆகியோர்மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு, உடல் நலத்துக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி பொருட்படுத்தாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன. முதலில் குஜராத், கோவா மாநிலங்களில் துவங்குவதாக இருந்தது. இம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டது. ஆலை துவங்க அம்மாநில அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதன்பின், ரத்தினகிரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த ஆலைக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டும், வழங்கப்பட்ட உரிமத்தை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்தது.

தூத்துக்குடி ஒரு கடலோரப் பகுதி. மன்னார் வளைகுடா பகுதியில் வருகிறது. கடல் தாவரங்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது. இதன் அருகில் 21 தீவுகள் உள்ளன. தேசிய கடல் பூங்காவாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் சல்பர் டை ஆக்சைடு மூலம், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் இந்த தொழிற்சாலை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும், மத்திய, மாநில அரசுகள் அவசரகதியில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்' என கூறப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் அடங்கிய,டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் வி.பிரகாஷ், வக்கீல்கள் எஸ்.கிருஷ்ணசாமி, ரமா தேவி பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகினர்.

ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 25 கி.மீ., தூரத்துக்கு அப்பால் தொழிற்சாலை அமைய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) அறிக்கையின்படி, மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள நான்கு தீவுகளின் அருகில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலைக்கும், நான்கு தீவுகளுக்கும் இடையே ஆறு, ஏழு, 15 கி.மீ., தூரம் தான் உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் தான் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விதிகள் மீறப்பட்டுள்ளன.

இதற்கு அனுமதி வழங்குவதற்கு முன், மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கை போதுமானதாக இல்லை. ஒரு மாத அளவிலான புள்ளி விவரங்கள் தான் உள்ளன. இந்த அறிக்கையின்படி, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. இதில் இருந்து, மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் மனதை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆலையை நிறுவியதன் மூலம், இதை மத்திய அரசு நிராகரிக்க இந்தக் காரணமே போதும். இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதில் அதிகாரிகள் அவசரம் காட்டியிருப்பது, "நீரி'யின் அறிக்கையில் இருந்து தெரிகிறது.

தாமிர உருக்காலைக்கு மற்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போது, பொதுமக்களை காப்பதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனத்துடன், எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் கருத்து கேட்பு எதையும் அதிகாரிகள் நடத்தவில்லை. பொதுமக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக, சட்டப்படி நடத்த வேண்டிய கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் விட்டு விட்டனர். இதை எங்களால் பாராட்ட முடியவில்லை. இந்த தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக், புளோரைடு அடங்கியுள்ளது என, "நீரி'யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அமைந்துள்ள இடமே, கடுமையாக மாசுபட்டுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாதிரியிலும் புளோரைடு, ஆர்சனிக், காப்பர், குரோம் உள்ளது. சட்ட விதிமுறைகளை புறக்கணித்து இத்தொழிற்சாலை துவங்கப்பட்டதை காட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், அதை மறுக்கும் விதத்தில் சரியான ஆதாரங்களை தொழிற்சாலை தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

தரமான வாழ்க்கையை வாழ ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதற்கு இடையூறு ஏற்படும் விதத்திலோ, ஆபத்தை விளைக்கும் வகையிலோ, சட்டத்தை மீறி யாரும் செயல்பட்டால், அதை கடுமையாக கருதி, அந்த மனிதனின் உரிமையை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் அரசுக்கு பொறுப்பு உள்ளது. தண்ணீர், காற்றில் மாசு ஏற்படுத்துவதை கோர்ட்டுகள் எளிதில் எடுத்துக் கொள்ளாது. ஆறுகள், ஓடைகள், மற்றும் நீர் நிலைகளில் விஷக் கழிவுகளை வெளியேற்றி, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களை கடுமையாக அணுக வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, காற்றில் விஷத்தன்மை வாய்ந்த கழிவை ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியேற்றுவதன் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கு கடும் விளைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே, மாசு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை இப்போதாவது நிறுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பிலும் விளைவை ஏற்படுத்தும். இதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இந்த தொழிற்சாலை இயங்கினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்பதால், இந்த முடிவை எடுக்கிறோம்.

தொழிலாளர்களை நிர்கதியில் விட நாங்கள் விரும்பவில்லை. எனவே, வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புகளில் தொழிலாளர்களின் கல்வித் தகுதி, அனுபவத்தை கருத்தில் கொண்டு வேலை கிடைக்க மாவட்ட கலெக்டர், அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூடும்படி உத்தரவிடப்படுகிறது. தொழில் தகராறு சட்டப்படி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum