ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

4 posters

Go down

 மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! Empty மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by சிவா Wed Sep 29, 2010 6:49 am

மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவகைப்படும்.

இவற்றுள் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் "பட்டி மண்டபம்' ஆகும்.

சிலப்பதிகாரம் -இந்திரவிழவூரெடுத்த காதையில்,

"மகதநன் னாட்டு வாளவாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் (அடி:101-102)

என்று, போரில் வெற்றிபெற்ற கரிகாலனுக்கு மகதநாட்டு மன்னனின் "பட்டி மண்டபத்தை' அளித்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்றுதல் - என்றாலும் கூடுவது, கூடுதல் எனப் பொருள் உண்டு. அதாவது, மக்கள் கூடுகின்ற இடம் மன்று - மன்றம் ஆனது. "மன்றம்' என்பது, பொதுவிடம், மரத்தடி பொதுவிடம், வெளியிடம் சபை எனப் பொருள்படும். இதற்குச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன.

"மலர்தலை மன்றத்துப் பலரும் குழீஇ'' (பட்டினப்பாலை அடி: 69)

என்பதில் பொதுவிடத்தையும்,

"மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்'' (திருமுருகாற்றுப்படை அடி:226) என்பதில் ஊர்மக்கள் கூடும் மரத்தடி இடத்தையும், மன்றம் என்னும் சொல் குறிப்பிடுகிறது. "மன்றில் பழிப்பார்' (குறள்-820) இதில், சபையைக் குறிக்கிறது. எனவே, இத்தகைய சான்றுகளால் முற்காலத்தில் மண்டபம் என்பது கட்டப்பட்ட இடத்தையும், மன்றம் என்பது கட்டப்படாத பொதுவிடத்தையும் குறிப்பதை அறியலாம்.

மணிமேகலையில் (16:1) கூறியுள்ளதுபோல, பட்டி மண்டபத்தில் நிகழ்ந்த சொற்போர் (விவாதம்) நாளடைவில் இடப்பெயரை ஏற்றுச் "சொற்போரை'க் குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டது.

பின்பு கல்வி, கலை, இலக்கியம் தொடர்பான சொற்போர்களுக்கும் "பட்டி மண்டபம்' என்ற சொல்லே தொடர்ந்தது. பலவகையான மண்டபங்கள் அமைத்துப் பலபெயரால் அழைக்கப்பட்ட போதும் "பட்டி மண்டபம்' என்றால் சொற்போரைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்பட்டது. இதைக் கம்பரின் பாடலால் (பால.நகர் படலம்: 62) அறியலாம்.

காலப்போக்கில் மண்டபங்களில் நடத்தப்பட்ட பட்டி மண்டப நிகழ்ச்சிகள், பல்வேறு பொதுவிடங்களில் அதாவது, மன்றங்களில் மேடை அமைத்தும், பந்தல் அமைத்தும் நடத்தப்பட்டன. பின்பு "பட்டி மண்டபம்' என்பது இடப்பெயரையே குறிப்பதாக மக்கள் கருதும் நிலை ஏற்பட்டது. சொற்போர் நிகழ்ச்சியைக் குறிக்க "பட்டி மன்றம்' என்பதே சரி எனக் கருதினர்.

இம்மன்றங்களின் சார்பாக நடத்தப்படும் சொற்போர் நிகழ்ச்சிகளைப் "பட்டி மன்றம்' என்றே அழைப்பது இன்று பெருவழக்காகிவிட்டது.

பட்டுதல் - தட்டுதல் - ஒருபொருளைக் குறிப்பன. தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் உண்டு. வெட்டிப் பேசுதல், ஒட்டிப் பேசுதல், தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் சரியானது! "பட்டுதல் என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பண்டைய வினைச்சொல்'' என்பார் பாவாணர் (முதற்றாய் மொழி பக்-117). பட்டி என்பதற்கு வகைப்படுத்தல், அட்டவணைப்படுத்தல் என்னும் பொருளும் உண்டு.

பட்டி என்பதற்கு, எதிரணியில் பேசுபவரின் கருத்தைத் தட்டி (மறுத்து)ப் பேசுதலும், கருத்துகளை வகைப்படுத்தி - அட்டவணைப்படுத்தல் போன்று முறைப்படுத்திப் பேசுதலும் பொருள் எனக்கொண்டு, அதற்கு இடம் தரும் மன்றம் என்பதைச் சேர்த்துப் பார்த்தால் "பட்டி மன்றம்' என்பது சரியானது.

சிறந்த தமிழறிஞரான பெருஞ்சித்திரனாரும் "பட்டி மன்றம் வைப்பதிலும் பாட்டரங்கம் கேட்பதிலும்'' (கனிச்சாறு, முதல் தொகுதி பாடல்: 15) எனப் பட்டி மன்றம் என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே, "பட்டி மன்றம்' என்று வழங்குவது இன்றைய நிலையில் சரியானதே எனக்கொண்டால், அவ்வாறு வழங்குவதில் தவறில்லை!

புலவர் ப.எழில்வாணன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! Empty Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by karpahapriyan Sat Oct 02, 2010 11:36 am

தமிழே ....! உன்னை நினைத்தாலே இனிக்கிறதே


கற்பகப்ரியன்

[You must be registered and logged in to see this link.]
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

 மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! Empty Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by பேகன் Mon Nov 21, 2011 5:05 pm

மண்டபம் மற்றும் மன்றம் நல்ல விளக்கம்!!! நன்றி சிவா!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

 மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! Empty Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by கேசவன் Mon Nov 21, 2011 7:56 pm

நல்ல பதிவு


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! Empty Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum