புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
30 Posts - 81%
heezulia
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
1 Post - 3%
viyasan
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
207 Posts - 41%
heezulia
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_m10உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 3:39 pm

உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது. உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புலிகள் இயக்கம் சார்பில் இராமு சுபன் என்பவர் விடுத்துள்ள அறிக்கை:

இன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்து மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஓர் உயரிய இலட்சியத்துக்காக தன்னையே உருக்கி ஆகுதியாக்கிய அற்புதப் போராளியை நினைவுகூரும் நாள். எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைவதற்காய் உறுதியுடன் இறுதிவரை பயணித்த வீரனின் மறைவுநாள். தியாகத்தின் உச்சநிலையைத் தொட்டு தன் சாவின்மூலம் ஆதிக்க சக்திகளை வெட்கித் தலைகுனிய வைத்த தியாகச் செம்மலை எம் மனத்திலிருத்திப் பூசிக்கும் புனிதநாள்.

எமது ஈழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய பொறிக்குள் அகப்பட்டிருந்த நேரத்தில்தான் தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. அன்னிய சக்திகள் தொடர்பில் எமது மக்களிடமும் ஏனையோரிடமும் இருந்த மாயையைத் துடைத்தழிக்க அகிம்சை முறையிலேயே தனது போராட்டத்தைக் கையாண்டார். மக்களை மாயையிலிருந்து விடுவித்து சரியான வழியில் அணிதிரள வைத்தது திலீபன் அவர்களின் போராட்டமேயாகும்.

எம்முன்னால் ஆர்ப்பரித்து நின்ற எதிரியின் நோக்கங்களையும், சூழ்ச்சித் திட்டங்களையும் அம்பலப்படுத்தும் அதேநேரம் அத்திட்டங்களைத் தவிடு பொடியாக்கி எம் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு எந்தெந்த வழிகளைப் பின்பற்றி எமது இயக்கம் போராடியது என்பதற்கு தியாக தீபம் திலீபன் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

எந்தப் பெரிய சக்திகளானாலும் எம்மால் சாத்தியமான வழிகளில் போராடுவதன் ஊடாக எம் இலட்சியப் பாதையினை மாவீரர்கள் செப்பனிட்டே சென்றுள்ளனர். அந்த வகையில் தியாக தீபம் மாவீரன் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணம் எம் இனத்தின் உறுதிக்கும், இன எழுச்சிக்கும் ஒரு படிக்கல்லாக அமைந்தது.

எமது பலம்தான் பாதுகாத்தது...

திலீபன் அவர்கள் எந்தக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதிவரை நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரை உண்ணா விரதம் இருந்து தன்னுயிரைத் துறந்தாரோ அவற்றில் சிலவற்றை பிற்காலத்தில் எம் மாவீரர்களின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் மட்டுமே அடைய முடிந்தது. எமது பலத்தின் அடிப்படையில்தான் எமது மக்களைப் பாதுகாக்கவும் எமது நிலங்களை மீட்கவும் முடிந்தது. அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடிந்தது. தமிழர்களின் ஒன்றுபட்ட பலமே இவற்றை அடைவதற்கான கருவியாக அமைந்தது.

ஆனால் இன்று இலங்கை தேசம் தமிழ் இனத்தின் பலத்தினை அனைத்துலகச் சமூகத்தினதும் அயல்தேசத்தினதும் உதவிகளுடன் மிகக் கொடூரமாக, மானிட விழுமியங்களுக்குப் புறம்பாக சிதைத்திருக்கின்றது.

இன்று தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்களதேசம் மீண்டும் தன்கொடூரப் பார்வையினை தமிழர் தேசமெங்கும் செலுத்தி வருகின்றது. நில ஆக்கிரமிப்பு, அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், தமிழர் அடையாளங்களை அழித்தல், சிங்கள – பெளத்த அடையாளங்களை நிறுவுதல் என ஒரு முற்றுமுழுதான இன அழிப்பினை மிக வேகமாகத் தொடங்கியுள்ளது.

இந்தப் பேரழிவு நடவடிக்கைகள் மூலம் தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கான அடிப்படைகளை இல்லாது செய்வதன் ஊடாக எம் இனத்தையே முற்றுமுழுதாகக் கருவறுக்கும் செயலில் இலங்கை லங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

சிங்களமயம்...

அன்று தியாகி திலீபன் முன்வைத்துப் போராடிய கோரிக்கைகள் அனைத்தும் இன்றும் பொருந்திப் போகும் நிலையிலேயே ஈழத் தமிழினம் உள்ளது. இன்றும் கல்விக் கூடங்களிலும் வணக்கத்தலங்களிலும் இராணுவம், புதிதுபுதிதாக இராணுவ – காவல்துறை நிலையங்கள், அவசரகாலச் சட்டத்தின் தொடர்ச்சியும் அதன்கீழான கைதுகளும் வதைகளும் காணாமற்போதல்களும், புனர்வாழ்வு – அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் என்றவாறு தாயகத்தில் எம்மினத்தின் மீதான வதை தொடர்கிறது. இருபத்துமூன்று ஆண்டுகளின் முன்னர் தியாகி திலீபன் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலைக்கு காலம் சுழன்று வந்துள்ளது.

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே,

நாம் ஓர் இக்கட்டான சூழலில், பேரிடரில் சிக்கியுள்ளோம் என்பதனை நாம் அறிவோம். இவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டவேளையில்தான் தியாக தீபம் திலீபன் அவர்கள் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். எதிரிகளின் சூட்சிகளை அம்பலப்படுத்தி மக்களை மாயையிலிருந்து விடுவித்து அணிதிரளச் செய்தார். திலீபன் அவர்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி அவரின் போராட்ட வழிமுறையும்கூட இன்றும் தொடரப்பட வேண்டியதாகவே உள்ளது.

புலம்பெயர் தேசங்களில் எமது மக்களின் சாத்வீக வழியிலான போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நடைப்பயணங்கள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள் என்றவாறு பல்வேறு இடங்களில் எமது மக்களின் போராட்டங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன. இப்போராட்டங்கள் இன்னும் வீறுடனும் எழுச்சியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். உலகின் மனச்சாட்சியை எமது போராட்டங்கள் தட்டியெழுப்ப வேண்டும். மிகக்கொடுமையான முறையில் அநீதி இழைக்கப்பட்ட எமது இனத்துக்கான நீதியைக் கேட்டு நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை தீரமுடன் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தேவைக்கேற்ப, காலச் சூழலுக்கேற்ப எமது விடுதலைப் பயணத்தில் போராட்ட வடிவங்கள் மாறிவந்துள்ளன. தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இதற்கு மிகப்பெரிய சான்று. புலம்பெயர் நாடுகளில் எமது மக்களின் சாத்தியப்பட்ட போராட்ட வடிவமாக சாத்வீக வழிமுறையே உள்ளது. இவ்வழிமுறையை இறுகப்பற்றி எமது விடுதலைப் பயணத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தமது கடமையை தொடர்ந்தும் எழுச்சியுடன் செய்ய வேண்டும்.

அவ்வகையில், அனைவரும் ஒன்றுபட்டு தாயகத்தில் முற்றுமுழுதாக இன அழிவிற்குள்ளாகி இருக்கும் எம் மக்களையும் மண்ணையும் காக்க வேண்டும்; எமக்கான காலத்தை நாமே உருவாக்க வேண்டும். தியாகி திலீபன் அவர்களின் கனவும் அதுவே. எழுச்சிகொண்ட மக்களின் அணிதிரள்வையும் அவர்களின் போராட்டத் தொடர்ச்சியையுமே அவர் வேண்டி நின்றார். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்பதே அவரின் அவாவாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று உறுதி எடுப்போமாக என்று அதில் கூறப்பட்டுள்ளது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 27, 2010 3:41 pm

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக