புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
70 Posts - 53%
heezulia
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_m10குதிரை சவாரியும் இலவச சேணமும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை சவாரியும் இலவச சேணமும்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 27, 2010 2:01 pm

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இப்போது ஒரு விஷயத்தில் கடும் போட்டி நிலவுகிறது என்றால் அதில் மிகையில்லை. அது, யார் அதிக இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களைத் தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்வது என்பதுதான்.
கலர் டிவி, கேஸ் அடுப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம்...என பலவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசின் பட்டியலில் இப்போது விவசாயிகளுக்கான பம்ப் செட்டும் சேர்ந்துள்ளது.
டிவிக்களைப் பொறுத்தவரை கேபிள் இணைப்பு இல்லை என்றால் அவை மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதான் என்பது ஆட்சியாளர்கள் அறியாததல்ல. ஆயினும் ஏழைகள் மீது கருணை கொண்டு நிதி ஒதுக்கி கலர் டிவிக்களை இலவசமாக வழங்கினர். வழங்குகின்றனர், தொடர்ந்து வழங்குவதாகவும் கூறுகின்றனர்.
டிவிக்களை இலவசமாகப் பெறும் ஏழைகளோ மாதந்தோறும் கேபிள் கட்டணமாக அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் கேபிள் நிறுவனங்களைப் பொறுத்து 150 வரை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தொடர்ந்து செலுத்த வேண்டிய இந்த நெடுந்தொகை போக, முன்பணம் என்ற பெயரில் கணிசமான குறுந்தொகையும் செலுத்தினால்தான் அன்றாடக் கூலிகளான அந்த ஏழைகள் கேபிள் இணைப்புக் கிடைக்கப்பெற்று, தங்கள் டிவிக்களில் மானாடுவதையும், மயிலாடுவதையும் பார்த்து, எப்போதும் சிரிப்பொலி முழங்க சுபீட்சமாக பொழுதைக் கழிக்க இயலும். உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்த் திரைப்படங்களையும் பார்த்து பிறவிப் பயன் அடைய முடியும்! கேபிள் இணைப்பில் தனியார் நிறுவனங்களின் இந்தத் தன்னிகரற்ற தலைவிரி ஆட்டத்துக்குக் காரணம் அரசு கேபிள் அடக்கமாகச் செயல்படுவதுதான் என்பதும் ஆட்சியாளர்கள் அறிந்ததுதான்.
இந்நிலையில், மாநில அரசுக்குத் தானும் இளைப்பில்லை என மற்றுமொரு புதிய திடீர் திட்டத்துடன் இலவச கோதாவில் குதித்திருக்கிறது மத்திய அரசு. அது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவச கைப்பேசி வழங்கும் முன்னோடித் திட்டம்.
கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏழைகளுக்குக் கொடுக்க எள்ளளவும் மனமில்லாததுடன், அதுகுறித்த நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்வாதம் புரியும் மத்திய அரசு ஏழைகளுக்கு கைப்பேசி வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழு(டு)பவர்களின் வயிறுகள் கூழுக்கு அழுதுகொண்டிருக்க, அவர்களின் கொண்டைக்கு பூ முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
ஏற்கெனவே செல்போன் நிறுவனங்களின் சேவையால் சற்றுவசதி படைத்த மற்றும் நடுத்தர மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. செல்போன் நிறுவனங்களின் அந்தச் சேவையை ஏழைமக்களும் பெற்றே தீர வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்துடன் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
நன்கு படித்து அரசு, தனியார் பணிகளில் இருப்போரே தங்கள் கைப்பேசியில் வரும் குறுஞ்செய்திகளைப் படித்துவிட்டு அழிக்க முற்படும்போது தவறுதலாக பொத்தான்களை அழுத்திவிட்டால், கைப்பேசியில் இருக்கும் மீதித் தொகை திடீரென பாதித் தொகையாகிவிட, பதைபதைப்பாகிவிடுகிறது.
நிலைமை இப்படியிருக்க, அதிகம் படிக்காத ஏழை மக்களும் இனி கைப்பேசிகளுடன் படவிருக்கும் பாட்டை என்ன சொல்வது? வாடிக்கையாளர்களின் மனங்களில் கோபச் சாரல் விழவிழ, செல்போன் நிறுவனங்களின் காட்டில் மேலும்மேலும் அடைமழைதான்!
ஒரு வீட்டுக்குள் இலவச டிவியும், இலவச கைப்பேசியும் இருந்துவிட்டால் பார்ப்போருக்கு அந்த ஏழை மக்கள் பகட்டான வாழ்க்கை வாழ்வதாகவே தென்படும். ஆனால், இந்த இரண்டையும் பயன்படுத்துவது யானையைக் கட்டி தீனி போட்ட கதை என்பதே உண்மை.
அதற்காக ஏழைகள் டிவி, கைப்பேசி போன்ற நவீன வசதிகளைப் பெறக்கூடாது எனப் பொருளல்ல. மீனைக் கொடுப்பதை விடவும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதானே ஓர் அரசுக்கு அழகான இலக்கணமாக இருக்க முடியும்.
வேண்டுமானால், டிவிக்களையும், கைப்பேசிகளையும் நீங்கள் வாங்குங்கள், கேபிள் இணைப்பையும், "டாப் அப்' வசதியையும் நாங்கள் தொடர்ந்து இலவசமாகத் தருகிறோம் என அரசுகள் அறிவிக்க வேண்டும். அதுதான் உண்மையான இலவசமாக இருக்க முடியும். மாறாக இப்போதைய நடைமுறை அங்குசத்தை நாங்கள் தருகிறோம். யானைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போலத்தானே!
"ஒரு காசு பேணின் இரு காசு தேறும்' என்ற சொலவடைக்கு ஏற்ப வாழ்க்கையைச் சிரமத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களிடம் அளிக்கப்படும் இந்த இலவசங்கள், இருக்கின்ற காசையும் பறிப்பதல்லாமல் வேறென்ன?
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்; உள்ளூரானுக்கோ மரத்தடியில் பயம் என்பார்கள். அரசியல்வாதிகளுக்கோ எப்போதுமே தேர்தல் பயம். அதனால்தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல எதை இலவசமாகக் கொடுத்தால் வாக்குகளை எளிதாகப் பெறலாம் எனக் கணக்கிட்டு அதிலேயே குறியாக இருந்து இலவசங்களின் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்கின்றனர்.
பொதுமக்கள் என்ற குதிரைகளை, தங்களுக்குச் சாதகமான வெற்றி என்ற இலக்கை நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமானால் இலவசங்கள் என்ற சேணமும், லகானும், கொஞ்சம் கொள்ளும், பச்சைப் புல்லும் அவசியம் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரிந்திருக்கிறது.
ஏழைகளின் வாழ்வை முன்னேற்றி, வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்கிற வாதங்களெல்லாம் அவர்கள் தங்கள் சமாதானத்துக்காகச் சொல்லிக் கொள்பவையே.
இலவசங்களை நிறுத்திவிட்டால் குதிரை எங்கே தங்களை குப்புறத் தள்ளி குழியும் பறித்துவிடுமோ என்பதே அவர்களின் அச்சம். இலவச மயக்கத்தில் இருக்கும் குதிரைகள் பகுத்தறியும் திறனைப் பெறும்வரை சுகமாய் சவாரி செய்வோரின் உதடுகள் இப்படித்தான் பாடும், ""சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ, சலோ!
தினமணி..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 27, 2010 2:05 pm

இலவசங்களை நிறுத்திவிட்டால் குதிரை எங்கே தங்களை குப்புறத் தள்ளி குழியும் பறித்துவிடுமோ என்பதே அவர்களின் அச்சம். இலவச மயக்கத்தில் இருக்கும் குதிரைகள் பகுத்தறியும் திறனைப் பெறும்வரை சுகமாய் சவாரி செய்வோரின் உதடுகள் இப்படித்தான் பாடும், ""சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ, சலோ!
நன்றக மக்களை புரிந்து கொண்டுள்ளர்கள்.மத்திய அரசும் மாநில அரசும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக