ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை

3 posters

Go down

 தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை Empty தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை

Post by jeylakesengg Mon Sep 27, 2010 11:38 am

தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடித்து தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்களை அரசு மேற்கொண்டுதான் வருகிறது.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இந்த நாகரீகமற்ற செயல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான அத்தாட்சிதான் பாடப்புத்தகங்கள் வழியான பிரச்சாரம்!

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் உள்பட இந்தியா முழுவதும் எத்தனையோ தலைவர்கள் நடத்திய போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் இன்னும் தேவை உள்ளது என்பது நாகரீக சமுதாயம் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம்!

தமிழகத்தில் இரட்டை டம்ளர், கோவிலுக்குள் நுழையவும், கோவில் தேரின் வடம் பிடிக்கும் உரிமைக்காகவும் போராட்டம், உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர், பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டியில் தலித் பஞ்சாயத்து தலைவரை ஏற்க மறுப்பது என பல வகையான தீண்டாமைக் கொடுமைகள் வலம் வருகின்றன என்றால், வட மாநிலங்களிலோ நிலை இதைவிட மோசம்!

அங்கு நிலவும் தீண்டாமைக் கொடுமையின் சமீபத்திய கோர முகம்தான் கவுரக் கொலைகள்! தங்கள் வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணோ அல்லது பையனோ தலித் வகுப்பைச் சேர்ந்தவரை காதலித்து கைப்பிடித்தால், குடும்பக் கவுரம் என்ற வறட்டு சித்தாந்தத்தில் தங்கள் வீட்டுப்பிள்ளையையும் சேர்த்து கவுரவக் கொலை செய்துவிடுகிறார்கள் உயர் சாதி குடும்பத்தினர்.

இத்தகைய கவுரவக் கொலைகள் அதிவேகமாக அதிகரித்ததால்தான் பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்று, கவுரவக் கொலைகள் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இதுபோன்ற கவுரவக் கொலைகள் வட மாநிலங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு சமீபத்திய உதாரணம் என்றால், வேறு வடிவிலான சாதிய தீண்டாமை அவலங்களும் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டுதான் உள்ளது.

அப்படி ஒரு நிகழ்வுதான் மத்திய பிரதேசத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.அதுவும் இதுவரை மனிதன் மீது மட்டுமே காட்டப்பட்டு வந்த தீண்டாமை தலித் பெண் ஒருவர், ராஜ்புத் என்ற உயர் வகுப்பை சேர்ந்த ஒருவர் வளர்த்த நாய்க்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக, அந்த நாயையே தீண்டாமையாக கருதி, அதனை அடித்து விரட்டியுள்ளார் அதனை வளர்த்தவர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற மாவட்டத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது.

மொரேனா என்ற மாவட்டம் மாணிக்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பால் சிங். ராஜ்புத் என்ற உயர் சாதியைச் சேர்ந்த இவர் உள்ளூர் நிலச்சுவான்தார்; கூடவே அரசியல் கட்சி ஒன்றிலும் செல்வாக்கு உடையவர். இவர் ஒரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நாய், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ராம்பால் சிங் வீட்டு அருகே வசித்து வந்த தலித் பெண் சுனிதா ஜாதவ் என்பவர் வீட்டிற்கு அருகே சென்றுள்ளது.

அப்போது சுனிதா வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவுக்காக வந்த தனது கணவருக்கு உணவு பரிமாறி உள்ளார்.அவர் உணவு பரிமாறிக்கொண்டிருப்பதை பார்த்த அந்த நாய், அவரது வீட்டிற்கு அருகிலேயே சுற்றி வளைய வந்துள்ளது.

இதனால் இரக்கப்பட்ட சுனிதா, தனது கணவருக்கு அளித்தது போக மீதமிருந்த ஒரு ரொட்டித் துண்டை அந்த நாய்க்கு போட்டுள்ளார்.
உடனே அந்த நாயும் ஆசையுடன் ஓடி வந்து அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டது. அப்போது பார்த்து நாயின் எஜமானரான ராம்பால் சிங் அங்கு வந்து அதனை பார்த்துவிட்டார்.

உடனே ஆகாசத்திற்கும், பூமிக்குமாக எகிறி குதித்த அவர், " எனது நாய்க்கு எப்படி நீ ரொட்டித் துண்டு போடலாம்?" எனக் கேட்டு சுனிதாவை மிகவும் அவதூறாக பேசி கடுமையாக சத்தம் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

சரி... பிரச்சனை அத்தோடு முடிந்தது என சுனிதா நினைத்திருக்க, விடவில்லை ராம்பால் சிங்! தலித்திடம் ரொட்டி வாங்கித் தின்ற அந்த நாய் தீண்டத்தகாதது என்று கூறி,அதனை வீட்டை விட்டு வெளியேற்றிய அவர், அதனை கிராமத்தின் விளக்கு கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டுவிட்டு பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்.

பஞ்சாயத்துக்கு சுனிதாவும் வரவழைக்கப்பட்டார்.இறுதியில் அந்த நாய் தீண்டத்தகாதாகி விட்டதால், அது சுனிதாவின் வீட்டில்தான் வளர வேண்டும் என்றும் தீர்ப்பானது. மேலும் சுனிதாவுக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனிதாவும், அவரது சகோதரர் நாகர் சிங்கும், "நாய்க்கு ரொட்டி கொடுத்தது குற்றமா...?" என்று புலம்பியபடியே அருகிலுள்ள சுமாவாலி காவல் நிலையத்தில் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அங்கிருந்த காவலர்கள், இது குறித்து அருகில் இருக்கும் கல்யாண் காவல் நிலையத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவினரிடம் சென்று புகார் அளிக்குமாறு விரட்டியுள்ளனர்.

அங்கு சென்று சுனிதா முறையிட்டபோது, " நீ ஏன் உயர்சாதியை சேர்ந்தவர் வளர்க்கும் நாய்க்கு ரொட்டி கொடுத்தாய்?" என்று கேட்டுள்ளார் அங்கிருந்த அதிகாரி!

இதனால் மேலும் நொந்துபோன சுனிதா, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவின் டிஎஸ்பி-யிடம் சென்று புகார் மனு அளித்துள்ளார்.கூடவே மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை ( FIR ) கூட பதிவாகவில்லை.விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று வழக்கம்போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!

நன்றி வெப்துனியா '
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

 தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை Empty Re: தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை

Post by ரபீக் Mon Sep 27, 2010 11:39 am

இன்னுமாட இந்த சமுதாயம் திருந்தல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை Empty Re: தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை

Post by நவீன் Thu Sep 30, 2010 12:11 pm

 தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை 56667  தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை 56667  தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை Empty Re: தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum