Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
+2
உமா
அருண்
6 posters
Page 1 of 1
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
நான்முப்பது நாளில் செத்துப்போய்விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா? . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ? என்ற பயம் ஆட்டிப் படைத்தது.
விடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.
அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான்? வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.
என் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா?. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.
கடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.
ஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா?. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா?.
மனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே? மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.
கடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.
ஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.
சில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.
ஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.
குதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.
அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். “சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு”, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.
அதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.
ஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.
மரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் போவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.
பஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.
முடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும்?. மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.
உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.
அந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.
ஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.
எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?
நன்றி . ...GeeVee
அதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா? . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ? என்ற பயம் ஆட்டிப் படைத்தது.
விடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.
அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான்? வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.
என் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா?. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.
கடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.
ஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா?. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா?.
மனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே? மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.
கடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.
ஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.
சில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.
ஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.
குதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.
அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். “சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு”, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.
அதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.
ஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.
மரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் போவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.
பஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.
முடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும்?. மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.
உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.
அந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.
ஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.
எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?
நன்றி . ...GeeVee
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.
அருமை !!!!!!!!
மிகவும் அருமையான கட்டுரை ....
இறப்பு என்றாலே ஒருவித பயம் அனைவருக்குமே ஏற்படுகிறது... அந்த இறப்பினை அறிந்தாலும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தெளிவாக விளக்கியுள்ளது இக்கட்டுரை...
ஆனால், அது கடினம் தான்...தள்ளாடிய வயதிலே அவருக்கு இவ்ளோ
துன்பம் என்றால், இதனை அனைவராலுமே ஏற்று கொள்ள முடியாது தான்...
பகிர்வுக்கு நன்றி!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
படித்து முடித்ததும் என்னுள்ளும் ஏதோ ஒரு அமைதியை உணர முடிகிறது! இந்ட்த மனப்பக்குவதை அனைவரும் பெற்றுவிட்டால் இந்த உலகமே சொர்க்கலோகமாக மாறிவிடுமே!
///எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?///
நிச்சயம் அமையாக இருக்காது! இறப்பின் தேதி இதுதானே என்று மனிதன் செய்யாத தவறுகளே இல்லை என்ற நிலைதான் உருவாகும்!
///எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?///
நிச்சயம் அமையாக இருக்காது! இறப்பின் தேதி இதுதானே என்று மனிதன் செய்யாத தவறுகளே இல்லை என்ற நிலைதான் உருவாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
அருமையான கட்டுரை அருண். இந்த மனபக்குவம், எல்லாருக்கும் வந்தா நல்லா இருக்கும். எல்லாரும் எல்லாரிடத்தும் அன்பு பாராட்டுவார்கள் இல்லையா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
சிவா wrote:படித்து முடித்ததும் என்னுள்ளும் ஏதோ ஒரு அமைதியை உணர முடிகிறது! இந்ட்த மனப்பக்குவதை அனைவரும் பெற்றுவிட்டால் இந்த உலகமே சொர்க்கலோகமாக மாறிவிடுமே!
///எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?///
நிச்சயம் அமையாக இருக்காது! இறப்பின் தேதி இதுதானே என்று மனிதன் செய்யாத தவறுகளே இல்லை என்ற நிலைதான் உருவாகும்!
முற்றிலும் உண்மை!!!!!!!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
அற்புதமான கட்டுரை ,,மரணம் அனைவருக்கும் பொதுவான ஒன்று ,,இயக்கியின் நியதி ,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....
படித்த அனைவரும் என் மனமார்ந்த நன்றிகள்...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» மனிதன் எனும் நான்
» பயம், பயம், என்று மறையுமோ இந்த பயம்!
» ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
» கேள்விக்கு என்ன பதில்
» மனிதன் எனும் நான்
» பயம், பயம், என்று மறையுமோ இந்த பயம்!
» ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
» கேள்விக்கு என்ன பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|