ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

+5
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
குடந்தை மணி
மனோஜ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by மனோஜ் Sat Sep 25, 2010 11:44 am

First topic message reminder :

1000 பெரு உடையார்
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Photo26pm


சோழப் பேரரசன் இராஜராஜன் என்பான் ஆட்சிக்காலத்தில் அரசின் வருமானத்தைப் பெருக்கிட வரிவிதிப்பு முறையை வகுத்துக் கையாண்டு ஆட்சிபுரிந்தான் என்று அண்மையில் ஏட்டில் வந்தது. அவன் கட்டிய கோயிலின் 1000 ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பார்ப்பனத் திருமகன் ஒருவர் கொடுத்த பேட்டி மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏட்டில் வந்திருந்தது. படித்ததும் புல்லரித்துப் போனது உடம்பு. ராஜராஜனின் மெய்க்கீர்த்தியைப் படித்ததும் மெய் சிலிர்த்தது.

1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றியவரி (ஊர்க்கழஞ்சு), 2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட வேண்டியவரி (குமர கச்சாணம்) 3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன் பாட்டம்) 4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்) 5. குளத்து நீரைப் பயன்படுத்துவோருக்கான பாசனவரி (தசபந்தம்) 6. பொன் நாணயம் அரசன் அச்சடிப்பதற்கான வரி (மாடைக்கூலி) 7. நாணயத்தின் பொன்மாற்று அளவை ஆய்வதற்கான வரி (வண்ணக்கக் கூலி) 8. பொருள்களை விற்பனை செய்வதற்கான வரி (முத்தாவணம்) 9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய வரி (திங்கள் மேரை) 10. நிலத்துக்கான வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என வேலிக்காசு அல்லது வேலிப் பயறு) 11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான வரி (நாடாட்சி) 12. கிராம நிருவாகச் செலவுக்கான வரி (ஊராட்சி) 13. நன்செய் நிலத்திற்கான நீர்ப்பாசனவரி (வட்டி நாழி) 14. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி) 15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்), 16. துணி துவைக்கும் கல்லுக்கான வரி (வண்ணாரப்பாறை) 17. மண்பாண்டம் செய்வதற்கான வரி (குசக்காணம்) 18. தண்ணீர்வரி (நீர்க்கூலி) 19. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை) 20. தரகர்கள் தரவேண்டிய வரி (தரகுபாட்டம்) 21. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார் பாட்டம்) 22. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி) 23. பசு, எருதுகளுக்கான வரி (நல்லா அல்லது நல்லெருது) 24. நாட்டின் காவலுக்கான வரி (நாடுகாவல்) 25. ஊடு பயிர் சா-குபடி செய்தால் வரி (ஊடுபோக்கு) 26. ஆவணப் பதிவுக்கான வரி (விற்பிடி) 27. வீட்டு மனைக்கான வரி (வாலக்காணம்) 28. சுங்கவரி (உல்கு) 29. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி) 30. நீதிமன்றவரி (மன்றுபாடு) 31. அரசனுக்குச் சேரவேண்டிய தனிவரி (மாவிறை) 32. கோயிலில் வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி) 33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி) என்று பட்டியல் நீளும்வகையில் வரிபோட்டவர் இந்த மாமன்னர் என்று கே.கே. பிள்ளை எழுதுகிறார். (படிக்க: தமிழக வரலாறு _ மக்களும் பண்பாடும்). அரசனால் விதிக்கப்-பட்ட வரிகளும் கட்டணங்களும் 400 க்கும் மேற்பட்டவை எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

ஜனவரி, பிப்ரவரி தவிர எல்லா வரிகளும் போட்டுவிட்டவர்கள் ராஜராஜன் பரம்-பரையினர்.

வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து ஏற்றம் கொடுத்ததும் இம்மன்னர்களே! அவர்களுக்குப் பெரும் அளவிலான பரப்பில் நிலங்களும் முழு ஊர்களையுமே தானமாக வழங்கினர். இந்நிலங்களுக்கோ, ஊர்களுக்கோ வரியே கிடையாது. இவைதான் அக்கிர(ம) காரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேசம் என வழங்கப்பட்டன. வியர்வை ஆறாகப் பெருக, நித்தம் உழைத்துச் சாப்பிடும் கள் இறக்குவோர், படகோட்டி, குயவர், வண்ணார், நெசவாளர் முதலியோருக்கு மட்டும் ஏராளமான வரிகள். அதனால்தான் நாகசாமி பாராட்டுமழை பொழிகிறார்.

வரிப்புலியைக் கொடியில் கொண்டு ஆண்ட சோழன் பொருத்தமாகத்தான் தேர்வு செய்திருக்கிறான். நல்ல தமிழ்ப் பெயர்களைத் தாங்கியிருந்த மன்னர்கள், தங்களை விஷ்ணுவின் அவதாரங்கள் என்று கூறிக் கொண்டு ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்-துங்கன், பராந்தகன் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர். வடமொழி ஆதிக்கத்-திற்குத் தமிழ்மண்ணின் வித்து ஊன்றி, நீர் ஊற்றி, வளர்த்துவிட்ட பெருமை ராஜராஜன், முதலானவர்களைச் சாரும். அப்பேர்ப்பட்ட ராஜராஜன் ஆட்சிக்கு வந்து 20 ஆண்டின் 275 ஆம் நாளில்_இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்த கோயில்தான் தஞ்சைப் பெருஉடையார் கோயில் எனும் இராஜ ராஜேஸ்வரம் எனும் பிரகதீஸ்வரம் எனும் கோயில் ஆகும்.

செங்கல்லைக் கொண்டு கோயில் கட்டப்பட்ட காலத்தில் கருங்கல் கோயில் கட்டினான் என்பதுதான் சிறப்பே! 500 அடி நீளமும் 200 அடி அகலமும் கொண்ட பரப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்குத்-தான் 1000 ஆண்டு விழா ஏற்பாடாகியுள்ளது. ராஜராஜன் மகன் ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இதே மாதிரியிலான கோயிலைக் கட்டினான். பெண் கடவுளுக்கு இடம் தந்து தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் கோயிலே இதுதான்.

வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள். இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.

விளைவு _ உழுகுடிகள் கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்

மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!


சார்வாகன்
நன்றி : உண்மை




Last edited by மனோஜ் on Sat Sep 25, 2010 6:33 pm; edited 1 time in total


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down


மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 25, 2010 9:33 pm

maniajith007 wrote:நமது பெருமை மிகுந்த பாரம்பரியம் கோவில் பழைய விஷயங்கள் தோண்டினால் தேவையற்ற விவாதம் ஏற்படும்

ஆம் தோழரே, தாங்கள் சொல்வதும் சரியே. நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by மனோஜ் Sat Sep 25, 2010 9:38 pm

மன்னர் ராஜராஜ சோழன் தமிழ் வழி கலைவளர்த்த மா மன்னர்களுள் மிகச்சிறந்தவன். நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் கூடுமானவரை இந்த செய்திகளை திரட்டி அளித்திருப்பதை இந்த தமிழுலகு மறக்காது.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.[/quote]

ஐயா, தங்கள் கருத்துக்கு மறுப்பு எழுதும் நோக்குடன் இதை எழுதவில்லை
உண்மையாக, கடந்த கால வரலாற்றில் நிறைய இருட்டடிப்புகள்
நிகழ்ந்துள்ளன. அவைகள் என்றுமே இன்றைய தலை முறைக்கு தெரிய
வாய்பில்லை.
உ . ம் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று
கூறப்படுகிறது அனால் “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமிழ் எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்...”


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 25, 2010 9:55 pm

மனோஜ் wrote:மன்னர் ராஜராஜ சோழன் தமிழ் வழி கலைவளர்த்த மா மன்னர்களுள் மிகச்சிறந்தவன். நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் கூடுமானவரை இந்த செய்திகளை திரட்டி அளித்திருப்பதை இந்த தமிழுலகு மறக்காது.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஐயா, தங்கள் கருத்துக்கு மறுப்பு எழுதும் நோக்குடன் இதை எழுதவில்லை
உண்மையாக, கடந்த கால வரலாற்றில் நிறைய இருட்டடிப்புகள்
நிகழ்ந்துள்ளன. அவைகள் என்றுமே இன்றைய தலை முறைக்கு தெரிய
வாய்பில்லை.
உ . ம் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று
கூறப்படுகிறது அனால் “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமிழ் எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்...”[/quote]


ஐயா, தங்கள் கருத்தும், ஆதிரா வின் கருத்துக்களையும் வரவேற்கிறேன். சரித்திரம் கூறும் உண்மைகள் பல. அக்காலத்தில் தாங்கள் கூறும் களப்பிரர் கால கல்வெட்டுக்கள் பலவற்றை கடலில் தூக்கி எரிந்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் கொடைத்தன்மை, தமிழ்த் தொண்டு இவைகளை இருட்டடிப்பு செய்வதற்கு என்று பலரும் அறிவர். ஆனால் எந்தவிதமான நவீன ஊடகங்கள் இல்லாத காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்களை பாராட்டும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். பல்லவ மன்னர்களின் குடவரைக் கோயில்கள் சொல்லும் சிற்பக் கலைக்கு ஈடு எதுவாக இருக்க முடியும். இதையெல்லாம் சிந்திக்கும் போது தொன்மையான தமிழுலகு தொன்றுதொட்டு காப்பாற்றி வரும் செம்மொழித் தமிழ் இனிவரும் காலங்களில் இந்த இளைய சமுதாயம் என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை மிஞ்சுகையில்......பண்டைத் தமிழர் வரலாறுகளில் நல்லதையே சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
என்னளவில் இது சரி என்று படுகிறது.

நன்றி மனோஜ் அவர்களே.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by மனோஜ் Sat Sep 25, 2010 10:06 pm

......பண்டைத் தமிழர் வரலாறுகளில் நல்லதையே சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
என்னளவில் இது சரி என்று படுகிறது.

நன்றி மனோஜ் அவர்களே.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.[/quote]

வணக்கம், நன்றி ஐயா.


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by சிவா Sun Sep 26, 2010 7:17 am

Kaa Na Kalyanasundaram wrote:


ஐயா, தங்கள் கருத்தும், ஆதிரா வின் கருத்துக்களையும் வரவேற்கிறேன். சரித்திரம் கூறும் உண்மைகள் பல. அக்காலத்தில் தாங்கள் கூறும் களப்பிரர் கால கல்வெட்டுக்கள் பலவற்றை கடலில் தூக்கி எரிந்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் கொடைத்தன்மை, தமிழ்த் தொண்டு இவைகளை இருட்டடிப்பு செய்வதற்கு என்று பலரும் அறிவர். ஆனால் எந்தவிதமான நவீன ஊடகங்கள் இல்லாத காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்களை பாராட்டும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். பல்லவ மன்னர்களின் குடவரைக் கோயில்கள் சொல்லும் சிற்பக் கலைக்கு ஈடு எதுவாக இருக்க முடியும். இதையெல்லாம் சிந்திக்கும் போது தொன்மையான தமிழுலகு தொன்றுதொட்டு காப்பாற்றி வரும் செம்மொழித் தமிழ் இனிவரும் காலங்களில் இந்த இளைய சமுதாயம் என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை மிஞ்சுகையில்......பண்டைத் தமிழர் வரலாறுகளில் நல்லதையே சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
என்னளவில் இது சரி என்று படுகிறது.


நன்றி மனோஜ் அவர்களே.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

உங்கள் கருத்துடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்! சிறந்த விளக்கத்துடன் இந்தக் கட்டுரைக்கான விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளீர்கள்! நன்றி! மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 154550


மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 26, 2010 10:27 am

வணக்கம் சிவா அவர்களே. தங்களின் கருத்திற்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by Aathira Sun Sep 26, 2010 10:46 am

[quote="Kaa Na Kalyanasundaram"]
ஐயா, தங்கள் கருத்தும், ஆதிரா வின் கருத்துக்களையும் வரவேற்கிறேன். சரித்திரம் கூறும் உண்மைகள் பல. அக்காலத்தில் தாங்கள் கூறும் களப்பிரர் கால கல்வெட்டுக்கள் பலவற்றை கடலில் தூக்கி எரிந்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் கொடைத்தன்மை, தமிழ்த் தொண்டு இவைகளை இருட்டடிப்பு செய்வதற்கு என்று பலரும் அறிவர். ஆனால் எந்தவிதமான நவீன ஊடகங்கள் இல்லாத காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்களை பாராட்டும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். பல்லவ மன்னர்களின் குடவரைக் கோயில்கள் சொல்லும் சிற்பக் கலைக்கு ஈடு எதுவாக இருக்க முடியும். இதையெல்லாம் சிந்திக்கும் போது தொன்மையான தமிழுலகு தொன்றுதொட்டு காப்பாற்றி வரும் செம்மொழித் தமிழ் இனிவரும் காலங்களில் இந்த இளைய சமுதாயம் என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை மிஞ்சுகையில்......பண்டைத் தமிழர் வரலாறுகளில் நல்லதையே சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

சுடச்சுடத்தானே தங்கம் ஒளி வீசும். கேள்வியில் தானே சிற்ந்த ஞானம்பிறக்கும். நாங்கள் அறியாத தகவல்களைச் சேகரித்துத் தாங்கள் த்ரும்போது வினாவின் மூலமே நல்ல அரிய பல தக்வல்களை அறிய முடிகிறது. கேள்விகளும் விவாவதமும் எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே என்பதைத் தாங்கள் ந்ன்கு அறிவீர். தங்களின் தொடர் அரிய பதிவுக்கும் தாங்கள் அவ்வப்போது தரும் விளக்கங்களுக்கும். மிக்க நன்றி கல்யாண்.
(அந்த பின்னூட்டம் இடும்போது தஞ்சையில் நிகழும் முடிவுற்ற 1000 ஆண்டுக்கு பத்மா சுப்ரமணியம் குழுவினரின் 1000 நாட்டிய மங்கையரின் நடனத்தைப் பெருமையுடன் தொலைக்காட்சியில் ரசித்துக்கொண்டிருந்தேன்.ராஜ ராஜ சோழன் தமிழுக்கு, ஊருக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கு மதிப்பு கொடுத்த மன்னன் ஆயிற்றே. மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 678642 )


மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Tமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Hமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Iமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Rமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 11:46 am

நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது...

அன்பு நன்றிகள் மனோஜ் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:00 pm

குடந்தை மணி wrote:அன்பர்கள் யாரிடமாவது "உடையார்" மின் புத்தகம் உள்ளதா?
பாலகுமாரன் எழுதியது -

தயவு செய்து தந்துதவி செய்யவும்
தங்களுக்கு உடையார் மின் நூல் கிடைத்திருந்தால் எனக்கு அதை அனுப்பி வையுங்கள் அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  - Page 2 Empty Re: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum